வியாழன், 4 ஜூன், 2026

நாட்டை உலுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் சிறுவர்கள் பாதிப்பு

நாட்டில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் (Wasting) பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் 40% க்கும் அதிகமான குடும்பங்கள் தங்களின் தினசரி உணவிற்காகப் போதிய வருமானமின்றித் திணறி வருகின்றன. 
இதனால், பால் மா, முட்டை, மீன், இறைச்சி போன்ற
 புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகளைப் பெற்றோருக்கு வாங்க முடியாமல் போயுள்ளது.
ஊட்டச்சத்து மிக்க உணவுகளுக்குப் பதிலாக மலிவான மாப்பொருள் (கார்போஹைட்ரேட்) நிறைந்த உணவுகளையே பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிகளவில் வழங்குகின்றனர். 
இது தற்காலிகமாகப் பசியைப் போக்கினாலும், பிள்ளைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியைப் பெருமளவில் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகப் பாடசாலை மாணவர்களின் கவனக்குவிப்புத் திறன், ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறன் ஆகியவை வீழ்ச்சியடைந்துள்ளன.
பிறக்கும்போதே குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொற்றுநோய்களுக்கு ஆளாகும் வீதமும் 
அதிகரித்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்குத் தடையின்றித் 'திரிபோஷா' (Thriposha) வழங்குவதற்குச் சுகாதார அமைச்சு அவசரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகிய சர்வதேச அமைப்புகள் இணைந்து, இலங்கையின் வறிய பாடசாலை மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

பிரபல நிறுவனங்கள் கனடாவில்லிருந்து அவசரமாகத் வாகனங்களை திரும்பப் பெறுகின்றது

வாகனங்களில்  இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடு மற்றும் ஏர்பேக் வெடிக்கும் அபாயம் காரணமாக, கனடாவில் 17,000க்கும் மேற்பட்ட வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
டொயோட்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரு வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த தனித்தனி அறிவிப்பை
 வெளியிட்டுள்ளன.
இயந்திரங்கள் முறையாகத் தயாரிக்கப்படாததால், வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென இயந்திரம் பழுதடைந்து நின்றுவிடும் அபாயம் உள்ளதாகக் கூறி டொயோட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 17,000 வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது.
3.4L ட்வின்-டர்போ (Twin-turbo) என்ஜின் கொண்ட 2024 லெக்ஸஸ் ஜிஎக்ஸ் 550 (Lexus GX 550), 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு மாடல் லெக்ஸஸ் எல்எக்ஸ் 600 (Lexus LX 600), மற்றும் 2023, 2024 ஆம் ஆண்டின் டொயோட்டா டன்ட்ரா (Toyota Tundra) வாகனங்கள் இதில் அடங்கும். என்பதும்  குறிப்பிடத்தக்கது
.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 3 ஜூன், 2026

இது தான் உலகில் அதிக விலைக்கு விற்கும் உயர்ந்த கோழி இறைச்சி

பல  லட்சங்களில் உலகில்  விற்கப்படும் கோழி இறைச்சி இது தான். இது அதிக விலைக்கு விற்கும்  ஒரு சிறப்பு காரணம் உண்டு. உலகில் மிகவும் எளிய விலையில் கிடைப்பது கோழி இறைச்சி தான். சந்தைக்கு சென்றால் ஒரு கிலோ கோழி வாங்கி வருவோம் அதன் விலை ரூபா 200 ஆக இருக்கும். மற்றைய நாடுகளிலும் மற்ற 
இறைச்சிகளை விட கோழி இறைச்சி மிகவும் குறைவான விலையில் தான் கிடைக்கும். ஆனால் ஒரு விதமான கருப்பு நிற அரிய இனத்தை சேர்ந்த கோழி மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
 சாதாரண கோழியை விட இது சத்துக்கள் நிறைந்த காரணத்தினாலும் மற்றைய நம்பிக்கைகள் காரணத்தினாலும் இந்த கோழி அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
அயாம் செமானி என்பது இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு கோழி இனமாகும். இந்த வகை கோழிகள் விலை அதிகம்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் காணப்படும் இந்த அரிய கருப்பு கோழி, அதன் தனித்துவமான தோற்றத்தால் உலகம் முழுவதும் 
பிரபலமாக உள்ளது.
இதன் இறகுகள் மட்டுமல்லாது, தோல், அலகு, எலும்புகள், இறைச்சி மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். இவ்வகை கோழி அதன் அரிது தன்மை மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக அதிக மதிப்பை பெற்றுள்ளது.
செமானி கோழியின் விலை 2,500 முதல் 5,000 டாலர்கள் வரை ஆகும். இது இந்திய ரூபாயில் 3 முதல் 4 லட்சத்திற்கும் அதிகமாகும். இந்தக் கோழிகள் ஒரு வருடத்திற்கு 60 முதல் 80 முட்டைகள் மட்டுமே
 இடுகின்றன.
இரண்டாவது, இனப்பெருக்கம் செய்வதில் உள்ள சிரமம். குஞ்சுகள் இளம் வயதிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிக விலை கொண்ட கோழியை “லம்போகினி கோழி” என்ற பெயரால் மக்கள் அழைக்கின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இந்திய அரசின் புலமைப்பரிசில் திட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அம்மாணவர்களுக்கான நிதியுதவிகளை உத்தியோகபூர்வமாக
 வழங்கி வைத்தார்.
முன்னதாக 2023-24 ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 100 மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர 
மோடியால் இந்த நிதியுதவித் தொகை 7,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு திட்டம் விரிவாக்கப்பட்டது.
நடப்பு (2025-26) கல்வியாண்டில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த தகுதியான 100 முதலாம் வருட மாணவர்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பட்டப்படிப்பு முடியும் வரை இந்த மாதாந்த 
நிதியுதவி தொடரும். 
ஒவ்வொரு வருடமும் புதிய தொகுதியினர் இணைக்கப்பட்டு, 4ஆம் ஆண்டில் மொத்தம் 400 மாணவர்கள் இதன் மூலம் பயனடைவர்.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தரும் கலைப்பீட பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் ஹொரனயில் சினிமா பாணியில் பணம் கொள்ளை

நாட்டில்  ஹொரனையில்  உள்ள அரச வங்கியொன்றின் ATM  கிளைக்கு பணம் ஏற்ற தயாராகிக் கொண்டிருந்தபோது நபர் ஒருவர் சுமார்  30.5 மில்லியன் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல்
 இடம்பெற்றுள்ளது. 
வங்கி ஊழியர் ஒருவர் பணத்தை எடுத்துச் சென்றபோது அவரை அணுகிய நபர் பணப் பை ஒன்றை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். 
 சந்தேக நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 2 ஜூன், 2026

யாழ் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு இன்று இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்

 இன்றைய தினம் 02-06-2026- செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார்.
அதன் போது, கைதொழில் பேட்டையின் தொழில்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜாவுடன் , யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி,தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html







 

யாழ் ஆவரங்காலில் போதைப்பொருள்களுடன் எட்டு இளைஞர்கள் கைது

யாழ் ஆவரங்காலில் போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் எட்டு  இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் ஹீங்கந்த
 தெரிவித்தார்
.அச்சுவேலி பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 01-06-2026-அன்று ) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவர்கள் ஆவரங்கால் சந்தி பகுதியில் வைத்து கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் 8 பேரில் ஒருவர் 3 கிராம் ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவாலி, பூநகரி மானிப்பாய், ஆவரங்கால் பகுதியச் சேர்ந்த 24 வயது தொடக்கம் 30 வயதுடைய நபர்கள் என பொறுப்பதிகாரி தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.