வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று  இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இன்று இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 334.12 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 457.00 ரூபா
யூரோ 392.33 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.49 ரூபா
சுவிஸ் பிராங் 421.73 ரூபா
கனடிய டாலர் 243.74 ரூபா
கத்தார் ரியால் 92.37 ரூபா
குவைத் தினார் 1084.67 ரூபா
சவுதி ரியால் 90.31 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் பூர்வீக நிலங்களை ஒப்படைக்க அரசை வலியுறுத்தி போராட்டம்

எங்களது  பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்" என அரசை வலியுறுத்தி போராட்டம்
 ஒன்று -21-08-2026.இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் 
நடைபெற்றது.
 மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், சிவில் அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும்
 கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் வலிவடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி பகுதிகளில் காணி இழந்த மக்களின் தொடர் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


குழாய் நீர் பயன்பாட்டுத் தடை லண்டனில் ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு

இந்த ஆண்டு இறுதி வரை லண்டனில் குழாய் நீர் பயன்பாட்டுத் தடை  நீடிக்கும் என தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் மூலோபாய நீர் வள இயக்குநர் நெவில் மன்காஸ்டர், ஈரமான வானிலை இருந்தபோதிலும்
 இந்தத் தடை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்றும்
 சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாரக்கணக்கில் நிலவிய சாதனை அளவிலான வெப்பமான
 மற்றும் வறண்ட வானிலை காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 27 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம், பிரிட்டனின் மிகப்பெரிய நீர் நிறுவனம், லண்டன் மற்றும் தேம்ஸ் பள்ளத்தாக்கு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடையை அறிமுகப்படுத்தியது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 20 ஆகஸ்ட், 2026

நாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்

நாட்டில் இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு 
பணிகள்-20-08-2026- இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் புதையல் தோண்ட முற்பட்ட ராணுவ அதிகாரி உட்பட எட்டு பேர் கைது

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு 55ம் கட்டை பகுதியில் 8 பேர் கொண்ட குழுவினர் புதையல் தோண்ட முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும்
 சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல்
 செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்கள்கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் இணுவிலில் மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து 
அகற்றக் கோரி-20-08-2026,.இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து
 அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில் கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை
 விடுத்தனர்.
அத்துடன் மதுபான சாலையை அகற்றுமாறு , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 19 ஆகஸ்ட், 2026

உலகளாவிய ரீதியில் கணினியில் ஃபேஸ்புக் தளத்தை அணுகுவதில் சிக்கல்

தற்போது உலகளாவிய ரீதியில் கணனியில் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
 அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் வழியாக ஃபேஸ்புக் தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகக் 
கூறப்படுகிறது. 
 இருப்பினும், கையடக்க தொலைபேசிகளில் முகப்புத்தக செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.