வியாழன், 31 டிசம்பர், 2020

முள்ளியவளை நாவல்காட்டில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனங்காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக.31-12-20. இன்றுஇடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் 
இடம்பெற்றன.
தடயவியலாளர்கள், பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, நைலோன் சாரம், ரி-சேர்ட், மண்டையோடு மற்றும் எலும்புகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் 
மீட்கப்பட்டன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.