செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

சிறுமியின் கை யாழில் அகற்றப்பட்ட விவகாரம் - பொலிஸாரின் பக்கச்சார்பான விசாரணையை : நீதவான் எச்சரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவத் தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
 பொலிஸாரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கை குற்ற புலனாய்வுத் துறையினருக்கு பாரப்படுத்த நேரும் எனவும் மன்று அறிவுத்தியுள்ளது.
 கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி (கனூலா)மூலம் மருந்து செலுத்தப்பட்டது. 
ஓரிரு நாட்களில் கை மணிக்கட்டு வீக்கமடைந்த நிலையில் கையின் செயல்பாடு மணிக்கட்டுடன் செயலற்று போனதாகக் கூறி அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.
 இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன் பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் 
இடம்பெற்றுவருகிறன.
 இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது கடந்த தவணையின்போது மூன்று மருத்துவர்களை சந்தேகநபர்களாகப் பெயரிடப் போவதாக அறிவித்த பொலிஸார் சமீபத்திய விசாரணையில் அதற்கான அவசியம் இல்லை 
எனக் குறிப்பிட்டனர். 
இதையடுத்தே, கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இந்த வழக்கை பொலிஸார் கையாளும் விதம் தொடர்பில் நீதிவான் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தார்.
 மருத்துவர்களைக் கைது செய்யாத பொலிஸார், தாதியர்களைக் கைது செய்து சந்தேக நபர்களாக முற்படுத்தி உள்ளனர். ஒரே வழக்கில், இருவேறு நிலைப்பாட்டுடன் பொலிஸார் செயல்படுகின்றனர். அத்துடன், இந்த வழக்கில் பொலிஸார் திட்டமிட்ட வகையிலும், அல்லது முறையற்ற விசாரணைகள் காரணமாகவும் நீண்ட தாமதங்களை 
ஏற்படுத்துகின்றனர்.
 பொலிஸாரின் செயல்பாட்டில் இந்த நீதிமன்றம் திருப்தியடையவில்லை. தமக்கு வழங்கப்பட்ட  அறிவுறுத்தலுக்கு அமையவே தாம் 
சிறுமிக்கு மருந்து ஏற்றினோம் என்று பொலிஸாரின் விசாரணையிலும்
, திறந்த நீதிமன்றத்திலும் தாதியர்கள் வாக்குமூலம்
 வழங்கியுள்ளனர். 
 அத்துடன், சிறுமிக்கான சிகிச்சைக் குறிப்பில் மருந்தைச் செலுத்தவேண்டிய அளவீடுகள் குறிக்கப்படவில்லை என்றே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் காண்பிக்கின்றன.
 ஆதலால், பொலிஸாரின் முன்பின் முரணான செயல் பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மருத்துவர்களைக் கைது செய்வதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுமதி பெறவேண்டியுள்ளது
 எனக் கூறிவிட்டு, தற்போது அவர்களைச் சந்தேக நபர்களாகப் பெயரிட வேண்டிய தேவை இல்லை என்கின்றனர்.
 நீதி கிடைக்கும் என்று நம்பியே மக்கள் நீதிமன்றத்துக்கு வருகின்றனர். ஆனால், பொலிஸாரின் செயற்பாடு மக்களுக்கு அநீதியை வெளிப்படுத்துகிறது. எனவே, வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில்
 இந்த விடயத்தில் முறையான விசாரணைகள்
 இடம்பெறவேண்டும்.
 இந்த வழக்கு தொடர்பான குறிப்புகள் பொலிஸ்மா அதிபரின் விசேட அவதானத்துக்காக அனுப்பப்படவேண்டும். தேவை யேற்படின் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு 
பாரப்படுத்தவேண்டிய நிலை ஏற்படலாம்' என நீதிவான் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சீனாவின் ‘ப்ளூ எனர்ஜி’ புரட்சி கடல்மீது சூரிய மின் நிலையம்

. சீனாவில்  திறந்த கடல்பரப்பின் ஒரு பகுதியை முழுமையான 1 GW சூரிய மின் நிலையமாக மாற்றி, உலகின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா. டோங்யிங் (Dongying) கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த open-sea floating solar project, உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் திட்டமாகக் கருதப்படுகிறது
சுமார் 3,000க்கும் மேற்பட்ட மிதக்கும் தளங்களில் (floating platforms) நிறுவப்பட்டுள்ள இந்த மாபெரும் சூரியப் பண்ணை, 27 இலட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய 
திறன் கொண்டது
நிலப்பரப்பின் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக மாறிவரும் சூழலில், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கடற்கரைப் பகுதிகள் ஆகியவற்றை 
மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தும் சீனாவின் இந்த “Floatovoltaic” அணுகுமுறை, எதிர்கால ஆற்றல் திட்டங்களுக்கு ஒரு புதிய திசையை காட்டுகிறது.
மேலும், நீர்மீது அமைக்கப்படும் சூரியப் பலகைகள் இயற்கையாகவே குளிர்ச்சியான சூழலில் செயல்படுவதால், மின்உற்பத்தித் திறன் 10–15% வரை அதிகரிக்கிறது .
இது வெறும் ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல. நிலத்தைப் பாதுகாப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தன்னிறைவு அடைவது என அனைத்தையும் ஒருசேர இணைக்கும் “Blue Energy Revolution” இதுவே. எதிர்காலத்தில் உலகம் எரிசக்தியை 
எங்கிருந்து பெறப் போகிறது என்பதற்கான ஒரு தெளிவான சுட்டுரை.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று கணக்காய்வாளர் பதவி நியமனம் தொடர்பில் இறுதி முடிவு

நாட்டில் அரசியலமைப்பு சபை.03-02-2026. இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. 
கணக்காய்வாளர் நாயக பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த பெயர்களை இந்தக் கூட்டத்தின் போது பரிசீலிக்கும் என்று
 தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் 08 முதல் கணக்காய்வாளர் நாயகப் பதவி காலியாக உள்ளது. 
 பின்னர், கணக்காய்வாளர் நாயகத் துறையின் மூத்த அதிகாரி தர்மபால கம்மன்பில, பதில் கணக்காய்வாளராக  நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவரது பதவிக்காலம் 2025 டிசம்பர் 05 அன்று
 முடிவடைந்தது. 
 ஜனாதிபதி இந்தப் பதவிக்கு முன்னர் பல பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தாலும், அரசியலமைப்பு சபை அந்தப் பரிந்துரைகளை நிராகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து   இப்போது அந்தப் பதவிக்கான புதிய பரிந்துரைகளை அனுப்பியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு சபை இன்று இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இலங்கையின் சுதந்திர தின ஒத்திகைக்காக மூடப்பட்ட வீதிகள்

நாட்டின்  78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 
 04 -02-2026.ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையில்.02-02-2026. இன்று செவ்வாய்க்கிழமை பின்வரும் வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் 
அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கிய சுதந்திர மாவத்தை, ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து அத்திவார நிறுவனம் நோக்கிய பகுதி, பௌத்தாலோக மாவத்தை டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்கு நுழையும்
 பகுதி, பௌத்தாலோக
 மாவத்தை ஆர்.எப்.பி (R.F.P) சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் பகுதி, விஜேராம மாவத்தை வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்கு நுழையும் பகுதி, மெய்ட்லண்ட் கிரசண்ட் ஆர்.பி. சேனாநாயக்க மாவத்தை சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டம் நோக்கிய பகுதி, சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து 
மெய்ட்லண்ட் கிரசண்ட் நோக்கிய பகுதி, ஹோர்டன் பிளேஸ் மெய்ட்லண்ட் கிரசண்ட் சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டம் நோக்கிய பகுதி ஆகிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


முழுமையான சுதந்திரத்திற்காக இலங்கையர்கள் பாடுபட வேண்டும் - பேராயர்

.இலங்கையர்கள் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட வேண்டும், என்று கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று கூறினார்.  சுதந்திர தினத்திற்கான சிறப்பு செய்தியில் அவர் 
இவ்வாறு கூறியுள்ளார்.
 “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி அவசியம்” என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டின்
 தற்போதைய சூழ்நிலை,
 பொருளாதாரம், அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் இலங்கை அதிகம் சாதிக்கத் தவறிவிட்டதாகவும் என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் பொத்துவில் முதல் மட்டக்களப்பு வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும்

நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. 
 பொத்துவில் முதல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று அதில்
 குறிப்பிடப்பட்டுள்ளது. 
 மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 
அத்துடன் மணிக்கு  25-35 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

மூன்று ஆண்டுகள் பிரான்சில் சிறை - 40,000 யூரோ அபராதம்

மிகவும் கடுமையான விலங்கு பாதுகாப்புச் சட்டங்களில் ஒன்றை ஐரோப்பாவிலேயே பிரான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வளர்ப்புப் பிராணிகளைக் கைவிடுவது 
ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. பிராணிகளைக் கைவிடுவது அவற்றிற்குப் பெரும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது 
என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் சட்டம் 
இயற்றப்பட்டுள்ளது.
விடுமுறை காலங்களில் பிராணிகள் கைவிடப்படுவது அதிகரிப்பதைத் தடுக்கவும், பொறுப்பற்ற உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் €45,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 
விதிக்கப்படும்.
விலங்கு நல அமைப்புகள் இம்முடிவை வரவேற்றுள்ளன, ஏனெனில் கைவிடப்படும் பிராணிகள் பசி, பயம் மற்றும் காயங்களால் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாவதாக அவை 
சுட்டிக்காட்டுகின்றன.
மக்கள் ஒரு பிராணியைத் தத்தெடுக்கும் முன்பே அதன் நீண்டகாலப் பொறுப்பை உணர வேண்டும் என்றும், பிராணிகள் தூக்கியெறியப்படும் பொருட்கள் அல்ல என்றும் இச்சட்டம் 
வலியுறுத்துகிறது.
விலங்கு நலனைப் பாதுகாப்பதில் பிரான்சின் இந்த முன்மாதிரியான நடவடிக்கை, பிற நாடுகளுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

Blogger இயக்குவது.