புதன், 22 செப்டம்பர், 2021

நாட்டு மக்களுக்கு மின்சார பட்டியலில் இணைக்கப்படவுள்ள புதிய வட்டி

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத நுகர்வோருக்கு 24 மாதங்களுக்குள் தவணையில் முறையில் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே 
தெரிவித்துள்ளார்.
மின் கட்டண நிலுவைத் தொகையை மாதாந்த தவணையில் செலுத்துவதற்காக வட்டி பணத்தொகையொன்று வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி பணம் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 என அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கை 
மின்சார சபை கடந்த
இரண்டு மாதங்களுக்காக 44 பில்லியன் ரூபாய் கட்டணங்களை அறவிடாமல் உள்ளது. மின் கட்டணத்தை செலுத்தக் கூடிய மக்களால் கூட மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சார சபை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.