ஞாயிறு, 20 அக்டோபர், 2024

நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்

நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜனநாயகம் பற்றியும் சிந்திக்க வேண்டும்."
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
"விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கு 
முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் ஜே.வி.பியினர். இரண்டு தடவைகள் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். அதனால்தான் 
அரசியல்வாதிகளுக்கு
 பொலிஸ் பாதுகாப்பு வழங்க நேரிட்டது. ஜே.வி.பியினரிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவே அன்று பொலிஸ் பாதுகாப்பைக் கோரினோம்.
இன்று எமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காகப் பொலிஸ் பாதுகாப்பு பெறப்பட்டது என்ற வரலாற்றை
 மறக்கக்கூடாது.
தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் குழப்பம் இருக்கவில்லை. இதனை மதிக்கின்றோம். இப்படியே ஜனநாயக வழியில் ஜே.வி.பி. பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை இலக்கு வைத்தே போட்டியிடுகின்றோம். 113 இற்கும் மேற்பட்ட ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம். நாட்டின் ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற முறைமையை பாதுகாக்க மக்கள் வாக்களிப்பார்கள் என
 நம்புகின்றோம்.
ஆயத பலம் ஊடாக இரு தடவைகள் ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டவர்களிடம்தான் தற்போது ஆட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகம் பற்றியும் மக்கள் சிந்திக்க வேண்டும்." - என்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 19 அக்டோபர், 2024

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி இந்தியா கவனம்

நாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் 
செல்லுத்தியுள்ளது.
 பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார்.
 ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவான பின் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ 
பயணமொன்றை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி, 
பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு தரப்பினரை 
சந்தித்திருந்தார்.
 அரச தரப்பினருடான சந்திப்பில் இலங்கைக்கு தொடர்ந்து இந்தியா உதவிகளை வழங்கும் எனக் கூறியிருந்ததுடன், தமிழ் மக்களுக்கான 
அரசியல் தீர்வாக கருதப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தை 
அமுல்படுத்துவதன் அவசியத்தையும் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு 
முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்டிருந்த மக்கன் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ”வடக்கு மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தையோ
 அல்லது அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை. அது அரசியல்வாதிகளின் கோரிக்கை மாத்திரமே.
 இந்த மக்களுக்கு தமது பொருளாதார நலன்கள் நிறைவேற வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.” எனக் கூறினார். ரில்வின் சில்வாவின் கருத்துக்கு வடக்கின் தலைமைகள் கடும் கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இராஜதந்திர மட்டத்திலும் இந்தக் கருத்து 
தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
அநுரகுமாரவின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பில் இலங்கையில் உள்ள இராஜதந்திரிகள் ஏற்கனவே, அவதானம் செலுத்தியுள்ள சூழலிலேயே தமிழ் மக்களுக்குத் தீர்வு அவசியமில்லை எனக் கூறப்படும் கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
 தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர்களாக உள்ளவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளை் குறித்து புதுடில்லி கழுகுப்பார்வை செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிந்தது.
 இதுதொடர்பில் மௌனம் காக்கும் இந்தியா, 
அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த உள்ளது.
 தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தம் தொடர்பில் நேரடியான 
கருத்துகளை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கான
 சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் புதுடில்லி
 தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிந்தது
.என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 18 அக்டோபர், 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில்  இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதிகளவான டெங்கு 
நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,383 ஆகும்..இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10,284 டெங்கு நோயாளர்கள்
 அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்.இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 17 அக்டோபர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறை

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர
 தெரிவித்துள்ளார்.
 இதன் மூலம் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற மோசடிகள் குறையும் என்றும், வினாத்தாள் தயாரிப்பில் தனிநபரின் பங்களிப்பைக் குறைத்து அரை தானியங்கி முறையில் தாள் உருவாக்கம் கணினி மயமாக்கப்படும் என்றும் 
அவர் கூறினார்.
 இந்த புதிய முறையின் கீழ் மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 புதிய கல்விச் சீர்திருத்தங்களால், வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக 
இந்தப் புதிய முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் 
கூறினார். பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் பணியை 
தனி நபர்களை கொண்டு மேற்கொள்ளும் வரை 100 வீதம் மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க முடியாது எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
 இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் பொறிமுறையில் கடந்த காலங்களில் வினாத்தாள்கள் பிரச்சினை இல்லையெனவும், தனிநபர்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினையே இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுத் தேர்வுச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்ட விதிகளின்படி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பிடியாணையின்றி 
கைது செய்ய அனு
மதிக்கும் பொதுத் தேர்வுச் சட்டம், முற்றிலும் கிரிமினல் குற்றங்களைக் குறிப்பிடும் சட்டம். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 16 அக்டோபர், 2024

நாட்டில் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க ஜனாதிபதி உத்தரவு

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
 இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் பிள்ளைகள் அறிவாற்றலுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 
 ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16.10) நடைபெற்ற கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு
 கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி
 இதனைத் தெரிவித்தார். 
அடுத்த 10 வருடங்களில் உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பணியானது கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு எனவும், அதற்கான பரந்த நோக்குடன் கல்வி திட்டங்களை 
தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி 
சுட்டிக்காட்டியுள்ளார். 
 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வின் போது கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
 பாடசாலைக் கல்வி, ஆசிரியர் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழிநுட்பக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அபிவிருத்தி ஆகிய விடயங்கள் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
 இது தொடர்பான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை
 விடுத்துள்ளனர். இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மிகவும் பயனுள்ள பாடசாலைகளாக மாற்றப்பட்டு 
பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பதன் மூலம் பிள்ளைகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கி
 சகல பிள்ளைகளும் கல்வி கற்கும் வகையில் கவனம் 
செலுத்தப்பட்டது. 
 விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உயர்தரத்திற்கு பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்து மேலும் விவாதிக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 15 அக்டோபர், 2024

முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்.17-10-2024 வியாழக்கிழமை அன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே 
முதல் தடவையாகும்.
 இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க 
இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை 
சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா
 வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
 அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த
 முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.