ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.13 ரூபா
ஜப்பானிய யென் 2.15 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 458.50 ரூபா
யூரோ 392.29 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 242.20 ரூபா
சுவிஸ் பிராங் 422.33 ரூபா
கனடிய டாலர் 243.37 ரூபா
கத்தார் ரியால் 93.99 ரூபா
குவைத் தினார் 1106.89 ரூபா
சவுதி ரியால் 91.86 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள்: கருத்தடை சிகிச்சைக்கு 15 மில்லியன் ஒதுக்கீடு

நாட்டில் வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
 ..இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை 
செய்யப்படவுள்ளது.
யாழ். மாநகர சபை - 120 நாய்கள்  ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள் 
கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்  
முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,
வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்கள்  
இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை
 யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
 

குழந்தைகளுக்கு பிரித்தானியாவில் இலவச பேருந்து சேவை அறிமுகம்

குழந்தைகளுக்கு  பிரித்தானியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலவச பேருந்து சேவை 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.
கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் 
அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் தெரிவித்தார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
 


சனி, 1 ஆகஸ்ட், 2026

யாழ் சுதுமலை அம்மன் கோவில் வழக்கு மேல் நீதிமன்றத்தல் தள்ளுபடி

யாழ் . சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்து
 கட்டளையிட்டுள்ளது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி கோவில் திருப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, இடைக்காலக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர்களால் மனுத் தாக்கல் 
செய்யப்பட்டிருந்தது
. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசாரணை நேரத்தின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி   கட்டிட அனுமதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் 
நீதிமன்றத்திற்கு மட்டுமே உரியது. மேல் நீதிமன்றத்தின் எல்லை: அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களாகவே இருந்தாலும், அவற்றை இடித்துத் தள்ளுமாறு உத்தரவிடும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை  என சுட்டிக்காட்டினாா்.
 பிரதேச சபையினால் இதுவரை இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரர்களின் இந்த விண்ணப்பம் முன்முதிர்வானது (Premature).எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியின் வாதங்களை 
முழுமையாக 
ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அஸ்வெசும நலன்புரி தொகை மோசடி : நுவரெலியா நோர்வூட் பகுதியில் இரு பெண் உத்தியோகஸ்தர்கள் கைது

                                      
 

நாட்டில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சுமார் 30 லட்சம் இலட்சம் அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் இரண்டு அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளனர். 
 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 அவர்கள் 2025 ஆம் ஆண்டு முதல் சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் 
சாட்டப்பட்டுள்ளது. 
 இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது. 
 கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டதைத்
 தொடர்ந்து, இந்த வெட்டுப்புள்ளிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 31 ஜூலை, 2026

சில பகுதிகளில் நாட்டில் நூறு மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யும்

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்.31-07-2026- இன்று  அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் 
திணைக்களம் தெரிவித்துள்ளது. 
திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், சில இடங்களில் 100 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில்  வறண்ட காலநிலை நிலவும். 
 வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய
 மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.