திங்கள், 6 ஜூலை, 2026

நாட்டில் மிகக் குறைந்த விலையில் காற்றாலை மின்சாரம் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த காற்றாடிகள்

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னார் 50 MW HayWind காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதித் தொகுதி காற்றாடிகள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
 இத்திட்டம் 2027 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, 50 MW கொள்ளளவு கொண்ட பசுமை மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளது.​
இலங்கை வரலாற்றிலேயே மிகக் குறைந்த விலையாக, இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு யூனிட் மின்சாரத்தை வெறும் 0.0465 அமெரிக்க டொலர் (சுமார் 14.37 இலங்கை ரூபா) என்ற விலைக்கு கொள்வனவு செய்ய உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.​
இந்த மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாட்டின் எரிபொருள் இறக்குமதி பெருமளவில் குறைக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 4.7 பில்லியன் ரூபா அளவிலான வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்குச் சேமிக்க வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

தீவிர வானிலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் எல்நினோ தாக்கம் இலங்கைக்கும் பாதிக்கலாம்

தற்போது  உலகம் முழுவதும் வெப்பமான வானிலையை ஏற்படுத்தும் எல் நினோ நிகழ்வு, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எல் நினோ வானிலை நிகழ்வுகள் பலவீனமான, மிதமான, வலுவான மற்றும் மிகவும் வலுவானது  என நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த முறை எல் நினோ நிகழ்வு மூன்றாவது உச்சநிலையாக 
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அசாதாரணமாக உயர்ந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் இயற்கையான
 காலநிலை அமைப்பு "எல் நினோ" என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது மற்றும் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும்.
கடல் வெப்பநிலை இயல்பை விட 1.5°C முதல் 2.0°C வரை 
அதிகரிப்பதைக் குறிக்கிறது.
இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் எல் நினோ நிலையால் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன. 
 தண்ணீர் பற்றாக்குறையால் நெல் மற்றும் பிற பயிர்களின் விளைச்சல் குறையக்கூடும். முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது நீர்மின் உற்பத்தியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை
 ஏற்படுத்துகிறது. 
 அதிக வெப்பநிலை நீரிழப்பு, வெப்பத்தாக்கம் மற்றும் காய்ச்சல் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. உலகளாவிய காலநிலை மாற்றத்தால் மனிதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் காரணமாக, இயற்கையாக நிகழும் இந்த எல் நினோ நிலைமைகள் வழக்கத்தை
 விட மிகவும் கடுமையானதாக மாறியுள்ளன என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் புதிய பேருந்து கட்டணத் திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளன

நாட்டில் வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, புதிய கட்டணத் திருத்தம்.06-07-2026- இன்று முதல் அமுலுக்கு
 வந்துள்ளது. 
பேருந்துக் கட்டணங்களை 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு சமீபத்தில் 
ஒப்புதல் அளித்துள்ளது.
  இதற்கமைய  முன்னர்  30 ரூபாவாக  இருந்த குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம்  தற்போது  34 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.    
     
அதே நேரத்தில், சொகுசுப் பேருந்துக் கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் பேருந்துக் கட்டணங்களும்  அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்துக் கட்டணத் திருத்தம் குறித்து பேருந்து ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, தங்களது பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக இன்று முதல் நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 5 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

. இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 339.52 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 454.65 ரூபா
யூரோ 389.67 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 238.50 ரூபா 
சுவிஸ் பிராங் 424.59 ரூபா
கனடிய டாலர் 240.06 ரூபா
கத்தார் ரியால் 93.79 ரூபா
குவைத் தினார் 1104.19 ரூபா
சவுதி ரியால் 91.71 ரூபா
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் நிட்டம்புவவில் யானைத் தந்தம் மற்றும் தந்த ஆபரணங்களுடன் சந்தேகநபர் கைது

.நாட்டில் நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, தந்தத்தால் செய்யப்பட்ட மோதிரம் மற்றும் யானை வடிவிலான தந்தப் பதக்கம் (Pendant) ஆகியவற்றுடன் நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
ஹொரகொல்ல தேசிய பூங்கா மற்றும் மேற்கு மாகாண வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோபேய்கனே 
பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் குறித்த யானைத் தந்தப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யத் தயாராக இருந்த போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 
அவர் இந்த யானைத் தந்தப் பொருட்களை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமதிப்புமிக்க யானைத் தந்தப் பொருட்களும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில்; யானைத் தந்தம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் என்பன 'விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நினைவூட்டியுள்ளது.
மேலும், யானைத் தந்த ஆபரணங்கள் உள்ளிட்ட விலங்கு உடற்பாகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சர்வதேச ஆழ்கடலில் அதிசய உலகம்: இரு வாரங்களில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

பிரேசிலின் கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன கடல்சார் ஆய்வில், வெறும் இரண்டு வார காலப்பகுதிக்குள் 31 புதிய விசித்திர உயிரினங்கள்
 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“Falkor” எனப்படும் நவீன ஆய்வுக் கப்பலில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை முன்னெடுத்திருந்தனர். 
இவர்கள் கடலின் நடுக்கடல் பகுதியை (mid-ocean zone) மையமாகக் கொண்டு தங்களது ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தத் தீவிர தேடுதலின் போது விசித்திரமான நண்டுகள், ஜெல்லிமீன்கள், சீப்பு ஜெல்லிகள் (comb jellies), புழு வகைகள் மற்றும் இதுவரை அறிந்திராத புதிய வகை ஓட்டுடலிகள் (crustaceans) உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன. 
இவை பெருங்கடலின் உயிரியல் பல்வகைமையை (marine biodiversity) மேலும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்கு, “Squid” எனப்படும் அதிநவீன நுண்ணோக்கி தொழில்நுட்பம் (microscope technology) முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன் மூலம் ஆழ்கடலில் பிடிபடும் உயிரினங்களின் செல் அமைப்புகளைக் கரைக்குக் கொண்டு வராமலேயே, கப்பலிலேயே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு
 வழிவகுத்துள்ளது.
பெருங்கடலின் பெரும்பகுதி இன்னும் மனிதர்களால் முழுமையாக ஆராயப்படாமலேயே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், இவ்வாறான தொடர் ஆய்வுகள் மனிதகுலத்தின்
 உயிரியல் அறிவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் கடல் சூழல் குறித்த புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் எனத் தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இணையவழியூடான விண்ணப்பிக்கலாம்

நாட்டில்  நேற்றைய தினம் (ஜூலை 03, 2026) முதல் இணையவழியூடாக (Online) விண்ணப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த மாதம் ஜூலை 23, 2026 உடன் விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை நிறைவடைகிறது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அவர்களின் அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
தங்களது பாடசாலை அதிபர்கள் (Principals) ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அறிவுறுத்தல்களின்படி தாங்களாகவே நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, தாமதக் கட்டணங்கள் அல்லது கடைசி நேர தொழில்நுட்பத் தடைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.