ஞாயிறு, 1 மார்ச், 2026

இன்று வர்த்தக வங்கிகளில் இலங்கையில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டாலர் 312.38 ரூபா
ஜப்பானிய யென் 2.03 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 422.56 ரூபா
யூரோ 369.91 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 225.76 ரூபா
சுவிஸ் பிராங் 407.10 ரூபா
கனடிய டாலர் 229.73 ரூபா
கத்தார் ரியால் 86.53 ரூபா
குவைத் தினார் 1032.35 ரூபா
சவுதி ரியால் 84.09 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

தற்போது   மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
சைப்ரசில் (Cyprus) நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​
பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 
சையிப்ரசில் உள்ள அக்ரோதிரி (Akrotiri) வான்படைத் தளம், இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கும் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக !!ரான் 
குற்றம் சாட்டி வந்தது. 
இந்தத் தளமே ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக இருந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது அச்சம் தேவையில்லை

தற்போது மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் இருந்தபோதிலும், இலங்கையில் அடுத்த 37 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.
எனவே, மக்கள் தேவையற்ற முறையில் பீதி அடைய வேண்டாம் என்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா வலியுறுத்தியுள்ளார். விடுமுறை இருந்தபோதிலும் இன்று
 ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும், போயா தினமான நாளை எரிபொருள் விநியோகமும் நடைபெறும்.
இந்தப் பணிக்காக போதுமான எண்ணிக்கையிலான எரிபொருள் பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, எரிபொருள் கிடைப்பது குறித்து பொது மக்கள் அநாவசியமாக பீதியடைத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 28 பிப்ரவரி, 2026

இலங்கை கட்டுநாயக்கவில் சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்

நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். 
குறித்த சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது 
செய்யப்பட்டுள்ளார். 
கடந்த 2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. 
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 
பின்னர் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாடு தப்பிச் சென்றிருந்தார். இதன் காரணமாக அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்டவர் சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார். கடவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கம்பஹாவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

நாட்டில் மாவட்டம் பமுனுகம, முத்துராஜவெல பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (27) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில், சந்தேகநபரிடமிருந்து 168 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2,835 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டது. 
இதன்போது சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் உஸ்வெட்டகெய்யாவ் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபராக அடையாளம் காணப்பட்டார். 
பமுனுகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது

நாட்டில் மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான மலர்ச் சாலை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (25) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த மலர்ச் சாலையின் உரிமையாளரான மகனும் அவரது தாயாரும் 21 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கபடவுள்ளதாக பொலிஸார் 
கூறுகின்றனர்.
சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் மக்களின் கருத்தை திரட்டிஅமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை

பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில்
 முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதன்போது பெருமளவில் பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தபால் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்து வழங்கியிருந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.