வியாழன், 17 செப்டம்பர், 2026

நாட்டில் முல்லைத்தீவு வைத்தியசாலையின் 4 மாடி கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நாட்டில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
.முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்த புதிய நோயாளர் அறைத் தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக 
அமைக்கப்படும்.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களைப் பரிசோதனைக்குட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவது மட்டுப்படுத்தப்படும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, புதிய வார்டு தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மருத்துவமனை ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மக்கள் இங்கிலாந்து கிராமம் பிரிந்து செல்வதற்கு வாக்களிப்பு

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் உள்ள சுமார் 350 மக்கள் வசிக்கும் சிறிய கிராமமான பிடிங்டன், அருகிலுள்ள பயன்பாட்டில்
 இல்லாத இராணுவத் தளத்தில் தஞ்சம் கோருவோருக்கான தங்குமிட மையத்தை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு 
எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து செல்வது தொடர்பாக அடையாள வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டுக்கு வடகிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிடிங்டனில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 312 பேர் பங்கேற்றதாக கிராமத்தின் பாரிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது சுமார் 92 சதவீத வாக்குப்பதிவாகும்
 வாக்காளர்களிடம் பிடிங்டன் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சுயநிர்ணய உரிமையைப் பெறுவதை நான் ஆதரிக்கிறேன் என்ற கூற்றுடன் உடன்படுகிறீர்களா அல்லது உடன்படவில்லையா 
என்று கேட்கப்பட்டது.
வாக்களித்தவர்களில் 285 பேர் பிரிந்து செல்வதற்கு ஆதரவாகவும், 26 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஒருவர் தனது வாக்குச்சீட்டை செல்லாததாக்கினார்.
எனினும், இந்த வாக்கெடுப்புக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ பிரிவினை அதிகாரமும் இல்லை. இதை கிராம மக்கள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் குறியீட்டு நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளனர்.
வாக்கெடுப்புக்குப் பின்னர், கிராமச் சாலை அடையாளப் பலகைக்கு அருகில் பிடிங்டன் சமஸ்தானம் (Piddington Principality) எனக் குறிப்பிடப்பட்ட பதாகையை ஏந்தியபடி சிலர் கொண்டாடின
பிடிங்டன் பாரிஷ் கவுன்சில் தலைவர் டிம் மெக்னாலி, இனிமேல் கிராமம் தன்னை பிடிங்டன் பிரின்சிபாலிட்டி என அடையாளப்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் இந்தத் திட்டத்தை அவசரமாக முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் மெக்னாலி குற்றம்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத பைசெஸ்டர் தளம் A இராணுவ வளாகத்தில் தஞ்சம் கோருவோருக்குத் தங்குமிடம் வழங்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு உள்ளூர் அளவில் எதிர்ப்பு 
நிலவி வருகிறது.
பிடிங்டனில் நடைபெற்ற இந்த அடையாள வாக்கெடுப்பு, இணையத்தில் தங்களை குடியேற்ற எதிர்ப்பு செல்வாக்கு செலுத்துபவர்கள் எனக் குறிப்பிடும் சிலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டரீதியான பிரிவினை நடவடிக்கையாக இல்லாவிட்டாலும், தஞ்சம் கோருவோருக்கான மையத்தை அமைக்கும் அரசாங்கத் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்களிடையே நிலவும் எதிர்ப்பை இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளுங்கள் - வலி. தெற்கு பிரதேச சபைக்கு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவு

யாழ் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிட்டுள்ளார் 
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் , சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றை வலி.தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது. 

அதன் போது, குப்பைகளை மீள அள்ள வேண்டும் என வலி. தெற்கு பிரதேச சபைக்கு கால எல்லை அறிவிக்கப்பட்டு , அவர்கள் அதனை மீள அள்ளவில்லை. அதற்கு எதிராக தவிசாளர் இதுவரையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பிலும் , அதன் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க என கடந்த 14ஆம் திகதி விசேட கூட்டம் கூட்டப்படும் என சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் , அக்கூட்டம் கூட்டப்படவில்லை. இந்த விசேட கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் சென்ற கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவும் இல்லை இவை அனைத்தும் தவிசாளரின் உதவியுடன் நடைபெறுவதாக தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் உரிய நடவடிக்கை தவிசாளர் எடுக்க வேண்டும் என கோரி பெரும்பாலான உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்தனர். 

அதனால் இன்றைய சபை அமர்வு நடைபெறாத நிலையில் , அது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் ,  வலி. தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டனர் 

அதனை அடுத்து , கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இந்த இடத்தில் கழிவுகளை கொட்ட எவ்வாறு தெரிவு செய்தீர்கள் ? கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அள்ள போகிறீர்கள் ? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளைய தினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்க உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார் 
7என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 16 செப்டம்பர், 2026

இலங்கையில் இன்னும் பத்து நாட்களில் நாடெங்கும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்

நாட்டில் இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.
தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என 
அவர் கூறினார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.
இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத்
தெரிவித்தார்.
அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் நாட்டிற்கு கிடைக்கும் மழையை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழில் தொண்ணூறாயிரம் கடல் அட்டைகளுடன் இவர்கள் கைது

படகுகள் யாழ். களப்புப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது
 செய்துள்ளனர்.
கல்முனை முனை கடற்படைப் பிரிவினர், யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பயணித்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளை கடற்படையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்ட 9,000 கடல் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குறித்த படகுகளில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் இரு டிங்கி படகுகளுடன் கடற்படையினரால் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 9,000 கடல் அட்டைகள், இரு டிங்கி படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கால்நடை மருத்துவரை வலையிலிருந்து பாய்ந்து பதம் பார்த்த சிறுத்தை

மருத்துவரை கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது பாய்ந்து தாக்கியதால் ஒரு திகிலூட்டும்
 அனுபவத்தை
 எதிர்கொண்டார். வலையில் சிக்கியிருந்த அந்தச் சிறுத்தை நன்கு வளர்ந்த விலங்கு என்றும், வலையில் சிக்கியபோது அதற்குப் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




இரவில் உறங்குவதற்கு முன்நீரிழிவு நோயாளிகள் இதை குடிங்க

இரவில் உறங்குவதற்கு முன்  நீரிழிவு நோயாளிகள் பெருங்காயத்தண்ணீரை இரவு உறங்கும் முன் குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும். பெருங்காயத்தில் காணப்படும் சில செயல்திறன் மிக்க சேர்மங்கள், உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவும். உடல் சரியான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யும்போது, ​​இரத்த சர்க்கரை அளவு திடீரென உயராது. இதனால், நீரிழிவு நோயை சமாளிப்பது எளிதாகும்.
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெருங்காயத் தண்ணீர் வயிற்றில் உள்ள செரிமான
 நொதிகளைத் தூண்டுகிறது. இதை இரவில் குடித்தால் காலையில் வயிற்றைச் சுத்தப்படுத்தவும், அஜீரணக் கோளாறிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
மெதுவான வளர்சிதை மாற்றம் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும். பெருங்காயத் தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது, 
இது கலோரிகளை எரிக்கவும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த உறைவுகளைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுவதன் மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது வாயுத் தொல்லை சில சமயங்களில் இரவில் தூங்குவதைக் கடினமாக்கும். பெருங்காயத் தண்ணீர் வயிற்றை அமைதிப்படுத்தி, நீங்கள் ஆழ்ந்து தூங்க உதவுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

Blogger இயக்குவது.