சனி, 18 ஏப்ரல், 2026

நாட்டில் எதிர் வரும் மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம்

 

நாட்டில் மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம்
 குறிப்பிட்டுள்ளது
ந்த எரிவாயு கையிருப்புகள் மாலைதீவில் உள்ள மிதக்கும் சேமிப்பு முனையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவிர, மேலதிகமாக 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று தென்னாப்பிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்ப போதுமான எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 16 முதல் மீண்டும் வழமை போல் எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் புன்னாலைக்கட்டுவனில் வாள்களுடன் மூவர் கைது

யாழ்  புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று முன்தினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு தயாராகி வருவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும், மூன்று வாள்களுடன் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

போர்ட் நிறுவனம் கனடாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை திரும்ப பெறுகின்றன

போர்ட் நிறுவனம்  கனடாவில் இயங்கும் போர்ட் மோட்டார் நிறுவனம், சுமார் 1,44,000 போர்ட் F-150 ரக வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக
 அறிவித்துள்ளது.
இந்தத் திரும்பப் பெறல், 2015-17ம் ஆண்டு மாடல் வாகனங்களைப் பாதிக்கும். குறிப்பாக, ஆறு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட வாகனங்களில், உள் டிரான்ஸ்மிஷன் லீட் ஃபிரேமில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்படும் சிதைவு, டிரான்ஸ்மிஷன் ரேஞ்ச் சென்சாரில் இருந்து இடைவிடாத சிக்னலை ஏற்படுத்தக்கூடும் என 
தெரிவிக்கப்படுகின்றது.
இது வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக குறைந்த கியருக்கு மாறுவதற்கு வழிவகுக்கும் என
 எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலைத் தீர்க்க பல தீர்வுகளை ஃபோர்டு கோடிட்டுக்காட்டியுள்ளது குறிப்பிடபப்டுகின்றது.
கூடுதலாக, மென்பொருள் நிறுவலின் முன், இந்த சென்சார் தொடர்பான "குறிப்பிட்ட கண்டறியும் சிக்கல் குறியீடுகளை" காட்டியுள்ள எந்தவொரு வாகனத்திலும் டிரான்ஸ்மிஷன் லீட் ஃபிரேமை போர்ட் மாற்றும் என தெரிவித்துள்ளது.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 17 ஏப்ரல், 2026

நீங்கள் அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு மாற்று வழி:

மக்கள் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை மூன்றாம் திதியான 'அட்சய திருதியை' என்றாலே பலரது நினைவுக்கும் வருவது தங்கம் 
வாங்குவதுதான்.
ஆனால், தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதில்லை, இந்நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எளிமையான வழிபாடுகளுமே வற்றாத செல்வத்தைத் தரும் என்பது ஐதீகம்.
தங்கம் வாங்க இயலாதவர்கள் கூட, தங்கள் இல்லத்தில் குபேர யோகத்தைப் பெற செய்ய வேண்டிய எளிமையான 'அட்சய பானை' இரகசியம் குறித்து
 இங்கே காண்போம்.
அட்சயம் என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். இந்நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற உங்கள் வீட்டில் உள்ள ஒரு பித்தளை அல்லது வெண்கல பானையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பானையைச் சுத்தப்படுத்தி குங்குமம் இட்டு, அதன் உள்ளே பச்சரிசியை முழுமையாக நிரப்ப வேண்டும். தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், அந்த அரிசி பானையின் மேல் ஒரு நாணயத்தை அல்லது 
வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு தங்க நகையை
 வைத்து அலங்கரிக்கலாம்.
பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்டி, துளசி மற்றும் மலர்களால் அலங்கரித்து நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள் 
என்பது நம்பிக்கை.
இதேவேளை உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதம். ஆலமர இலையில் 'மகா மிருத்யுஞ்ஜய' மந்திரத்தை ஜெபித்து, அந்த இலையை நோயாளியின் தலையணையின் கீழ் வைப்பதன் மூலம் தீராத நோய்களும் விரைவில் குணமாகும் என .
அட்சய திருதியை அன்று நாம் பிறருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு பல மடங்கு புண்ணியமாகத் திரும்பும். ஏழைகளுக்கு உணவு, குடை மற்றும் நீர்மோர் வழங்குவது மறுபிறவியில் ராஜயோக
 வாழ்க்கையைத் தரும்.
ஆடை தானம் நோய்களைத் தீர்க்கும்; பழங்களைத் தானம் செய்வதால் உயர் பதவிகள் தேடி வரும். கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இன்று பானகம் தானம் செய்வது விசேஷம்.
இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது தீராத வறுமையை நீக்கி, குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும். புண்ணிய நதிகளில் நீராடி, உங்களால் முடிந்த சிறு உதவியை எளியவர்களுக்குச் செய்வதன் மூலம் இந்த அட்சய திருதியையில் குறைவில்லாத செல்வத்தையும், பேரானந்தத்தையும் பெற்றிடுங்கள்! என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்: நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR கட்டாயம்

.இலங்கையில் பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் 
நிறைவுக்கு வருகிறது
இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் உயர்கல்வித் தரம்: புதிய அறிக்கையின் முக்கிய தகவல்கள்

.இலங்கையில்  2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி ,  கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் 
அடைந்துள்ளது.
குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, கலாநிதி (PhD) பட்டதாரிகள்: 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது. 
இது மொத்த மக்கள் தொகையில் 0.1% ஆகும். பல்கலைக்கழக பட்டதாரிகள்: பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2012 இல் 358,052 (3.0%) ஆக காணப்பட்ட இந்த எண்ணிக்கை, 2024 இல் 780,958 (5.6%) ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாம் நிலை கல்வி (Tertiary Education): மூன்றாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களின் எண்ணிக்கை 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக கணிசமான வளர்ச்சியைப் பதிவு 
செய்துள்ளது.
உயர்தரம் (G.C.E. A/L): க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரித்துள்ளது.
இடைநிலைக் கல்வி (Secondary Education): இடைநிலைக் கல்வியைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்ந்துள்ளது. 
இது இரண்டு காலப்பகுதிகளிலும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 58% ஆகும். ஆரம்பக் கல்வி (Primary Education): ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பாடசாலை செல்லாதோர்: முறையான பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்களின் எண்ணிக்கை 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்தத் தரவுகளின்படி, இலங்கையில் அடிப்படை மற்றும் ஆரம்பக் கல்வி மட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வித் தகைமைகளை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளமை உறுதியாகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 16 ஏப்ரல், 2026

நாட்டில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் நாளை செயல்படாது

நாட்டில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட பொது சேவைகள் 
 நாளை 17-04-2026. செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




Blogger இயக்குவது.