வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

நாட்டில். கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி காபெட் வீதியாக அபிவிருத்தி

நாட்டில்  மாவட்டத்தின் கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி 1.3 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் – சம்புகுளம் மூலிகைப் பண்ணைக்குச் செல்லும் பிரதான வீதி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான அங்குரார்ப்பண 
நிகழ்வு நடைபெற்றது.
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுமார் 1.3 கிலோமீற்றர் நீளமான இவ்வீதி முதல் முறையாக காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது 
குறித்த வீதியானது அபிவிருத்தி பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் பகுதியிலும் 55 மில்லியன் நிதி ஒதுக்கீடு இரண்டு கிலோமீட்டர் கார்பெட் வீதி புணரமைப்பு பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இன்பராஜ் நளாயினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற 
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்கள்
 கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராம மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளதாகத் தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், 2010ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் முதன்முறையாக சம்புகுளம் கிராமத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் 
குறிப்பிட்டார்.
அப்போது தற்போதைய ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர், கிராம மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த அனுபவம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராமத்துடன் தொடர்புடைய முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் சம்புகுளம் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்று வந்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்திக்கும் சம்புகுளம் மக்களுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் உறவு தொடர்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




நாட்டில் பொலிஸ் சீருடை மாற்றம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கணிப்பை எதிர்பார்க்கும் அரசு

லங்கை காவல் துறையினரின் (Police) பாரம்பரிய காக்கி நிற சீருடையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் பாதுகாப்புத் துறையில் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
தற்போதைய வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்பவும், சர்வதேச தரத்திற்கு இணையாகவும் இந்த மாற்றங்களைச் செய்ய
 திட்டமிடப்பட்டுள்ளது.
சீருடை மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்,பழமையான நடைமுறை,தற்போதைய காக்கி சீருடை முறை பிரித்தானியர் ஆட்சிக்கால மரபுகளைத் தொடர்ந்து 1974ம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும். இது தற்கால நவீன தேவைகளுக்குப் பொருந்தவில்லை 
எனக் கருதப்படுகிறது.
இலங்கையின் அதிக வெப்பம் மற்றும் வியர்வை தரக்கூடிய காலநிலைக்கு தற்போதைய தடிமனான காக்கி ஆடைகள் காவலர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் காவல்துறைக்கு நீலம் அல்லது பிற நவீன நிறங்கள் பயன்படுத்தப்படுவதால், இலங்கை காவல் துறையையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது இதன் நோக்கமாகும்.
காக்கி நிறத்திற்குப் பதிலாக சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் கடும் நீல நிறம் (Dark Blue) அல்லது சாம்பல் நிறம் கலந்த ஆடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பொதுமக்களிடமும், அதிகாரிகள் மட்டத்திலும் கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆலோசனைகள் 
நடத்தப்படுகின்றன.
வெப்பத்தைத் தாங்கக்கூடிய, காற்றோட்டமான, வியர்வையை எளிதில் உறிஞ்சக்கூடிய பாலியஸ்டர் கலப்பு (Polyester blends) அல்லது நைலான் போன்ற நவீன துணி வகைகளைப் பயன்படுத்த 
ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தடிமனான தோல் வார்ப்பட்டைகளுக்கு (Leather belts) பதிலாக இலேசான தந்திரோபாய பெல்ட்கள் (Tactical belts) மற்றும் நீண்ட நேரம் அணிந்திருக்கக்கூடிய சௌகரியமான காலணிகள் (Tactical boots) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி உதவிகள்சீருடை மாற்ற ஆலோசனைகள் ஒருபுறமிருக்க, தற்போதைய இலங்கை காவல் துறையினரின் (Sri Lanka Police) நலனைக் கருதி, சீருடைகள் மற்றும் காலணிகளை கொள்வனவு செய்வதற்காக 7,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வீதிப் போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகள் மறைவான இடங்களில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விபத்துகளைத் தடுப்பது மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும், போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் இடங்களில் கடமையில் ஈடுபடுவதன் மூலம், 
விதிமீறல்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

ஒரு தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம்: கண்டுகளித்த மக்கள்

இந்த நிகழ்வு  கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இங்கிலாந்தும் ஐரோப்பாவும் தங்களின் மிக பிரம்மாண்டமான சூரிய கிரகணத்தைக் கண்டுள்ளன. ஒரு தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் இந்த நிகழ்வை மில்லியன் கணக்கான மக்கள் கண்டனர்
 இது பிரிட்டிஷ் கோடை நேரப்படி -12-08-2026-அன்று இரவு 7 மணிக்குச் சற்றுப் பிறகு உச்சத்தை அடைந்தபோது, ​​பெரும்பாலானோர் 
சூரியனின் 90%-க்கும் அதிகமான பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
ஆனால், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகள் முழு சூரிய கிரகணத்தின் முழுமையான இருளையும் கண்கொள்ளாக் காட்சியையும் அனுபவித்தன.
முழு கிரகணத்தின் பாதை, மக்கள் கூட்டத்திலிருந்தும் தொலைநோக்கிகளிலிருந்தும் வெகு தொலைவில், ரஷ்யாவின் சைபீரியாவின் வடமுனையில் தொடங்கியது.
ஆனால் அது விரைவில் ஆர்க்டிக் பெருங்கடலைச் சுற்றி வளைந்து, மாலை வேளையில் ஐஸ்லாந்தை வந்தடைந்தது; பின்னர் தெற்கு 
நோக்கிப் பாய்ந்து, தனது அற்புதத்தின் ஒரு பகுதியை ஐக்கிய ராச்சியத்திற்கும் காட்டியது.
வடக்கு ஸ்காட்லாந்தில் சுமார் 18:00 BST மணிக்கும், இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையில் 18:20 மணிக்குச் சற்று முன்னரும் இந்தப் பகுதி கிரகணம் தொடங்கியது.
முதலில் அது புலப்படவில்லை, ஆனால் மேகமற்ற வானத்தைப் பெற்றிருந்த மக்கள், சந்திரன் சூரியனைச் சிறிது சிறிதாக மறைப்பதை
 கவனித்தனர்
மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் வானம் தெளிவாக இருந்ததால், ஒரு மணி நேரத்திற்கு சந்திரன் மெதுவாக சூரியனைக் கடந்து சென்ற காட்சியை அவர்களால்
 காணமுடிந்தது.
 சந்திரன் மெதுவாகவும் உறுதியாகவும் சூரியனின் பெரும்பகுதியை மறைத்தது - அவ்வாறு செய்யும்போது அது ஒரு ஒளி மங்கச் செய்தது.
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பார்க்கும்போது, ​​சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை முற்றிலும் நேர்க்கோட்டில் 
அமையவில்லை.
இதன் விளைவாக ஒரு பகுதி கிரகணம் ஏற்பட்டது. ஐக்கிய ராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளில் சந்திரன் சூரியனை சுமார் 90% மறைத்தது. இது 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாடு கண்ட மிக பிரம்மாண்டமான
 கிரகணமாகும். கார்ன்வாலில், இந்த மறைப்பு 95% வரை இருந்தது.
ஸ்பெயினில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணப் பாதையில் திரண்டிருந்த மக்கள், சந்திரனுக்குப் பின்னால் சூரியன் மறைந்த சிவப்பு 
ஒளியுடன் கூடிய அந்த அரிய நிகழ்வைக் கண்டு இரசித்தனர். சூரிய வட்டத்தின் 93% வரை
 மறைத்து மற்றும் -12-08-2026-அன்று இரவு  சுவிற்சர்லாந்தின் பாடன் ( ஆறோ- AG ) எனும் இடத்தில் 7.00 மணி முதல் 8.00 மணி வரை இந்த அறிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் செம்மணி மனிதப் புதைகுழி புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்

யாழ் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்டுவது என்பது குறித்து.13-08-2026- இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா
 தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்டிருந்த மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பகுதியில் இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் 
வெளிப்பட்டுள்ளன. 
அவற்றில் 530 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பகுதியில் இருந்து ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் வடமராட்சி வடக்கில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் இரு புதிய வீடுகள் கையளிப்பு

யாழ் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீட்டு வசதியற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் தரமானதுமான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திரலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் 
யாழ்ப்பாண மாவட்ட 
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனால் பயனாளியான ஸ்ரீகரன் சதீஸ்வரனுக்கு புதிய வீடு உத்தியோகபூர்வமாகக்
 கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் உள்ளிட்டோர்
 கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் சந்திரமூர்த்தி, புதிய வீடு கையளிக்கப்பட்டதன் மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இது முக்கிய ஆதரவாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் 
குறிப்பிட்டார்.
இதேவேளை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/412 கிராம அலுவலர் பிரிவிலும் சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மற்றுமொரு புதிய வீடு நேற்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விலும் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனால் பயனாளியான மகேந்திரராஜா மகேஸ்வரிக்கு வீடு உத்தியோகபூர்வமாகக்
 கையளிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை 
பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் மற்றும் பிரதீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 12 ஆகஸ்ட், 2026

இன்று சுவிற்சர்லாந்தில் 1999ம் ஆண்டுக்கு பிறகு தென்பட்ட சூரிய கிரகணம்

இன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு அரிய வானியல் நிகழ்வு சுவிற்சர்லாந்தில் 
நிகழ்ந்துள்ளது. 
இது கடந்த 27 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் காணப்படாத ஒரு நிகழ்வாகும்.
சூரிய வட்டத்தின் 93% வரை மறைத்து சுவிற்சர்லாந்தின் 
பாடன் ( ஆறோ- AG ) எனும் இடத்தில் 7.00 மணி முதல் 8.00 மணி வரை இந்த அறிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.