ஞாயிறு, 31 டிசம்பர், 2023

நியூசிலாந்தில் கண்கவர் வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

நியூசிலாந்து.01-01.2024. புத்தாண்டை உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு கண்கவர் வானவேடிக்கையுடன் வரவேற்றது. 
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்கவர் வானவேடிக்கையுடன்  புத்தாண்டை  வரவேற்ற மக்கள் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 30 டிசம்பர், 2023

உயரிய பட்டம் இலங்கையின் ஊடகவியலாளருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது

இலங்கையின் பிரபல சுயாதீன ஊடகவியலாளர் முகுந்தன் சுந்தரலிங்கத்திற்கு “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 
ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலமாக  மகத்தான 
அனுபவத்தை கொண்டுள்ள அவருக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர். 
பேராசிரியர்  கலாநிதி சரத் சில்வா மற்றும் கலாநிதி அமுதா கோபாலன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியிருந்தமை
 என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 29 டிசம்பர், 2023

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒப்பனை பொருள் விற்பனையில் முதலிடம் பெற்றுள்ளார்

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், 
உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும்
 வெளியிடுவது வழக்கம்.
இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ், 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக
 இடம் பிடித்துள்ளார்.
மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.
2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.
 கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார், மேயர்ஸ். என்பது குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 28 டிசம்பர், 2023

மிகச்சிறப்பாக கிளிநொச்சியில் முழுநிலா பெருநாள் நிகழ்வு நடைபெற்றது

கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப முன்பள்ளி பருவ அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் முழுநிலா பெருநாள் 12 வது நிகழ்வு.28-12-2023. இன்று  இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் கிளிநொச்சி வடக்கு கல்வி 
வலயத்தின் பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா தலைமையில் 
இடம்பெற்றது.  
இந்நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி 
அலுவலகத்தின் ஆரம்ப முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன
.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 27 டிசம்பர், 2023

நாட்டில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

நாட்டில்துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு 
பிறப்பித்துள்ளது.
தொழிற்சங்கங்களினால் நாளை திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 26 டிசம்பர், 2023

யாழ் தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் சிங்கள மக்களுக்கு விளக்கம்

யாழ் தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நேற்று தொடங்கி பௌர்ணமி தினமான 26.12.2023 இன்று மாலை 
வரை இடம்பெற்றது. 
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், உறுப்பினர்கள், கிராம மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 தமிழர் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்திற்கு சட்டவிரோத விகாரை- உடனே அகற்று, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை சட்ட விரோதமாக அபகரிக்காதே, சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு 
காவல்துறையே துணை போகாதே போன்ற வாசகங்கள் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 
பௌர்ணமி தினமாகையால் தென்பகுதியிலிருந்து 
சிங்கள மக்களும் குறித்த விகாரைக்கு வழிபட வந்திருந்தனர். 
அவர்களுக்கு இது இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீக மண் என்பது தொடர்பில் சிங்களத்தில் தெளிவுபடுத்தப்பட்டமை 
என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 25 டிசம்பர், 2023

பயணிகளுடன் பிரான்ஸ் விமான நிலையத்தில் தடுப்பிலிருந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

  பிரான்சில் 303 இந்தியர்களுடன் Châlons-Vatry விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் ஒன்று திரும்பிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை குறித்த விமானம் Châlons-Vatry விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
 முதலில் விமானக் குழு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் பயணிகளில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 
 இந்நிலையில், அவர்கள் அனைவருடனும் விமானம் உடனடியாக பிரான்சில் இருந்து புறப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக 25-12-2023. திங்கட்கிழமை நண்பகலுக்குள்ளாக அது விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 24 டிசம்பர், 2023

நீங்கள் இயேசு பாலன் பிறப்பு குறித்து அறிந்திராத ஆச்சரிய தகவல்

உலகத்தில் உள்ள பல நாடுகளில் இன்று ஓர் விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுவதாலும், பல மக்கள் தங்கள் 
குடும்பங்களோடும் உறவுகளோடும் ஒன்று சேர்ந்து 
மகிழ்ச்சியாக
 இன்றைய இரவு பொழுதை கொண்டாடுவதாலும். மக்களின் மனதில்
 நிலவுகின்ற மகிழ்வும் அமைதியும் 
இன்று இரவு ஒரு 
மிக வித்தியாசமான அமைதியை நீங்கள் உணரக்கூடியதாக இருக்கும். 
மதங்களைக் கடந்து மனதை ஒருநிலைப்படுத்தி அந்த 
இயற்கை சக்தியை அனுபவித்துப் பாருங்கள் ஓர்த்தடோக்ஸ் orthodoxe என்னும் 
பிரிவினர் தை மாதம் ஏழாம் திகதி (ஜனவரி 7) பாலன் பிறப்பாக கொண்டாடுகிறார்கள். 
 எல்லா மக்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் அனைவருக்கும்எனது  இணையங்களின்
 நத்தார் தின வாழ்த்துகள் உரித்தாகுக 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 23 டிசம்பர், 2023

இந்தியாவில் மழை காரணமாக கல்விச் சான்றிதழ்களை இழந்தோருக்கு இணையவழியால் நகல்

இந்தியாவில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் பல பகுதிகள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிப்பு அடைந்தது.
 4 மாவட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
 ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
www.mycertificates.in என்ற இணையதளம் மூலம்| சான்றிதழ் நகல் பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 22 டிசம்பர், 2023

திடீரென மன்னாரில் குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர்

நாட்டில்  மன்னார் -பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்.22-12-2023.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமைகாலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் 
இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை 
முன்னெடுத்தனர்.
 பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற
 பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
 பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு 
அமைவாக 
நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
இந்த நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் 
குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 
 மேலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு 
வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. என்பதாகும்     

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 21 டிசம்பர், 2023

நாட்டில் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் அஸ்வெசும நிதி திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்பட்டுள்ளன.
இதற்காக 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
 தெரிவித்துள்ளார்.
 குறித்த தொகை பதிவு செய்யப்பட்ட 1,410,064 அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 20 டிசம்பர், 2023

நாட்டில் உயர்தர பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது.
பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி 
அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் 
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஆளில்ல விமானம் மொஸ்கோவிற்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்

 

மொஸ்கோவிற்கு அருகே ஒரு ஆளில்ல விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். 
இதனையடுத்து  Vnukovo மற்றும் Domodedovo, விமான
 நிலையங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள கலுகா 
நகரின் விமான 
நிலையத்தின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி RIA செய்தி நிறுவனம், விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குவதை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை ரஷ்யா வெளியிடவில்லை. ஆனால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைனை காரணம் காட்டியிருந்தமை என்பதாகும் 


திங்கள், 18 டிசம்பர், 2023

நாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது

நாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக 
குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 17 டிசம்பர், 2023

புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜே.ஜே முரளிதரன் பதவியேற்கவுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக.18-12-2023. நாளையதினம் ஜே.ஜே முரளிதரன் பதவியேற்கவுள்ளார். அவரை வாழ்த்திப்பாராட்டுவதில் நாம் பெருமிதமடைகின்றோம் 
, புதிய அரச அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜே.ஜே முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பதுடன்,
 அனைத்தின மக்களையும் ஒரே கண் கொண்டு பார்க்கும் 
அதிகாரிகளில் ஒருவராகவும் அனைத்தின மக்களும் ஒற்றுமை, சந்தோசமாக வாழ வேண்டுமென்று எண்ணும் உயரிய எண்ணம் கொண்டவராகவும் திகழ்கின்றார். 
அந்த வகையில், அனைத்தின மக்களுக்கும் இவரின் உயர்தரமான சேவை பாகுபாடின்றி கிடைக்கப்பெறும் என நாம் நம்புகின்றோம். இவ்வாறான ஒருவர் எமது மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக, 
அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை
எமது இணையங்களின்  பெரும்  மகிழ்ச்சி  
இப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமித்த ஜனாதிபதி, பிரதமருக்கும் மற்றும் மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களுக்கும் எமது இணையங்களின் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 மேலும், இவர் கிழக்கு மாகாண சபையின் பல்வேறு உயர்பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலப்பகுதியில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் மிகச்சிறப்பாகக்
 கடமையாற்றியவர். 
முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசு இவரை நியமித்துள்ளது. 
 அந்த வகையில், பொறுப்புக்களை உத்தியோபூர்வமாக நாளை திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்
 ஏற்கவுள்ளார். 
அவரின் பணி இன, மத பேதங்களுக்கப்பால் சிறப்புற வாழ்த்திப் பாராட்டுகின்றோம் எனஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது       

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 16 டிசம்பர், 2023

நாட்டில் வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை

நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் இருபத்து மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் பந்தய போட்டிகளுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை
 மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த 
தெரிவித்தார்.
தற்போது எண்பத்து மூன்று லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டுக்கு ஐம்பத்தைந்து லட்சம் வாகனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன. வாகன வருவாய் உரிமங்களை 
புதுப்பிப்பதற்கு தேவையான புகை சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் 
கூறுகிறார். 
அதுமட்டுமின்றி, வருவாய்த்துறை உரிமம் புதுப்பிக்க புகைச்சான்றிதழ் தேவையில்லை எனும்போது, ஹைபிரிட், எலக்ட்ரிக், லேண்ட் வாகனங்கள், 1975க்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 
இதன்படி, சுமார் 61 இலட்சம் வாகனங்கள் பாவனையில் உள்ளதாக மதிப்பிட முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 
21 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், மாகாண சபைகளுக்கு உட்பட்ட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து வாகனங்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு எத்தனை அறிவித்தல்களை வழங்கியும் எந்த மாகாண சபையும் தகவல் வழங்கவில்லை எனவும் 
அவர் தெரிவித்தார். 
மாகாண சபைகளிடம் தகவல்களை கோரும் போது, தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவதாகவும், தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்திடம் கேட்டால், தகவல்களை சேகரிக்கும் முறைமை இதுவரை தயார் செய்யவில்லை எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
23 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் இல்லாததாலும், குற்றச் செயல்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அனைத்து வாகனங்களும் பதிவு நீக்கப்பட உள்ளமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 15 டிசம்பர், 2023

யாழ் கீரிமலை பகுதியில் மக்கள் காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு போராட்டம்

யாழ் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில்.15-12-2023.இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தமை  என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 14 டிசம்பர், 2023

யாழ் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு

யாழ் வடமராட்சி பிரதேசத்தின் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை.14-12-2023. இன்று காலை ஆரம்பப்பிரிவு பாடசாலையில் இடம்பெற்றது.
 ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் வழிகாட்டலில் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற இந்த சந்தையில் மாணவர்களின் வீட்டுத்தோட்டத்தில் .
விளைந்த காய்கறிகள், தேங்காய்கள், இலைவகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், தீன்பண்டங்கள், பனைசார்ந்த உற்பத்திகளை பாடசாலையின் முன் முற்றத்தில் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.
ஆரம்பப்பிரிவு மாணவர்களிடம் சந்தையிலோ, கடைகளிலோ பொருள்களை வாங்கி விற்கும் திறனை ஏற்படுத்தவும், கணித அறிவை
 மேம்படுத்தவும், பொருள்களின் பணப்பெறுமதியை 
தெரிந்து கொள்ளும் வாய்ப்பாகவும், இப்படியான சிறிய ஒன்றுகூடல்களின் மூலம் மன மகிழ்வை ஏற்படுத்தவும், ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கும் பண்பை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்நிகழ்வு 
அமைந்திருந்தது.
மிகுந்த ஆர்வமுடன் பொருள்களை விற்ற மாணவர்களிடம் இருந்து ஏனைய மாணவர்களும், கிராம மக்களும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
சிறிய வயதுகளிலேயே இப்படியான அனுபவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து எமது தற்சார்பு பொருளாதாரத்தை வளமாக்க இப்படியான கண்காட்சிகள் அவசியமானவை என மாதிரி சந்தையில் பங்கேற்ற மக்கள் கருத்து தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது  
(இந்நிகழ்வின் நிழல்படங்கள் இணைப்பு) 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






Blogger இயக்குவது.