சனி, 22 ஆகஸ்ட், 2026

உங்கள் சருமம் இயற்கை முறையில் பொலிவு பெற முட்டை மாஸ்க்

எங்கள் சருமத்தை அழகாகவும் வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவோம். பொலிவான சருமம் பெற வாரத்திற்கு இருமுறையாவது முட்டை மாஸ்க் போடுவது நல்லது. 
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரை வரும் வரை அடித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய்ந்து போகும் வரை காத்திருந்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தை
 இறுக்கஇயற்கையான முறையில் நம் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும்மாக்கவும் உதவும். 
முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ பருக்களால் ஏற்படும் வடுக்களும், கரும்புள்ளிகளும் 
மறைந்துவிடும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து நெற்றி, மூக்கின் இரு பக்கங்களிலும், தாடைப் பகுதியிலும், உதட்டின் மேல் பகுதியிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விட நம் முக அழகை கெடுக்கும் தேவையற்ற முடிகள்
 உதிர்ந்து விடும். 
இதனை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்

நாட்டில்  .கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த கலந்தரையாடல் நடைபெற்றது.
இக்கலந்தரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபியின் சட்டதரனியுமான எம். ஏ. சுமந்திரன் கலந்துகொண்டார்.
போருக்குப் பிந்தைய சூழலில் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சவால்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. 
சமூகத்திற்காகத் தியாகங்களைச் செய்த முன்னாள் போராளிகளுக்கு அரசியல் தளத்தில் உரிய அங்கீகாரமும் இடமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. 
முன்னாள் போராளிகளின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு, அவர்களின் உரிமைகளுக்கான ஜனநாயகப்பூர்வமான நகர்வுகள் மற்றும் அவர்களை முதன்மை அரசியல் நீரோட்டத்தில் இணைப்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 
இக்கூட்டம் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளில் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வறட்சி தீவிரம்: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவித்தல்

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைவதன் காரணமாக நீர் நாளைமுதல்  மறு அறிவித்தல் வரை தினமும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்- தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிவமைப்புச் சபை, மட்டக்களப்பு பிராந்தியம்".செய்தி அன்புக்குரிய மக்களே இந்த செய்தி சாதாரண செய்தியல்ல.
எதிர்வுகூறப்பட்ட எல்நினோ தீவிரமடைந்து வருவதாலும் மற்றும் எங்கள் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள சமுத்திரப் பகுதிகளிலும் நிலவும் வெப்பமான வானிலைத் தோற்றப்பாடுகளின் விளைவுகளின் ஆரம்பம்.
கடந்த 90 நாட்களில் (மே மாதம் 20ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 20ம் திகதி வரை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாகவே 24 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.
ஆனால் 493 மி.மீ. நீர் ஆவியாகி உள்ளது. மிக அண்மித்த நாட்களில் சற்றுக் கனமான வெப்பச்சலன மழைக்கும் வாய்ப்பில்லை.
( ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவிலான மழைக்கு வாய்ப்புண்டு). எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ம் திகதியை அண்மித்தே இரண்டாவது இடைப்பருவ மழை தொடங்கும் வாய்ப்புள்ளது. 
அதுவும் இரண்டாம் இடைப்பருவ மற்றும் வடகீழ்ப் பருவ மழை எவ்வாறு அமையும் என்பதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரமே உறுதிப்படுத்த முடியும். தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சற்று அதிக அளவில் வெப்பநிலை 
நிலவுகின்றது. 
ஆனால் வரண்ட தென்மேற்கு பருவக்காற்று வீசுவதனால் நாம் உணரும் வெப்பத்தின் அளவு சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் அதிக வெப்பநிலையும் வேகமான காற்று வீசுகையும் அதிக 
ஆவியாக்கத்தினைத் தூண்டும். 
குறிப்பாக வேகமான காற்று வீசுகை அதிக ஆவியாக்கத்திற்கு காரணமாகும்( டால்ரன் விதி- Dalton's Law of Evaporation). இதனால் எமக்கு தெரியாமலே எங்கள் பிரதேசங்களில் அதிக நீரிழப்பு நிகழ்கின்றது. அதே வேளை இக்காலத்திலேயே நாம் அதிக நீரைப் பயன்படுத்துகின்றோம்.
பெருமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் காலம் வரை ( கிட்டத்தட்ட எதிர்வரும் ஒக்டோபர் 12... அதாவது இன்னமும் ஏறக்குறைய 52 நாட்களுக்கு) எங்களிடம் தற்போது உள்ள நீரையே நாம் பயன்படுத்த
 வேண்டும். ஆகவே நீரை வினைத்திறனாக பயன்படுத்தி நாம் நீர் நெருக்கடியைத் தவிர்ப்போம். 
கடந்த காலங்களில் உலகின் சில முக்கியமான நகரங்கள்( பெங்களூரு மற்றும் ஜோகன்னஸ்பேர்க்) இவ்வாறு தொடர்ச்சியான மழையற்ற தன்மை, அதிக ஆவியாக்கம், நீர்ச்சேமிப்பைக் கருத்தில் கொள்ளாத பயன்பாடு காரணமாக நீரற்ற நாட்களைக்( Zero Water Day) கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாம் அத்தகைய நிலைமைக்கு செல்வதற்கு முன்னரே 
விழித்திடுவோம். 
 1. அன்புக்குரிய வர்த்தகர்களே!!! பெருமழை ஒன்று கிடைக்கும் வரை தயவு செய்து உங்கள் வணிக நிலையங்களை குளிர்மைப்படுத்த அதிகளவிலான நீரை உங்கள் வணிக நிலையங்களுக்கு முன்னே ஊற்றி வீண் விரயம் செய்யாதீர்கள்...
 2. கட்டுமானதாரர்களே!!! நீரை அதிகளவு நுகரும் கட்டுமான வேலைகளை பெருமழை ஒன்று கிடைக்கும் வரை நிறுத்தி அல்லது மட்டுப்படுத்தி
 நீரை சேமியுங்கள் 
 3. பெருமழை ஒன்று கிடைக்கும் வரை உங்கள் வீட்டுக் கிணறுகளை இறைத்து சுத்தப்படுத்தும் வேலைகளை ஒத்திப்போடுங்கள். 
 4. விவசாயிகளே!!! நீர் அதிகளவில் ஆவியாகக்கூடிய நேரங்களில் உங்கள் கிணற்று நீரை இறைத்து பயிர்களுக்கு நீர் பாய்ச்சாதீர்கள்.
 5. பக்தர்களே!!! உங்கள் ஆலயங்களின் கேணிகளின் நீர் ஏற்கெனவே குறைந்த மட்டத்திலேயே உள்ளமையால் தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு ஆலயக் கேணிகளைத் துப்புரவாக்கும் போது நீரை இறைத்து வெளியேற்றாமல் தூர்வாருங்கள். ஆலயக் கேணியில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களை அகற்றுங்கள். 
ஏனெனில் பல இடங்களில் ஆலயக் கேணிகளே அவற்றின் கட்டமைப்புக் காரணமாக தரைக்கீழ் நீரைச் சேமிக்கும் பிரதான மூலங்களாக தொழிற்படுகின்றன.
எனவே அன்புக்குரிய மக்களே....வானிலை வரட்சியொன்றில் நாம் உள்ளோம்.... எங்கள் நீர்வளம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்... நீரை மிகவும் வினைத்திறனாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துங்கள்....என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று  இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இன்று இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 334.12 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 457.00 ரூபா
யூரோ 392.33 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.49 ரூபா
சுவிஸ் பிராங் 421.73 ரூபா
கனடிய டாலர் 243.74 ரூபா
கத்தார் ரியால் 92.37 ரூபா
குவைத் தினார் 1084.67 ரூபா
சவுதி ரியால் 90.31 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் பூர்வீக நிலங்களை ஒப்படைக்க அரசை வலியுறுத்தி போராட்டம்

எங்களது  பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்" என அரசை வலியுறுத்தி போராட்டம்
 ஒன்று -21-08-2026.இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் 
நடைபெற்றது.
 மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், சிவில் அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும்
 கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் வலிவடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி பகுதிகளில் காணி இழந்த மக்களின் தொடர் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


குழாய் நீர் பயன்பாட்டுத் தடை லண்டனில் ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு

இந்த ஆண்டு இறுதி வரை லண்டனில் குழாய் நீர் பயன்பாட்டுத் தடை  நீடிக்கும் என தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் மூலோபாய நீர் வள இயக்குநர் நெவில் மன்காஸ்டர், ஈரமான வானிலை இருந்தபோதிலும்
 இந்தத் தடை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்றும்
 சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாரக்கணக்கில் நிலவிய சாதனை அளவிலான வெப்பமான
 மற்றும் வறண்ட வானிலை காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 27 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம், பிரிட்டனின் மிகப்பெரிய நீர் நிறுவனம், லண்டன் மற்றும் தேம்ஸ் பள்ளத்தாக்கு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடையை அறிமுகப்படுத்தியது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 20 ஆகஸ்ட், 2026

நாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்

நாட்டில் இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு 
பணிகள்-20-08-2026- இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.