புதன், 22 ஏப்ரல், 2026

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐம்பது வெளிநாட்டவர்கள் கைது

இலங்கைக்கு . வியாபார விசா மூலம்  வருகை தந்து, விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (21) கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், 2 மலேசிய நாட்டவர்களும், ஒரு இந்திய நாட்டவரும் அடங்குகின்றனர். இவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது
இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு
 அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் என்றும், இது நோயாளிகள்,
 மருத்துவமனைகள் மற்றும் முழு சுகாதாரக் கட்டமைப்பையும் கடுமையான 
அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உலகளாவிய விநியோகச் சங்கிலி 
செலவுகள், செலாவணி விகித அழுத்தங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தாமதங்கள் ஆகியவை மருந்துகளின் தடையற்ற ஓட்டத்தைப்
 பராமரிப்பதில் பெரும் சவால்களை 
ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, எரிபொருள் விலைகள் சுமார் 38 வீதத்தாலும், சரக்குக் கட்டணங்கள் 40 வீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளன. அத்துடன், மருந்து மூலப்பொருட்களின் உலகளாவிய 
விலைகள் சில
 சந்தர்ப்பங்களில் 70 வீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை இறக்குமதி செலவை கணிசமாக உயர்த்தியுள்ளது.
தற்போதைய இறக்குமதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் மற்றும் விலை மீளாய்வு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் இந்த அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதாக SLCPI குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், முறையான விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகும் போது, அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத வழிகள் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது 
தரமற்ற அல்லது
 போலியான மருந்துகள் பொதுமக்களை அடையும் அபாயத்தை அதிகரிப்பதுடன், நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என சம்மேளனம் எச்சரித்துள்ளது.
எனவே, இறக்குமதி உரிமச் செயலாக்கத்தில் உள்ள தாமதங்களை நிவர்த்தி செய்து, மருந்து விநியோகச் சங்கிலியை ஸ்திரப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மேளனம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
விநியோகச் சங்கிலியில் இன்றைய அழுத்தம் நாளைய தேசிய மருந்துப் பற்றாக்குறையாக மாறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இலங்கை மருந்துச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

லுஃப்தான்சா விமான பயணங்களை எரிபொருள் தட்டுப்பாடால் ரத்து செய்துள்ளது.

ஜெட் எரிபொருளின் அதிகரித்து வரும் விலையைச் சமாளிக்கும் பொருட்டு, லுஃப்தான்சா குழுமம் சுமார் 20000 பயணங்களை 
இரத்து செய்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லுஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன் இயக்கும் குறுகிய தூர விமானப் பயணங்களே முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக 27 விமானங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. மேற்படி விமான இரத்துக்கள் மே மாதத்தின் இறுதிவரை தொடரும் என்றும், இது தொடர்பில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 21 ஏப்ரல், 2026

ஈரான் வான் வெளியில் வானூர்தி மீண்டும் பறக்கத் தயார் போக்குவரத்து வழமைக்குத் திரும்புகிறது

நடந்த போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி
 சேவைகளை 22-04-2026. நாளை  முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெஹ்ரான் மற்றும் மஷாத் (Tehran-Mashhad) ஆகிய நகரங்களுக்கு இடையிலான வானூர்தி சேவையே முதலில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அதே நாளிலேயே அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த வானூர்தி சேவைகள் கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்தன

நாட்டில்  2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பிரசித்திபெற்ற கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் திருக்குமரன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன் ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான இந்தப் பணியை 
 இந்த இணையமும் வாழ்த்துகின்றன . பரிசில்கள் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








 

இன்று உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை: தீவிரமடையும் எரிசக்தி தட்டுப்பாடு

தற்போது  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, உலகம் தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை தற்போது எதிர்நோக்கியுள்ளதாக 
சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) உத்தியோகபூர்வமாக 
அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி 
வெளியிட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Fatih Birol கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியானது 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சிகளை விடவும் மிகக் கடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நாளைக்கு சுமார் 13 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் சந்தையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளின் கூட்டுப் பாதிப்பை விடவும் அதிகமானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை முற்றாகச் சிதைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இன்று முதல் வழமை போல் இயங்கும்

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் சீர்செய்யப்பட்டுள்ளதையடுத்து,.20-04-2026. இன்று  முதல் அடையாள அட்டை விநியோக சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதன்படி, ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு பிரிவுகளின் ஊடாகவும் பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அடையாள அட்டை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்படுத்தல்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால்.20-04-2026., இன்று முதல் பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் 
பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னதாக, கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒரு நாள் சேவை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சாதாரண சேவைகளும் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.