சனி, 23 செப்டம்பர், 2023

நாட்டில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன 
தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் 60,000 பேருக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய குடும்பங்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்த 5,000 ஹெக்டேயர் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை விரைவாகக் கொண்டு வருவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து 
பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து 
ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மதா இணையம்.>>>

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

விரைவில் சமூக வலைதளங்களை கண்காணிக்க அமுலாகவுள்ள சட்டம்

 

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது 
மேடா ( Meta) நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
தினமும் இணையம் மூலமான குற்றங்கள் தொடர்பில் 14000 முறைபாடுகள் பதிவாகின்றன.அவற்றில் 9000 முறைபாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன.
எனவே இவ்வாறானதொரு சட்டம் மிகவும் அவசியமானது என அவர் மேலும் குறிப்பிடுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 21 செப்டம்பர், 2023

மாத்தறை கனங்கே பகுதியில்உருவாக்கப்பட்டுள்ள சோசலிச பஸ் தரிப்பிடம்

மாத்தறை கனங்கே பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு 
வருகின்றது.
 இந்த பஸ் தரிப்பிடம் உழைப்பு மற்றும் சோசலிசத்தின் சின்னங்களான அரிவாள் மற்றும் சுத்தியலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 உள்ளூர் இளைஞர்கள் குழுவால் கட்டப்பட்ட இந்த பஸ் 
தரிப்பிடம், பாடசாலை மாணவர் ஒருவரால் திறக்கப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



புதன், 20 செப்டம்பர், 2023

பெல்ஜியத்தில் புராதன சிலையை உடைத்த சுற்றுலா பயணிக்கு பதினாறு லட்சம் அபராதம்

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார். 
அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த மையத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலா பயணியை கைது செய்தனர். அவர் போதையில்
 இருந்துள்ளார். 
தான் சேதப்படுத்திய சிலையின் மதிப்பு தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை அந்த சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்பெறுமதி வாய்ந்த சிகரட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு 
சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவை 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.  
கல்முனை பகுதியைச்சேர்ந்த ஆணொருவரும், யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


திங்கள், 18 செப்டம்பர், 2023

இரத்தினபுரி பிரதேசத்தில் உணவு விஷமானதால் மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை 
ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நாடு திரும்பும் போது ஏற்பட்ட சுகவீனம் 
காரணமாக சிறுவர்கள் குழு வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 சுமார் 30 சிறுவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
எனினும் குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

யாழ் தாவடியில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் ஐவர்: வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் யுவதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில், அந்த யுவதியை காதலித்ததாக 
கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவடியில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது16-09-2023 சனிக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசியதுடன் , வீட்டின் மீதும் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி 
மீதும் தாக்குதல் மேற்கொண்டு சேதங்களை ஏற்படுத்தியதுடன் , வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு 
தப்பி சென்று இருந்தது.
தாக்குதலில் வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வீட்டில் வசிக்கும் யுவதி மீது உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் காதல் வயப்பட்டு இருந்ததார் என்றும், அந்த காதல் விவாகரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறிந்தனர்.
அதனை அடுத்து யுவதியை காதலித்ததாக கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூவரை 16-09-2023.சனிக்கிழமை மாலை பொலிஸார் 
கைது செய்துள்ளனர். மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

Blogger இயக்குவது.