வெள்ளி, 24 ஏப்ரல், 2026

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு

நாட்டில்  கிளிநொச்சி பொலிசாரின் அதிரடி நடவடிக்கை இந்த மாத காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணலுடன் பிடிபட்ட 24டிப்பர் வாகனங்கள் மற்றும் 10உழவியந்திரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் பொலிசாரின் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பின் மூலம் இந்த மாதத்தில் இன்று வரை பிடிபட்ட குறித்த டிப்பர் மற்றும் உழவியதிரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன..
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் சரக்கை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டனர்.
BIA வருகை முனையத்தின் 'பசுமை வழி' வழியாக, ரூ. 4.26 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் சரக்குடன் வெளியேற முயன்றபோது சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ள 35 மற்றும் 53 வயதுடைய இரண்டு வங்கதேச நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீன நாட்டவர் ஒருவர் சீனாவில் சிகரெட் சரக்கை வாங்கி, கம்போடியா வழியாக மலேசியாவின் கோலாலம்பூருக்குக் கொண்டு சென்றதாக ஆரம்பகட்ட சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் கொண்டு சென்ற ஐந்து சூட்கேஸ்களில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,400 சிகரெட்டுகள் அடங்கிய மொத்தம் 142 அட்டைப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


நாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவில் நிர்வாகச் சிக்கல்: நோயாளர்கள் பாதிப்பு

நாட்டில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக வந்த கர்ப்பிணி பெண்ணை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று (22.04.2026) இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட குறித்த தாய், நீண்ட நேரம் அனுமதிக்கப்படாமல் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
பின்னர் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் தலையீட்டின் பின்னரே அவர் வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்தத் தாய் முன்பு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிகளில் மாதாந்திர கிளினிக் சிகிச்சை பெற்றிருந்ததாகவும், வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்றவர்களை இங்கு 
உடனடியாக அனுமதிக்க முடியாது என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டதாலேயே இத்தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோன்று முன்னரும், மகப்பேற்றிற்காக வந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சில தாய்மார்கள், பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக
 குறிப்பிடப்படுகிறது.
மேலும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வட மாகாணத்திற்கான பெண் நோயியல் பிரிவு கட்டப்பட்டிருந்தாலும், அதற்கான சேவைகள் இன்னும் முழுமையாக 
தொடங்கப்படவில்லை. 
இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 23 ஏப்ரல், 2026

நாட்டில் மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

நாட்டில்  கேகாலை மாவட்டத்தில் “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ள காலப்பகுதியில்,வீதியோரங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது நாளை 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அமுலில் இருக்கும். கடுகண்ணாவ
 முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கே இந்த உத்தரவு பொருந்தும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று ( 22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம்
 எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சரும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சபரகமுவ மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை அமைதி நடைபயணம் மற்றும் ஆன்மீக யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் ஒலிப்பான்களை (Horns) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த நாட்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் காவல்துறையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் நெடுந்தீவில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்


. யாழ் நெடுந்தீவிற்கு ஆளுநர் மற்றும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று திரும்பியுள்ள நிலையில்.24-04-2026- நாளை வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது அமைப்புக்கள் 
அறிவித்துள்ளன.
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து   ஆரம்பமாகும் போராட்டப்   பேரணியானது நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை சென்று, அங்கு முடிவுறவுள்ளது
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தீவின் முக்கியமான தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளன.
நெடுந்தீவிற்கான தனியார் கடற்போக்குவரத்துச் சேவைகள் நாளை முழுமையாக இடம்பெறாது. உள்ளூர் தரைவழிப் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்படும்.   சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனச் சேவைகளும் நாளை நிறுத்தப்படும்.அதன் காரணமாக, நாளை நெடுந்தீவுக்கான 
மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இயங்காது எனப் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உத்தியோகபூர்வமாக 
அறிவித்துள்ளனர்.
நெருக்கடி காலங்களில் ஈபிடிபி ஆதரவு பெற்ற பிரதேசமாக நெடுந்தீவு அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் வசம் உள்ளுராட்சி அதிகாரமுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாற்பத்தி நான்கு மில்லியன் மதிப்பிலான வீட்டு மோசடி இங்கிலாந்தில் நான்கு பேர் கைது

இங்கிலாந்தின் தீவிர மோசடி அலுவலகம்(SFO), எரிசக்தி நிறுவனங்களுக்கு £44 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய வீட்டு வெப்பக் காப்பு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. 
மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில், இங்கிலாந்து முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைகளில் பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக SFO மற்றும் தேசிய குற்றவியல் முகமை தெரிவித்தன. 
இந்த விசாரணை, ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளை வெப்பமாக வைத்திருக்கவும், பணத்தைச் சேமிக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும் வெப்பக் காப்பு மற்றும் வெப்பமூட்டும் வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட ஆதரவுத் திட்டம் தொடர்பானது. 
எரிசக்தி நிறுவனக் கடமை 4 (ECO4) என அறியப்படும் இந்தத் திட்டத்திற்கு எரிசக்தி நிறுவனங்களே பணம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது.
இந்தத் திட்டம் டிசம்பரில் முடிவுக்கு வரும், அதற்குப் பதிலாக 'வெப்பமான வீடுகள் திட்டம்' (warm homes plan) கொண்டுவரப்படும், இது சூரிய மின் தகடுகள் மற்றும் வெப்பப் பம்புகளுக்கும் நிதியளிக்கிறது.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 22 ஏப்ரல், 2026

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐம்பது வெளிநாட்டவர்கள் கைது

இலங்கைக்கு . வியாபார விசா மூலம்  வருகை தந்து, விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (21) கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், 2 மலேசிய நாட்டவர்களும், ஒரு இந்திய நாட்டவரும் அடங்குகின்றனர். இவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.