செவ்வாய், 10 மார்ச், 2026

கிளிநொச்சி வைத்தியசாலை கதவுகள் இல்லாத மலசல கூடங்கள்

  நாட்டில்  கிளிநொச்சி வைத்தியசாலையின் 2ம் நோயாளர் விடுதி மற்றும் OPD யில் உள்ள பெண்கள் மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டும் எனில் மறைப்புக்களை நோயாளர்களே எடுத்துச் செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் விசனம் வெளிவிடுகின்றனர்.
கதவுகள் இல்லாமல் காணப்படும் குறித்த மலசல கூடங்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
போதிய சுகாதார வசதிகளும் இல்லாமல் காணப்படும் குறித்த வைத்தியசாலை மல சல கூடங்களை பயன்படுத்தும் மக்களும், நாட்டின் வரிச்சுமையை சுமக்கின்றார்கள் என்று உரிய அதிகாரிகளும், அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



மீண்டும் ஆரம்பமாகும் வடகொரியா மற்றும் சீனா இடையிலான ரயில் சேவை

மீண்டும் ஆறு வருடங்களுக்கு பிறகு  வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில், இந்த வாரம் முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா 
தெரிவித்துள்ளது. 
இந்த ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும். தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில்
 இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 9 மார்ச், 2026

நாட்டில் எரிபொருள் விலைகளை உயர்த்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில்.09-03-2026. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக
 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(சிபெட்கோ) அறிவித்துள்ளது.
அந்தவகையில், திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு:
ஆட்டோ டீசல் - ரூ. 303 (22 ரூபாய்
 அதிகரித்துள்ளது)
சூப்பர் டீசல் - ரூ. 353 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
பெட்ரோல் 92 ஆக்டேன் - ரூ. 317 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 365 (25 ரூபாய் அதிகரித்துள்ளது)
மண்ணெண்ணெய் - ரூ. 195 (13 ரூபாய் அதிகரித்துள்ளது)
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தமிழர் காணிகளில் கொக்குத்தொடுவாயில் சிங்கள வர்த்தகர் அத்துமீறல்

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 08.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டமானது 
இன்று ஒன்பது 
ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை 
முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும்
இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது 
பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு
 கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எங்கே எங்கே உறவுகள் எங்கே , பழைய சட்டமும் வேண்டாம் புதியசட்டமும் வேண்டாம் , அழிக்காதே அழிக்காதே தமிழரின் இன அழிப்பின் அடையாளமான வட்டுவாகல் பாலத்தை அழிக்காதே, வேண்டும்
 வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரத்தில் இராணுவத்திடம் உறவுகளை கையளித்த இடம் வரை சென்று நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மீண்டும் ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகள் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதன் அடிப்படையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் 
நலனிற்கு முன்னுரிமை அளித்து, ரியாத் மற்றும் துபாய்க்கான தமது அன்றாட வானூர்தி சேவைகளை மீள ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு ரியாத்திற்கும், நாளை முதல் துபாயிற்கும் வானூர்தி சேவைகள் இடம்பெறவுள்ளன.
UL265 கொழும்பு – ரியாத் 18:15 மணி
UL266 ரியாத் – கொழும்பு 22:35 மணி
UL231 கொழும்பு – துபாய் 12:40 மணி
UL232 துபாய் – கொழும்பு 17:00 மணி
இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 8 மார்ச், 2026

நாட்டில் மின்வெட்டு ஏற்படாதுஎன எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

நாட்டில் .நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடங்கலுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள்
 கையிருப்பில் உள்ளது.
எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும், பொதுமக்கள் இவ்வாறான தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



குடியிருப்புக்கு நடுவே யாழில் அமைந்துள்ள கோழிப்பண்ணையால் பொதுமக்கள் அவதி

யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் தெற்கு  சத்தியபுரம் பிரதேசத்தின் கறுத்தான் வடலி குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கோழிப்பண்ணையால் அதனைச் சூழவுள்ள பொதுமக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
ஜே – 182 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் ஒருவர் காணியை வாங்கி 2024 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.
குறித்த பண்ணை அமைக்கும் போதே கிராம மக்கள் சந்தேகமடைந்து குறித்த காணி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மேலே சூரிய மின்கல படலம் அமைத்து பெண்களுக்கு சுயதொழில் முயற்சி வாய்ப்பு வழங்கப்போவதாக கூறியிருந்தார். பின் கூறியதற்கு மாறாக கோழிப்பண்ணை
 அமைத்துள்ளார்.
கோழிப்பண்ணை அமைத்த பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றம், ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், இலையான் பெருகுவதால் ஏற்படும் தொற்றுகள் என பெரும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை
 பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் கிராம மக்கள் கிராம சேவையாளர், பிரதேச சபை, பிரதேச செயலகம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம், சுற்றுச் சூழல் அதிகாரசபை 
போன்ற அலுவலகங்களுக்கு சென்று உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
குடியிருப்புக்கு நெருக்கமாக உள்ள பகுதியில் தாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச் சூழல் அதிகார சபையினர் தங்கள் அதிகார வரம்பைக் குறிப்பிட்டு இந்த விடயத்தில் பிரதேச சபையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும், குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் மாறி மாறி ஏனைய அரச அலுவலகங்களை கைகாட்டி விட்டு உரிய சட்ட நடவடிக்கை 
எடுக்காமல் இருப்பதாகவும்,
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஷிடம் பொதுமக்கள் சென்று முறையிட்டு அவர் நேரடியாக வந்து பார்வையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நல்ல காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழ வேண்டிய நாங்கள் தொடர்ந்தும் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை 
தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று பொதுமக்கள் பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் புதிதாக 
பொறுப்பேற்ற பொலிஸ்
 பொறுப்பதிகாரியிடமும் சென்று முறையிட்டுள்ளனர். அவர் அனைத்து தரப்பினரிடமும் ஆராய்ந்து ஓரிரு வாரங்களில் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார்.
குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து 
அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.