சனி, 9 மே, 2026

புதிய சட்டம் சுவிஸ் நாட்டில் மருத்துவ காப்புறுதியின் "பிரான்சிஸ்300 பிராங்குகளை 400 ஆக மாற்ற ஆலோசனை

மருத்துவக்காப்புறுதிக்கு .சுவிஸ் நாட்டில்  வருட ஆரம்பத்தில் பொறுப்புக் கட்டணம் குறைந்தது பிரான்சிஸ் (FRANCHISE) 300 இலிருந்து CHF 400 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை ஆரம்பித்துள்ளது. 
இது மக்கள் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைக்க ஊக்குவிப்பதற்காக. 
கொண்டு வரும் சட்டம் ஆகும். ஆனால் மக்கள் ஆதரவு பொறுத்து வருட இறுதியிலே முடிவு வரும் என நம்பப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் விசேட அறிவிப்பு - 18 சதவீதத்தால் உயரும் மின் கட்டணம்

நாட்டில் மின் கட்டண உயர்விற்கு  இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL)  அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் மின் கட்டணமானது 18 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 
இக் கட்டண உயர்வானது 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது. 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது
 என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது. 
இதன்படி இந்த விலை உயர்வு மொத்த நுகர்வோர் தளத்தில் சுமார் 5 சதவீதமானோரை  மட்டுமே பாதிக்கும் என்றும், இதன்மூலம் 95 சதவீதமான  மக்கள் அதிக செலவுகளிலிருந்து திறம்பட பாதுகாக்கப்படுவார்கள் என்றும் PUCSL உறுதிப்படுத்தியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் .ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி சிசிரிவியில் மாட்டிய திருடன்

நாட்டில் விசுவமடு பகுதியி வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை அலேக்காக திருடிச் சென்ற நபர், சிசிரிவி கமராவில் சிக்கியுள்ளார்.
முல்லைத்தீவு - வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்று காலை 
திருடப்பட்டுள்ளது. 
வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை அங்கு வந்த நபர் ஒருவர் பொறுமையாகக் காத்திருந்து 
திருடிச் சென்றுள்ளார். 
வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் ப
திவாகியுள்ளது.
சிசிரிவி பதிவை வைத்துக்கொண்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உரியவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து
 வருகின்றனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 8 மே, 2026

நாட்டில் வானிலை மாற்றம் பல பகுதிகளில் நூறு மி.மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு

 நாட்டில்  சுற்றுவட்டாரத்தில் நிலவும் தாழ்மட்ட வளிமண்டல சீர்குலைவின் காரணமாக,   மழைப்பொழிவு நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 
 பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது. 
 மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் உண்டாகும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து ஆய்வு

இலங்கை தெனியாயா பகுதியில்  மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் குறித்து ஆய்வு செய்வதற்காக, சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அப்பகுதிக்கு வருகை தர உள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்தார். 
 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தெனியாயா மண்டல கல்வி பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட, தெனியாயா மண்டலத்தில் உள்ள 4 பாடசாலைகள் நேற்றும், இன்றும் 
மூடப்பட்டுள்ளது. 
தெனியாயா மத்திய கல்லூரி, தெனியாயா ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாயா புனித மத்தேயு இருமொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு 
மூடப்பட்டுள்ளன. 
 சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய்ப் பரவல் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 இருப்பினும், நிலைமை பெருந்தொற்று நிலைக்கு அதிகரிக்கவில்லை என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க
 தெரிவித்தார். 
 அதன்படி, எதிர்காலத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பான முடிவு, சுகாதாரத் திணைக்களங்கள் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் என தென் மாகாண கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரான தெரிவித்தார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 7 மே, 2026

சூரிச்சில் சிகிச்சை சுவிட்சர்லாந்தில் முதல் ஹன்டா வைரஸ் தொற்று

சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அவர் தற்போது சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மத்திய பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இவர், பல ஹன்டா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்ட உல்லாசக் கப்பலில் முன்னர் பயணித்தவர்.
FOPH- இன் தகவல்படி , அந்த நபர் ஏப்ரல் மாத இறுதியில் தனது மனைவியுடன் தென் அமெரிக்கப் பயணம் முடித்துத் திரும்பியிருந்தார். 
நோயின் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையின்
 (HUG) குறிப்பு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நபரின் மனைவிக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை, ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அந்த நோயாளி வேறு நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாரா என்பது குறித்து மாகாண அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கைபேசி கவர் மூலம் போதைப்பொருள் கடத்தல் இளம் துறவி கைது

இலங்கை மெனிக்ஹின்ன,ஹுரிகடுவ பகுதியில் உள்ள ஒரு விகாரையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படும் 23 வயது இளம் துறவி ஒருவர் ரங்கலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
அவரிடமிருந்து 10 கிராம் 'ஐஸ்' அல்லது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டபோது, ​​அந்த போதைப்பொருள் அவரது கைபேசியின் பின்பக்க உறைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் 
கூறுகின்றனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர். ஜயந்த சமரக்கோனின் அறிவுறுத்தலின் பேரில், ரங்கலா பொலிஸ் நிலைய பொறுப்பதாரி நிஷாந்த விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரால் இந்தச் சோதனை 
நடத்தப்பட்டது. 
சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தத் துறவி குறித்து ரங்கலா பொலிஸ் மேலும் விசாரணை நடத்தி வருகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.