வியாழன், 28 மே, 2026

நாட்டுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட எழுவர் வந்தடைந்தனர்

இலங்கைக்கு .ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 07 பேர்-27-05-2026- அன்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். 
மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் நிலமைகளின்போது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்தமைக்காக அந்நாட்டின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
23 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
அவர்கள் நாடு திரும்பியதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து இவர்களிடம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இந்திய மாம்பழங்களுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதடை விதித்த ஜப்பான்

ஜப்பான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பதப்படுத்தும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகளை ஜப்பான் தனிமைப்படுத்தல் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதியை ஜப்பான் நிறுத்தி வைத்துள்ளது. 
இந்த நடவடிக்கை, முக்கியமான கோடை மாம்பழப் பருவத்தில் ஏற்றுமதியைப் பாதித்துள்ளதுடன், அல்போன்சோ, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற உயர்தர இந்திய ரகங்களையும் பாதித்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் இது போன்ற முதல் கட்டுப்பாடு இதுவாகும். முன்னதாக, பழ ஈக்கள் குறித்த கவலைகள் காரணமாக ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்திருந்தது. 
இந்தியா தனது பதப்படுத்தும் நெறிமுறைகளை வலுப்படுத்திய பின்னரே, 2006ல் அந்த தடை நீக்கப்பட்டது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கருப்பு நிற பால் தரும் உலகத்தில் உள்ள விலங்கு எது

பலருக்கும் தெரியும். பொதுவாக பெரும்பாலான விலங்குகள் வெள்ளை நிறத்தில் தான் பால் கொடுக்கும். ஆனால் உலகத்தில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்குமாம். இயற்கையில் பல அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த வகையில் உலகத்தில் ஒரு விலங்குகிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் தான் பால் வரும். இதை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். 
கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு பற்றி யாருக்கெல்லாம் தெரியுமா இந்த சுவாரஷ்ய தகவல் பற்றி பதிவில் பார்க்கலாம். 
கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகமாகும் (Black Rhinoceros). இது ஆப்பிரிக்காவில் இருக்கும் அரிதான
 வனவிலங்கு இனம் எனப்படுகின்றது. இது பார்ப்பதற்கு பெரிய உடல் மற்றும் வலிமையான கொம்பை கொண்டிருக்கும். இது ஆப்பிரிக்க கண்டத்தின் சில காட்டு பகுதிகளில் வாழ்கிறது. இந்த விலங்கை வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்பு காரணமாக தற்போது இதன் எண்ணிக்கை 
குறைந்து வருகின்றது. 
இந்த விலங்கின் பால் கருப்பு நிறத்தில் இருக்குமாம். ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த பால் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்காது எனப்படுகின்றது. இந்த பாலை சாதாரண பாலுடன் ஒப்பிடும்போது
, அதன் நிறம் சற்று மங்கலாகவும் அல்லது சாம்பல் நிறமாகவும் இருக்குமாம். இதன் காரணமாக தான் இது "கருப்பு பால்" என்று அழைக்கப்படுகிறது. பாலின் இந்த பாலின் நிறத்திற்கு காரணம் கருப்பு காண்டாமிருகப் பாலில் கொழுப்பு மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் என்பதனால் ஆகும்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 27 மே, 2026

விவாகரத்தானவர்கள் மற்றும் விவாகரத்தாக போகின்றவர்கள் சுவிஸ்சில் கட்டாயம் கவனிக்க வேண்டியவை

தற்போது சுவிட்சர்லாந்தில் விவாகரத்து சட்டம் பெரும்பாலும் Swiss Civil Code (ZGB/CC) அடிப்படையில் செயல்படுகிறது. 
முக்கிய அம்சங்கள் இதோ:
1. இருவரும் சம்மதித்து விவாகரத்து (Mutual Consent Divorce) 
கணவன்-மனைவி இருவரும் விவாகரத்துக்கும் அதன் விளைவுகளுக்கும் (சொத்து, குழந்தைகள், maintenance போன்றவை) ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் கூட்டு மனு தாக்கல் செய்யலாம். 
இது சாதாரணமாகவே வேகமானதும் குறைந்த செலவுடையதுமாக இருக்கும். 
பொதுவாக தீர்மானிக்க வேண்டியவை:
குழந்தை பாதுகாப்பு (custody)
child support
spouse maintenance/alimony 
pension (2nd pillar) பகிர்வு
சொத்து மற்றும் கடன் பகிர்வு
2. ஒருதலைப்பட்ச விவாகரத்து (Unilateral Divorce)
ஒருவர் மட்டும் விவாகரத்து விரும்பினாலும்:
சாதாரணமாக 2 வருட பிரிவு வாழ்வு (separation) கடந்த பிறகு தனியாக விவாகரத்து கோரலாம்.
சில கடுமையான சூழ்நிலைகளில் (violence, severe abuse) உடனடியான divorce petition அனுமதிக்கப்படலாம்.
3. குழந்தை பாதுகாப்பு (Child Custody)
2014 முதல், சுவிஸில் joint parental authority தான் default rule. அதாவது:
இரு பெற்றோரும் குழந்தை தொடர்பான முக்கிய முடிவுகளில் பங்கு பெறுவார்கள். 
நீதிமன்றம் “child’s best interest” அடிப்படையில் முடிவு எடுக்கும்.
4. Maintenance / Alimony
குழந்தைகளுக்கான maintenance கட்டாயம்.
spouse maintenance (alimony) சில சூழ்நிலைகளில் வழங்கப்படும்.
குறிப்பாக:
ஒருவர் நீண்ட காலம் வேலை செய்யாமல் குடும்பத்தை பார்த்திருந்தால்.
வருமானத்தில் பெரிய வித்தியாசம் இருந்தால்.
குழந்தை பராமரிப்பு காரணமாக career பாதிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் இருவரின் வருமானம், வாழ்க்கைமுறை, திருமண காலம் ஆகியவற்றைப் பார்க்கும்.
5. சொத்து பகிர்வு (Property Division)
சுவிஸில் default marital regime:
திருமணத்திற்கு முன் இருந்த சொத்து - தனிப்பட்டது.
inheritance/gifts - பொதுவாக தனிப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு சேர்த்த செல்வம் - பொதுவாக பகிரப்படும்.
6. Pension (2nd Pillar) பகிர்வு
திருமண காலத்தில் சேர்க்கப்பட்ட pension savings பொதுவாக இருவருக்கும் பகிரப்படும். இது Swiss divorce law-இல் மிகவும் முக்கியமான பகுதி. 
7. Separation vs Divorce
சுவிஸில் “legal separation” மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் (Measures Protecting the Marital Union / MPUC) இருக்கின்றன:
உடனே divorce செய்யாமல் பிரிந்து வாழலாம்.
maintenance, குழந்தை வசிப்பு, செலவுகள் போன்றவற்றை court தற்காலிகமாக ஒழுங்குபடுத்தலாம்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி முடங்கிய மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

நாட்டில்  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு (RMV) கடந்த இரண்டு மாதங்களாக புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாததன் காரணமாக, திணைக்களத்தின் அன்றாட நிர்வாகப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளதாக உள்ளகத் தரப்புகள் 
தெரிவித்துள்ளன.
வாகன முறைகேடு மற்றும் சட்டவிரோத வாகனப் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கடந்த மார்ச் மாத இறுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் 
வைக்கப்பட்டார். 
இதனைத் தொடர்ந்து, திணைக்களத்தின் கொள்கை ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதில் பெரும் மந்தகதி ஏற்பட்டுள்ளது. நிர்வாக முடக்கம் காரணமாக, சுமார் 10 இலட்சம் வாகன இலக்கத் தகடுகளும், 3 இலட்சம் ஓட்டுநர் உரிமங்களும் விநியோகிக்கப்படாமல் கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளன.
இதனால் புதிய வாகனங்களை வாங்கிய உரிமையாளர்களும், ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பித்த பொதுமக்களும் வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தத் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து 
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்; "முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சு மட்டத்தில் கொள்கை ரீதியான முடிவு 
விரைவில் எடுக்கப்படும். 
தற்போதைய தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் மூலம் மாத்திரம் விண்ணப்பங்களை அனுப்பும் 14 'ஓப்லைன்' (Offline) மாவட்ட அலுவலகங்களை, விரைவாக 'ஒன்லைன்' (Online) மயமாக்கும் பணிகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
" மேலும், நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இராணுவம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிகள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் பங்களிப்புடன் 
தற்போது 50% இற்கும் அதிகமான நிலுவை அட்டைகள் அச்சிடப்பட்டு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மேலும் ஒரு மில்லியன் அட்டைகள் அச்சிடப்பட்டு கிடைக்கவுள்ளதாகவும்
 அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய விநியோகஸ்தர் ஒருவரின் மூலம் மே 10 ஆம் திகதி முதல் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அனைத்து இலக்கத் தகடுகளும் விரைவில் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என திணைக்களம் உறுதியளித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 26 மே, 2026

இலங்கை வலி. வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்

நாட்டில்  யாழ், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர். 
குறித்த குழுவினருடன் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை நேரில் 
பார்வையிட்டனர். 
"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
அதன் ஒரு கட்டமாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் , பலாலி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் , உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளுக்குள் சென்று காணி விடுவிப்பு தொடர்பிலான சாத்தியங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தனர். 
அதனை தொடர்ந்து பலாலி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் குறித்த குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இத்தாலியில் அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து நோக்கி சென்ற ஈஸிஜெட் விமானம்

விமனந்தில் ஒரு பயணியின் பையில் பவர் பேங்க் சார்ஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து நோக்கிச் சென்ற ஈஸிஜெட் விமானம் ஒன்று ரோம் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகத் 
தெரியவந்துள்ளது.
எகிப்தின் ஹுர்கடாவிலிருந்து லண்டன் லூட்டன் நோக்கிச் சென்ற EZY2618 விமானம், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" இத்தாலி தலைநகரில் தரையிறங்கியது.
விமானத்தின் பொருட்கள் அறையில் கையடக்க சார்ஜர் இருப்பதை ஒரு பயணி விமானப் பணியாளர்களிடம் தெரிவித்ததை அடுத்து, "பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க" விமானத்தை திருப்பி விட கேப்டன் முடிவு செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பவர் பேங்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறியப்படுகிறது, ஆனால் விமானப் பயணத்தின் போது பொருட்கள் அறையில் பவர் பேங்குகளை சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என விதிமுறைகள் கூறுகின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.