புதன், 31 மே, 2023

ஞாயிற்றுக்கிழமைகளில் னியார் வகுப்புகளுக்கு யாழில் தடை!!!

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்பட்டு அதில் பங்குபற்றும் மாணவர்களை ஏனைய நடவடிக்கைகளில் பங்குபற்ற வைக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் 
தெரிவித்துள்ளார்.
யாழ் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட செயலாளர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களை கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதை எப்படியாவது தடுத்து அவர்களை யாழ் முழுவதிலும் கலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டிய 
தேவை உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பாடசாலை மாணவர்களும் தனியார் வகுப்பு மாணவர்களும் பங்களிப்பதாகவும், அவர்களைப் பாதிக்கும் முக்கிய காரணியாக கையடக்கத் தொலைபேசிகள் இருப்பதாகவும் யாழ்.மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
 இந்த அவலத்தில் இருந்து மாணவர்களை காப்பாற்ற 
கல்வித்துறையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து 
கொள்ள வேண்டும்.
இதன்படி, முதற்கட்டமாக யாழ்ப்பாணம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடை செய்யப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் துறை ஆசிரியர்களுடன் விரைவில் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.
உத்தரவை மீறும் ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கும் அமைப்பு தயாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 மே, 2023

நாட்டில் பேலியகொடை மீன் சந்தையில் அதிகரித்த கோழி இறைச்சி, மீன் , முட்டை விலைகள்

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை 
வெளியிட்டுள்ளனர்.
1000 – 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 – 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. இதனுடன் சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பலயா 1400 ரூபாவிற்கும் பாறை 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சால 400 ரூபாவிற்கும் லின்னா 1500 ரூபாவிற்கும் விற்பனை 
செய்யப்படுகிறது.
இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கூறிள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 29 மே, 2023

சேலம் நகரரில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு 1000 ரூபாய் அபராதம்

ஹெல்மட் அணிந்து காரை ஓட்டவில்லை எனக்கூறி சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே டூவீலர் மெக்கானிக்கான வெற்றிவேலின் செல்போன் எண்ணிற்கு.28-05-2023. அன்று குறுஞ்செய்தி
 ஒன்று வந்துள்ளது.
அதில், சேலம் சாலையில் காரில் செல்லும் போது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு வாரமாக காரை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்த நிலையில் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் 
வெற்றிவேல் தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலம் போக்குவரத்து காவல்துறையினர் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 28 மே, 2023

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறியில் மீண்டும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.
எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று 
நம்பப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.
அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை 
சமர்ப்பிக்க உள்ளார்.
முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு 
தெரிவித்துள்ளது.
2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் 
வாக்களிக்கவில்லை.
இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை 
விடுத்துள்ளது.
அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது
 அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், 
ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 27 மே, 2023

ஒமிக்ரோன் திரிபின் புதிய கொரோனா அலையால் :சீனாவில் 6.5 இலட்சம் பேர் பாதிப்பு

சீனா முழுவதும் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி  ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடையும் எனவும் வாரத்துக்கு 6.5 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பெய்ஜிங் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர் வாங் குவாங்பா தெரிவிக்கையில், சீனாவில் புதிய கொரோனா அலை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு மிதமாகவே உள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் நுரையீரல் தொற்று நிபுணர் ஜாங் நான்ஷான் 
தெரிவிக்கையில், ஒமிக்ரோன் XBB வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக 2 தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். 
விரைவில் மேலும் 4 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
எனவே ,சீனாவில் இருந்து ஒமிக்ரோன் XBB வைரஸ் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீனாவின் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 26 மே, 2023

இலங்கை இளைஞர்களை ஏமாற்றி வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது

இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால்.26-05-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 
 சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. 
 அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும்
 கைது செய்தனர்.
 சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 
 தொடர்புடைய சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 
 இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து.26-05-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 
 வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட இந்த நபர், அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை வந்துள்ளார். 
 உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
 தெரிவித்துள்ளது. 
 சந்தேகத்திற்குரிய கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 25 மே, 2023

நாட்டில் மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்க மறுப்பு

கிளிநொச்சி கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்விப் பணிமணையில் 
முறையிட்டுள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று கிளிநொச்சி கோணாவில் தமிழ் வித்தியாலயத்தில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் 
வழங்கப்பட்டுள்ளன.
இதில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களுக்கான அனுமதியட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க 
மறுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்று முறைப்பாடளித்தனர்.
குறித்த மூன்று மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 24 மே, 2023

யாழ் தையிட்டி விகாரையை தமிழர்களிடம் ஒப்படைக்க தயார்: பிரபல தேரர் அதிரடி

நாட்டிலேயே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருப்பதாக பொகவந்தலாவ ராகுல தேரர் 
தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் 
தெரிவிக்கையில்,
திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்த காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள். அந்த விகாரை கட்டப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள் என கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும் எங்களுக்கு சரிவர தெரியவில்லை. அவர்களோடு நாங்கள் அமர்ந்து பேச தயாராக இருக்கின்றோம். அன்பு உறவுகளே வாருங்கள், உங்கள் ஆவணங்களோடு. நாங்கள் இதை சட்ட ரீதியாக ஒப்படைப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். நாங்கள் ஒரு பரிபாலன சபையை அமைத்து அந்த விகாரையை உங்கள் கையிலே
 ஒப்படைக்கிறோம்.
நாங்களும் வருகின்றோம். அதன்பிறகு அந்த விகாரை பொது மக்கள் கையில் ஒப்படைக்கப்படும். தமிழ் பேசுகின்ற அனைத்து உறவுகளும் சென்று அந்த இடத்திலே உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 23 மே, 2023

வேலைக்கு அகதிகளை அமர்த்த தயக்கம் காட்டும் நிறுவனங்கள்

சிரியாவின் போர் மேகம் சூழலும் முன்பு அந்நாட்டில் வெற்றிகரமான ஒரு வங்கி நிர்வாகியாக சன்டல் மசூத் இருந்தார்.
இதனையடுத்து, சிரியாவில் இருந்து வெளியேற அவர் ஈராக் தஞ்சமடைந்து ஆஸ்திரேலியாவில் மீள்குடியேறினார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் முன்பு அவர் சுத்தம் செய்தல், கடை உதவியாளர் என சிறுசிறு வேலைகளில் வாழ்க்கையை கடத்தி வேண்டியிருந்தது.
“ஆஸ்திரேலியாவுக்கு வந்த பொழுது வேலைத் தேடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனக்கு என்ன விதமான தகுதியிருக்கிறது என நிறுவனங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
ஆஸ்திரேலியாவின் பணி சூழலில் எனக்கு என்ன அனுபவம் உள்ளது என்பதையே நிறுவனங்கள் கருத்தில் கொண்டன,” என்கிறார் 
சன்டல் மசூத்.
சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில், அகதிகள் குறித்த ஊடகம், அரசாங்கத்தின் பிம்பங்களே இந்த பாரபட்சம், தவறான புரிதல்களுக்கு காரணம் என ஆய்வில் நிறுவனங்கள் 
கூறியுள்ளன.
மேலும், ஆங்கில மொழி சிக்கல்களுக்கு அகதிகளை பணிக்கு அமர்த்துவதில் சிக்கல்களாக உள்ளதாக சில நிறுவனங்கள் 
தெரிவித்துள்ளன.
அதே சமயம், நிறுவனங்களின் எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் கணிசமான இடைவெளி உள்ளது என இந்த ஆய்வு ஆசிரியர் கூறியுள்ளார்
. என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 22 மே, 2023

யாழ் வசாவிளானில் மாணவியிடம் அங்க சேட்டை விட்ட இராணுவ சிப்பாய் நையப்புடைப்பு

யாழ் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இன்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
தமிழ் இராணுவ சிப்பாயான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சில்மிஷங்களில் சிக்கியிருந்தாரென கூறப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 21 மே, 2023

இலங்கை மேல்மாகாணத்தில் டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் கேமராக்கள்

மேல்மாகாணத்தில் கள உத்தியோகத்தர்களால் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்களை ஆளில்லா கமெராக்கள் மூலம் ஆய்வு செய்யும் நடவடிக்கை 20-05-2023.அன்று  முன்னெடுக்கப்பட்டது.
 மேல் மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர
 கூறுகையில்,
 ட்ரோன் கேமராக்கள் மூலம் நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய இடங்களுக்கு காற்றில் இருந்து இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
 டெங்கு அபாயம் குறையும் வரை இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படும் என வைத்தியர் உக்காஷா வெடிசிங்க தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 20 மே, 2023

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் நாளாந்த விகிதம் ஆபத்தான நிலையை எட்டுகிறது


நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 முதல் 400 வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில்
 நிலைமை மேலும் மோசமடையலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் நளின் ஆரியரத்ன 
எச்சரித்துள்ளார்.
டெங்கு நோயின் அபாயகரமான அதிகரிப்பு குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் டெங்குவைத் தடுக்கவும், தொற்றுநோயைத் 
தடுக்கவும், தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் 
பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் 
வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளிகளின் வீதமும் அதிகரித்து வருவதாகவும், தற்போது 43 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக குழந்தைகள் நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்தியர் இந்திக வீரசிங்க 
குறிப்பிட்டுள்ளார்.¨ என்பதும் குறிப்பிடத்தக்கது.  




வெள்ளி, 19 மே, 2023

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகள் நீக்கம்

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.
மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி 
அறிவித்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் 
தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 18 மே, 2023

பிறந்த நாளுக்கு அனுப்பிய 'Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் யாழில் குடும்பப் பெண் மாயம்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ள  கணவர், மனைவியின் பிறந்த நாளுக்கு அனுப்பிய  'Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் குடும்பப் பெண் ஒருவர் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 
தெரியவருகின்றது.
வலிகாமத்தை சேர்ந்த ஒருவர் தென்மராட்சியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து சிறிது காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மனைவியின் பிறந்த நாளுக்கு 
'சப்பிறைஸ்' கொடுக்க விரும்பியுள்ளார்.இதற்கான தேடலில் பேஸ்புக் ஊடாக வடமராட்சியை சேர்ந்த 'Surprise Gift Delivery' செய்யும் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் ஒரு தொகை பணத்தை அவருக்கு அனுப்பிவைத்து, மனைவியின் பிறந்த நாள் அன்று சப்றைஸ்   கொடுக்குமாறு   இளைஞனிடம்  கணவர்  தெரிவித்ததையடுத்து, இளைஞர் அங்கு  
சென்றுள்ளார்.
அதன் பின்னர்   'Surprise Gift Delivery' செய்ய வந்த இளைஞனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இரண்டு மாதங்களின் பின் கணவன் அனுப்பிய பணத்தில் சீட்டு போட்ட காசுடன் குறித்த இளைஞனுடன் சென்ற நிலையில், நண்பரை நம்பி  மனைவிக்கு 'Surprise Gift  கொடுக்க நினைத்த  கணவர் கடைசியில் மனைவியை இழந்ததுதான் மிச்சம்.
என்பது குறிப்பிடத்தக்கது.


புதன், 17 மே, 2023

நாட்டில் பாடசாலை மாணவனின் ஒற்றை காலணியை பறித்துச் சென்ற திருடன்

துவிச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு 
வயது மாணவனின் காலணியை வலுக்கட்டாயமாக பறித்துச் 
சென்றுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.அங்குருவத்தோட்ட பொலிஸ் எல்லைக்குட்பட்ட
 தொம்பகொட பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் நேற்று காலை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்து 
சென்று கொண்டிருந்த போது, இனந்தெரியாத 
நபர் ஒருவர். 
அந்த மாணவனை பின்தொடர்ந்து சைக்கிளில் சென்று மாணவனை பிடித்து 
இழுத்து ​​பலவந்தமாக காலணியை பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது .இதன் பின், மாணவன் அருகில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்து தன் தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி நடந்ததை 
தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கே வந்த தந்தை 
சம்பவம் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். அங்குருவத்தோட்ட பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 16 மே, 2023

நாட்டில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் INS Batti Malv என்ற கப்பல்

இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு.16-05-2023. இன்று .திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐ 101 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்ட 46 மீட்டர் நீளமுள்ள கப்பலாகும்.
 கப்பல் இலங்கையில் இருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல 
நிகழ்ச்சிகளில் 
பணியாளர்கள் பங்கேற்பார்கள். தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 15 மே, 2023

இலங்கையில் இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு கைரேகை வருகை முறை கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் கைரேகை வருகையை குறிக்கும் கைரேகை இயந்திரத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 இந்த விடயம் தொடர்பான சுற்றறிக்கை மே 12 ஆம் திகதி பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.யின் கையொப்பத்துடன் 
வெளியிடப்பட்டது. 
 கோவிட் தொற்றுநோய் நிலைமையின் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் கைரேகை இயந்திரங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
 எவ்வாறாயினும், காலை 10.00 மணிக்கு பணிக்கு வந்திருந்த போதிலும், சில ஊழியர்கள் தமது வருகை நேரத்தை காலை 08.00 என குறிப்பிட்டு அதனை சாதகமாக பயன்படுத்தியதாக தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 அரச ஊழியர்கள் பலர் இவ்வாறு மேலதிக நேர கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சுக்குள்ளேயே இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
 அதன்படி, இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இன்று முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கைரேகை இயந்திரம் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 14 மே, 2023

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க அமைச்சரவை பத்திரம்

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 அதன்படி, அதற்கான அவதானிப்புகள் அழைக்கப்பட்டு, அவதானிப்புகளைப் பெற்ற பின்னர், சட்ட வரைவுகளைத் தயாரிப்பதற்கு வழியமைக்கப்படவுள்ளது.
 அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
 ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் கஞ்சா ஏற்றுமதி மற்றும் பெரிய அளவில் பயிரிடுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களை வருடாந்தர அனுமதி முறை மூலம் அடையாளம் காண அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 13 மே, 2023

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து மொத்த விற்பனையாளர் 
தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,தற்போது 2750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து பொதி 2,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 12 மே, 2023

புதிய தலைமை செயல் அதிகாரியாக டுவிட்டர் நிறுவனத்தின் லிண்டா யாக்கரினோ நியமனம்

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். 
மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தன. 
அந்த வரிசையில், இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக 
அறிவித்து இருக்கிறார்.
 "லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். லிண்டா யாக்கரினோ வியாபார பணிகளில் கவனம் செலுத்துவார். நான் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவில் 
கவனம் செலுத்த இருக்கிறேன்." "இந்த தளத்தை X-ஆக, எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் நோக்கில் லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்," என்று எலான் மஸ்க் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 11 மே, 2023

நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பிக்குகள் கைது

நாட்டில் விஹாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் சுமார் மூன்று வருடங்களாக பிக்கு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 சாமனேர தேரரின் தாயார் நமகே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தப்பியோடிய மூவரும் இன்று பயாகலை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 களுத்துறைஇ பயாகல பிரதேசத்தில் உள்ள கோரக்கதெனிய விகாரையில் வைத்து 43 மற்றும் 17 வயதுடைய மூவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 10 மே, 2023

கப்புகொல்லாவ பொலிசாரின் பணிக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்களை ஹொரோவ்பதான பொலிஸார் கைது
 செய்துள்ளனர்.
 கபுகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அலியாகட பிரதேசத்தில் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற கப்புகொல்லாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் இருவரை தாக்கி அவர்களின் 
கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 அலியாக்கட பிரேதேஹா பகுதியைச் சேர்ந்த 21, 23 மற்றும் 24 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.
.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.