வெள்ளி, 18 டிசம்பர், 2020

இதேநிலை தொடர்ந்தால் யாழில் இரண்டு வாரங்களில் இறுக்கமான கட்டுப்பாட்டு

யாழில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கான
 விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் 
வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள். 
அதன் காரணமாக முப்படையினர் மற்றும் போலீசார் சுகாதாரப் பகுதியினரால், வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாததாகவுள்ளது.அத்தோடு 17-12-20..அன்றயதினம் 
 கூட, ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். அத்தோடு அரசாங்க
 அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம். எனினும் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது.
எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு 
தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள 
விரும்புகின்றேன்.எதிர்வரும் வாரங்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறும் வாரங்கள். எனினும் அந்த
 காலத்தில் நாட்டில் சில புதிய சுகாதார 
நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அது எவ்வாறான நடைமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.மக்களை covid தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களை பாதிக்காதவாறு சில சுகாதார கட்டுப்பாடுகளை எடுக்கவுள்ளோம். அதற்காக அனைவரையும்
 தனிமைப்படுத்த மாட்டோம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.