திங்கள், 15 ஜூன், 2026

சமையல் எண்ணெய் விநியோக நிறுவனத்தில் யாழில் நிதி மோசடி: விற்பனைப் பிரதிநிதி கைது

சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை யாழில்  மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய நபர் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் மேற்கொண்ட உள்ளக விசாரணையின் போது மோசடி தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு 
செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், போலியான ஆவணங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி முத்திரைகள் (Rubber Stamps) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தற்போது 
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சிலர் இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடையிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாக கூடுதல் கைது நடவடிக்கைகளும் இடம்பெறலாம் என 
தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழில் முப் பது ஆண்டுகால இடப்பெயர்வு வேதனை: வலி.வடக்கு மக்கள் போராட்டம்

யாழ் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
36 ஆண்டுகளாக தொடரும் வலி.வடக்கு மக்களின் இடம்பெயர்வு வேதனை காணி விடுவித்து மீள்குடியேற்றம் செய்யக் கோரி பலாலி, யாழ். செயலகம் முன்பு போராட்டம்! உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வலி.வடக்கு மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
அந்த நிகழ்விற்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து தமது காணிகளில் இருந்து 
இராணுவத்தை
 வெளியேற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்து உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
போராட்டத்தின் போது காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. 
மேலும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களிடமும் மகஜர்கள் வழங்கப்பட்டன. 
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சி தபால் நிலையத்தின் அலட்சியத்தால் அரசு ஊழியருக்கு நேர்ந்த கதி


நாட்டில் கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் கடுமையான அலட்சியப் போக்கின் காரணமாக, 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவர் தனது வேலையை இழந்து, பெரும் போராட்டத்திற்குப் பின் 43 நாட்கள் சம்பளப் பிடித்தத்துடன் மீள வேலை பெற்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் பெற்ற இந்த அலுவலர், ஏப்ரல் மாதம் தனது தந்தையின் அவசர தீவிர சிகிச்சை (ICU) நிமித்தம் பணிக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது. 
இதுகுறித்த அவசர விடுமுறைத் தகவலைத் தனது உயரதிகாரிக்குத் தெரிவிக்க, அவர் கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகம் மூலம் முறைப்படி 'டெலிமெயில்' (Telemail) செய்துள்ளார்.
எனினும், தபால் நிலையத்தினர் அந்த டெலிமெயிலை உரிய நேரத்திற்கு அனுப்பாமல் அடியோடு மறந்துள்ளனர். இதன் விளைவாக, விடுமுறை அறிவிக்காமல் பணிக்கு சமூகமளிக்கவில்லை
 எனக் கூறி அந்த அலுவலருக்கு வேலை நீக்கக் (பதவி வெறிதாக்கல்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
தபால் நிலையத்தின் இந்தத் தவற்றால் அவர் 43 நாட்கள் வேலையிழந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இறுதியில், தபால் துறையின் தவற்றை நிரூபித்து, பெரும் போராட்டத்திற்குப் மத்தியில் எச்சரிக்கைக் கடிதத்துடனும், 43 நாட்களுக்கான சம்பளப் பிடித்தத்துடனும் அவர் மீண்டும் பணியில் இணைந்துள்ளார். 
தபால் துறையின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அகம்பாவமான போக்கிற்கு எதிராக மக்கள் மத்தியிலும், அரச ஊழியர்கள் மத்தியிலும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 14 ஜூன், 2026

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி ஏழு வீதம் சரிவு

நாட்டில் 2026-ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 
 மத்திய வங்கியின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12)   ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை   331.42 ரூபாவாகவும்,  விற்கும் விலை   341.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 
 2026 பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக வெளித்துறையில் ஏற்பட்ட தாக்கமே ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது பலர் கைது

நேற்று நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது 686 பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
 இந்த சோதனைகளின் போது 28,566 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த சோதனைகளின் போது, ​​முந்தைய வழக்குகளில் தேடப்பட்டு வந்த 18 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 60 பேரும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக 171 சந்தேக நபர்களும் கைது 
செய்யப்பட்டனர். 
 இதற்கிடையில், நேற்று “ரட்டம எக" என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட சோதனைகளில் 926 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராகக் காவலில் வைப்பதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm


நாட்டில் பல ஆயிரத்தை கடந்த டெங்கு தொற்றாளர்கள் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

.இலங்கையில்  இதுவரை 41144 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 சுமார் 51 சதவீதமான தொற்றாளர்கள் மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  வைத்தியர் கபில கன்னங்கரா,இது மிகவும் மோசமான நிலை என விவரித்துள்ளார். 
 இறப்பு எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர், மருத்துவமனைகளால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 13 ஜூன், 2026

நாட்டில் கடவுச்சீட்டு பெற விரும்புவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள்

நாட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய ஆவணம் இலங்கை 
கடவுச்சீட்டு ஆகும்.
இலங்கை கடவுச்சீட்டினை வழங்கும் பொறுப்பு இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு மட்டுமே உள்ளது.
இலங்கை கடவுச்சீட்டுகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்:
1. இராஜதந்திர கடவுச்சீட்டு (Diplomatic Passport)
இலங்கை இராஜ தந்திரிகள், உயர் அரச அலுவலக பதவியில் உள்ளவர்கள் மற்றும் இராஜ தந்திர முகவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு (Official Passport)
இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
3. சாதாரண கடவுச்சீட்டு (Ordinary Passport)
வழமையான பயணங்களுக்காக வழங்கப்படுகிறது. எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியானது.
காலாவதி காலம்: 10 ஆண்டுகள் (16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 3 ஆண்டுகள்).
4. தற்காலிக பயண ஆவணங்கள்/அவசர சான்றிதழ் (Temporary Travel Documents)
இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் செல்ல செல்லுபடுயாகும். அதாவது, ஆன்மிகச் பயணம், மருத்துவ பரிகாரம் போன்றவற்றுக்காக.
சவுதி அரேபியாவுக்குச் செல்ல செல்லுபடுயாகும். அதாவது, ஹஜ், உம்ராஹ் ஆன்மிகச் பயணத்திற்காக.
5. இயந்திரத்தில் வாசிக்க முடியாத கடவுச்சீட்டு (NMRP)
வெளிநாடுகளில் கடவுச்சீட்டைத் தொலைத்தவர்களுக்கோ அல்லது காலாவதியானவர்களுக்கோ அவசரமாக ஒருமுறை இலங்கைக்குத் திரும்புவதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களால் வழங்கப்படுகிறது.
இலங்கையில் கடவுச்சீட்டு பெற தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பப் படிவம் (ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்).
தேசிய அடையாள அட்டை.
பிறப்புச் சான்றிதழ் (மொழிபெயர்ப்புச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
3 வர்ண புகைப்படங்கள் (வெள்ளைப் பின்னணி, 3.5 செ.மீ × 4.5 செ.மீ).
தொழில் சான்றிதழ்: 
கடவுச்சீட்டில் உங்கள் தொழிலைப் பதிவு செய்ய விரும்பினால், அதற்கான கல்வி, தொழில்முறை அல்லது சேவைச் சான்றிதழ்களின் மூலங்களும் பிரதிகளும்.
திருமணமான பெண்களுக்கு:
கணவரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், திருமணச் சான்றிதழின் மூலப்பிரதியும் பிரதியும் தேவை. (வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்).
16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு (Minor):
பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் கடவுச்சீட்டுகள்.
பிள்ளைக்கு கடவுச்சீட்டு பெற பெற்றோர் இருவரும் சம்மதிக்கும் கடிதம் மற்றும் அவர்களின் கடவுச்சீட்டு தரவுப் பக்கங்களின் பிரதிகள்.
சட்டப்பூர்வ பாதுகாவலர் எனில் அதற்கான நீதிமன்ற ஆவணங்கள்.
குறிப்பு:
இலங்கையில் புதிய கடவுச்சீட்டு பெற சாதாரண சேவைக்கு ரூ.10,000, அவசர சேவைக்கு ரூ.15,000 அறவிடப்படுகிறது.
அழைப்பு தொடர்பான தகவல்கள்:
முகவரி: குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், சுகுறுபாயா, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.
உடனழைப்பு: 1962
தொலைபேசி: +94 112 101 500
தொலைநகல் (பெக்ஸ்): +94 11 2885358
மின்னஞ்சல்: controller@immigration.gov.lk
இணையத்தளம்:
www.immigration.gov.lk
. என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.