புதன், 1 ஜூலை, 2026

நாட்டில் பேருந்து கட்டணம் பன்னிரண்டு சதவீதத்தினால் அதிகரிப்பு

நாட்டில்  பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 
 சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான
 கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வேகமாக கனடாவில் பரவி வரும் தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை

. கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய லைம் நோய்(Lyme disease) பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் 
அதிகரித்துள்ளன.
கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை
.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வடக்கில் பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துநர்களுக்கு சீருடை அறிமுகம்

 நாட்டில் வடமாகாணத்தில் சாரதிகள் ,நடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று 
விஜயம் செய்தார். 
அமைச்சரை அதிகார சபையின் தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் வரவேற்றார். வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் உத்தியோகத்தர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடிருந்தார்.
தொடர்ந்து வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநருக்கான சீருடை அறிமுகம் செய்து
 வைக்கப்பட்டது. 
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாரதிகள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு தெரிவிக்கத்தக்க வகையில் தொலைபேசி இலக்கம் பதிக்கப்பட்ட சீருடையானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 30 ஜூன், 2026

தங்கம்,மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் மீண்டும் சரிவு

மீண்டும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்பான முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், 
தங்கம் மற்றும் 
வெள்ளியின் விலை-30-06-2026- இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,965.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
 அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.47 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு, இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் 
தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடையடையக் கூடுமென வர்த்தக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

நாட்டில்  3.074 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்  வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அனுராதப்புர மேல் நீதிமன்றம் 
தீர்ப்பளித்துள்ளது. 
இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.
 இந்த வழக்கு நான்கு வருடங்களுக்கும் மேலாக 
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரால் சந்தேகத்திற்கு
 இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல் - தினசரி பாதிப்பு ஆயிரத்தை தொட்டது

நாட்டில் தற்போது நிலவும் மழைப் பொழிவு காரணமாக இலங்கையில் டெங்கு பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு 
கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. 
 இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 54,000-ஐத் தாண்டியுள்ளது என்றும், இதுவரை மொத்தமாக 54,189 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் NDCU கூறியுள்ளது. 
 தினமும் 950 முதல் 1,000 வரையிலான டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் சபாநாயகர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
 மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,030 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர உள்ளதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு

 நாட்டில்  அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில்  கடந்த ஜூன் 14 ஆம் திகதி  
நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால் பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த
 நிகழ்விற்குப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமை தாங்கியிருந்ததுடன், பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் இதில் 
கலந்துகொண்டிருந்தனர்.
 அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த கின்னஸ் சாதனை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவே பொதுமக்களுக்குக் 
காண்பிக்கப்பட்டது.
எனினும், இந்த நிகழ்வு தொடர்பாகப் பெறப்பட்ட கின்னஸ் சான்றிதழில் இலங்கையின் பெயரோ, இலங்கையின் எந்தவொரு 
அரச நிறுவனத்தின் பெயரோ அல்லது இலங்கையர் ஒருவரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன செயலாளருமான துமிந்த நாகமுவ அம்பலப்படுத்தியுள்ளார். 
மாறாக, இந்த கின்னஸ் சான்றிதழின் உரிமை ஒரு இந்திய நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள அதன் கிளை நிறுவனத்திற்கும்  மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்வில் பங்கேற்ற சுமார் 5,000 மாணவர்களின் குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் முதற்கட்டமாகப் பெருமளவிலான பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து
 தற்போதைய சூழலில், சான்றிதழுக்காக தலா 3,450 ரூபாயும், லோகோ (முத்திரை) மற்றும் இதர தேவைகளுக்காக தலா 2,350 ரூபாயும் பெற்றோர்களிடம் இருந்து மீண்டும் வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றன. 
இறுதியாக, இலங்கை பிள்ளைகளின் உழைப்பும், பெற்றோர்களின் பணமும் ஒரு இந்தியத் தனியார் நிறுவனத்திற்குப் புகழையும் கின்னஸ் சாதனையையும் பெற்றுக்கொடுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 
அநீதிக்குத் தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு
 எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அனைத்து விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.