வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

நாட்டில்  லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம், இன்று (03) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு
12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4,465 ரூபாய் 
05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1,792 ரூபாய் 
2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 835 ரூபாய்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு
12.5 கிலோ சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4965 ரூபாய்
5 கிலோகிராம் சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1988 ரூபாய்
சர்வதேச எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, அதன் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக, தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


உயிரிழந்த தமிழர்களின் நினைவாக சுவிற்சர்லாந்தில் வீதி திறந்து வைப்பு

சுவிசில் .37 வருடத்திற்கு முன் தீ தாக்குதலில் உயிரிழந்த 04 தமிழர்கள் நினைவாக கூர் ( Chur )மாநிலத்தில் வீதி ஒன்று இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பேர்ன் சிவன் கோவில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா தமிழ்ப்பூசை முறைப்படி வழிபாடுகளை மேற்கொள்ள Chur நகரத்தின் முதல்வர் ஹான்ஸ்மார்டின்மியூலி நிகழ்வில் கலந்து கொண்டு உத்தியாக பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்தப்பகுதியில் ​1989ம் ஆண்டு ஜூலை 2ம் திகதி தமிழர் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல் ஒன்றில் நான்கு தமிழ் அகதிகள் உயிரிழந்தனர் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நினைவூட்டல் மற்றும் சமூக நீதிக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நாட்டு நகராட்சி சார்பில் ஒரு குறிப்பிட்ட பாதைக்கு மேற்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.​
இந்த தீ தாக்குதலில் கந்தையா பாலமுரளி, கந்தையா பாலமுகுந்தன், சத்திவேல் தம்பிராஜா, தேவராஜா சின்னத்தம்பி ஆகியோர் உயிரிழந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சி ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுள்

 

நாட்டில்  கிளிநொச்சி ஏ9 வீதியில் ஏற்படும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக, பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை அடிப்படையாகக் கொண்டு கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தடை விதிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் பகுதி பகுதி: இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையான ஏ9 வீதிப் பகுதி.
நேரங்கள்:
காலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை
பகல் 01:00 மணி முதல் 02:00 மணி வரை
ரிப்பர் (Tipper) வாகனங்கள் உட்பட அனைத்துக் கனரக வாகனங்கள். கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இன்றைய தினம் (03) கிளிநொச்சி நகர்பகுதியில் காவல்துறையினரால் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிராந்தியத்திற்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் புத்திக குணசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் அஞ்சல் ஓட்டத்தில் கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனை

நாட்டில்  14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 . 50 மீற்றர் அஞ்சல் ஓட்டம்.வெற்றி பெற்ற பாடசாலை: கொழும்பு மகளிர் கல்லூரி (Ladies' College, Colombo) - முதலிடம்.எடுத்துக்கொண்ட நேரம்: 26.88 வினாடிகள்
 (புதிய சாதனை)., 
கடந்த 2024 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்யாராமய பாடசாலை நிலைநாட்டியிருந்த 27.2 வினாடிகள் என்ற சாதனையே, 
தற்போது கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகளால்
 முறியடிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாக, கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ் முழுமையான அனுசரணையுடன் 
நடைபெறுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இளைஞர் கைது

நாட்டில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் காரில் கஞ்சா போதைப் பொருளை கடத்திய நபர் ஒருவர் கைது
 செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய நபராவார். 
வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில்  78 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 
 நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீடுகள் அறிமுகம்

நாட்டில்   சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீடுகளைக் குறிப்பிடுவது தொடர்பான விதிமுறைகளைத் திருத்தி
, ஒரு விசேஷ வர்த்தமானி அறிவிப்பு இன்று 
வெளியிடப்பட்டது. 
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
1980-ஆம் ஆண்டின் 26-ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32-ஆம் பிரிவின் கீழ் இந்தத் திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
புதிய திருத்தங்களின்படி, சர்க்கரை கலந்த திரவ உணவுகளின் பொட்டலங்களில் காட்டப்பட வேண்டிய சிவப்பு,
 ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரவின்படி, 100 மில்லிலிட்டருக்கு 8.0 கிராமுக்கு மேல் சர்க்கரை உள்ள பானங்களுக்கு சிவப்பு நிறமும், 2.5 முதல் 8.0 கிராம் வரை 
சர்க்கரை உள்ள பானங்களுக்கு ஆரஞ்சு நிறமும், 2.5 கிராமுக்குக் குறைவாக 
சர்க்கரை உள்ள பானங்களுக்குப் பச்சை நிறமும் பயன்படுத்தப்பட வேண்டும்.
 கூடுதலாக, கண்ணாடிக் குப்பிகளில் இடம் குறைவாக உள்ள சமயங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு மாற்றுச் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 1 ஜூலை, 2026

நாட்டில் பேருந்து கட்டணம் பன்னிரண்டு சதவீதத்தினால் அதிகரிப்பு

நாட்டில்  பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 
 சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான
 கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.