செவ்வாய், 31 மார்ச், 2026

வட்டக்கச்சி மாணவன் கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பிடித்தார்

நாட்டில் இந்து வித்தியா விருத்திக்கழகம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடத்தைப் பெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த 
தரம் 07 மாணவன் 
கோ.தமிழரங்கன் தனது பரிசுப் பணத்தை முழுமையாக மாவட்ட விவாதிகள் கழகத்திற்கு வழங்கியுள்ளார். இந்த செயல் எங்களுக்கு பெருமையையும் நன்றியையும் அளிக்கிறது. 
தனது வெற்றியை தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளாமல், கழக வளர்ச்சிக்காக பகிர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. விவாதிகள் கழகத்தின்
 சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியை 
தெரிவித்துக்கொள்கிறோம். 
தமிழரங்கனின் இந்த செயல், மாவட்டத்தில் உள்ள சவால்கள் இருந்தாலும் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு நல்ல நினைவூட்டலாக உள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழில் தந்தை செல்வாவின் நூற்றி இருபத்தி எட்டா வது ஜனனதினம்: நினைவேந்தல்.

தமிழ் தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நீண்ட நாட்களாக பணியாற்றினார்.
இவரது சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு இன்று வரையும் பல தமிழ் கட்சிகளின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.31-03-2026.. இன்று யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின்
 உருவ சிலைக்கு 
தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தமிழர் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மாணவர் சபை முதல்வர், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் மாலை அணிந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது தந்தை செல்வநாயகம் தொடர்பாக தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் கருத்துக்களை பகிர்ந்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



இலங்கையில் ஆறு மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டுதாரர்களுக்கு கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டினில் அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட அதற்கான வரைவு உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை
 தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை தனது இறுதி அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 30 மார்ச், 2026

டீசல் விலை பிரிட்டனில் நாற்பது மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது

பிரிட்டனில் டீசல் விலை டிசம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பெட்ரோல் விலையும் 28 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் சராசரி விலை 152 பென்ஸாகவும், டீசலின் விலை 181.2 பென்ஸாகவும் உள்ளது.
ஈரான் மோதல் தொடங்கியபோது இருந்ததை விட, இப்போது ஒரு சாதாரண பெட்ரோல் குடும்பக் காருக்கு எரிபொருள் நிரப்ப £10.55 அதிகமாகச் செலவாகிறது டீசல் கார்களைப் பொறுத்தவரை, உரிமையாளர்கள் £21.35 கூடுதலாகச் செலுத்துகின்றனர்.
ஈரானில் நடக்கும் போரும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் சூழலும் உலகளாவிய எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக சில நாடுகள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன . இலங்கை எரிபொருள் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள், மக்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க ஊக்குவிக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கியுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

மூன்று நிமிடங்களுக்குள் இத்தாலியில் தலைசிறந்த படைப்புகளைத் திருடர்கள் திருனர்

வடக்கு இத்தாலியில் உள்ள பார்மா நகருக்கு அருகிலுள்ள மமியானோ டி டிராவர்செடோலோவில் அமைந்துள்ள மக்னானி ரோக்கா அறக்கட்டளை அருங்காட்சியகத்திலிருந்து, பல மில்லியன் 
யூரோக்கள் மதிப்புள்ள பல ஓவியங்களைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை 
உறுதிப்படுத்தியது.
மார்ச் 22-23 ஆம் திகதி இரவில், மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நெற்செய்கைக்கு தடையின்றி உரம் - விவசாயத் திணைக்களத்தின் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் .2026 ஆம் ஆண்டுக்கான யால பருவப் பயிர்ச்செய்கையின் போது, கையிருப்பிலுள்ள யூரியா உரத்தை நெற்செய்கைக்கு மாத்திரம் 
வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.
தற்போது கையிருப்பிலுள்ள உரத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் உள்ளதைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு முழுவதுமுள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரமே இந்த உர விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நெற்செய்கை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதர பயிர்ச்செய்கைகளை விட நெற்செய்கைக்கு முன்னுரிமை அளித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் என விவசாய அபிவிருத்தித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 29 மார்ச், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று  இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 317.99 ரூபா
ஜப்பானிய யென் 2.02 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 424.83 ரூபா
யூரோ 367.62 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 222.96 ரூபா
சுவிஸ் பிராங் 401.62 ரூபா
கனடிய டாலர் 230.87 ரூபா
கத்தார் ரியால் 87.87 ரூபா
குவைத் தினார் 1046.94 ரூபா
சவுதி ரியால் 85.55 ரூபா

என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.