ஞாயிறு, 29 மார்ச், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று  இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 317.99 ரூபா
ஜப்பானிய யென் 2.02 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 424.83 ரூபா
யூரோ 367.62 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 222.96 ரூபா
சுவிஸ் பிராங் 401.62 ரூபா
கனடிய டாலர் 230.87 ரூபா
கத்தார் ரியால் 87.87 ரூபா
குவைத் தினார் 1046.94 ரூபா
சவுதி ரியால் 85.55 ரூபா

என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வெளிச்சக்திகளின் தலையீடோ, நிதியூட்டலோ இன்றி பேச அழைப்பு

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே இத்தீவில் அவர்களுக்குரிய அரசியற் சமத்துவத்தை
 உறுதி செய்யும்
அரசியற் சமத்துவம் உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே மீளப்பெறமுடியாத அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். 
வரலாற்று ரீதியாகவும் வழிவழியாகவும் தொடர்தேர்ச்சியான தனித்துவமான நில நீர்த் தொடர்ச்சி கொண்ட பாரம்பரியத் தாயகம் ஈழத்தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தானது என்பது இந்தச் சமத்துவத்தின் மூலமாக உறுதிசெய்யப்படவேண்டும்
அப்போது தான் திட்டமிட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தாயகத்தைத் துண்டாடாமல் பாதுகாக்கமுடியும். 
அதாவது, ஈழத்தமிழர் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையும் அவர்களது தனித்துவமான இறைமையும் இவையிரண்டின் பாற்பட்டதான தாயகம் மீதான உரித்துக்கான அரசியல் அதிகாரம் பற்றியதே
 அரசியல் தீர்வு. 
ஈழத்தமிழர் தேசிய இனத்தைப் பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கம் அவர்களது அரசியல் விருப்பைப் புறக்கணித்து மட்டுமல்ல, அதற்கு முரணாகவே சோல்பரி (1947), குடியரசு (1972), ஜனாதிபதி ஆட்சியுடனான இரண்டாம் குடியரசு (1978) அரசியலமைப்புகளை ஜனநாயக ரீதியாக நிராகரித்துள்ளார்கள். 
குறிப்பாக, 1945 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரவையில் சோல்பரி யாப்புக்கு ஒப்புதல் அளிக்கச் செய்வதற்காக டி. எஸ். சேனநாயக்க அரசியலமைப்பின் பிரிவு 29(2) இனைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் இருந்து தெரிவாகியிருந்த எட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளை குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு இட்டுச்சென்றிருந்த போதும், 1947 பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அதனை முழுமையாக 
நிராகரித்திருந்தனர். 
இதேபோன்ற ஒரு சூழல் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படும் ஆபத்துக் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
வடக்கு கிழக்கில் தேர்தலில் தெரிவாகியுள்ள ஏழு தமிழ்ப் பிரதிநிதிகளும் தேசியப்பட்டியலில் ஒருவருமாக எட்டுப் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தி சார்பாக வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையும், மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் ஆளும் தரப்பு ஒருதலைப்பட்சமாக ஓர் அரசியலமைப்பை ஈழத்தமிழர் அரசியல் விருப்புக்கு எதிராகத் திணிக்கும் அபாயகரமான சூழல் தோன்றியுள்ளது. 
இந்தப் பேராபத்தில் இருந்து விடுபட ஈழத்தமிழர் குடிசார் சமூகமும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் சுயேட்சையுமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிய பெரும்பான்மையாகக் காணப்பட்டாலும், இவர்களிடையே ஒருமைப்பட்ட நிலைப்பாடு இல்லாதுள்ளது. 
முதற்கட்டமாக இந்த பதினொரு பிரதிநிதிகளிடையே ஒன்றித்த நிலைப்பாடு உருவாக வேண்டும். அதன் விளைவாக ஆளும் தரப்பின் அரசியலமைப்புத் திணிப்புக்கு அதன் தரப்பில் தெரிவான எட்டுப் பிரதிநிதிகள் கூட சோல்பரி அரசியலமைப்பின் போது தமிழ்ப் பிரதிநிதிகள் இழைத்த வரலாற்றுத் தவறை இழைக்காத நிலை ஏற்படுத்தப்படவேண்டும். 
ஏற்கனவே தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவிலும், தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள முன்மொழிவிலும் அடிப்படையான கோட்பாட்டு ரீதியான சிக்கல்கள் உள்ளதாக வாதப் பிரதிவாதங்கள் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப் பட்டுள்ளன
'பிளக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கை' என்று தமிழ் மக்கள் பேரவையும், 'பிளக்கப்படாத, பிளக்கப்படமுடியாத இலங்கை' என்று தமிழரசுக் கட்சியும் அது கலந்து பேசி முன்வைக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய எனும் கலந்துரையாடற் பத்திரமும் முன்வைத்துள்ளன. 
அதேவேளை, கோட்பாட்டு ரீதியாக, வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு என்றும், அண்மையில் திம்பு+ என்றும் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று என்ற புதிய குடிசார் அமைப்பு முன்வைத்துள்ள திருகோணமலைப் 
பிரகடனம் என்று கருத்துக்கு விடப்பட்டுள்ள முன்வரைவு என்றும் விவாதங்கள் உருவாகியுள்ள சூழலில், அரசியல் தீர்வு தொடர்பான கருத்தாடலுக்கான பொதுத் தளங்கள் அவசியமாகியுள்ளன
அரசியல் தீர்வு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தால் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எந்தவித வெளிச்சக்திகளின் தலையீடோ, நிதியூட்டலோ இன்றி, முற்றிலும் சுயாதீனமான ஒரு தளத்தில் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் விவாதித்து ஒருமித்த முடிவுகளை எட்டும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் என்று தேர்தலில் தெரிவாகியுள்ள 
அனைத்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொது அமைப்புகளையும் யாழ் ஊடக அமையம் வேண்டுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்

இன்று இலங்கையில்  1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,330 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 43,390 ரூபாய் ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 35,500.90 ரூபாய் ஆகவும் உள்ளது.
18 கரட் தங்க விலை
1g விலை LKR 35,500.90
2g விலை LKR 71,001.80
4g விலை LKR 142,003.60
8g விலை LKR 284,007.20
10g விலை LKR 355,099.00
22 கரட் தங்க விலை
1g விலை LKR 43,390.00
2g விலை LKR 86,780.00
4g விலை LKR 173,560.00
8g விலை LKR 347,120.00
10g விலை LKR 433,900.00
24 கரட் தங்க விலை
1g விலை LKR 47,330.00
2g விலை LKR 94,660.00
4g விலை LKR 188,320.00
8g விலை LKR 378,640.00
10g விலை LKR 473,300.00
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 28 மார்ச், 2026

நாட்டில் கோழி இறைச்சி விநியோகம் தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்

நாட்டில் திர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் சந்தையில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சியை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஏப்ரல் மாதப்பகுதியில் அனைத்து பண்ணைகளும் தமது முழுமையான உற்பத்தி கொள்ளளவை எட்டும் வகையில் செயற்படும் என குறிப்பிட்டார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் உலக சந்தையில் விலங்கு உணவுகள் விலை அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், கோழி இறைச்சியின் விலையை 1,250 ரூபாய் மட்டத்தில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், விலை நிர்ணயம் குறித்து அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார். சந்தையே தீர்மானிக்கும்: விலையை உற்பத்தியாளர்கள் தீர்மானிப்பதில்லை, சந்தையின் தேவையே (Demand) 
 தீர்மானிக்கிறது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த மேலதிக சுமையை உற்பத்தியாளர்களே 
ஏற்க வேண்டியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் விநியோகம் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படாத பட்சத்தில் விலையை ஸ்திரமாக வைத்திருக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தட்டுப்பாடின்றி இறைச்சி மற்றும் முட்டைகளை நுகர்வோருக்கு வழங்குவதே தமது சங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html







 

யாழ் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் பெண் உறுப்பினர் மீது எரிந்து விழுந்தார்

பிரதேச சபை தவிசாளர்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண் உறுப்பினர் மீது 
எரிந்து விழுந்தார்.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்ற சபை அமர்விலேயே இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் உறுப்பினர் மயான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு நீண்ட நேரமாக எழுந்து நின்று சந்தர்ப்பம் கோரினார். எனினும் அதனை தவிசாளர் கண்டுகொள்ளவில்லை. ஏனைய உறுப்பினர்கள் சபையில் சத்தமிட்டுக்கொண்டு இருந்தனர்
அதன் பின்னர் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படது. இதன்போது அவர் தனது கருத்தை கூறும்போது ஏனைய இரண்டு உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் ஆத்திரமடைந்த பெண் உறுப்பினர், அந்த
 உறுப்பினர்களை கடிந்தார்.
பின்னர் தவிசாளரை நோக்கி ‘எனது கருத்தை சொல்கிறேன் நீர் ஓம் என்றால் ஓம் என்று சொல்லும், இல்லை என்றால் இல்லை என்று சொல்லும்’ என்றார். இதன்போது குறித்த பெண் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தவிசாளர், நீர், நான் என்று பேச முடியாது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கட்டைக்காட்டு பகுதியில் பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கரைவலை மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக லீசிங் அடிப்படையில் உழவியந்திரத்தை கொள்வனவு
 செய்துள்ளார்.
குறித்த திகதியில் லீசிங் தொகையை கட்டி முடிக்கவில்லையெனக் கூறி லீசிங் நிறுவனத்தினர் மருதங்கேணி பொலிசாருடன் குறித்த பிரதேசத்திற்கு நேற்று (27) சென்றுள்ளனர்.
இதன் போது மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க , பெண் என்றும் பாராமல் தம்மை மிகக் கேவலமாக நடத்தியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உழவியந்திரத்தை ஒப்படைக்காவிடில் உன்னையும் உனது குடும்பத்தையும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் பொலீஸ் அதிகாரி திசாநாயக்க மிரட்டியதாகவும்
 குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணை துண்டு கொண்டு வருகை தந்த மருதங்கேணி பொலிசார், தான் குளித்துவிட்டு உடுப்பை மாற்றக் கூட விடாமல் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார் .
பொய் குற்றச்சாட்டில் என்னையும் எனது குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைப்பதாக மருதங்கேணி 
உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க மிரட்டி விட்டு சென்றதுள்ளதால் எனது குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் குறித்த பொலிஸ் உப பொலிஸ் அதிகாரியே பொறுப்பெனவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்தார்
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் எண்பது வீதம் பூர்த்தியாம்

யாழ் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 
"மக்களின் காணி மக்களுக்கே.. " என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை 
எடுத்து வருகிறோம். 
புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை 
உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் 
நடாத்தப்பட்டு வருகிறது. 
அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. 
அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.