திங்கள், 14 செப்டம்பர், 2026

இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மிணி கார கொழுக்கட்டை

இன்று விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடும்

 வகையில், கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள். அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொழுக்கட்டை மாவு / பச்சரிசி மாவு – 1 கப்

உப்பு– ½ டீஸ்பூன்

நெய் – 1–2 டீஸ்பூன்

சுடுநீர் – தேவையான அளவு அரைக்க

பச்சை மிளகாய் – 3

தேங்காய் – ½ கப்

கறிவேப்பிலை – 1 கொத்து

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 1–2

பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – ¼ டீஸ்பூன்

வேக வைத்த கொழுக்கட்டை – தேவையான அளவு

அரைத்த தேங்காய் விழுது – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு மற்றும் நெய் சேர்த்து, சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.

இதற்கிடையில், மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த கொழுக்கட்டையைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாக கிளறுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்மிணி கொழுக்கட்டை தயார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தமிழின படுகொலை! சர்வதேச தரப்புக்கள் ஏற்பதில் தொடர்ந்தும் தயக்கம் காண்பிக்கின்றன

; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றசாட்டு கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பட்டால் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் இறுதியில் நல்லூர் கிட்டுபூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரகடனக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது. அன்றிலிருந்து இனப்படுகொலை நடைபெற்றமைக்கான சாட்சியங்களை எத்தனையோ இடங்களில் வெளிப்படுத்தியும் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச சமூகம் ஏற்க 
மறுத்து வருகிறது.
எமது தாயகத்தில் தமிழினத்தை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று அரங்கேற்ற ஆரம்பித்ததை அடுத்தே ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். அதன்பின்னர் முள்ளிவாய்க்காலில் அந்த இனப்படுகொலை உச்சமடைந்து தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இதனை ஆதராங்களுடன் வெளிப்படுத்தியுள்ளபோதம் சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 

நாட்டில் மன்னார் மீனவர்களின் வலையில் சிக்கிய முன்நூறு கிலோ கொப்பரா மீன்

நாட்டில் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில்-14-09-2026- இன்று அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
 சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இது
 வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும்
 ஏற்படுத்தியுள்ளது.
மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

 இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 332.60 ரூபா
ஜப்பானிய யென் 2.18 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 450.09 ரூபா
யூரோ 386.85 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.76 ரூபா
சுவிஸ் பிராங் 409.98 ரூபா
கனடிய டாலர் 241.04 ரூபா
கத்தார் ரியால் 91.94 ரூபா
குவைத் தினார் 1080.10 ரூபா
சவுதி ரியால் 89.88 ரூபா
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் பலாலி சந்தியில் தமது காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்

நாட்டில் வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில்-13-09-2026- இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்
 கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் 
அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து 
வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வவுனியா வெடுக்குநாறிமலையில் பதின் ஒரு அடி புத்தர் இருந்தாராம்

இலங்கை  வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம். அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில்  ஓன்றரை மணிநேரம் பிரித்து ஓதி
 பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதுவரை சைவ மக்களை மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என்று பொலிசார் கூறியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு ஸ்தானம்.. 2012 ற்கு முன்னர் அங்கு 11அடி புத்தர் சிலை இருந்தது. அது எங்களிடம் உள்ளது. மீண்டும் அதனை இங்கு நிறுவப் போகின்றோம்.
சைவ வழிபாடு 2013 இற்கு பின்னரே வந்தது. தமிழர்கள் போலி நம்பிக்கையில் வழிபடுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்..
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 12 செப்டம்பர், 2026

நாட்டில் பிக்குகள் ஆதிலிங்கேஸ்வரருக்கு பூசை வழிபாடு நடாத்தியுள்ளனர்

நாட்டில்  பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை வழிபாடுகளை
 நடாத்தியுள்ளது.
அத்துடன் இது தமது புண்ணிய பூமி எனவும் ஆலய பூசகர் நிர்வாகத்தினருடன் முரண்பட்டு உச்சிமலையில் உள்ள சூலத்தை அகற்றுமாறு கோரியதுடன் விரைவில் இவ்விடத்தில் விகாரை ஒன்று கட்டப்படுமென தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்கள்.
வெடுக்கு நாரி மலையில் சைவ வழிபாட்டை அச்சுறுத்தி உச்சிமலையில் தமது வழிபாட்டை சட்டவிரோதமாக மேற்கொள்ள வருகைதந்த கல்கமுவ சாந்த போதிதேரருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் பாதுகாப்பளிக்க பத்துக்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து நூற்று ஐம்பது வரையான பொலிசாரும் ஐம்பதுக்கு 
மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பை வழங்க உச்சிமலையில் ஆதிலிங்கேஸ்வரருக்கு அருகில்  வட்ட வடிவமாக தாமரைப்பூவினை அடுக்கி சில பொருட்களைப்பரப்பி ஒன்றரை மணிநேரம் பிரித் 
ஓதியிருந்தனர்.
இதனிடையே வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் பூசை வழிபாட்டில் இடம்பெறும் இடையூறுகளை தடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களோடு அங்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.