செவ்வாய், 12 மே, 2026

யாழ் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ் பலாலி   சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் 11-05-2026.அன்று   திங்கட்கிழமை நடைபெற்றது.
அதன் போதே விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, குறித்த கலந்துரையாடலில்,
மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் பாடசாலைகளை, அரசிற்கு கையளித்த குறித்த அமைப்புகளிடமே மீண்டும் கையளித்தல் மற்றும் ஒவ்வொரு வலயத்திலும் மூடப்படும் ஒரு பாடசாலையை நவீன ஆய்வுகூட வசதிகளுடன் மேம்படுத்துதல் குறித்துப் 
பரிசீலிக்கப்பட்டது. 
மேலும், பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பிரபல்யமான பாடசாலைகளுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாக நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்கு 
நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி 
செய்தல். அத்துடன், யாழ் போதனா மருத்துவமனையைச் சூழவுள்ள நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு
, வீதியோரங்களில் தரித்து நிற்கும் வெளிமாவட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்துக்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல். கீரிமலை, காங்கேசன்துறை, பலாலி வீதிகளில் (764, 769 வழித்தடங்கள்) முன்னைய பாதைகளிலேயே பேருந்து சேவைகளை அனுமதிக்கக் கோருதல் மற்றும் தம்பாலை – இடைக்காடு – வளலாய் வீதியைப் பலாலி வீதியுடன் இணைப்பதற்கான எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விரைவாக விடுவித்தல் தொடர்பில்
 பேசப்பட்டது. 
மேலும், தீவுப்பகுதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறைக்கான போக்குவரத்து மேம்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
யாழ். நகரம் உட்பட வட மாகாணத்தில் உள்ள சிறிய
 மற்றும் நடுத்தரக் குளங்களை நன்னீர் தேங்கி நிற்கும் வகையில் புனரமைப்பதுடன், வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த ஆளுநர் நா.வேதநாயகன், 
சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் கொள்கை ரீதியான முடிவுகளைக் கொண்டிருப்பதால், அவை தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. 
அதேவேளை, மாகாண நிர்வாகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்களை மிக விரைவாக ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ என உறுதியளித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி செல்வச் சந்நிதியில் நடைபெற்றது

நாட்டில் .தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வாரம் இன்று முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது
 அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது
 தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது
 மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக
 மாறியிருந்தது.
இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும், எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும், இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது. ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு 
நடைபெற்றது.
இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.ஜீட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பகரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிரைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 
கலந்துகொண்டனர்.
திருகோணமலை -பாட்டாளிபுரம் பகுதியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
 ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சு பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மற்றும் கனகபுரம் வீதியில் 
வாகன வாடகை உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் இன்று காலை 10 மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
 பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி 
செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் 
வாங்கி பருகினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு.12-05-2026. இன்று  காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர்.
இறுதிப் போரின்போது உணவின்றி தவித்த மக்களுக்கு கஞ்சி எவ்வாறு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப் பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 11 மே, 2026

நாளை புதிய விதி முகநூல் பாவிக்கிறவர்களுக்கு புதிய சட்ட திட்டம் அமுல்

நாளை  புதிய  விதி முகநூல்(Facebook)  பமெட்டா என்றும் அழைக்கப்படும்) தொடங்குகிறது என்பதை மறக்காதீர்கள். இது உங்கள் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. இன்றுதான் கடைசி நாள்!!!
60 Minutes நிகழ்ச்சியின்படி: Facebook Meta இப்போது பொது நிறுவனமாகிவிட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் இதுபோன்ற ஒரு குறிப்பை 
பதிவிட வேண்டும்.
நீங்கள் குறைந்தது ஒரு முறையாவது இத்தகைய அறிக்கையை வெளியிடாவிட்டால், உங்கள் புகைப்படங்கள் மற்றும் உங்கள் சுயவிவரத்தில் உள்ள ஸ்டேட்டஸ் அப்டேட்கள் உட்பட அனைத்து தகவல்களையும் பயன்படுத்த அனுமதி அளித்ததாக தொழில்நுட்ப ரீதியாக 
புரிந்துகொள்ளப்படும்.
நான் இதன்மூலம் அறிவிக்கிறேன்: Facebook அல்லது Meta எனது எந்த தனிப்பட்ட தரவுகளையும் பயன்படுத்த எனது அனுமதியை நான் 
வழங்கவில்லை.
இந்த செய்தியில் எங்காவது உங்கள் விரலை அழுத்திப் பிடித்திருங்கள். “Copy” என்று வரும். அதை கிளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் பக்கத்திற்குச் சென்று, புதிய போஸ்ட் உருவாக்குங்கள். காலியான இடத்தில் எங்காவது விரலை வைத்து அழுத்துங்கள். “Paste” வரும், அதை
 கிளிக் செய்யுங்கள்.
இது முழுமையான மொழிபெயர்ப்பு. நீங்கள் நேரடியாக காப்பி செய்து பயன்படுத்தலாம்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நாளை சகல கிளினிக்குகளும் வழமை போல் இயங்கும்

 யாழ்  போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, நாளை (11.05.2026) முதல் வைத்தியசாலையின் சகல கிளினிக்குகளும் (Clinics) மற்றும் மருத்துவ
 சேவைகளும்
 வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி
 அறிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் 
அபாயம் நிலவியது.
இருப்பினும், சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ், கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் தேவையான மருந்துகள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மருந்துகளுக்கு மேலதிகமாக, இன்னும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் நோயாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி நாளை முதல் தமது கிளினிக் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தர முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளாஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் ர்.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு சுவிஸ் நாட்டில் பல வங்கிகளில் வங்கிக் கணக்கு திறக்க தடை


சுவிஸ் நாட்டில் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு. UNS வங்கி உட்பட மேலும் சில வங்கிகளில் வங்கிக் கணக்கு
 ஆரம்பிக்க முடியாது. 
காரணம் உலகில் அமெரிக்கர்களுக்கு அதிக அபாயம் இருக்கின்றதாம். பல  நாடுகளோடு போர். பல நாடுகளுக்காக போர் என பல நாடுகள்,  இனங்கள், மதங்களோடு அமெரிக்கா எதிர்ப்பை 
சம்பாதித்துள்ளது.
 ஒரு புறம் தன்னை பாதுகாக்க மற்றும் வியாபாரம் அத்தோடு உலகின் முதல்தர வல்லரசு மோகம். இவைகளைக் கொண்டே இவர்கள் உலகில் அபாயமானவர்கள் என வங்கிகளால் 
 நிராகரிக்கப்படுகின்றனர். 
அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க  பிரஜாவுரிமை உள்ளவர்கள் சுவிஸ் காப்புறுதி நிறுவனங்களில் ஆயுட் காப்பீடு செய்ய முடியாது. விண்ணப்பம் நிரப்பும்போது நீங்கள் அமெரிக்க பிரஜாவுரிமையா என கேள்வி கேட்கப்படும். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 10 மே, 2026

நாட்டில் தெனியாய கல்வி வளையத்தின் நான்கு பாடசாலைகளுக்கான விடுமுறை நீட்டிப்பு

இங்கு  மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் மேலும் இரண்டு நாட்களுக்கு 
மூடப்பட்டிருக்கும். 
 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக , சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெனியாய மண்டல கல்வி இயக்குனர் நிஷாக ஹெட்டியாராச்சி 
தெரிவித்தார். 
 அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழி மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை நாளை (11) மற்றும் மறுநாள் (12) மூடப்பட்டிருக்கும். . என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தெதுரு ஓயா மற்றம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுள் திறப்பு

இலங்கையில் .தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வான்கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு 11,100 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை, இன்று  பிற்பகல் 01.15 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், நான்கு வான் கதவுகள் தலா மூன்று அடி வீதமும், இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறந்துவிடப்பட்டுள்ளன. 
 இதன் ஊடாக வினாடிக்கு 8,113 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.