வெள்ளி, 6 மார்ச், 2026

ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக முப்பது இலட்சம் மோசடி: வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வைத்திய தம்பதியினர் மீது யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வழங்கிய தகவல்களின்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த வைத்திய தம்பதியினர், தனது சகோதரியை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைப்பதாக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபாயைப் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு முகவருடன் அவர்களைத் தொடர்புபடுத்தியுள்ளனர்.
குறித்த முகவர், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கம்போடியா வழியாக ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அங்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், அங்குச் சென்ற பின்னர்
 அப்பெண்ணைத் தவிக்கவிட்டு முகவர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர் கம்போடியாவில் எவ்வித உதவியுமின்றி
 அநாதரவாகக் கைவிடப்பட்டுள்ளார்.அமைச்சின் உதவியை நாடிய உறவினர்கள்:
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்:
கம்போடியாவில் சிக்கியுள்ள தனது சகோதரியை மீட்டுத் தருமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
பண மோசடியில் ஈடுபட்ட வைத்திய தம்பதியினர் மற்றும் முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்காகத் தரகர்களிடம் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், உத்தியோகபூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கர்நாடகாவில் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெடை மாநில முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன்போது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக 
அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும் அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா 
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சாந்திபுரம் பகுதியில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள்,பணத்துடன் நான்கு பெண்கள் கைது

நாட்டில் மன்னார்  காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் 
கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று 
இடம் பெற்றுள்ளமை குறித்து குறித்த வீட்டின் 
உரிமையாளர் நேற்று 
வியாழக்கிழமை (5) மன்னார்  காவல்   நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் போது குறித்த வீட்டில் தாலிக்கொடி,சங்கிலி ,காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும்,4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக  குறிப்பிட்டிருந்தனா்.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார்  காவல்துறையினர் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சி இன் பணிப்புரைக்கமைய  முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார்  காவல்  நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்டுத்தப்பட்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மன்னார் 
காவல்துறையினர் 
  முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர்  மீட்கப்பட்ட நகைகள்,பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 4 மார்ச், 2026

நான்கு நாட்களில் யாழில் 7.5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகம்:

கடந்த நான்கு நாட்களில் யாழில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை
 பெற்று சென்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முனபாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு 
செய்யப்படுவதனால் , 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீட்டர் பெட்ரோல்
 கொலன்னவளையில்
 இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் , இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் புல்மோட்டை நகரில் சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது.

நாட்டில்  புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
03-03-2026.அன்று இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
இதன்போது பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அர்பத் நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். 
சந்தேகநபர்.04-03-2026. இன்று குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 3 மார்ச், 2026

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பயணிகள்மத்திய கிழக்கில் சிக்கித் தவிப்பு

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது மத்திய கிழக்கில் சிக்கித் தவிப்பதாக வெளியுறவு அமைச்சு
 தெரிவித்துள்ளது.
பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளதால், சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ தீர்வு இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டவுடன் சுவிஸ் பயணிகள் வணிக விமானங்கள் மூலம் திரும்ப முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று உயர் தூதரக அதிகாரி மரியன்னே ஜென்னி 
குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுமார் 4,000 பேர், ஆதரவு தேவைப்படும் பயணிகளைக் கண்காணிக்கும் அமைச்சகத்தின் பயண நிர்வாக செயலியில், பிராந்தியத்தில் சிக்கித் தவிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து பயணிக்கவிருந்த விமான சேவைகள் இன்றும் இரத்து

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள்.03-03-2026. இன்றைய தினமும்.இரத்து செய்யப்பட்டுள்ளன. 
அதன்படி, நாட்டிலிருந்து வெளியேறவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 
இதேவேளை.03-03-2026., நாளைதினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 
மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் 
தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று 
அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும், இன்று காலை சில விமானப் பயணங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.