ஞாயிறு, 21 ஜூன், 2026

தற்போது பெண்களை இலக்கு வைத்து சமூக ஊடக மோசடி பொலிஸார் எச்சரிக்கை

தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மோசடி  சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை
 விடுத்துள்ளனர். 
நிதி மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நாடு முழுவதும் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 
சில சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 
போதைப்பொருள் அல்லது மயக்கமருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்கள் நினைவிழந்த பின்னர் துஷ்பிரயோகம் அல்லது திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 
   இன்னும் சிலர் பெண்களின் நம்பிக்கையை வெல்வதற்காக திருமண வாக்குறுதிகளை வழங்கி, பின்னர் தந்திரமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்துள்ளனர். இவ்வாறான சில சம்பவங்கள் படுகொலை போன்ற பாரிய குற்றங்களிலும் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 இதனையடுத்து, புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினர் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், இவ்வாறான நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தகவல்களைத் திரட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 சமூக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களிடம் பணம், நகைகள் அல்லது
 இதர பெறுமதிமிக்க
 பொருட்களை ஒப்படைக்க வேண்டாம் என்றும் முகம் தெரியாத நபர்களுடன் முக்கியமான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறான மோசடிகளுக்கு ஆளானவர்கள் அல்லது இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
 மேலும், 118, 119, 107 அல்லது 109 பொலிஸ் அவசர உதவி எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வட்டுக்கோட்டைபி ஐம்பது எழுச்சி மாநாடு .யாழ்.தந்தை செல்வா கலையரங்கில்


யாழ்  வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் 
20-06-2026.சனிக்கிழமை அன்று நடைபெற்றது. 
மாநாட்டின் முன்னதாக , தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வாவிற்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி 
செலுத்தப்பட்டது
 அங்கிருந்து தந்தை செல்வா கலையரங்குக்கு ஊர்வலமாக சென்று , கலையரங்கில் மூன்று மாவீரர்களின் சகோதரன் ஈகை சுடரேற்றியதை தொடர்ந்து , தந்தை செல்வாவின் உருவ படத்திற்கு  தென்கயிலை ஆதீனக் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து ஏனையவரக்ள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
மாநாட்டில் பொத்துவில் பொலிகண்டி ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள்,யாழ் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்,பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன்,
ப.அரியநேந்திரன் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னாள் யாழ் மாநகர 
முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாற்பத்தி ஆறாயிரத்தை கடந்தது

 இலங்கையில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 46,000-ஐத் தாண்டியுள்ளது. 
 அதன்படி, ஜனவரி மாதம் முதல் நாட்டில் 46,037 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார். 
 மேலும், தற்போது தினமும் 600 முதல் 650 டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் பதில் பணிப்பாளர் கூறினார்.
 ஜூன் முதலாம் திகதி முதல் 12,196 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகக் கூறிய அவர்  இது ஒரு மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என்றும் குறிப்பிட்டார். 
 மாகாண வாரியாக ஒப்பிடுகையில், மேற்கு மாகாணத்தில் இருந்துதான் அதிகபட்ச டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளன. அங்கு  51.75 சதவீதம் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 20 ஜூன், 2026

யாழ் சுன்னாக வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் சாதாரணதரப் பரீட்சையில் சாசாதனை

யாழில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். 
ரமேஷ் தர்சானந் (மிகக் குறைந்த பார்வையுடையவர்) A, 2B, 4C, S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 
ரெஜிறொபின்ஸ் கீர்த்தனா (இவர் மிகக் குறைந்த பார்வையுடையவர்) 2A, 3C, 2S. பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 
சிவானந்தன் மோனிசா (இவர் முற்றாகப் பார்வையற்றவர்) 3C, 4S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 
மாணவர்கள் மூவருக்கும்  எமது இணையங்களின் நல் வாழ்த்துக்கள்.உரித்தாகுக ..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் சாதாரணதரப் பரீட்சை முடிவுகள்: 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி

நாட்டில் சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய 
நாடளாவிய ரீதியில்
11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (ஒன்பது பாடங்கள்) ஏ சித்தி பெற்றுள்ளதாகவும், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகாகுமாரி 20-06-2026-இன்று தெரிவித்துள்ளார் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் நானுஓயா பதுளை ரயில் பாதை உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது

நாட்டில்  தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் கடந்த ஏழு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்துச் சேவை இன்று (20) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேற்கொண்ட தீவிர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, புகழ்பெற்ற 'பொடி மெனிகே' ரயிலின் வருகையுடன் இந்த ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து 
வைக்கப்பட்டது.
நாட்டில் நானுஓயா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வைத் தொடர்ந்து இந்த ரயில் பாதை பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மலைநாட்டு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது பயணிகள் நானுஓயாவிலிருந்து பதுளை வரை தடையின்றிப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன், நிலச்சரிவுப் பாதிப்புக்குள்ளான 
ஏனைய பகுதிகளையும் முழுமையாகச் சீரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு முதல் பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவையைத் தடையின்றி வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 

வெள்ளி, 19 ஜூன், 2026

நாட்டில் நாளை அம்பலாங்கொடையில் விசேட போக்குவரத்துத் திட்டம் அவசர அறிவிப்பு

நாட்டில் அம்பலாங்கொடை நகர்ப் பகுதியில் நாளை (சனிக்கிழமை) விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நாளை நகரில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வு/அபிவிருத்திப் பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டே இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதனால், நாளை அம்பலாங்கொடை நகருக்குள் நுழையும் மற்றும் நகரைத் தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் வாகனங்கள், அம்பலாங்கொடை நகருக்குள் நுழைவதைத் தவிர்த்து, குறிப்பிட்ட சந்திப்புகளில் இருந்து மாற்று வழிகள் ஊடாக திருப்பி
 விடப்படவுள்ளன.
காலி திசையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களும் நகரின் பிரதான வீதி நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு தடையின்றி பயணிப்பதற்கான சிறப்புப் போக்குவரத்து ஒழுங்குகள்
 செய்யப்பட்டுள்ளன.
நாளை அம்பலாங்கொடை நகருக்குள் அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள வாகன ஓட்டிகள், சாத்தியமான இடங்களில் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் என 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் மேலதிக காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கி, தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


Blogger இயக்குவது.