ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நாட்டில் .O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகை

நாட்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே 
தெரிவித்துள்ளார்.
 நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளன.
 மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் 
அறிவித்துள்ளார். 
 டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும்  பரீட்சை ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வாடகைக்கு நீர்கொழும்பில் பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த நபர்

நாட்டில்.நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை காவற்துறையினர் தேடி வருகின்றனர்.
யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை
 முன்னெடுத்து வந்தனர்.
அதேவேளை நீர்கொழும்பு காவற்துறையினர் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது,
நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார்.
அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு காவற்துறையினரிடம் முறைப்பாடு 
அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை 
பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை
 அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , காவற்துறை விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக 
விட்டு தப்பி சென்றுள்ளார்.
காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 14 பிப்ரவரி, 2026

அமெரிக்காவின் போர் கப்பல் மத்தியக் கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ( USS Gerald R Ford) மத்திய கிழக்கில்
 நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  
. இந்த போர்க்கப்பல், துணை கப்பல்களுடன், வரும் நாட்களில் கரீபியன் தீவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்யப்படாவிட்டால், இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப்  முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவர், நாட்டின் ஏவுகணை திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல என்று உறுதிப்படுத்தினார்.   
 இதற்கிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடலில் 
ஈடுபட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கப்பல் மத்திய கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கை மத்திய வங்கி இவ்வாண்டிற்கான முதல் நாணயக் கொள்கையை வெளியிட்டது

.இலங்கை மத்திய வங்கி (CBSL), 2026 ஆம் ஆண்டிற்கான தனது முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
இது பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கான சாத்தியமான அபாயங்கள் குறித்த எதிர்கால நுண்ணறிவுகளை வழங்குகிறது.
ஆகஸ்ட் 2025 இல் முடிவடைந்த 11 மாதத்திற்கு பிறகு பணவீக்கம் நேர்மறையான பகுதிக்குத் திரும்பியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உள்நாட்டு தேவையில் படிப்படியான மீட்சி, எரிசக்தி மற்றும் போக்குவரத்து செலவுகளின் இயல்பாக்கம் மற்றும் ஒப்பீட்டளவில் உயர்ந்த
 உணவு விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டு பணவீக்கம் 05 சதவீதம் என்ற இலக்கை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

சுமார் 10 மில்லியன் யூரோ பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் மோசடி 9 பேர் கைது

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 9 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024ம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் அடங்குவதாக வழக்கறிஞர் அலுவலகம்
 தெரிவித்துள்ளது.
டிக்கெட் சோதனைகளை தவிர்ப்பதற்காக சுற்றுலா வழிகாட்டிகள் அருங்காட்சியக ஊழியர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பிரான்ஸ் மற்றும் துபாயில் உள்ள ரியல் எஸ்டேட்டில் சில பணத்தை முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது. 
அதிகாரிகள் 957,000 யூரோக்களுக்கு மேல் ($1.13 மில்லியன்) பறிமுதல் செய்துள்ளனர். இதில் 67,000 யூரோக்கள் ($79,459) வெளிநாட்டு நாணயமும், வங்கிக் கணக்குகளில் இருந்து 486,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பாராளுமன்றத்தின் இலங்கை தூதரகப் பணிகளுக்கான நியமனங்கள்

நாட்டில் பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு நான்கு தூதரகத் தலைவர்களின் பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. 
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பெப்ரவரி 06 பாராளுமன்றத்தில் குழு கூடிய போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதராக ஹொரண மஹாவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசிற்கான
 இலங்கை உயர் ஸ்தானிகராக வர்ணகுலசூரிய பீட்டர் ரோஹன் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசிற்கான
 இலங்கைத் தூதராக அனுர விதானகே மற்றும் பாலஸ்தீன மாநிலத்திற்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது ஃபௌசர் ஆகியோரின் பரிந்துரைகளை குழு அங்கீகரித்தது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 12 பிப்ரவரி, 2026

நாட்டில் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக இசட்- புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கே இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் குறித்த மாணவர்கள் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பப்படி பட்டப்படிப்புகளைப் தொடர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்காக மொத்தம் 200 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அந்தவகையில், புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


Blogger இயக்குவது.