திங்கள், 9 மார்ச், 2026

மீண்டும் ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகள் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதன் அடிப்படையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் 
நலனிற்கு முன்னுரிமை அளித்து, ரியாத் மற்றும் துபாய்க்கான தமது அன்றாட வானூர்தி சேவைகளை மீள ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு ரியாத்திற்கும், நாளை முதல் துபாயிற்கும் வானூர்தி சேவைகள் இடம்பெறவுள்ளன.
UL265 கொழும்பு – ரியாத் 18:15 மணி
UL266 ரியாத் – கொழும்பு 22:35 மணி
UL231 கொழும்பு – துபாய் 12:40 மணி
UL232 துபாய் – கொழும்பு 17:00 மணி
இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 8 மார்ச், 2026

நாட்டில் மின்வெட்டு ஏற்படாதுஎன எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

நாட்டில் .நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடங்கலுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள்
 கையிருப்பில் உள்ளது.
எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும், பொதுமக்கள் இவ்வாறான தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



குடியிருப்புக்கு நடுவே யாழில் அமைந்துள்ள கோழிப்பண்ணையால் பொதுமக்கள் அவதி

யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் தெற்கு  சத்தியபுரம் பிரதேசத்தின் கறுத்தான் வடலி குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கோழிப்பண்ணையால் அதனைச் சூழவுள்ள பொதுமக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
ஜே – 182 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் ஒருவர் காணியை வாங்கி 2024 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.
குறித்த பண்ணை அமைக்கும் போதே கிராம மக்கள் சந்தேகமடைந்து குறித்த காணி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மேலே சூரிய மின்கல படலம் அமைத்து பெண்களுக்கு சுயதொழில் முயற்சி வாய்ப்பு வழங்கப்போவதாக கூறியிருந்தார். பின் கூறியதற்கு மாறாக கோழிப்பண்ணை
 அமைத்துள்ளார்.
கோழிப்பண்ணை அமைத்த பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றம், ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், இலையான் பெருகுவதால் ஏற்படும் தொற்றுகள் என பெரும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை
 பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் கிராம மக்கள் கிராம சேவையாளர், பிரதேச சபை, பிரதேச செயலகம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம், சுற்றுச் சூழல் அதிகாரசபை 
போன்ற அலுவலகங்களுக்கு சென்று உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
குடியிருப்புக்கு நெருக்கமாக உள்ள பகுதியில் தாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச் சூழல் அதிகார சபையினர் தங்கள் அதிகார வரம்பைக் குறிப்பிட்டு இந்த விடயத்தில் பிரதேச சபையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும், குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் மாறி மாறி ஏனைய அரச அலுவலகங்களை கைகாட்டி விட்டு உரிய சட்ட நடவடிக்கை 
எடுக்காமல் இருப்பதாகவும்,
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஷிடம் பொதுமக்கள் சென்று முறையிட்டு அவர் நேரடியாக வந்து பார்வையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நல்ல காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழ வேண்டிய நாங்கள் தொடர்ந்தும் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை 
தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று பொதுமக்கள் பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் புதிதாக 
பொறுப்பேற்ற பொலிஸ்
 பொறுப்பதிகாரியிடமும் சென்று முறையிட்டுள்ளனர். அவர் அனைத்து தரப்பினரிடமும் ஆராய்ந்து ஓரிரு வாரங்களில் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார்.
குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து 
அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 7 மார்ச், 2026

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் மத்திய வங்கி ஆளுநர் கருத்து

இலங்கை சந்தித்த பொருளாதார சரிவு என்பது தவிர்க்க முடியாதது அல்ல என்றும், சரியான நேரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் இத்தகையதொரு பேரழிவைத் தடுத்திருக்க முடியும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
 தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த வெளிப்படையான மதிப்பீட்டை வழங்கிய ஆளுநர், "இந்தச் சீர்திருத்தத் திட்டத்தை நாம் ஓராண்டுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருந்தால், 
இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்க மாட்டோம்.
அப்படியொரு நெருக்கடி பற்றி எவரும் பேசியிருக்க மாட்டார்கள்," என்று சுட்டிக்காட்டியுள்ளார்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 6 மார்ச், 2026

ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக முப்பது இலட்சம் மோசடி: வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வைத்திய தம்பதியினர் மீது யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வழங்கிய தகவல்களின்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த வைத்திய தம்பதியினர், தனது சகோதரியை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைப்பதாக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபாயைப் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு முகவருடன் அவர்களைத் தொடர்புபடுத்தியுள்ளனர்.
குறித்த முகவர், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கம்போடியா வழியாக ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அங்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், அங்குச் சென்ற பின்னர்
 அப்பெண்ணைத் தவிக்கவிட்டு முகவர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர் கம்போடியாவில் எவ்வித உதவியுமின்றி
 அநாதரவாகக் கைவிடப்பட்டுள்ளார்.அமைச்சின் உதவியை நாடிய உறவினர்கள்:
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்:
கம்போடியாவில் சிக்கியுள்ள தனது சகோதரியை மீட்டுத் தருமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
பண மோசடியில் ஈடுபட்ட வைத்திய தம்பதியினர் மற்றும் முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்காகத் தரகர்களிடம் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், உத்தியோகபூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கர்நாடகாவில் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெடை மாநில முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன்போது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக 
அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும் அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா 
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சாந்திபுரம் பகுதியில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள்,பணத்துடன் நான்கு பெண்கள் கைது

நாட்டில் மன்னார்  காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் 
கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று 
இடம் பெற்றுள்ளமை குறித்து குறித்த வீட்டின் 
உரிமையாளர் நேற்று 
வியாழக்கிழமை (5) மன்னார்  காவல்   நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் போது குறித்த வீட்டில் தாலிக்கொடி,சங்கிலி ,காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும்,4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக  குறிப்பிட்டிருந்தனா்.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார்  காவல்துறையினர் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சி இன் பணிப்புரைக்கமைய  முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார்  காவல்  நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்டுத்தப்பட்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மன்னார் 
காவல்துறையினர் 
  முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர்  மீட்கப்பட்ட நகைகள்,பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.