திங்கள், 20 ஜூலை, 2026

இலங்கையில் திருமணங்களின் எண்ணிக்கை சுமார் இருபத்தி எட்டு சதவீதம் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்கள்
 தெரிவிக்கின்றன
அந்த திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 சதவீத வீழ்ச்சியாகும்.
கோவிட் பெருந்தொற்றில் குறைவடைந்த 
திருமண பதிவு 2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808
 ஆகக் குறைந்தது.
பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் 
அதிகரித்திருந்தன.
இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் கந்தசாமி சதீஸ் கைது

நாட்டில் வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் சதீஸ் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளினை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாக குற்றஞ்சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கந்தசாமி சதீஸ் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில்
 விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி சதீஸை பிணையில் பொறுப்பேற்க தமிழீழ விடுதலை இயக்க முக்கிய பிரமுகர்கள் எவரும் நீதிமன்றிற்கு வருகை தந்திராத நிலையில் தனது
 மைத்துனனின் உதவியில் அவர் பிணையில் 
விடுவிக்கப்பட்டுள்ளார். 
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கடையர்களாலும் சிறைச்சாலை அதிகாரிகளாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஸ்பெயின் 2026 உலகக் கோப்பையை வென்றது

நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் 2026 உலகக் கோப்பையை வென்றது.
இது ஸ்பெயின் உலகக் கோப்பையை வெல்வது
 இரண்டாவது முறையாகும்.
ஆட்டத்தின் வழக்கமான நேர முடிவில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை, பின்னர் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வரலாற்றுச் சிறப்புமிக்க
 வெற்றி கோலை அடித்தது.
இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது, கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் மிக முக்கியமான தருணம் அமைந்தது.
ஸ்பெயின் முன்கள வீரர் ஃபெர்ரான் டோரஸ், அர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்துக்கொண்டு சென்று ஒரு அற்புதமான கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.
கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் (90+3 நிமிடங்கள்) என்சோ ஃபியான்டெஸ் சிவப்பு அட்டை பெற்றதால் அர்ஜென்டினா கடுமையாகப் பாதிக்கப்பட்டது, மேலும் கூடுதல் நேரத்தில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டியிருந்ததும் அவர்களின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆட்டம் முழுவதும் அர்ஜென்டினா 5 மஞ்சள் அட்டைகளையும் பெற்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 19 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.53 ரூபா
ஜப்பானிய யென் 2.12 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 458.62 ரூபா
யூரோ 390.35 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.38 ரூபா
சுவிஸ் பிராங் 423.46 ரூபா
கனடிய டாலர் 243.42 ரூபா
கத்தார் ரியால் 94.05 ரூபா
குவைத் தினார் 1108.93 ரூபா
சவுதி ரியால் 91.96 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் பலாலி சந்தியில் ஐந்தாவது வாரமாக தொடர்ந்த போராட்டம்

யாழ் வலி வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு 
பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
 நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் .ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தீவிபத்து

நாட்டில் ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்.19-07-2026- இன்று காலை  தீ விபத்து
 ஏற்பட்டுள்ளது. 
தெஹிவளை  தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 18 ஜூலை, 2026

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம்:மாநகர முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

.மிகவும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி (ஆடி மாதம்) கொடியேற்றத்துடன் கோலாகலமாக
 ஆரம்பமாகவுள்ளது.
திருவிழாக் காலத்தில் நாட்டின் நாலாதிசைகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (MOH Office) இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
திருவிழாக் காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பின்வரும் அத்தியாவசியப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது: பக்தர்களுக்கான தூய்மையான குடிநீர் விநியோகம் மற்றும் தற்காலிக மலசலகூட வசதிகள்.
ஆலய சூழலில் விசேட சுகாதார மற்றும் துப்புரவுப் பணிகள் (சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பு). போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள் (Parking). தற்காலிக வியாபாரக் கடைகளை முறைப்படுத்துதல் மற்றும் அன்னதான விநியோகக் கண்காணிப்பு.
இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதிநிதிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.