வியாழன், 23 ஜூலை, 2026

சாடியா ஜாஹிதி சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் முதல் பெண் தலைவராக நியமனம்

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA), தனது அடுத்த தலைமை இயக்குநராக சாடியா ஜாஹிதியை
 நியமித்துள்ளது.
அடுத்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ள வில்லி வால்ஷுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் மற்றும் பாகிஸ்தான் குடியுரிமைகளைக் கொண்ட சாடியா ஜாஹிதி, 370க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் IATAவின் முதல் பெண் தலைமை 
இயக்குநராக இருப்பார்.
அவர் தற்போது உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) நிர்வாக இயக்குநராகவும், நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு யாழில் மூன்று மில்லியன் ரூபாய் அபராதம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, இரத்தப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட அதிகமாக நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததற்காக, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் 3 மில்லியன் ரூபாய் அபராதம் 
விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கந்தர்மடம், பாலளி வீதியில் அமைந்துள்ள வீனஸ் சிறப்பு தனியார்மருத்துவமனைக்கு, முழு இரத்த(FBC) பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணம் ரூ. 400 ஆக இருந்தபோதிலும், ரூ. 550 வசூலித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு சிறப்பு ஆய்வின் போது, ​​சம்பந்தப்பட்ட மருத்துவமனை FBC பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மீறியுள்ளதை நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை அதிகாரிகள் 
கண்டறிந்தனர். 
இதைத் தொடர்ந்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜூலை 21 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​மருத்துவமனை தனது குற்றத்தை 
ஒப்புக்கொண்டது.
3 மில்லியன் ரூபாய் அபராதத்துடன், இக்குற்றம் தொடர்பான அறிவிப்புகளை தேசியப் பத்திரிகைகளில் தனது சொந்த செலவில் வெளியிடுமாறும் நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது செங்கடலில் தாக்குதல் எண்ணெய் விலை உயரலாம்

இன்று .யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல்
 எழுந்துள்ளது. 
இதன்காரணமாக இன்றைய தினம் கச்சா எண்ணெய் விலைகள் 100 டொலரை எட்டியுள்ளன. 
இன்றைய நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெயின் ஒரு பேரலின் விலை, 98 அமெரிக்க டாலர் என்ற அளவைத்
 தாண்டியுள்ளது. 
இது கடந்த ஆறு வாரங்களில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்பாகும். WTI ஒரு பேரலின் விலையும் 90 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
 இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆசிய சந்தையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 22 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி


இலங்கையில் இன்று  வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.74 ரூபா
ஜப்பானிய யென் 2.12 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 458.77 ரூபா
யூரோ 390.40 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 242.35 ரூபா
சுவிஸ் பிராங் 422.74 ரூபா
கனடிய டாலர் 243.12 ரூபா
கத்தார் ரியால் 94.13 ரூபா
குவைத் தினார் 1108.87 ரூபா
சவுதி ரியால் 92.05 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் செம்மணியில் சர்வதேச விசாரணை வேண்டும் என போராட்டம்

யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது. 
செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தாதுகோப கட்டுமானம் ஆரம்பம்

நாட்டில்  திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் தாதுகோபம் கட்டுமானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு -22-07-w2026-இன்று 
 இடம்பெற்றது
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை 
நாட்டி வைத்தார்.
வரலாற்றுத் தகவல்களின்படி, சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியின் மூலம் தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டதாகவும், பின்னர் அதே இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தது.
இதற்கிடையில், இக்காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், 2002ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய முயன்ற போது அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் காணி உரிமையாளரான திருமதி கோகிலவதனி கணேஷ் தெரிவித்தார்.
பராமரிப்பின்றி இக்கோயில் அழிவடைந்த நிலையில், புதிய ஆலய அமைப்புப் பணிகள் காணி உரிமையாளரால் தொடங்கப்பட்டபோதிலும், அங்கு புராதன தொல்பொருள் படிவங்கள் உள்ளன என்ற காரணத்தினால் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக உரிமையாளர் தரப்பு 
தெரிவித்துள்ளது.
நிகழ்வில் பேசிய திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா, அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்துப் புராதன கட்டுமானத்தைப் பாதுகாப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல; இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றைப் பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும். இதற்குச் சிலர் இன, மத சாயங்களைப் பூச நினைக்கின்றனர்.
தற்போதைய 100 தொல்லியல் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவிலை பிரதேச செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள சோழர்கால ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும் வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, தொல்லியல் திணைக்களம் மத, இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
நேற்றைய நிகழ்வில் மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம சேவகர், இஸ்லாமிய மதகுரு மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர். இந்நிகழ்விற்கு வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுசாசனம் வழங்கினார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்

இன்று இலங்கையில்  1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 45,780 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 41,970 ரூபாய் ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 34,339.10 ரூபாய் ஆகவும் உள்ளது.
18 கரட் தங்க விலை
1g விலை LKR 34,339.10
8g விலை LKR 274,712.80
10g விலை LKR 343,391.00
22 கரட் தங்க விலை
1g விலை LKR 41,970.00
8g விலை LKR 335,760.00
10g விலை LKR 419,700.00
24 கரட் தங்க விலை
1g விலை LKR 45,780.00
8g விலை LKR 366,240.00
10g விலை LKR 457,800.00
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.