திங்கள், 18 மே, 2026

நாட்டில் தொண்ணூற்றி ஐந்து ரக ஒக்டேன் பெட்ரோல், சுப்பர் டீசல் விநியோகம் ஸ்தம்பிதம்

இலங்கை  முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் கையிருப்பை நிலையங்களில் பராமரிப்பதற்கு 3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
இருப்பினும், இந்த எரிபொருள்களை விற்பனை செய்வதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இயக்க இலாபம் சுமார் 45,000 ரூபாவாக மட்டுமே காணப்படுகிறது. 
இந்த இரண்டு வகை எரிபொருள்களினதும் தினசரி விற்பனை 500 லீற்றருக்கும் குறைவாக இருப்பதால், ஒருமுறை கொள்வனவு செய்யும் கையிருப்பை விற்று முடிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாகிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கும் 45,000 ரூபா லாபத் தொகையானது, எரிபொருள் நிலைய ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்குக்கூடப் போதுமானதாக இல்லை என விநியோகஸ்தர்கள் கவலை
 வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த இரண்டு வகை எரிபொருள்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) வழங்கும் சதவீதத்தை விட, இலங்கையிலுள்ள வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமான (அதிகபட்ச சில்லறை விலையில் 3%) தள்ளுபடியை வழங்கி வருகின்றன.
இதன் காரணமாக, கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பல கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இந்த
 எரிபொருள்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து
 வருகின்றன. 
இதனால் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நவீன ரக வாகனங்களைப் பயன்படுத்தும் நுகர்வோர் தங்களுக்குரிய எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் முழுமையாக முடங்கிய வர்த்தக நிலையங்கள்

நாட்டில்  முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான.18-05-2026. இன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக 
நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு 
வருகின்றன.
கிளிநொச்சி நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் தங்களது வர்த்தகச் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தி, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி 
செலுத்தியுள்ளனர்.
வர்த்தகப் புறக்கணிப்புக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் வலியை சுமந்தவாறு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று 
வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களுக்கு கஞ்சி விநியோகிக்கப்பட்டமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் lரூபாய் வீழ்ச்சிக்கான காரணம் இதுதான் மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

தற்போது  மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே ரூபாய் சரிவடைவதற்கு முக்கிய காரணம் என மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 
சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தினாலும், இந்தோனேசிய ரூபா 5.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
 இதனைப் பார்க்கும்போது, இந்த நாணய வீழ்ச்சியானது நம்மைப் போன்ற ஏனைய நாடுகளுக்கும் பொதுவான ஒரு விடயம் என்பது தெளிவாகப் புரிகிறது. அதற்கு இணையாகவே இது நடந்துள்ளது, பெரியளவில் 
வேறுபட்டதாக இல்லை. 
இதற்குக் காரணம், இவற்றில் பெரும்பாலானவை எண்ணெயை முழுமையாக இறக்குமதி செய்து, அதற்காக அதிக செலவு செய்யும் நாடுகளாகும். 2022 ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலையில், இலங்கைக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களினால் நமது ரூபா பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. அது உலகளாவிய காரணிகளால் அல்ல. 
ஆனால், தற்போதைய நிலவரப்படி இலங்கை ஏனைய ஒப்பிடக்கூடிய நாடுகளுடன் ஓரளவு ஒரே மட்டத்திலேயே உள்ளது. எனவே, இது வெளிப்புற அதிர்வுகளால் ஏற்படும் ஒரு விடயமாகும். நாணய மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். 
நாணய மாற்று விகிதம் வீழ்ச்சியடைவதென்பது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் குறிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நமது பிரதான ஊடகவியலாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. 
தற்போது இந்திய ரூபா வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலுள்ளது, இந்தோனேசிய ரூபாவும் இன்றைய தினம் வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளது. 
ஆனால், அதற்காக அந்த நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்றோ, ஸ்திரமற்றது என்றோ கூற முடியாது. அது ஒரு தவறான கருத்தாகும். நாணய மாற்று விகிதத்தை மாத்திரம் பார்த்து ஒரு நாட்டின் பொருளாதாரம் நல்லதா அல்லது கெட்டதா என்று கூறுவது கடினம். இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன." என்றார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 17 மே, 2026

உங்கள் பற்களை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்

உங்கள் பற்களை பாதுகாப்பதற்கு நம்மில் பலருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய 
காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான 
பின்பே பல்பிரச்சனை
 வந்த நிலையில், தற்போது குழந்தையிலேயே பிரச்சனை வந்துவிடுகின்றது
.சொத்தை பல், ஈறுகளில் பிரச்சனை, பல்வலி போன்ற 
பிரச்சனையை சந்தித்து வருகின்றோம். இதற்கு தீர்வு மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தவறான பழக்கமாகும். இந்நிலையில் மருத்துவமனை செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பல் பிரச்சனைக்கு
 சில இயற்கையான தீர்வினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதினா இலையினை வெயிலில் காயவைத்து 
பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் வலி ஏற்படாது. அதே போன்று வேப்பம் குச்சியினால் பல் துலக்கினால் பல் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக
 காணப்படும்.
ஓமம், கிராம்பு, கற்பீரம் இவற்றினை தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து பின்பு வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் 
வீக்கம் தீர்ந்துவிடும்.
இதே போன்று கொய்யா இலைகளை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும். மேலும் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த வாய் கொப்பளித்தால் பல் வலி
 பிரச்சனை தீரும்.
சாப்பிட்ட பின்பு ஒவ்வொரு முறையும் நன்றாக வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன்பு மற்றும் எழுந்த பின்பு கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும்.
பற்களை தேய்க்கும் போது ஈறுகளை நன்றாக தேய்த்து தடவி கழுவ வேண்டுமாம். அவ்வாறு செய்தால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடைகின்றது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

போதைப்பொருளுடன் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் 
சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, அவரது பொருட்களை
 சோதனை செய்தனர்.
அப்போது அவரது பொருட்களில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா 
கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 16 மே, 2026

அமுலாகும் புதிய சட்டம் கனடாவில் மீறினால் மூவாயிரம் டாலர்கள் வரை அபராதம்

கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள பைப்பிங் பிளவர் (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் கொடுமை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.
வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைப் பலகைகளை மதிக்காமல் நடந்துகொண்டால் 2000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்

இலங்கையில் இந்த நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
.எனினும், ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அதுகுறித்து அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதனை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளது” என அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.  
இதனிடையே 2013ம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தது.
அதன் மூலம் முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பிளவுண்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடாத்த இலங்கை அரசு தற்போது அறிவிப்புக்களை விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.