செவ்வாய், 21 ஏப்ரல், 2026

ஈரான் வான் வெளியில் வானூர்தி மீண்டும் பறக்கத் தயார் போக்குவரத்து வழமைக்குத் திரும்புகிறது

நடந்த போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி
 சேவைகளை 22-04-2026. நாளை  முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெஹ்ரான் மற்றும் மஷாத் (Tehran-Mashhad) ஆகிய நகரங்களுக்கு இடையிலான வானூர்தி சேவையே முதலில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அதே நாளிலேயே அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த வானூர்தி சேவைகள் கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்தன

நாட்டில்  2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பிரசித்திபெற்ற கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் திருக்குமரன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன் ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான இந்தப் பணியை 
 இந்த இணையமும் வாழ்த்துகின்றன . பரிசில்கள் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








 

இன்று உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை: தீவிரமடையும் எரிசக்தி தட்டுப்பாடு

தற்போது  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, உலகம் தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை தற்போது எதிர்நோக்கியுள்ளதாக 
சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) உத்தியோகபூர்வமாக 
அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி 
வெளியிட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Fatih Birol கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியானது 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சிகளை விடவும் மிகக் கடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நாளைக்கு சுமார் 13 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் சந்தையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளின் கூட்டுப் பாதிப்பை விடவும் அதிகமானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை முற்றாகச் சிதைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இன்று முதல் வழமை போல் இயங்கும்

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் சீர்செய்யப்பட்டுள்ளதையடுத்து,.20-04-2026. இன்று  முதல் அடையாள அட்டை விநியோக சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதன்படி, ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு பிரிவுகளின் ஊடாகவும் பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அடையாள அட்டை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்படுத்தல்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால்.20-04-2026., இன்று முதல் பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் 
பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னதாக, கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒரு நாள் சேவை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சாதாரண சேவைகளும் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் .20-04-2026.இன்று பிற்பகல் ரிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நாட்டின் பல மாகாணங்களுக்கு ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA) சுனாமி எச்சரிக்கை
 விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இவாட் (Iwate), அமோரி (Aomori) மற்றும் ஹொக்கைடோ (Hokkaido) ஆகிய மாகாணங்களின் கடற்கரைப் பகுதிகளுக்கு 3 மீற்றர் (9.84 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக மேடான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடலில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 
ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் (Seismic Intensity Scale) இது 'அப்பர் 5' (Upper 5) எனப் பதிவாகியுள்ளது. இத்தகைய அதிர்வுகள் ஏற்படும் போது மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது 
கடினமாக இருக்கும்.
கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடல் அலைகளின் சீற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முன்னாள் காதலியை சுவிசில் துன்புறுத்திய தமிழ் இளைஞனுக்கு தண்டனை

சுவிசில் முன்னாள்  காதலியை “நீ எனக்குக் கிடைக்காவிட்டால், நீ இறந்து விடுவாய்.” இதுபோல மேலும் 65,892 வாட்ஸ்அப் செய்திகளை, 16 மாத கால இடைவெளிக்குள், தனது முன்னாள் காதலிக்கு அனுப்பிய சுவிஸ்லாந் சூரிச்சில் வசிக்கும் 28 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளார்.
அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 தொலைபேசி அழைப்புகளையும் எடுத்துள்ளார். தற்போது சூரிச் மாவட்ட நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
தனக்குக் கிடைக்காவிட்டால் “குத்திவிடுவேன்” என்று அந்த நபர் தனது முன்னாள் காதலியை வட்ஸ்அப் தகவல்களில் 
மிரட்டியுள்ளார்.
வெட்டப்பட்ட மணிக்கட்டுகளின் வீடியோக்களையும் படங்களையும் அவளுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அவர் அவளைப் போல் நடித்து டிக்டொக் கணக்குகளை உருவாக்கி, அவதூறான உள்ளடக்கத்தைப் 
பதிவிட்டுள்ளார்.
அரசுத் தரப்பு, 11 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை, தலா 30 சுவிஸ் பிராங்குகள் கொண்ட 30 தினசரி விகிதங்கள் அபராதம், மற்றும் வற்புறுத்தல், அச்சுறுத்தல்கள், அடையாளத் திருட்டு, மற்றும் சட்டவிரோத குடியிருப்பு ஆகியவற்றுக்காக நாடு கடத்தக் கோரியுள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் வல்வெட்டித்துறை யில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு - ஒருவர் கைது

யாழில்  சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை 
கஞ்சாவும் , சிறிய ரக 
கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை
 பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.