புதன், 15 ஜூலை, 2026

இலங்கையில் தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை இன்று திறப்பு

நாட்டில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில்.15-07-2026- இன்று  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்
 எட்டப்பட்டுள்ளது .
சுமார் 60 ஆண்டு காலக் கனவான மகாவலி பெருந்திட்டத்தின் கீழ், தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை இன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டு (Tunnel Breakthrough) மக்கள் பார்வைக்குத் திறக்கப்படுவது மிக முக்கியமானதொரு நிகழ்வாகும்.
இந்த மாபெரும் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் இதனால் மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் , சுரங்கப்பாதையின் நீளம்: 27.7 கிலோமீட்டர் (தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை) முக்கிய திட்டம்: 
வட மத்திய கால்வாய்த் திட்டம் (மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ்) நிதியுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மகாமீகஸ்வேவ மற்றும் கொதுருவாவ ஆகிய இரு வேறு முனைகளிலிருந்து நவீன சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBM) மூலம் தோண்டப்பட்டு, இன்று நிலத்தடியில் துல்லியமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
பெரும்போகம் மற்றும் சிறுபோகம் 
ஆகிய இரு போக 
விளைச்சல்களுக்காக 74,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குத் தங்குதடையின்றி இந்த மூலம் தண்ணீர் வழங்கப்படும்.
240 கி.மீ நீளமுள்ள வட மத்திய கால்வாய் வழியாக 12 முக்கிய நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் 1,505 குளங்களுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும். நேரடியாக 25,000 விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் வாழ்வாதார
 நன்மை அடைவர்.
வடமத்திய மாகாணம் பகுதியில் பல தசாப்தங்களாகக் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாசுபட்ட நீரால் நிலவி வரும் தீராத சிறுநீரக நோய்ப் பிரச்சினைக்கு இத்திட்டம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
ஆண்டுக்கு 70 மில்லியன் கன மீட்டர் சுத்தமான குடிநீர் இந்த அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இலங்கையின் உலர் வலய விவசாயிகளின் வாழ்விலும், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த நீர் விநியோகக் கட்டமைப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் பதுளை அரச பேருந்து நிலைய மலசலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

நாட்டில் பதுளை அரச பேருந்து தரிப்பிடத்தில் (CTB Bus Stand) அமைந்துள்ள பொது மலசலக்கூடம் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, மிக மோசமான சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவது குறித்து நாளாந்தம் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பயணிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த முக்கிய பேருந்து நிலையத்தில், ஒரு பொது மலசலக்கூடத்தை கூட ஒழுங்காக பராமரிக்க முடியாத நிலையில் பதுளை மாநகர சபையும், பேருந்து நிலைய அதிகாரிகளும் தங்களது பொறுப்பிலிருந்து நழுவி வருவதாக குற்றம்
 சாட்டுகின்றனர்.
தற்போது நிலவும் அதிக துர்நாற்றம் காரணமாக பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளும் சுவாசப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 
குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த மலசலக்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்" என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் 
தெரிவித்தார்.
பொதுமக்களிடம் 30 ரூபாய் வீதம் நாளாந்தம் பெருந்தொகை பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணம் எங்குச் செல்கிறது? ஏன் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை? என்ற கேள்வி
 எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான அரசியல் பிரதிநிதிகளும், உரிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு இதற்கு 
நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பேருந்து நிலையத்தை 
முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க நேரிடும் எனவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வாய் புற்றுநோயைத் தடுக்க புகையிலை வெற்றிலை விற்பனைக்கு தடை

நாட்டில் வாய் புற்றுநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில், புகையிலை மற்றும் பாக்கு கலந்த வெற்றிலைக் கூட்டுகளை (Betel Quid) விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனைகளை முன்னெடுக்க பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் (PHIs) தீர்மானித்துள்ளது.
புகையிலை கலந்த வெற்றிலைச் சுருள்களைத் தயாரிப்பது, கடைகளில் காட்சிப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தற்போதைய சட்டங்களின்படி முற்றிலும் தடைசெய்யப்பட்ட குற்றமாகும். 
இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக எந்தவித சலுகையுமின்றி நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் ஆண்களிடையே அதிகம் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோயே முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 
நாளாந்தம் பெருமளவிலானோர் இந்த நோயினால் உயிரிழக்கும் அவலம் தொடர்வதாலேயே, இந்தத் தடையை மிகத் தீவிரமாக அமல்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் பாக்கு மற்றும் புகையிலை கலந்த போதை தரும் வெற்றிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய விசேட அதிகாரிகள் குழுக்கள் 
நியமிக்கப்பட்டுள்ளன. 
பொதுமக்களும் தங்களது ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் எனவும், தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து அருகில் உள்ள PHI.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 14 ஜூலை, 2026

உங்கள் முகத்தில் ஐஸ் கட்டி தேய்ப்பது நல்லதா இதன் பக்கவிளைவுகள் என்ன

சமூக ஊடகங்கள் மற்றும் அழகு பராமரிப்பு தளங்களில் சமீபகாலமாக "ஐஸ் பேசியல்" (Ice Facial) அல்லது முகத்தில் ஐஸ் கட்டியைத் தேய்க்கும் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. பலரும் தங்களது 
தினசரி சரும பராமரிப்பில் இதை ஒரு முக்கியப் பகுதியாக மாற்றி வருகிறார்கள்.
ஆனால், இந்த ஐஸ் பேசியல் உண்மையில் சருமத்திற்கு எந்த அளவுக்கு நன்மை தரும்? இதில் உள்ள பக்கவிளைவுகள் என்ன? 
என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உடனடி நன்மைகள்: தற்காலிக புத்துணர்ச்சி
காலையில் எழும்போது முகம் வீக்கமாக இருப்பது அல்லது சோர்வாகக் காணப்படுவது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு ஐஸ் கட்டி ஒரு எளிய தீர்வாக அமைகிறது. 
வீக்கம் குறையும்: 
முகத்தில், குறிப்பாக கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தை (Puffy Eyes) ஐஸ் கட்டி தேய்ப்பதன் மூலம் உடனடியாகக் குறைக்க முடியும். 
இறுக்கமான சருமம்: 
ஐஸ் கட்டியின் குளிர்ச்சி சருமத்தின் இரத்த நாளங்களைச் சுருக்கி, முகம் தற்காலிகமாக இறுக்கமாகவும் இளமையாகவும் தோன்றுவதற்கு உதவுகிறது.
புத்துணர்ச்சி:
சோர்வடைந்த முகத்திற்கு இது ஒரு சிறந்த, உடனடி புத்துணர்ச்சியை (Instant Glow) தருகிறது. 
உண்மையா, வெறும் கட்டுக்கதையா?
ஐஸ் பேசியல் பற்றி பரவலாகப் பேசப்படும் சில கருத்துக்களில் உள்ள உண்மைகள் இதோதுளைகள் சுருங்குமா?
ஐஸ் கட்டி தேய்ப்பதால் முகத்தில் உள்ள சருமத் துளைகள் (Pores) நிரந்தரமாகச் சுருங்கிவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், இது ஒரு தற்காலிக விளைவு மட்டுமே.
குளிர்ச்சியால் தற்காலிகமாகச் சுருங்கும் துளைகள், சிறிது நேரத்தில் முகம் சாதாரண வெப்பநிலைக்குத் திரும்பியதும் பழைய நிலைக்கு வந்துவிடும். 
சருமம் வெண்மையாகுமா?
முகத்தில் ஐஸ் தேய்ப்பதால் சருமத்தின் நிறம் வெண்மையாக மாறாது. ஆனால், இரத்த ஓட்டம் தற்காலிகமாக அதிகரிப்பதால் முகம் சற்று பிரகாசமாகத் தோன்றும், அவ்வளவுதான். 
நீண்ட நேரம் பயன்படுத்தினால் ஆபத்தா? 
ஐஸ் கட்டியை நேரடியாகவும், நீண்ட நேரமும் சருமத்தில் பயன்படுத்துவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கை:
ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் நீண்ட நேரம் வைத்தால், அது "ஐஸ் பர்ன்" (Ice Burn) எனப்படும் பனிப்புண்ணை ஏற்படுத்தலாம்.
இது சருமத்தில் கடுமையான எரிச்சல், சிவப்புத் தழும்புகள் அல்லது சருமக் செல்கள் சேதமடைவதற்கு வழிவகுக்கும்.பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? 
முகத்திற்கு ஐஸ் பேசியல் செய்ய விரும்பினால், கீழே உள்ள எளிய மற்றும் பாதுகாப்பான வழிமுறையைப் பின்பற்றலாம்: 
நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம்: ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் தேய்ப்பதைத் தவிர்த்து, ஒரு மெல்லிய, சுத்தமான பருத்தித் துணியில் (Cotton Cloth) சுற்றிப் பயன்படுத்தவும். 
நேர அளவு முக்கியம்: முகத்தில் 1 முதல் 2 நிமிடங்களுக்கு மேல் ஐஸ் கட்டியைத் தேய்க்கக் கூடாது. 
மென்மையான மசாஜ்: வட்ட இயக்கத்தில் (Circular Motion) மிகவும் மெதுவாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html  


இன்று முதல் கொழும்பு - காங்கேசன்துறை கடுகதி ரயில் சேவை வழமைக்கு

இன்று முதல் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி 14.07.2026- இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த ரயிலின் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம்
 தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும், பாதிப்புக்களுக்கும் உள்ளாவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் ரயில் நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டியிருந்தன.
இதனைக் கருத்திற் கொண்டு இதற்கு முன்னர் ரத்துச் செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் நகராந்தரக் கடுகதி ரயிலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை
 எடுத்துள்ளனர்.
இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி குறித்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சுவிட்சர்லாந்திற்கு இலங்கையில் இருந்து கருவேப்பிலை ஏற்றுமதி செய்ய ஏன் கட்டுப்பாடுகள்

ஏன் கருவேப்பிலையை (Curry leaves) இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வருவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதற்கான முக்கிய காரணம் தாவர நோய்கள் மற்றும் பூச்சிகள் பரவுவதைத் தடுப்பது ஆகும்.
கருவேப்பிலையில்:
பூச்சிகள், அவற்றின் முட்டைகள் அல்லது லார்வாக்கள் இருக்கக்கூடும்.
பூஞ்சை, பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற தாவர நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும்.
இவை சுவிட்சர்லாந்தின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதனால், இலங்கை போன்ற EU அல்லாத நாடுகளில் இருந்து புதிய கருவேப்பிலை கொண்டு வர பொதுவாக தாவர சுகாதாரச் சான்றிதழ் (Phytosanitary Certificate) தேவைப்படும். அது இல்லையெனில், சுங்க அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து அழிக்கலாம்.
ஆனால்:
உலர்த்தப்பட்ட (dried) கருவேப்பிலை சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படலாம். இருப்பினும், அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது, எவ்வாறு பொதியிடப்பட்டது என்பதையும் பொருத்து விதிமுறைகள் மாறக்கூடும்.
வணிக நோக்கத்திற்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் விதிகள் வேறுபடலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 13 ஜூலை, 2026

நாட்டில்ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

.நாட்டில்  வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
 அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை,
 எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 இந்தநிலையில், இன்றையதினம் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 அதற்கமைய, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
 அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 அதேநேரம், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.