திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இன்று முதல் வழமை போல் இயங்கும்

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் சீர்செய்யப்பட்டுள்ளதையடுத்து,.20-04-2026. இன்று  முதல் அடையாள அட்டை விநியோக சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதன்படி, ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு பிரிவுகளின் ஊடாகவும் பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அடையாள அட்டை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்படுத்தல்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால்.20-04-2026., இன்று முதல் பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் 
பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னதாக, கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒரு நாள் சேவை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சாதாரண சேவைகளும் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் .20-04-2026.இன்று பிற்பகல் ரிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நாட்டின் பல மாகாணங்களுக்கு ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA) சுனாமி எச்சரிக்கை
 விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இவாட் (Iwate), அமோரி (Aomori) மற்றும் ஹொக்கைடோ (Hokkaido) ஆகிய மாகாணங்களின் கடற்கரைப் பகுதிகளுக்கு 3 மீற்றர் (9.84 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக மேடான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடலில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 
ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் (Seismic Intensity Scale) இது 'அப்பர் 5' (Upper 5) எனப் பதிவாகியுள்ளது. இத்தகைய அதிர்வுகள் ஏற்படும் போது மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது 
கடினமாக இருக்கும்.
கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடல் அலைகளின் சீற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முன்னாள் காதலியை சுவிசில் துன்புறுத்திய தமிழ் இளைஞனுக்கு தண்டனை

சுவிசில் முன்னாள்  காதலியை “நீ எனக்குக் கிடைக்காவிட்டால், நீ இறந்து விடுவாய்.” இதுபோல மேலும் 65,892 வாட்ஸ்அப் செய்திகளை, 16 மாத கால இடைவெளிக்குள், தனது முன்னாள் காதலிக்கு அனுப்பிய சுவிஸ்லாந் சூரிச்சில் வசிக்கும் 28 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளார்.
அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 தொலைபேசி அழைப்புகளையும் எடுத்துள்ளார். தற்போது சூரிச் மாவட்ட நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
தனக்குக் கிடைக்காவிட்டால் “குத்திவிடுவேன்” என்று அந்த நபர் தனது முன்னாள் காதலியை வட்ஸ்அப் தகவல்களில் 
மிரட்டியுள்ளார்.
வெட்டப்பட்ட மணிக்கட்டுகளின் வீடியோக்களையும் படங்களையும் அவளுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அவர் அவளைப் போல் நடித்து டிக்டொக் கணக்குகளை உருவாக்கி, அவதூறான உள்ளடக்கத்தைப் 
பதிவிட்டுள்ளார்.
அரசுத் தரப்பு, 11 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை, தலா 30 சுவிஸ் பிராங்குகள் கொண்ட 30 தினசரி விகிதங்கள் அபராதம், மற்றும் வற்புறுத்தல், அச்சுறுத்தல்கள், அடையாளத் திருட்டு, மற்றும் சட்டவிரோத குடியிருப்பு ஆகியவற்றுக்காக நாடு கடத்தக் கோரியுள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் வல்வெட்டித்துறை யில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு - ஒருவர் கைது

யாழில்  சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை 
கஞ்சாவும் , சிறிய ரக 
கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை
 பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஏப்ரல், 2026

நாட்டில் எதிர் வரும் மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம்

 

நாட்டில் மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம்
 குறிப்பிட்டுள்ளது
ந்த எரிவாயு கையிருப்புகள் மாலைதீவில் உள்ள மிதக்கும் சேமிப்பு முனையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவிர, மேலதிகமாக 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று தென்னாப்பிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்ப போதுமான எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 16 முதல் மீண்டும் வழமை போல் எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் புன்னாலைக்கட்டுவனில் வாள்களுடன் மூவர் கைது

யாழ்  புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று முன்தினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு தயாராகி வருவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும், மூன்று வாள்களுடன் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

போர்ட் நிறுவனம் கனடாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை திரும்ப பெறுகின்றன

போர்ட் நிறுவனம்  கனடாவில் இயங்கும் போர்ட் மோட்டார் நிறுவனம், சுமார் 1,44,000 போர்ட் F-150 ரக வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக
 அறிவித்துள்ளது.
இந்தத் திரும்பப் பெறல், 2015-17ம் ஆண்டு மாடல் வாகனங்களைப் பாதிக்கும். குறிப்பாக, ஆறு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட வாகனங்களில், உள் டிரான்ஸ்மிஷன் லீட் ஃபிரேமில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்படும் சிதைவு, டிரான்ஸ்மிஷன் ரேஞ்ச் சென்சாரில் இருந்து இடைவிடாத சிக்னலை ஏற்படுத்தக்கூடும் என 
தெரிவிக்கப்படுகின்றது.
இது வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக குறைந்த கியருக்கு மாறுவதற்கு வழிவகுக்கும் என
 எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலைத் தீர்க்க பல தீர்வுகளை ஃபோர்டு கோடிட்டுக்காட்டியுள்ளது குறிப்பிடபப்டுகின்றது.
கூடுதலாக, மென்பொருள் நிறுவலின் முன், இந்த சென்சார் தொடர்பான "குறிப்பிட்ட கண்டறியும் சிக்கல் குறியீடுகளை" காட்டியுள்ள எந்தவொரு வாகனத்திலும் டிரான்ஸ்மிஷன் லீட் ஃபிரேமை போர்ட் மாற்றும் என தெரிவித்துள்ளது.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.