ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

போதைப்பொருளுடன் இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் கைது

போதைப்பொருளுடன் .தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ்
 போதைப்பொருளுடன் 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை ஊடகப் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 19 செப்டம்பர், 2026

தொடர்ந்து சுவிட்சர்லாந்து முழுவதும் உயர்ந்துள்ள எரிபொருள் விலைகள்

தற்போது சுவிஸ் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்த ஆண்டு, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டூரிங் கிளப் சுவிட்சர்லாந்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரு லிட்டர் அன்லெட்டட் 95 பெட்ரோலின் சராசரி விலை தற்போது 2.10 பிராங் ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 5 சென்ட்கள் அதிகமாகும்.
அன்லெட்டட் 98 பெட்ரோலின் விலை 2.21 பிராங் ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் சராசரி விலை 2.38 பிராங் ஆகவும் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பெட்ரோல் விலை சுமார் 27% மற்றும் டீசல் விலை 33% உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து காணப்பட்ட சாதனை உச்ச விலைகளை நோக்கி விலைகள் மேலும் நெருங்கி வருகின்றன.
அந்த நேரத்தில், அன்லெட்டட் 95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 2.31 பிராங் வரை இருந்தது. அப்போது, ​​ஒரு லிட்டர் டீசலின் அதிகபட்ச விலை 2.40 பிராங் ஆக இருந்தது – இது தற்போதைய விலையை விட வெறும் 2 சென்ட்கள் மட்டுமே அதிகம்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வடமாகாண சுகாதார தேவைகளுக்கு மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை

நாட்டில்  .வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான
 நடவடிக்கைகள் 
தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் மாகாண அதிகாரிகளுக்கிடையிலான 
கலந்துரையாடல் இன்றைய தினம்  சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக 
எடுத்துரைக்கப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் 
வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும்
 சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதனுடன், மருத்துவமனைகளின் தேவைகளை முறையாக ஒழுங்குபடுத்தி முன்னுரிமைப்படுத்துதல், தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் கொள்முதல் செயன்முறைகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது 
தொடர்பிலும், குறிப்பாக மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மனோ கணேசன் அனோஜன் விவகாத்திற்கு : மோடியின் உதவியை நாடுமாறு கோரிக்கை

மனோ கணேசன்  அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்
 அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன்
 தெரிவித்துள்ளார்.
எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

யாழ் காங்கேசன்துறை நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவைக்கு ஒரு வருடம் இந்திய நிதியுதவி

 யாழ் காங்கேசன்துறை நாகப்பட்டினம்  இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான நிதியுதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த நிதியுதவி, 2024 ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதுடன், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நிதியுதவி வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viability Gap Funding (VGF) என்ற பொறிமுறையின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கப்பல் சேவையின் கட்டணத்தை பொதுமக்களுக்கு
 ஏற்ற வகையில் பேணுவதுடன், அதன் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கிய தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வெடுக்குநாறிமலையில் வழிபாடு- கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த சந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதால், இரு தரப்பினருக்கும் 
இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் இணையவழியில் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள்

நாட்டில் ரயில் பயணிகள் இணையவழி (Online) ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
 இதன்படி, பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று தங்களுக்கு தேவையான ரயில் பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், ‘Pravesha’ கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை முன்கூட்டியே இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.