செவ்வாய், 16 ஜூன், 2026

நாட்டில் டெங்கு தொற்றால் கடுமையான அழுத்தத்திற்கு சுகாதாரத்துறை :மக்களிடம் வேண்டுகோள்

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ எச்சரித்துள்ளார் 
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் சேர்க்கை காரணமாக, குறிப்பாக கொழும்பில் உள்ள சில மருத்துவமனைகள் ஏற்கனவே நெரிசலை சந்தித்து
 வருவதாகக் கூறினார். 
 "நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், மருத்துவமனை அமைப்பால் சமாளிக்க முடியாமல் போகலாம். நாம் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்," என்று 
அவர் கூறினார். 
 மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சுமையைக் குறைப்பதற்கு, டெங்கு பரவுவதைத் தடுப்பதே மிகவும் பயனுள்ள வழியாகும் என்று வலுயுறுத்திய அவர், நடைபெற்று
 வரும் டெங்கு
 தடுப்புத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்கவும், தங்கள் வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சுவிஸ் ஜெனீவாவில் சுவிஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகள் இடையே பேச்சுவார்த்தை

சுவிஸ் ஜனாதிபதிகை பார்மெலின், ஜெனீவா விமான நிலையத்தில் தனது உக்ரைன் நாட்டு சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை இருதரப்பு சந்திப்பிற்காக வரவேற்றுள்ளார். 
கீவ் மற்றும் மாஸ்கோ இடையேயான மோதலில் சுவிட்சர்லாந்தின் நல்லெண்ண முயற்சிகள், உக்ரைனின் புனரமைப்பு மற்றும் அந்நாட்டுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை சந்திப்பின் போது 
பேசப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியை வரவேற்ற சுவிஸ் ஜனாதிபதி, "ஜனவரியில் நடந்த டாவோஸ் மாநாட்டிற்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ரௌஸ்டெம் உமரோவ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் குகதாஸ் மாதுலன் உலகையே திரும்பி பார்க்க வைத்த இளம் வீரன்

யாழ்  சிறுவன்  இந்தியா A அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், வெறும் 2 போட்டிகள் மட்டுமே விளையாடி அனுபவம் கொண்ட 19 வயது இளம் வீரன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 
நேற்று நடந்த இந்தியா A அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்து 'சூப்பர் ஓவர்' என்ற நிலைக்குச் சென்றது. 
அப்போது இலங்கை அணி சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடி 16 ஓட்டங்கள் குவித்தது. 
இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது. 
இந்நிலையில், எதிரணியில் எந்தவொரு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் சந்தித்த மற்றும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வைபவ் சூரியவன்ஷி இலங்கையை சேர்ந்த 19 வயது இளைஞனின் பந்துவீச்சிற்கு 
திணறியுள்ளார். 
குறித்த ஓவரில் இரண்டு வீரர்களையும் தனது துல்லியமான பந்துவீச்சு வித்தையால் நிலைகுலையச் செய்து, அந்த சூப்பர் ஓவரையே ஒட்டுமொத்தமாக அடக்கி, இலங்கை A அணிக்கு ஒரு காவிய வெற்றியைப் பெற்று தந்துள்ளார் யாழ்ப்பாணத்து மண்ணின் 
வீரன் குகதாஸ் மாதுலன். 
தோனி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களாலேயே பாராட்டுப் பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வாகி, இன்று இலங்கை நாட்டின் 'A' அணியை அசாத்தியமாக வெற்றி பெற வைத்திருக்கும் இந்த யாழ்ப்பாணத்து சிங்கம், தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே ஒரு
 மாபெரும் உத்வேகம். 
நேற்றைய வெற்றி தம்புள்ளையில் இலங்கை 'ஏ' அணிக்கு கிடைத்த ஒரு மறக்க முடியாத வெற்றி ஆகும். 
நம் மண்ணின் பிள்ளைகள் தடைகளை உடைத்து, உலக மேடையில் சாதிக்கும் போது பிறக்கும் அந்தப் பெருமித சந்தோஷத்திற்கு ஈடு இணையே ஏதுமில்லை. இன்னும் பல உயரங்களைத் தொட 
மாதுலனுக்கு இந்த இணையத்தின் நல் வாழ்த்துக்கள் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 15 ஜூன், 2026

சமையல் எண்ணெய் விநியோக நிறுவனத்தில் யாழில் நிதி மோசடி: விற்பனைப் பிரதிநிதி கைது

சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை யாழில்  மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய நபர் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் மேற்கொண்ட உள்ளக விசாரணையின் போது மோசடி தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு 
செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், போலியான ஆவணங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி முத்திரைகள் (Rubber Stamps) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தற்போது 
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சிலர் இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடையிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாக கூடுதல் கைது நடவடிக்கைகளும் இடம்பெறலாம் என 
தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழில் முப் பது ஆண்டுகால இடப்பெயர்வு வேதனை: வலி.வடக்கு மக்கள் போராட்டம்

யாழ் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
36 ஆண்டுகளாக தொடரும் வலி.வடக்கு மக்களின் இடம்பெயர்வு வேதனை காணி விடுவித்து மீள்குடியேற்றம் செய்யக் கோரி பலாலி, யாழ். செயலகம் முன்பு போராட்டம்! உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வலி.வடக்கு மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
அந்த நிகழ்விற்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து தமது காணிகளில் இருந்து 
இராணுவத்தை
 வெளியேற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்து உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
போராட்டத்தின் போது காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. 
மேலும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களிடமும் மகஜர்கள் வழங்கப்பட்டன. 
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சி தபால் நிலையத்தின் அலட்சியத்தால் அரசு ஊழியருக்கு நேர்ந்த கதி


நாட்டில் கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் கடுமையான அலட்சியப் போக்கின் காரணமாக, 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவர் தனது வேலையை இழந்து, பெரும் போராட்டத்திற்குப் பின் 43 நாட்கள் சம்பளப் பிடித்தத்துடன் மீள வேலை பெற்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் பெற்ற இந்த அலுவலர், ஏப்ரல் மாதம் தனது தந்தையின் அவசர தீவிர சிகிச்சை (ICU) நிமித்தம் பணிக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது. 
இதுகுறித்த அவசர விடுமுறைத் தகவலைத் தனது உயரதிகாரிக்குத் தெரிவிக்க, அவர் கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகம் மூலம் முறைப்படி 'டெலிமெயில்' (Telemail) செய்துள்ளார்.
எனினும், தபால் நிலையத்தினர் அந்த டெலிமெயிலை உரிய நேரத்திற்கு அனுப்பாமல் அடியோடு மறந்துள்ளனர். இதன் விளைவாக, விடுமுறை அறிவிக்காமல் பணிக்கு சமூகமளிக்கவில்லை
 எனக் கூறி அந்த அலுவலருக்கு வேலை நீக்கக் (பதவி வெறிதாக்கல்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
தபால் நிலையத்தின் இந்தத் தவற்றால் அவர் 43 நாட்கள் வேலையிழந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இறுதியில், தபால் துறையின் தவற்றை நிரூபித்து, பெரும் போராட்டத்திற்குப் மத்தியில் எச்சரிக்கைக் கடிதத்துடனும், 43 நாட்களுக்கான சம்பளப் பிடித்தத்துடனும் அவர் மீண்டும் பணியில் இணைந்துள்ளார். 
தபால் துறையின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அகம்பாவமான போக்கிற்கு எதிராக மக்கள் மத்தியிலும், அரச ஊழியர்கள் மத்தியிலும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 14 ஜூன், 2026

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி ஏழு வீதம் சரிவு

நாட்டில் 2026-ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 
 மத்திய வங்கியின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12)   ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை   331.42 ரூபாவாகவும்,  விற்கும் விலை   341.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 
 2026 பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக வெளித்துறையில் ஏற்பட்ட தாக்கமே ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.