புதன், 16 டிசம்பர், 2020

நாட்டில் பண்டிகைக் காலத்தில் பொதுமுடக்கம் குறித்து இராணுவத் தளபதி அறிவிப்பு

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று 
அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்,
எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும்.தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. 
எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது.அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதுவும் அமையும்.கொழும்பின் சில பகுதிகள் கடுமையான 
முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள்
 இந்த வாரம் பூட்டப்பட்ட இடத்திலிருந்து நீக்கப்பட்டன.
அளுத்கம பிரதேச மக்கள் உரியமுறையில் நடந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக மற்றுமொரு கிராமத்துக்கும் பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.