புதன், 6 மே, 2026

மீண்டும் சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் உயர்ந்த தங்கத்தின் விலை

மீண்டும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 
 கொழும்பு ஹெட்டிவீதி  தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8 மணியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை   7,000  ரூபாயால் உயர்ந்துள்ளது.
 அதன்படி,   22 காரட் தங்கத்தின் விலை 363,400 ரூபாவாகுவும்,  24 காரட் தங்கத்தின் விலை  395,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட வீதி புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 குறித்த கலந்துரையாடலில் I ROAD பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி புனரமைப்பு பணிகள்  கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நலிவு காரணமாக தடைப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நாட்டில் இன்றைய வானிலை பல பகுதிகளிலும் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

இலங்கையில்  பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்கு மேல் கடுமையான மழை பொழிவு பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 
 மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும். 
 இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் ஹொரணையில் பரபரப்பு சம்பவம் நான்கு பெண்கள் கைது

நாட்டில்  ஹொரண மற்றும் கோனப்பொல பகுதிகளைச் சேர்ந்த 26–29 வயதுடைய நான்கு பெண்கள், அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, ஹொரண பெல்லபிட்டிய பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு குளிக்கச் சென்ற இவர்கள், அங்கு மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் போதை நிலையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவர்களை நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அவர்கள் மது போதையில் இருந்ததாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று 
வருகின்றன.
 சம்பவம் தொடர்பான தகவல்கள் பொலிஸ் அறிக்கைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றன; விசாரணையின் பின்னரே முழு உண்மை உறுதியாகும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 4 மே, 2026

காணாமல் போன முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் .முல்லைத்தீவு -கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து
 இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர். 
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இரண்டு மீனவர்களும் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி விகாரை வீதியை விடுவிக்கிறோம் என இனவாதிகளுக்கு தீனி போட முயற்சி

யாழ் .தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்பதாகக் கூறி சிலர் இனவாதிகளுக்கு தீனி போடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காணி அளவீடு 
நடைபெறவில்லை.
மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து 
வருகின்றோம். இந்த விகாரையானது, எமது ஆட்சிகாலத்தில் கட்டபட்ட ஒன்றல்ல.
 காணிகளை மீள கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். எமது அரசாங்கத்தில் காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை.
காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை. எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.
பவானி வீதியை மிக துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம். அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் என குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கும் போது அதனை குழப்புகின்றனர்.
விகாரை விடயத்தில், பலாலி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 3 மே, 2026

நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் .2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, எக்ஸ்பிரஸ் நுழைவு, மாகாண நாமினி திட்டங்கள் (PNPs) மற்றும் குடும்ப அனுசரணை திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் திட்டங்களிலும் கனடாவின் நிரந்தர குடியிருப்பு (PR) செயலாக்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பிரிவுகளில், தோராயமாக 4 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. குடும்ப அனுசரணை கட்டணம் மட்டும், அதிகப்படியாக 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
நீங்கள் குடியிருப்பு அனுமதிக்கு ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும், The Right of Permanent Residence Fee (RPRF) கட்டணத்தை பிறகு செலுத்தலாம் என திட்டமிருப்பீர்கள் என்றால் இப்போது நீங்கள் புதிய கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.
நீங்கள் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்பே இணையவழியில் விண்ணப்பமும் செய்து, உங்கள் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதை ஏற்றுக்கொண்டு விட்டது என்றால், நீங்கள் கூடுதலாக எதுவும் செய்யத்தேவையில்லை.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.