செவ்வாய், 9 ஜூன், 2026

இங்கிலாந்து பிரதமர் பதின்ஆறு வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை விதிக்க திட்டமிடும்

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான "தீங்கு விளைவிக்கும்" சமூக ஊடக தடை விதிப்பதாக 
அறிவிக்க உள்ளார். 
அதே நேரத்தில், சில பாதுகாப்பான சமூக ஊடக வடிவங்களுக்கான அணுகலைத் தொடர்ந்து அனுமதிப்பார் என 
அறியப்படுகிறது.
துயரமடைந்த பெற்றோர்களுடன் பேசிய பின்னரும், கடந்த டிசம்பரில் 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதித்த ஆஸ்திரேலியாவின் சான்றுகளைக் கருத்தில் கொண்ட பின்னரும், கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக, தொழில்நுட்ப நிறுவனங்களையும் அவற்றின் முதலாளிகளையும் எதிர்த்துப் போராட பிரதமர் அஞ்சவில்லை" என்று பேசப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் காணி உரித்து உள்ளிட்ட காணி ஆவணங்கள் வழங்கும் பணிகள் தீவிரம்

நாட்டில் 2025 நடமாடும் சேவையின் போது விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான வெளிக்கள பரிசோதனை ஆவணச் சரிபார்ப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
காணி அனுமதிப்பத்திரங்கள், காணி உரித்துகள் மற்றும் நீண்டகால குத்தகைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்.
முக்கியமாக, 2025 நடமாடும் சேவையின் போது விண்ணப்பிக்கத் தவறிய குடிமக்கள், தங்கள் விண்ணப்பங்களை கரைச்சி பிரதேச செயலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

உலகக் கிண்ண கால்பந்து போட்டி காரணமாக கனடாவில் தடைப்படும் தபால் சேவைகள்

கனடாவில் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கான தபால் விநியோகத்தில் தற்காலிகத் தாமதங்கள் ஏற்படலாம் என கனடா தபால் திணைக்களம்
 எச்சரித்துள்ளது.
டொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய நகரங்களில் வார நாட்களில் போட்டிகள் நடைபெறும் போது இந்தச் சேவைத் தடங்கல்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை டொராண்டோவில் போட்டிகள் நடைபெறும் மைதானங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான தபால் சேவைத் தடங்கல்கள் ஏற்படும் என கனடா தபால் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போட்டிகள் நடைபெறும் 5 வார நாட்களிலும் தபால்களை உரிய முறையில் விநியோகிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோவில், போட்டிகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதி மூடல்களால் சில பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 8 ஜூன், 2026

இன்றுமுதல் தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

தற்போதய எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை திருத்தியமைக்க கோரியமைக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மேற்படி நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து
 உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன
 தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 25 சதவீதப் பேருந்துகள் ஏற்கனவே தாங்களாகவே இயங்குவதை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் காரைதீவில் மங்கிய வீதி அறிவித்தல் பலகை மற்றும் பாதசாரி கடவை அமைக்க மக்கள் கோரிக்கை

நாட்டில்  காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து, நிறம் மங்கிப் போய் காணப்படுகிறது. 
இதனால் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்குச் செல்லும் திசைகளைத் தூரத்தில் இருந்து வரும் வாகனச் சாரதிகளால் துல்லியமாக அடையாளம் காண முடிவதில்லை.
சாரதிகள் சிரமம்: நெடுந்தூரப் பயணிகள் மற்றும் சாரதிகள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) உடனடியாக இதனைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் 
கோரியுள்ளனர்.
பாதசாரி கடவை கோரிக்கை: இதேவேளை, காரைதீவு மதுபானசாலைக்கு முன்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதியில், கடந்த கால விபத்துக்களைக் கருத்திற்கொண்டு புதிய பாதசாரி 
கடவை (Pedestrian Crossing) ஒன்றையும் அமைத்துத் தருமாறு பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இன்று பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இன்று பிலிப்பைன்ஸின் மின்டானோவில்  இன்றைய தினம 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ)
 தெரிவித்துள்ளது.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு  சுனாமி அச்சுறுத்தல் விடுத்துள்ளமை
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்    

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 7 ஜூன், 2026

நாட்டில் தனியார் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் :

.நாட்டில்  தனியார் பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக,  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
நுகேகொடையில்.07-06-2026. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை. இந்த மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அவ்வாறு வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 "ஏற்கனவே 25% பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
 எமது சங்கத்தைச் சேர்ந்த சில பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் அடிக்கப்படுகிறது. அதனை நிறுத்தக் கூறியும் அவர்கள் கேட்பதில்லை, அத்தகைய பேருந்துகள் மாத்திரமே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆகவே   8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது
 பேருந்து சேவைகளை 50 சதவீதமாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
. .என்பதும்  குறிப்பிடத்தக்கது   


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.