செவ்வாய், 28 செப்டம்பர், 2021

நாட்டில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை வெளிவந்த முக்கிய செய்தி

இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது.நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.
குறித்த பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதிமுதல் வரும் 29ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரியவருகின்றது.இதேவேளை எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், 27 செப்டம்பர், 2021

இறுதிவரை இந்த ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்களாம்.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்களாம்.அந்த குணம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம் வாங்க
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் அதிக பிடிவாத குணம் இருக்குமாம். அதனால் இவர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவ்வளவு எளிதில் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.ஆனால் இந்த ராசிக்காரர்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவும் மாட்டார்கள். தனக்கு யாரேனும் தீங்கு விளைவித்திருந்தால், அவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவும் மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் அவ்வளவு எளிதில் மற்றவர்களை மன்னிக்க மாட்டார்கள். இவர்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், இவர்களது குணம் இப்படி தான் இருக்கும் என்று நினைத்து, அவர்களது பழக்கத்தையே விட்டு விடுவார்கள்.அதோடு இந்த ராசிக்காரர்கள் முடிந்த அளவு பிரச்சனையை பெரிதாக்குவார்கள். அதுவும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் கூட, காதில் விழாதவர்கள் போன்று பிரச்சனையை பெரிதாக்க நினைப்பார்கள்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யாரேனும் ஏதேனும் கெடுதல் செய்தாலோ அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.எனவே இந்த ராசிக்காரர்களின் நண்பர்கள் அல்லது விருப்பமானவர்கள் சற்று கவனமாக நடந்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வெறும் மன்னிப்பை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. இவர்கள் சிறிய விடயங்களையும் தேவைகளையும் விட தனிப்பட்ட முறையில் எடுக்க முனைவார்கள்.இந்த ராசிக்காரர்கள் போட்ட திட்டத்தை யாரேனும் தடை செய்தாலோ அல்லது முக்கியமான விடயங்களை இவர்களிடம் சொல்வதற்கு மறந்தாலோ, இவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மன்னித்தது போன்று நடிப்பார்களே தவிர, உண்மையில் இவர்கள் மனதளவில் தனக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க மாட்டார்கள்.இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்கள் செய்த தவறைச் சொல்லி காட்டி, எவ்வளவுக்கு எவ்வளவு பேசி மனதை காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு புண்படுத்தி, அவர்களை தலைகுனியச் செய்து விடுவார்கள்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

முக்கிய அறிவிப்பு கொழும்பு மாநகரசபை வாழ் மக்களுக்கு

கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் உள்ள பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகர சபை
 அறிவித்தல் விடுத்துள்ளது.
கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷனி திசாநாயக்க (Roshanie Dissanayake) இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
சொத்தின் உரிமையைப் பாதுகாக்க நகராட்சி மன்றத்தில் சொத்து பதிவு செய்வது அவசியமானது என அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, கொழும்பு மாநகரசபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 25 செப்டம்பர், 2021

கல்லேவ, கொன்வெவ பகுதியில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி முதியவர் மரணம்

இலங்கை மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது
மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக மஹவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியிலிருந் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு உயிரிழந்தவர் கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 23 செப்டம்பர், 2021

முல்லையடி பகுதியில் சிறுவன் மீது நடந்த கடுமையான தாக்குதலில் பலத்த காயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில்  22-09-2021.அன்றயதினம் 14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் அப்பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வந்த நபரொருவரே சிறுவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபரொருவர் அண்மைக்காலமாக பளையில் வசித்து வரும் நிலையில் அவர் கிராமத்தில் உள்ள அநேகமானவர்களுடன் வீண் தகராறுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நபர் மீது பளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் தாயாரை அந்த நபர் தகாத வார்த்கைளால் பேசிய நிலையில் மகன் ஆத்திரமடைந்து நியாயம் கேட்பதற்காக சென்ற போது கடுமையாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் சிறுவன் கழுத்தில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 22 செப்டம்பர், 2021

நாட்டு மக்களுக்கு மின்சார பட்டியலில் இணைக்கப்படவுள்ள புதிய வட்டி

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத நுகர்வோருக்கு 24 மாதங்களுக்குள் தவணையில் முறையில் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே 
தெரிவித்துள்ளார்.
மின் கட்டண நிலுவைத் தொகையை மாதாந்த தவணையில் செலுத்துவதற்காக வட்டி பணத்தொகையொன்று வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி பணம் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 என அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கை 
மின்சார சபை கடந்த
இரண்டு மாதங்களுக்காக 44 பில்லியன் ரூபாய் கட்டணங்களை அறவிடாமல் உள்ளது. மின் கட்டணத்தை செலுத்தக் கூடிய மக்களால் கூட மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சார சபை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 20 செப்டம்பர், 2021

ஜனாதிபதி இலங்கை புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

 

புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapakse) அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களிடம் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 19-09-2021.அன்று
  ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை (Antonio Guterres) சந்தித்து கலந்துரையாடி போதே இதனை 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 17 செப்டம்பர், 2021

நாட்டில் தடுப்பூசி போடாத 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இனி இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இலங்கையின் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இவ்வாறு கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி 
அனுப்பியுள்ளனர்.
மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள்ளும் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் சாலைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 16 செப்டம்பர், 2021

நாட்டில் கடைகளில் போலி அங்கர்கள் விற்பனை இப்பிடி இருந்தால் வாங்க வேண்டாம்

இலங்கையில் அங்கர் கடைகளில் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! போலி அங்கர்கள் விற்பனை.!அங்கர் கடைகளில் விற்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் இப்படியான பக்கட்டுகளில் அடைக்கப்பட்டு
 வரும் அங்கர்
பால்மா தரமானதா இல்லை இது போலியானதா என்று தெரிந்து கொள்ளுங்கள், சற்றும் கண்டுபிடிக்கமுடியாத முறையில் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்க்கப்பட்டும் வருகிறது குறிப்பிடதக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 14 செப்டம்பர், 2021

நாட்டில் குடிபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலைக்குள் சென்று இராஜாங்க அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்குச் சென்றதாக கூறப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், நடக்க முடியாத நிலையில் இருந்த அவரது நண்பர்கள் சிலரை சிறைக்குள் செல்ல அனுமதி மறுத்த சிறை அதிகாரிகளை தவறாகப் பேசியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் 
தெரிவிக்கின்றன.
இதேவேளை சிரேஷ்ட சிறை அதிகாரியொருவர் இச்சம்பவம் நடந்ததை உறுதி செய்தாலும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சிறைச்சாலை முகாமையாளர் மற்றும் சிறை மறுவாழ்வு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, ​​ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் சம்பவத்தின் போது அங்கு அவர் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 13 செப்டம்பர், 2021

இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகின்றது பிரபல நாடு

ஐக்கிய அரபு இராஜியம் 13-09-2021.இன்று முதல் இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை
  நீக்குகின்றது.
அதன்படி.13-09-2021. இன்று முதல் இரண்டு கோவிட் டோஸ்களையும் பெற்றவர்கள் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 10 செப்டம்பர், 2021

உடுப்பிட்டிபகுதியில் காதல் ஜோடியால் இரண்டு பட்ட ஊர்

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.
உடுப்பிட்டியில்  08-09-2021.அன்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 
காதல் ஜோடியொன்று அண்மையில் எதிர்ப்பை 
மீறி திருமணம் செய்ததை தொடர்ந்து, சமூகங்களிற்கிடையில் மோதல் போக்கு ஏற்பட்டது.
உடுப்பிட்டியில் 08-09-2021.அன்று  இரவு உச்சமடைந்து
 இரண்டு சமூகத்தினரும் முட்டி மோதிக்கொள்ளும் நிலைமையேற்பட்ட போது, வல்வெட்டித்துறை பொலிசார் நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.
எனினும்,நிலைமையை கட்டுக்கடங்காமல் போகவே
 இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. 09-09-2021.அன்று காலையில் இரண்டு சமூக பிரமுகர்களையும் 
பொலிசார் அழைத்து பேசி, நிலைமையை 
சுமுகமாக்கியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 8 செப்டம்பர், 2021

எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் மன்னார் கடற்பரப்பில் லாபம் பெறலாம்

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுனமன்றில் நேற்று இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 மில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 மில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத்துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.
இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி நாடாளுமன்றத்துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் 
தெரிவித்தார்.
மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும், அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.
எமது அண்டைய நாடான இந்தியா 1940 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக இலங்கைக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், இது
 தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பாரிய நிறுவனங்கள் முன்வரவில்லை எனவும் அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் 
சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.
அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரையை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது.
இதனால் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் 
தெரிவித்தார்
அதேபோன்று, பல மில்லியன் டொலர்கள் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்த பாரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நீதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும் போது ஒன்று வெற்றிபெறுவதாகவும், நோர்வே நாட்டுக்கு முதலாவது வெற்றியடைவதற்கு 31 கிணறுகள் அகழ்வு செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 4 கிணறுகள் அகழ்வின் போதும் 3 கிணறுகள் வெற்றியடைந்தமை நல்லதொரு நிலைமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
இந்த நடவடிக்கைகளுக்காக உலகம் பூராவும் உள்ள துறை சார்ந்த இலங்கை நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 7 செப்டம்பர், 2021

அம்பகந்தவில கிராமத்த்தில் பொலிசாரை கட்டிவைத்த பொதுமக்கள்

இரவுவேளை தனியே  அம்பகந்தவில கிராமத்துக்குள் சென்ற பொலிஸ் அதிகாரியை பிடித்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்த சம்பவம் ஒன்று
 இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கட்டி வைக்கப்பட்ட குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது, அண்மையில் இரவுவேளையில் குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
 ஏற்படுத்தியது.
குறித்த பொலிஸ் அதிகாரி திருமணமாகாதவர். இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 6 செப்டம்பர், 2021

கர்ப்பிணிகளே உஷாரா இருங்க இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்தாம்

மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு
 பெண் ஒருவர்
முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த 
எத்தனிக்கும். அது போன்ற சில முக்கிய அறிகுறிகளை நாம் இப்போது பார்ப்போம்.
வயிற்றின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதிகளில் வலி:பிரசவ காலத்தில் இது போன்ற வலிகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலுடன் வலி ஏற்படுவதுண்டு. நெஞ்செரிவு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் உட்கொண்ட உணவு நச்சுத்தன்மையடைதல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்படலாம். சிலவேளைகளில் கர்பிணித் தாய்மார்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதையும் இது குறிக்கும். இது தொடர்பில் வைத்தியரை 
அணுகுதல் அவசியம்.
அடிவயிற்றில் வலி:பிரசவ காலத்தின் போது அடிவயிற்றில் வலி ஏற்படுமாயின் நாம் அதை புறக்கணிக்க கூடாது. சில சமயங்களில் தசைநார்கள் கிழிவதால் இந்த வலி ஏற்படலாம். எனினும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தாது. ஆனால் குறித்த வலி, ஃபலோப்பியன் குழாய் அல்லது கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்தல், குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் ஃபைபுரொய்ட் கட்டிகள் உடைதல் போன்ற காரணங்களாலும்
 ஏற்படலாம்.
காய்ச்சல்:கர்ப்பகாலத்தின் போது தடுமல் இன்றி 100 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம். ஏனெனில் 200 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் ஏற்படுமாயின் அது குழந்தையையும் 
பாதிக்கலாம்.
கண்பார்வையில் குறைபாடு:பார்வை மங்குதல் மற்றும் கண் பார்வையில் குறைபாடு போன்ற நிலைமைகள் தோன்றின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை குறைபாடு 
ஏற்படலாம்.
கை, மூட்டு மற்றும் முகத்தில் வீக்கம்:கர்ப்பகாலத்தில் கை, மூட்டு, மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். இருப்பினும், அடிவயிற்றில் வலி மற்றும் கண்பார்வை குறைதல் போன்ற 
அறிகுறிகளுடன் வீக்கமும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
தலை வலி:தாய்மார்களுக்கு தலை வலி ஏற்படுவதும் சாதாரண விடயமே. ஆனால் தாங்க முடியாத தலை வலி ஏற்படுமாயின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் தாய் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதை குறித்த அறிகுறிகள் குறிக்கும்.
அதிகளவான தாகம் ஏற்படுதல்:சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் ஏற்படுதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படின் அதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியன. இந்த நிலைமை நீரிழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் குறித்த நிலைமைகளை வைத்தியரிடம் எடுத்துக்கூறி ஆலோசனை 
பெற வேண்டும். 
மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு
 பெண் ஒருவர்
முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த எத்தனிக்கும். அது போன்ற சில முக்கிய அறிகுறிகளை நாம் இப்போது 
பார்ப்போம்.
வயிற்றின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதிகளில் வலி:பிரசவ காலத்தில் இது போன்ற வலிகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலுடன் வலி ஏற்படுவதுண்டு. நெஞ்செரிவு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் உட்கொண்ட உணவு நச்சுத்தன்மையடைதல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்படலாம். சிலவேளைகளில் கர்பிணித் தாய்மார்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதையும் இது குறிக்கும். இது தொடர்பில் வைத்தியரை
 அணுகுதல் அவசியம்.
அடிவயிற்றில் வலி:பிரசவ காலத்தின் போது அடிவயிற்றில் வலி ஏற்படுமாயின் நாம் அதை புறக்கணிக்க கூடாது. சில சமயங்களில் தசைநார்கள் கிழிவதால் இந்த வலி ஏற்படலாம். எனினும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தாது. ஆனால் குறித்த வலி, ஃபலோப்பியன் குழாய் அல்லது கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்தல், குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் ஃபைபுரொய்ட் கட்டிகள் உடைதல் போன்ற காரணங்களாலும் 
ஏற்படலாம்.
காய்ச்சல்:கர்ப்பகாலத்தின் போது தடுமல் இன்றி 100 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம். ஏனெனில் 200 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் ஏற்படுமாயின் அது குழந்தையையும்
 பாதிக்கலாம்.
கண்பார்வையில் குறைபாடு:பார்வை மங்குதல் மற்றும் கண் பார்வையில் குறைபாடு போன்ற நிலைமைகள் தோன்றின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை
 குறைபாடு ஏற்படலாம்.
கை, மூட்டு மற்றும் முகத்தில் வீக்கம்:கர்ப்பகாலத்தில் கை, மூட்டு, மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். இருப்பினும், அடிவயிற்றில் வலி மற்றும் கண்பார்வை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் வீக்கமும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை
 நாட வேண்டும்.

தலை வலி:தாய்மார்களுக்கு தலை வலி ஏற்படுவதும் சாதாரண விடயமே. ஆனால் தாங்க முடியாத தலை வலி ஏற்படுமாயின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் தாய் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதை குறித்த அறிகுறிகள் குறிக்கும்.
அதிகளவான தாகம் ஏற்படுதல்:சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் ஏற்படுதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படின் அதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியன. இந்த நிலைமை நீரிழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் குறித்த நிலைமைகளை வைத்தியரிடம் எடுத்துக்கூறி ஆலோசனை
 பெற வேண்டும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏற்படல்:சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிவு யூ.ரி.ஐ தொற்று காரணமாக ஏற்படக் கூடும். இதற்கு வைத்தியரை நாடுவதன் மூலம் தீர்வு காணலாம்.
வாந்தி:கர்ப்பகாலத்தில் வாந்தி ஏற்படுதல் என்பது மிகச் சாதாரண விடயம். இருப்பினும் நாளொன்றுக்கு இரண்டு முறை வாந்தி ஏற்படுமாயின் தாயின் உடலில் உள்ள சக்தி படிப்படியாக குறைவடையக் கூடும். இதனால் நீரிழப்பு ஏற்படவும் கூடும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 4 செப்டம்பர், 2021

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோம்

எதிர்வரும்.06-09-2021, திங்கட்கிழமை முதல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக
 தெரிவிக்கபப்டுகின்றது.
இத்தகவலை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். அத்துடன் பொருளாதார மையங்கள் நாளை மற்றும் திங்கட்கிழமை திறந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நடமாடும் விற்பனையாளர்கள் காய்கறிகள் மற்றும் மீன்களைப் பேலியகொட மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தையில் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
அவர் குறிப்பிட்டார் .

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 2 செப்டம்பர், 2021

மிகவும் மகிழ்ச்சியான செய்தி இலங்கை வாழ் மக்களுக்கு

பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம 
ஜீவந்தர தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.