புதன், 11 மார்ச், 2026

யாழ் போதனா இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவிப்பு

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். 
அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள
 அறிக்கையில், 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் 
இருக்கின்றோம்.  
இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு 
அதிகரித்து செல்கின்றது, இரத்த 
வங்கியில் நேரடியாக 
வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற 
கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது. 
அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம். தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால்
 ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 
எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், 
பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் 
தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு 
கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். 
அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை  சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு
 நிவர்த்தி செய்யலாம். 
ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது 
உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதாகும் 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



எலோன் மஸ்க் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ ஆவதற்கு வாய்ப்புள்ளதாகக் கணிப்பு

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க், மனித வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (ஒரு லட்சம் கோடி டாலர் அதிபதி) ஆவதற்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 839 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் இவரது சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் பங்குகள் அசுர வளர்ச்சி கண்டதே இதற்கு 
முக்கிய காரணமாகும்.
800 பில்லியன் டாலர் எல்லையைக் கடந்த முதல் நபர் என்ற பெருமையையும் மஸ்க் பெற்றுள்ளார். 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததால், டெஸ்லா பங்குகள்
 சரிவைச் சந்தித்தன.
எனினும், ஆண்டின் பிற்பகுதியில் மஸ்க் தனது அரசியல் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு பங்குகள் மீண்டும் உயர்ந்தன. மஸ்க் இலக்குகளை எட்டும் பட்சத்தில் அவருக்கு 1 டிரில்லியன் டாலர் வரையிலான ஊதியத் தொகுப்பை வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல் 
அளித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் இருக்க அவருக்கு அடுத்தபடியாக தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மற்ற
 பிரபலங்கள் உள்ளனர்:
1. எலோன் மஸ்க்: 839 பில்லியன் டொலர்
2. லேரி பேஜ் (கூகுள்): 257 பில்லியன் டொலர்
3. செர்ஜி பிரின் (கூகுள்): 237 பில்லியன் டொலர்
4. ஜெஃப் பெசோஸ் (அமேசான்): 224 பில்லியன் டொலர்
5. மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா): 222 பில்லியன் டொலர்
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

துபாயில் விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணி

மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், தாக்குதல் தொடர்பிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் 
எச்சரித்துள்ளார்கள்.
இந்நிலையில், எச்சரிக்கையை மீறிய பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். 
லண்டனைச் சேர்ந்த அந்த 60 வயது நபர் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், ஈரானிலிருந்து வீசப்படும் ஏவுகணைகளை வீடியோ எடுத்துள்ளார். 
அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் அல்லது அவருக்கு 58,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 10 மார்ச், 2026

கிளிநொச்சி வைத்தியசாலை கதவுகள் இல்லாத மலசல கூடங்கள்

  நாட்டில்  கிளிநொச்சி வைத்தியசாலையின் 2ம் நோயாளர் விடுதி மற்றும் OPD யில் உள்ள பெண்கள் மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டும் எனில் மறைப்புக்களை நோயாளர்களே எடுத்துச் செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் விசனம் வெளிவிடுகின்றனர்.
கதவுகள் இல்லாமல் காணப்படும் குறித்த மலசல கூடங்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
போதிய சுகாதார வசதிகளும் இல்லாமல் காணப்படும் குறித்த வைத்தியசாலை மல சல கூடங்களை பயன்படுத்தும் மக்களும், நாட்டின் வரிச்சுமையை சுமக்கின்றார்கள் என்று உரிய அதிகாரிகளும், அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



மீண்டும் ஆரம்பமாகும் வடகொரியா மற்றும் சீனா இடையிலான ரயில் சேவை

மீண்டும் ஆறு வருடங்களுக்கு பிறகு  வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில், இந்த வாரம் முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா 
தெரிவித்துள்ளது. 
இந்த ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும். தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில்
 இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 9 மார்ச், 2026

நாட்டில் எரிபொருள் விலைகளை உயர்த்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில்.09-03-2026. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக
 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(சிபெட்கோ) அறிவித்துள்ளது.
அந்தவகையில், திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு:
ஆட்டோ டீசல் - ரூ. 303 (22 ரூபாய்
 அதிகரித்துள்ளது)
சூப்பர் டீசல் - ரூ. 353 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
பெட்ரோல் 92 ஆக்டேன் - ரூ. 317 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 365 (25 ரூபாய் அதிகரித்துள்ளது)
மண்ணெண்ணெய் - ரூ. 195 (13 ரூபாய் அதிகரித்துள்ளது)
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தமிழர் காணிகளில் கொக்குத்தொடுவாயில் சிங்கள வர்த்தகர் அத்துமீறல்

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 08.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டமானது 
இன்று ஒன்பது 
ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை 
முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும்
இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது 
பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு
 கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எங்கே எங்கே உறவுகள் எங்கே , பழைய சட்டமும் வேண்டாம் புதியசட்டமும் வேண்டாம் , அழிக்காதே அழிக்காதே தமிழரின் இன அழிப்பின் அடையாளமான வட்டுவாகல் பாலத்தை அழிக்காதே, வேண்டும்
 வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரத்தில் இராணுவத்திடம் உறவுகளை கையளித்த இடம் வரை சென்று நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.