வெள்ளி, 18 செப்டம்பர், 2026

யாழ் காங்கேசன்துறை நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவைக்கு ஒரு வருடம் இந்திய நிதியுதவி

 யாழ் காங்கேசன்துறை நாகப்பட்டினம்  இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான நிதியுதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த நிதியுதவி, 2024 ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதுடன், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நிதியுதவி வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viability Gap Funding (VGF) என்ற பொறிமுறையின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கப்பல் சேவையின் கட்டணத்தை பொதுமக்களுக்கு
 ஏற்ற வகையில் பேணுவதுடன், அதன் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கிய தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வெடுக்குநாறிமலையில் வழிபாடு- கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த சந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதால், இரு தரப்பினருக்கும் 
இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் இணையவழியில் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள்

நாட்டில் ரயில் பயணிகள் இணையவழி (Online) ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
 இதன்படி, பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று தங்களுக்கு தேவையான ரயில் பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், ‘Pravesha’ கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை முன்கூட்டியே இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 17 செப்டம்பர், 2026

நாட்டில் முல்லைத்தீவு வைத்தியசாலையின் 4 மாடி கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நாட்டில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
.முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்த புதிய நோயாளர் அறைத் தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக 
அமைக்கப்படும்.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களைப் பரிசோதனைக்குட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவது மட்டுப்படுத்தப்படும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, புதிய வார்டு தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மருத்துவமனை ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மக்கள் இங்கிலாந்து கிராமம் பிரிந்து செல்வதற்கு வாக்களிப்பு

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் உள்ள சுமார் 350 மக்கள் வசிக்கும் சிறிய கிராமமான பிடிங்டன், அருகிலுள்ள பயன்பாட்டில்
 இல்லாத இராணுவத் தளத்தில் தஞ்சம் கோருவோருக்கான தங்குமிட மையத்தை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு 
எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து செல்வது தொடர்பாக அடையாள வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டுக்கு வடகிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிடிங்டனில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 312 பேர் பங்கேற்றதாக கிராமத்தின் பாரிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது சுமார் 92 சதவீத வாக்குப்பதிவாகும்
 வாக்காளர்களிடம் பிடிங்டன் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சுயநிர்ணய உரிமையைப் பெறுவதை நான் ஆதரிக்கிறேன் என்ற கூற்றுடன் உடன்படுகிறீர்களா அல்லது உடன்படவில்லையா 
என்று கேட்கப்பட்டது.
வாக்களித்தவர்களில் 285 பேர் பிரிந்து செல்வதற்கு ஆதரவாகவும், 26 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஒருவர் தனது வாக்குச்சீட்டை செல்லாததாக்கினார்.
எனினும், இந்த வாக்கெடுப்புக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ பிரிவினை அதிகாரமும் இல்லை. இதை கிராம மக்கள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் குறியீட்டு நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளனர்.
வாக்கெடுப்புக்குப் பின்னர், கிராமச் சாலை அடையாளப் பலகைக்கு அருகில் பிடிங்டன் சமஸ்தானம் (Piddington Principality) எனக் குறிப்பிடப்பட்ட பதாகையை ஏந்தியபடி சிலர் கொண்டாடின
பிடிங்டன் பாரிஷ் கவுன்சில் தலைவர் டிம் மெக்னாலி, இனிமேல் கிராமம் தன்னை பிடிங்டன் பிரின்சிபாலிட்டி என அடையாளப்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் இந்தத் திட்டத்தை அவசரமாக முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் மெக்னாலி குற்றம்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத பைசெஸ்டர் தளம் A இராணுவ வளாகத்தில் தஞ்சம் கோருவோருக்குத் தங்குமிடம் வழங்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு உள்ளூர் அளவில் எதிர்ப்பு 
நிலவி வருகிறது.
பிடிங்டனில் நடைபெற்ற இந்த அடையாள வாக்கெடுப்பு, இணையத்தில் தங்களை குடியேற்ற எதிர்ப்பு செல்வாக்கு செலுத்துபவர்கள் எனக் குறிப்பிடும் சிலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டரீதியான பிரிவினை நடவடிக்கையாக இல்லாவிட்டாலும், தஞ்சம் கோருவோருக்கான மையத்தை அமைக்கும் அரசாங்கத் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்களிடையே நிலவும் எதிர்ப்பை இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளுங்கள் - வலி. தெற்கு பிரதேச சபைக்கு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவு

யாழ் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிட்டுள்ளார் 
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் , சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றை வலி.தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது. 

அதன் போது, குப்பைகளை மீள அள்ள வேண்டும் என வலி. தெற்கு பிரதேச சபைக்கு கால எல்லை அறிவிக்கப்பட்டு , அவர்கள் அதனை மீள அள்ளவில்லை. அதற்கு எதிராக தவிசாளர் இதுவரையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பிலும் , அதன் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க என கடந்த 14ஆம் திகதி விசேட கூட்டம் கூட்டப்படும் என சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் , அக்கூட்டம் கூட்டப்படவில்லை. இந்த விசேட கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் சென்ற கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவும் இல்லை இவை அனைத்தும் தவிசாளரின் உதவியுடன் நடைபெறுவதாக தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் உரிய நடவடிக்கை தவிசாளர் எடுக்க வேண்டும் என கோரி பெரும்பாலான உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்தனர். 

அதனால் இன்றைய சபை அமர்வு நடைபெறாத நிலையில் , அது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் ,  வலி. தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டனர் 

அதனை அடுத்து , கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இந்த இடத்தில் கழிவுகளை கொட்ட எவ்வாறு தெரிவு செய்தீர்கள் ? கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அள்ள போகிறீர்கள் ? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளைய தினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்க உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார் 
7என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 16 செப்டம்பர், 2026

இலங்கையில் இன்னும் பத்து நாட்களில் நாடெங்கும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்

நாட்டில் இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.
தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என 
அவர் கூறினார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.
இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத்
தெரிவித்தார்.
அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் நாட்டிற்கு கிடைக்கும் மழையை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.