திங்கள், 13 ஜூலை, 2026

நாட்டில்ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

.நாட்டில்  வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
 அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை,
 எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 இந்தநிலையில், இன்றையதினம் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 அதற்கமைய, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
 அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 அதேநேரம், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம்: வியாபாரிகளுக்குக் கடைகள் பகிர்வு

நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் வினைத்திறனாக இயங்காத நிலை காணப்பட்ட போது இந்த அரசாங்கம் அட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மத்திய 
நிலையங்களை வினைத்திறனாக இயங்க
 வைக்கும் நடவடிக்கையின் செயற்பாடாகவே கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் 34வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்பட்டன. 
குறித்த கடைகளை கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க
 வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன் அரச உத்தியோகத்தர்கள் ,வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் டெங்கு பரவல் மாணவர்கள் சீருடையோடு சேர்த்து பாதுகாப்பு உடையை அணிய அனுமதி

நாட்டில்  டெங்கு நுளம்புகள் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தி ல் கொண்டு 
நுளம்புகள் கடிக்காத வண்ணம் பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை 
அணிய அனுமதிக்க வேண்டும் என கல்வி அமைச்சு 
அறிவுறுத்தியுள்ளது.
 இது தொடர்பில் கடிதம் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவும் அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த உத்தரவு
 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 பாடசாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளின் (mosquito repellents) பயன்பாடு குறித்து மாணவர்களுக்குக் கல்வி புகட்டவும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 12 ஜூலை, 2026

நாட்டில் பேராதனை வைத்திய நிபுணர்கள் அறுவைச் சிகிச்சையில் சாதனை படைத்தனர்

இலங்கை மருத்துவத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, இடுப்புப் பகுதி இணைந்தவாறு ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை நீண்ட சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் பேராதனை வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகப் பிரித்துச்சாதனை 
படைத்துள்ளனர்.
இலங்கை மருத்துவத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, இடுப்புப் பகுதி இணைந்தவாறு ஒட்டிப்பிறந்த இரட்டைச் சிறுமிகளை நீண்ட சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் பேராதனை வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகப் பிரித்துச் சாதனை படைத்துள்ளனர்.
பேராதனை போதனா வைத்திய சாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியன ஒன்றிணைந்து இச்சாதனையை 
நிகழ்த்தியுள்ளன.
மாவனெல்லை, அரநாயக்கவைச் சேர்ந்த தம்பதியினருக்கு, கடந்த 2021ம் ஆண்டு இடுப்புப் பகுதி ஒட்டியவாறு லினுலி தருல்யா, லிதுலி மனுல்யா ஆகிய இரட்டைச் சிறுமிகள் பிறந்தனர்.
இவர்களுக்கு மூளை, இதயம், நுரை யீரல், கல்லீரல் ஆகியன தனித்தனியாக ஆரோக்கியமாக இருந்தபோதிலும், இரண்டு சிறுநீரகங்கள் மாத்திரமே ஒரு குழந்தையின் உடலில் அமைந்திருந்தன. 
அத்துடன் இடுப்பு வளைய எலும்புகள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் 90 பாகை கோணத்தில் குறுக்கு திசையில் மிகவும் சிக்கலாகப் பிணைந்திருந்தன.
உலகளவில் இவ்வாறான 1000 சம்பவங்களில் 20 பிள்ளைகளே
 பிரிக் கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது இரண்டாவது 
தடவையாகும்.
சுமார் 5 வருட கால தொடர் ஆய்வுகளின் பின்னர், கடந்த ஜூன் 10 ஆம் திகதி சிறுவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் மாதுல ஹெட்டி ஆராச்சியின் தலை மையில் 15 பேரடங்கிய நிபுணத்துவ மருத்துவக் குழுவினர் இப்பாரிய சத்திர சிகிச்சையை ஆரம்பித்தனர்.
முதலில் கடுமையான இரத்தப் போக்கு மற்றும் நரம்புப் பாதிப்புகள் ஏற்படாதவாறு இரத்த நாளங்களும் நரம்புகளும் பிரிக்கப்பட்டன. பின்னர் கால்களுக்கான இரத்த ஓட்டத்தைப் பேணியவாறு எலும்புகள் வெற்றி கரமாகப் பிரிக்கப்பட்டன.
14 மணித் தியால பிரதான அறுவைச் சிகிச்சை யைத் தொடர்ந்து, பிரிக்கப்பட்ட இடங்களை மூடுவதற்காக மேலும் 10 மணித் தியாலங்கள் சத்திரசிகிச்சை நீடித்தது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் பலாலியில் நான்காஆவது வாரமாக தொடரும் போராட்டம்

யாழ் வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.
போராட்ட இடத்தில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போதும் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்திய நிலையில், மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு

இலங்கையில்  அவசர கடன் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) பொதுமக்களை 
எச்சரித்துள்ளது.
அத்தகைய செய்திகளில் பகிரப்படும் இணைப்புகளை (Links) திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது என்றும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால்,
 உடனடியாக 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிக வட்டியில்லா அல்லது உடனடி கடன் வழங்கப்படும் என்ற 
பெயரில் பலர் ஏமாற்றப்படுவதாகவும், கடன் நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்களை மிரட்டுதல், அவமானப்படுத்துதல் போன்ற செயல்களிலும்
 சில மோசடி குழுக்கள் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எளிதில் கடன் கிடைக்கும் என்ற 
விளம்பரங்களை 
நம்பாமல், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான நிறுவனங்கள் மூலமே நிதிச் சேவைகளைப் பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 11 ஜூலை, 2026

பிரித்தானியாவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட பேயக்ஸ் திரைச்சீலை

இங்கிலாந்திற்கு சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பேயக்ஸ் திரைச்சீலை, முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து ஒரு காவல்துறைப் பாதுகாவலரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட அது, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சரக்கு ஏற்றும் தளத்திற்குள் 
கொண்டுவரப்பட்டது. 
குறித்த திரைச்சீலை செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 மீட்டர் நீளமுள்ள 11 ஆம் நூற்றாண்டின் இந்த எம்பிராய்டரி, 58 காட்சிகளில், 1066 ஆம் ஆண்டில் நடந்த ஹேஸ்டிங்ஸ் போர் மற்றும் இங்கிலாந்தின் நார்மன் படையெடுப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளைச்
 சித்தரிக்கிறது.
அலுமினியச் சட்டகத்தில் அடைக்கப்பட்ட, கனமான தோற்றமுடைய அந்தப் பெட்டி, இங்கிலாந்துக்கான பிரெஞ்சுத் தூதர் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் லாரியிலிருந்து கீழே இறக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.