ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நீதிக்கான நீள் பயணம்: நாளை

நாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில்
 நடைபெறவுள்ளது.
நாளை காலை 09:00 மணிக்கு  தந்தை செல்வா கலையரங்கத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது
மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்து மாநாட்டு அமர்வுகள் தொடங்கும்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாகக் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வரும் ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் விரும்பிப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள், வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள், மனித உரிமை மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 29 ஆகஸ்ட், 2026

நாட்டில் தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த சிறு காட்டு யானை

நாட்டில் .கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம் யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின்
 உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து நின்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

நாட்டில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதியினர்,

இலங்கை  மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நீங்கள் முருங்கைக்கீரை வாரத்திற்கு குறைந்தது 3–4 முறை சாப்பிடுங்கள்!

 

நாம் பல விலையுயர்ந்த சப்ப்ளிமென்ட்களைத் தேடி அலைகிறோம். ஆனால் நம் வீட்டு அருகிலேயே கிடைக்கும் முருங்கைக்கீரை ஒரு சத்துமிக்க இயற்கை உணவு! முருங்கைக்கீரையில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் C உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்:
 ✔️ நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க உதவும்
 ✔️ இரும்புச்சத்து கிடைக்க உதவும்
 ✔️ எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்
 ✔️ கண் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்
 ✔️ செரிமானத்திற்கு உதவக்கூடும்
 ✔️ உடலின் இயல்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதுகாப்பை ஆதரிக்கிறது

 🥬 வாரத்திற்கு 3–4 முறை முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 27 ஆகஸ்ட், 2026

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

கிளிநொச்சி.கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை
 தனது தாயார் பெர்னதேத்தம்மாவின் நினைவாக மற்றுமொரு 
இயந்திரமும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் 
மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில், உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்
திரு  சிவஞானம் சிறீரன்,
“போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மண், இழப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் இந்தச் சூழலில், மக்களின் உயிரைக் காக்கும் இத்தகைய உயரிய உதவி என்பது நெஞ்சார நினைவுகூர்ந்து 
போற்றத்தக்கது. சிறுநீரக நோயாளிகளின் அவசியத் தேவையை உணர்ந்து, வட மாகாண மருத்துவமனைகளின்
 மேம்பாட்டிற்காக இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களை வழங்கி பேராதரவு தந்த செந்தில்குமரன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்”
 எனத் தெரிவித்தார்.
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை (Kilinochchi DGH), மல்லாவி ஆதார மருத்துவமனை
 (Mallavi BH) மற்றும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை (Vavuniya DGH) ஆகிய மருத்துவமனைகளுக்கு ஆறு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு 
நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான 
கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) கலந்துகொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் நிறுவனர் செந்தில்குமரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சேரலாதன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் 
வேழமாலிகிதன், பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், இலங்கைக்கான கனடா 
உயர்ஸ்தானிகராலய அரசியல் அலுவலர் சாகித்தியனன், கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர்களான கௌரவ சிவமோகன், கௌரவ 
ஆனந்தவடிவேல், கௌரவ எழில்வேந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் திரு குணராஜ், மாவட்ட பொது மருத்துவமனையின் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்றைய தினம் யாழ் தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் 
வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்  கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை  ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் முன்நூறு கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சோலார் மின்கலன்களை நிறுத்துமாறு கோரிக்கை

நாட்டில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலன்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டமைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை சூரிய மின்கலன்களை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.