வெள்ளி, 20 மார்ச், 2026

ஐரோப்பாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் எரிவாயு விலை முப்பது சதவீதத்திற்கும் மேல் உயரக்கூடும்

.தற்போது  ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பிய எரிவாயு விலைகள் கடுமையாக உயரக்கூடும் என ப்ளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் எச்சரித்துள்ளது.
கத்தாரின் ராஸ் லஃபான் வளாகத்தில் நடைபெறும் தாக்குதல்களால் உலகளாவிய LNG விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் தடைபடும் அபாயம் இருப்பதால், ஒரு மெகாவாட்-மணிக்கு விலை 
சுமார் 66 யூரோக்களில் ($75) இருந்து 90 யூரோக்களாக ($103) உயரக்கூடும்.
பதற்றம் விரைவில் தணிந்தாலும், நீண்டகால 
மின்வெட்டு ஏற்படக்கூடும் என்றும், இது விநியோகத்தை இறுக்கி, ஆசிய வாங்குபவர்களுடனான போட்டியை அதிகரிக்கும் என்றும் முன்னறிவிப்பு 
சுட்டிக்காட்டுகிறது.
ஐரோப்பா முழுவதும் சேமிப்பு அளவு குறைவாக இருப்பது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது வரும் மாதங்களில் எரிசக்தியின் விலை கட்டுப்படியாகுமா என்பது குறித்த கவலைகளையும், 
எரிசக்திப் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மனித உடலின் உள் புதைபடிவ எரிபொருள் எரிப்பு விளைவு: வேதியியல் மாற்றம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை (CO2) அதிகளவில் கலக்கச் செய்வது, பூமியை வெப்பமாக்குவதுடன் நில்லாது, நமது உடலின் உட்புற வேதியியல் கட்டமைப்பையே (Internal Blood Chemistry) மாற்றி வருவதாக அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அவுதிரேலியாவின் 'தி கிட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' (The Kids Research Institute Australia) சுவாச சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவுத் தலைவர் அலெக்ஸ் லார்கோம் (Alex Larcombe) தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் கடந்த 20 ஆண்டுகால (1999-2020) சுமார் 7,000 பேரின் இரத்தப் பரிசோதனைத் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த
 உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. மனித பரிணாம வரலாற்றில் வளிமண்டல CO2 அளவு சுமார் 300 ppm ஆகவே நீடித்தது. ஆனால் இன்று அது 420 ppm-ஐக் கடந்துள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றில் CO2 அதிகரிக்கும்போது, அது இரத்தத்தில் கலந்து அமிலத்தன்மையை (Acidity) 
அதிகரிக்கிறது.
இதனைச் சமன் செய்ய நமது உடல் 'பைகார்பனேட்' (Bicarbonate) என்ற உப்பை அதிகளவில் உற்பத்தி செய்து தக்கவைக்கத் தொடங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மனித இரத்தத்தில் பைகார்பனேட் அளவு 7 சதவீதம் 
அதிகரித்துள்ளது. மேலும், இரத்தத்தின் அமிலத்தன்மையைக் குறைக்க எலும்புகள் அந்த அதிகப்படியான கார்பனை உறிஞ்சி 'கால்சியம் கார்பனேட்டாக' மாற்றித் தன்னுள் புதைக்கின்றன.
 இதன் விளைவாக
 இரத்தத்தில் கால்சியம் 2 சதவீதமும், பாஸ்பரஸ் 7 சதவீதமும் குறைந்துள்ளன. இதே நிலை நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மனித எலும்புக்கூடு, சிறுநீரகம் மற்றும் மூளைச் செயல்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என இந்த ஆய்வு எச்சரிக்கப்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



உங்கள் பழைய ஐபோன்களுக்கு ஆபத்து: அப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை

. பழைய வகை இயங்குதளங்களில் (iOS) இயங்கும் ஐபோன்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடிய புதிய உளவு மென்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால், பயனர்கள் உடனடியாகத் தங்கள் மென்பொருளைப் புதுப்பிக்குமாறு (Update) அப்பிள் நிறுவனம்
 அறிவுறுத்தியுள்ளது.
Lookout, iVerify மற்றும் கூகுள் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து 'டார்க்ஸ்வேர்ட்' எனப்படும் இந்த ஆபத்தான மென்பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
2025 மார்ச் முதல் ஓகஸ்ட் வரை வெளியான iOS 18.4 முதல் 18.6.2 வரையிலான பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன்கள் இதன் மூலம் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 220 முதல் 270 மில்லியன் ஐபோன்கள் இத்தகைய பழைய பதிப்புகளில் இயங்கி வருவதாக ஆய்வாளர்கள் 
மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த உளவு மென்பொருள் குறிப்பாக யுக்ரைன் மக்கள், சீன கிரிப்டோகரன்சி பயனர்கள் மற்றும் சவூதி அரேபியா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துச் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மென்பொருள் மூலம் மின்னஞ்சல்கள், பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், புகைப்படங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வாலட்கள் போன்ற மிக முக்கியமான தரவுகளைத் திருட முடியும். இது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் 
எச்சரிக்கின்றனர்.

இது குறித்து அப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், மென்பொருளைத் தொடர்ந்து புதுப்பிப்பதாகும்," என கூறியுள்ளார்.
அப்பிளின் சமீபத்திய iOS 26 பதிப்பு இந்தத் தாக்குதல்களில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல், புதிய பதிப்பிற்கு மாற முடியாத பழைய ஐபோன் பயனர்களுக்காக, இந்த வைரஸைத் தடுக்கும் வகையில் ஒரு சிறப்புப் பாதுகாப்பு அப்டேட்டையும் அப்பிள் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
"சாதாரண பயனர்களால் இத்தகைய தாக்குதல்களைக் கண்டறிய முடியாது என்பதே இதில் உள்ள அச்சமூட்டும் விஷயம்" என்று Citizen Lab ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 19 மார்ச், 2026

நாட்டில் மரக்கறிகளின் விலைகளும் மிக அதிகரித்துள்ளன

தற்போது  நாட்டில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை
 செய்யப்பட்டது. கெப்பட்டிபொலயில் போஞ்சி ஒரு கிலோகிராம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை 
செய்யப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை 
செய்யப்பட்டது. கெப்பட்டிபொலயில் போஞ்சி ஒரு கிலோகிராம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை
 செய்யப்பட்டது.
இதேவேளை பீட்ரூட் ஒரு கிலோகிராம், நுவரெலியா மற்றும் கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கு விற்பனை 
செய்யப்பட்டது.
அதேநேரம், நுவரெலியாவில் ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 350 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 340 ரூபாய்க்கும் விற்பனை
 செய்யப்பட்டது.
கெப்பட்டிபொலயில் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 180 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 18 மார்ச், 2026

நாட்டில் புதன்கிழமைகலில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடைவிதிப்பு

இலங்கையில் விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்
 என்பதும்  குறிப்பிடத்தக்கது   

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தற்காலிகமாக கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தம்

தற்போது  கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை 
அறிவித்துள்ளது.
கொழும்பு நகருக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு இனி தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.
தற்போது உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 மார்ச், 2026

நாட்டில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் புதன்கிழமை தோறும் விடுமுறை

இலங்கையில் .தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ 
தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, நிலவும் எரிபொருள் விநியோகப் சிக்கல்களை எதிர்கொள்வதற்காக, நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு 
இந்த விடுமுறை 
பொருந்தாது என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாத் சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் 4 பிரதான குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.