திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் தொடருந்து ஓட்டுநர்களின் அதிரடி முடிவு: வேகம் குறையும் புகையிரதங்கள்.

இலங்கையில் தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன 
தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொடருந்து பயணங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து ஊழியர்கள் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
"சாகரிகா தொடருந்து தடம் புரண்ட சம்பவத்திற்காக சாரதி உள்ளிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் கடமைக்கு சமூகமளித்தாலும், நிர்வாகம் அவர்களைப் பணியில் அமர்த்துவதில்லை. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட தவறு அல்ல" 
எனத் தெரிவித்தார்.
தொடருந்தில் 80 சதவீதமானவற்றில் வேகத்தை அளவிடும் கருவிகள் சரியாக இயங்குவதில்லை எனவும், தொடருந்து தண்டவாளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் அவர்
 குற்றம் சாட்டினார்.
"இதுவரை காலமும் ஓட்டுநர்கள் தமது வேலைப் பாதுகாப்பைப் பணயம் வைத்தே தொடருந்தை சரியான நேரத்திற்கு இயக்கினர். ஆனால் இனி அந்த அவதானத்தை எடுக்கப் போவதில்லை.
வேகக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதால் தொடருந்து தாமதமாகவே இயங்கும்" எனத் தெரிவித்தார். குறைபாடுகள் உள்ள தொடருந்துகளைத் திருத்திக் கொடுக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ள அவர்கள், அவ்வாறு செய்யத் தவறினால் அந்த தொடருந்துகளை இயக்குவதில் இருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பணி நேரம் மற்றும் சலுகைகளில் மாற்றம்

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள் (Scanned Signatures), டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு முதன்மையாக "meet.gov.lk" தளத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 02/2026 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி 
வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களை
 மேம்படுத்துமாறும்,
 தரவுப் பாதுகாப்பு (Data Protection) தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

இன்றைய தினம் சர்வதேச சந்தையில்தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.04 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் நாற்பத்தி ஒன்பதாம் ஆம் ஆண்டு நினைவேந்தல்

 தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.26-04-2026. இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு
 நடைபெற்றது 
முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை  செலுத்தியுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தேரர்கள் கைது

நாட்டில் சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர்
 தெரிவித்தார். 
சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு இடையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் தலா 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாகத் 
தெரிவிக்கப்படுகிறது. 
இவர்கள் ஒருவரின் அனுசரணையில் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அங்கு அவர்கள் சாதாரண
 உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த
 புகைப்படங்கள் மற்றும்
 காணொளிகள் அவர்களின் கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன. 
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவென்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட முதலாவது 
சந்தர்ப்பம் இதுவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உயர் கல்வி கற்கும் இளம் தேரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 25 ஏப்ரல், 2026

நாட்டில் புதுக்குடியிருப்பில் மூன்று கடைகள் மூடி முத்திரை; பதின் ஒரு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

நாட்டில் .புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக
 சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தமாக 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், உணவகங்கள், வெதுப்பகங்கள், ஜூஸ் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல விற்பனை நிலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், மருத்துவச் சான்றிதழ் இன்றி பணியாற்றல், தனிப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள், குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த தவறுதல், கழிவு நீரை 
சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுதல், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி விற்பனை நிலையம் நடத்தல், சுவர் மற்றும் தரையை அசுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்
 கண்டறியப்பட்டன.
இதனையடுத்து வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஸ்ரன் ஜோய், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரால் நேற்றையதினம் (24.04.2026) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிமையாளர்களை குற்றவாளிகளாக அறிவித்து மொத்தமாக 235,000 ரூபா அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 
வழங்கியது.
மேலும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலையம் மற்றும் இரண்டு ஜூஸ் கடைகள் என மொத்தம் 3 விற்பனை நிலையங்களுக்கு பூட்டு மற்றும் சீல் வைக்கப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



lநாட்டில் .வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி

தற்போது  வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது 
உங்கள் நண்பரின்
 பெயரிலோ வரும் சந்தேகத்திற்குரிய ".apk" (dot apk) எனும் அபாயகரமான கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்தால், உங்கள் மொபைல் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் (Hackers) கைக்குச் 
சென்றுவிடும்.
.இதன் மூலம் உங்கள் SMS செய்திகள் மற்றும் OTP குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரிய வந்து, வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கூட அவர்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, உங்களுக்கு வரும் செய்திகளைத் திறக்கும்போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு WhatsApp மற்றும் Telegram சமூக ஊடகங்கள் ஊடாக ".apk" (.apk) கோப்புகள் (Files) அனுப்பப்படுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
apk கோப்பு என்பது 'Android Package Kit' ஆகும். இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை (Apps) நிறுவுவதற்கான
 ஒரு 'Setup File' ஆகும்
சமூக ஊடகங்கள் ஊடாக உங்களுக்கு வரும் திருமண அழைப்பிதழ், மின்சாரக் கட்டணம் அல்லது அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்ற பெயர்களில் அனுப்பப்படும் இந்த apk கோப்புகளை, ஒரு படம் அல்லது PDF எனக் கருதி கிளிக் செய்தவுடன், அது உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு செயலியாக (App) தானாகவே
 நிறுவப்படும் (Install).
இதன் பின்னர், ஹேக்கர்களுக்கு உங்கள் மொபைல் போனில் உள்ளவற்றைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதன் மூலம் உங்களுக்கு வரும் SMS செய்திகளை அவர்களால் வாசிக்க முடியும் என்பதுடன், உங்கள் வங்கி கணக்குகள் தொடர்பான இரகசிய OTP குறியீடுகளும் நீங்கள் அறியாமலேயே ஹேக்கர்களின் 
கைக்குச் சென்றுவிடும்.
இதன் காரணமாக, அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது நண்பரின் பெயரிலிருந்தோ வரும் இவ்வாறான சந்தேகத்திற்குரிய ".apk" கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் போனுக்குத் தேவையான 
செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது எப்போதும் Google Play Store அல்லது Apple App Store ஆகியவற்றைப் மட்டுமே 
பயன்படுத்த வேண்டும்.
அத்துடன், மொபைல் போன் செட்டிங்ஸில் (Settings) உள்ள "Install Unknown Apps" என்ற தெரிவை முடக்கி (Disable) வைப்பதும்
 அவசியமாகும்.
ஒருவேளை நீங்கள் இவ்வாறான மோசடியில் சிக்கினால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டு அருகிலுள்ள
 பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.