ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில்  நாணய மாற்று பெறுமதி


 

நாட்டில் திருக்கேதீச்சர ஆலய வளாகத்திற்குள் பௌத்த விகாரை பெயர்பலகை

 

 மன்னார் திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த   விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் 
தெரிவித்துள்ளார்.
மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் , தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.
ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன் பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி
 எழுப்பு கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் நீதிமன்ற 
கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன? 
குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








நாட்டில் அங்குலானா கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் மீட்பு

நாட்டில்  அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான துவோரா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பதினொரு கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் இருந்த வீரர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்
 தெரிவித்தார்.
கடற்படையின் கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியது.
அதன்படி, ஆபத்தில் சிக்கிய கப்பலைக் கண்காணிக்கவும், மீட்பு நடவடிக்கைக்கு உதவவும் ஒரு Mi-17 ஹெலிகாப்டரும், ஒரு பெல் 412 ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 15 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று  வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 337.15 ரூபா
ஜப்பானிய யென் 2.14 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 456.84 ரூபா
யூரோ 390.72 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.84 ரூபா
சுவிஸ் பிராங் 416.67 ரூபா
கனடிய டாலர் 243.65 ரூபா
கத்தார் ரியால் 93.23 ரூபா
குவைத் தினார் 1092.75 ரூபா
சவுதி ரியால் 91.15 ரூபா
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நீதியின் ஓலம் யாழில் ஆரம்பம் - திங்கள்கிழமை மாபெரும் பேரணி

யாழ் செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகியது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத்தூபிக்கு  மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
செம்மணி புதைகுழிக்கு நீதிகோரி நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம், எதிர்வரும், 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெற்று , 17ஆம் திகதி யாழ். நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்து , பேரணியாக ,நல்லூர் கோயில் வீதியிலுள்ள ஐநா அலுவலகத்தில் சென்று மகஜர் கையளிப்பதோடு நிறைவடையவுள்ளமை 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றப்பட்டனாம்

நாட்டில். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபரிடமிருந்து சுமார் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கல்லின் எடை தொடர்பான தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இது மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக
 அமையக்கூடும்.
சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட திருகோணமலை பொது வைத்தியசாலை மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

நாட்டில். கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி காபெட் வீதியாக அபிவிருத்தி

நாட்டில்  மாவட்டத்தின் கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி 1.3 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் – சம்புகுளம் மூலிகைப் பண்ணைக்குச் செல்லும் பிரதான வீதி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான அங்குரார்ப்பண 
நிகழ்வு நடைபெற்றது.
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுமார் 1.3 கிலோமீற்றர் நீளமான இவ்வீதி முதல் முறையாக காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது 
குறித்த வீதியானது அபிவிருத்தி பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் பகுதியிலும் 55 மில்லியன் நிதி ஒதுக்கீடு இரண்டு கிலோமீட்டர் கார்பெட் வீதி புணரமைப்பு பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இன்பராஜ் நளாயினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற 
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்கள்
 கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராம மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளதாகத் தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், 2010ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் முதன்முறையாக சம்புகுளம் கிராமத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் 
குறிப்பிட்டார்.
அப்போது தற்போதைய ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர், கிராம மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த அனுபவம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராமத்துடன் தொடர்புடைய முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் சம்புகுளம் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்று வந்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்திக்கும் சம்புகுளம் மக்களுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் உறவு தொடர்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




Blogger இயக்குவது.