நடந்த போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி
சேவைகளை 22-04-2026. நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெஹ்ரான் மற்றும் மஷாத் (Tehran-Mashhad) ஆகிய நகரங்களுக்கு இடையிலான வானூர்தி சேவையே முதலில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அதே நாளிலேயே அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த வானூர்தி சேவைகள் கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

















