வியாழன், 21 மே, 2026

யாழ் தையிட்டி பவானி வீதி விவகாரம்: பொலிஸாரின் தடை மனு மீதான கட்டளை ஜூன் 25க்கு ஒத்திவைப்பு

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதியினை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி 
பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான கட்டளை, எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம்
 உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் (மே 21) இவ்வழக்கு மீதான கட்டளை வழங்கப்படும் என கடந்த 11ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில், இன்றைய அமர்வின் போது இக்கட்டளை அடுத்த மாதம் ஜூன் 25 ஆம் திகதிக்கு 
ஒத்திவைக்கப்பட்டது.
இவ்விவகாரத்தின் பின்னணி விபரங்கள் வருமாறு: வீதி அளவீடும் விகாராதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதமும் தையிட்டி விகாரை வளாகத்திற்குள் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து, வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பிரதேச சபையே வேலியை அகற்றி அதற்கான செலவீனத்தை 
விகாராதிபதியிடமிருந்து அறவிடும் எனவும் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பொலிஸாரின் அச்சுறுத்தலும் நீதிமன்ற மனுவும் பிரதேச சபை விகாரை வேலியை அகற்ற முற்படுவதாக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இம்முறைப்பாட்டின் பிரகாரம் தவிசாளரை அழைத்த பொலிஸார், "வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்பணியைக் கைவிட வேண்டும்" என அச்சுறுத்தும் தொனியில் கூறினர். 
எனினும், பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தவிசாளர் பொலிஸாரிடம் மறுத்துரைத்தார். இதனையடுத்து, வீதியை மீட்கும் பணியை வலி. வடக்கு பிரதேச சபை கைவிட வேண்டும் எனத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
சுமந்திரனின் வாதமும் தள்ளிவைக்கப்பட்ட கட்டளையும் இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஒருதலைப்பட்சமாக உத்தரவிட முடியாது எனக் கூறி வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு
 விடுத்திருந்தது.
அதன்படி கடந்த 11ஆம் திகதி அவர்கள் மன்றில் முன்னிலையான போது, அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகிப் பிரதேச சபை தரப்பு வாதங்களை 
முன்வைத்தார். 
இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்புக் கட்டளையே, தற்போது ஜூன் 25ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 20 மே, 2026

நாட்டில் அரிசி, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்பு

தற்போது இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி  காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் காலத்தில் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சுவிஸ் சூரிச் மற்றும் பெங்களூரு இடையே நேரடி விமான சேவை ஆரம்பமகாயுள்ளன

 

சுவிஸ்  சூரிச் சர்வதேச விமான சேவை, பெங்களூரு மற்றும் சூரிச் இடையே ஒரு புதிய நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. 
இந்தப் புதிய வழித்தடம், 2026 அக்டோபர் 25 முதல் 2027 மார்ச் 27 வரை இயக்கப்படும் என்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
 முழுவதும் உள்ள இடங்களுக்குத் தொடர் பயணச் சேவையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பெங்களூரிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல விரும்பும் பயணிகள் துபாய், கத்தார் அல்லது ஜெர்மனி வழியாக விமானம் மாறி தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம், பயணிகள் எங்கும் இறங்கி மாறாமல் பெங்களூருவிலிருந்து 9 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தை சென்றடைய முடியும்.
.  .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 19 மே, 2026

நாட்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு நிதியுதவி

நாட்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டால், அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு  மாதம் 10,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) அதிகாரிகள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். 
பாராளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தொடர்புடைய அறிக்கையை இன்று வெளியிட்டது. 
இதன்படி வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாத வருமானம் 400 அமெரிக்க டாலரைத் தாண்டும் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஆரம்ப ஒதுக்கீடாக ரூ 10,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
 இத்திட்டத்திற்காக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடல்


நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில். இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. 
தற்போது 50 பெண் பொலிஸ் உப-ஆய்வாளர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ் காவலர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள்
 கோரப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்காக சமூக ஊடகங்கள் மூலம் சிறப்பு விளம்பரப் பிரச்சாரங்களும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் 
தெரிவித்துள்ளார். 
அதேவேளை தமிழ் பேசக்கூடிய பொது சுகாதார செவிலியர்களுக்கான தற்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இன்றை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 18 மே, 2026

நாட்டில் தொண்ணூற்றி ஐந்து ரக ஒக்டேன் பெட்ரோல், சுப்பர் டீசல் விநியோகம் ஸ்தம்பிதம்

இலங்கை  முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் கையிருப்பை நிலையங்களில் பராமரிப்பதற்கு 3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
இருப்பினும், இந்த எரிபொருள்களை விற்பனை செய்வதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இயக்க இலாபம் சுமார் 45,000 ரூபாவாக மட்டுமே காணப்படுகிறது. 
இந்த இரண்டு வகை எரிபொருள்களினதும் தினசரி விற்பனை 500 லீற்றருக்கும் குறைவாக இருப்பதால், ஒருமுறை கொள்வனவு செய்யும் கையிருப்பை விற்று முடிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாகிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கும் 45,000 ரூபா லாபத் தொகையானது, எரிபொருள் நிலைய ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்குக்கூடப் போதுமானதாக இல்லை என விநியோகஸ்தர்கள் கவலை
 வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த இரண்டு வகை எரிபொருள்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) வழங்கும் சதவீதத்தை விட, இலங்கையிலுள்ள வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமான (அதிகபட்ச சில்லறை விலையில் 3%) தள்ளுபடியை வழங்கி வருகின்றன.
இதன் காரணமாக, கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பல கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இந்த
 எரிபொருள்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து
 வருகின்றன. 
இதனால் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நவீன ரக வாகனங்களைப் பயன்படுத்தும் நுகர்வோர் தங்களுக்குரிய எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் முழுமையாக முடங்கிய வர்த்தக நிலையங்கள்

நாட்டில்  முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான.18-05-2026. இன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக 
நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு 
வருகின்றன.
கிளிநொச்சி நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் தங்களது வர்த்தகச் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தி, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி 
செலுத்தியுள்ளனர்.
வர்த்தகப் புறக்கணிப்புக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் வலியை சுமந்தவாறு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று 
வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களுக்கு கஞ்சி விநியோகிக்கப்பட்டமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.