வியாழன், 3 செப்டம்பர், 2026

இதய நோய் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் அபாயம்

இதய நோய்  இன்றைய வேகமான நகர்ப்புற வாழ்க்கைமுறை, இளம் தலைமுறையின் உடல்நலத்தில் கணிசமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குள் உள்ள வேலைக்குச் செல்வோர்களிடையே இதயநோய் அதிகரித்து வருவது கவலைக்குள்ளாக்கியுள்ளது. முன்பு 
வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என கருதப்பட்ட இதய பிரச்னைகள், இப்போது இளம் வயதினரிடமும் அமைதியாக வளர்ந்து. 
        வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றும் பலர், திடீர் 
இதயக்கோளாறுகள் அல்லது இதயநிறுத்தம் (sudden cardiac arrest) போன்ற கடுமையான நிலைகளுக்கு ஆளாகும்போதுதான் அவர்களுக்குள் இதயநோய் இருந்ததற்கான அபாயங்கள் வெளிப்படுகின்றன.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நகர்ப்புற வாழ்க்கையின் அழுத்தங்களாகும். நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து
 வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, குறைந்த தூக்கம் மற்றும் 
அதிகமான மனஅழுத்தம் ஆகியவை இதயநோய்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக ஐடி மற்றும் கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் 
இளைஞர்கள் அதிக நேரத்தை கணினி முன் செலவிடுவதால், உடல் இயக்கம் குறைகிறது. இதன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, 
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் 
உருவாகின்றன.
சமீபத்திய சுகாதார தரவுகள் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் ஏற்படும் இதய நோய் தாக்குதல்களில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவை 40 வயதிற்குக் குறைந்தவர்களிடமே நிகழ்கின்றன. மேலும், 50 வயதிற்குக் குறைந்தவர்களில் 15 முதல் 20 சதவீதம் வரை திடீர் இதயநிறுத்தங்கள் பதிவாகின்றன
 என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இளம் தலைமுறையின் உடல்நிலையில் ஒரு பெரிய எச்சரிக்கை மணி எனக் கருதப்படுகிறது. இளம் வயதில் இதயநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் புகைப்பிடித்தல், மதுபானம் அதிகமாக அருந்துதல், மனஅழுத்தம், மரபியல் காரணிகள் மற்றும் உடல்நல பராமரிப்பில் அலட்சியம் ஆகியவை அடங்கும்.
இந்த அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியமாகிறது. இதற்காக மருத்துவத் துறையில் பல மேம்பட்ட பரிசோதனைகள் தற்போது அறிமுகமாகியுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று CT Coronary Angiography (CTCA) ஆகும். இது அறுவைசிகிச்சை 
தேவையில்லாத
 ஒரு நவீன இமேஜிங் பரிசோதனை. இதன் மூலம் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, பிளாக் சேர்க்கை மற்றும் கரோனரி 
ஆர்டரி நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். பாரம்பரிய கத்தீட்டர் ஏஞ்சியோகிராஃபியுடன் ஒப்பிடும்போது, இந்த CTCA பரிசோதனை வேகமானது, குறைந்த அபாயமுடையது மற்றும் நோயாளிகளுக்கு 
எளிதானது.
மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களில் இந்த பரிசோதனையின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. 
கால்சியம் ஸ்கோரிங் CT ஸ்கேன்களில் 85 சதவீதம் உயர்வு, மேம்பட்ட
 இதய இமேஜிங் 
பரிசோதனைகளில் 36 சதவீதம் வளர்ச்சி மற்றும் 2025 ஆம் ஆண்டில் CT Coronary Angiography பரிசோதனைகளில் 30.6 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை இந்த மாற்றத்தை தெளிவாக காட்டுகின்றன. இது மக்கள்
 முன்கூட்டியே 
தங்களது உடல்நிலையை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான சான்றாகும். இது, மக்களிடையே தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுவருவதை 
காண்பிக்கிறது.
அதுபோன்று,45 வயதிற்குக் குறைந்தவர்களை ஆய்வு செய்த ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வு மேலும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்துகிறது. அந்த ஆய்வின் படி, 27.7 சதவீதம் பேருக்கு
 அறிகுறிகள் தெரியாத அத்தெரோஸ்க்ளிரோசிஸ் (atherosclerosis) இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் 8.2 சதவீதம் பேருக்கு கரோனரி ஆர்டரி நோய் இருப்பதும் தெரியவந்தது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 
கால்சியம் ஸ்கோர் பூஜ்யமாக இருந்த சிலரிடமும் கூட அதிக அபாயம் கொண்ட பிளாக்கள் கண்டறியப்பட்டன. இது வெளிப்படையாக ஆரோக்கியமாக இருந்தாலும், உடலின் உள்ளே அமைதியாக நோய் வளர்ந்து கொண்டிருக்கலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்த சூழலில், இளம் வயதில் வேலைக்குச் செல்வோர் தங்களது உடல்நலத்தை மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்வது, சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது, போதுமான அளவு தூக்கம் உறுதி செய்வது மற்றும் மனஅழுத்தத்தை 
குறைக்கும் வழிமுறைகளை கடைபிடிப்பது ஆகியவை இதயநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் மற்றும் மனநலத்தை
 மேம்படுத்த உதவுகின்றன.
அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பரிசோதனைகளை காலம்தோறும் மேற்கொள்வதும் மிக முக்கியமானது. குறிப்பாக குடும்பத்தில் இதயநோய் வரலாறு உள்ளவர்கள், சர்க்கரைநோய் அல்லது 
உயர் ரத்த அழுத்தம் 
கொண்டவர்கள் மற்றும் அதிகமான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் தவறாமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். தேவையான இடங்களில் CTCA போன்ற நவீன பரிசோதனைகள் மூலம் இதய ஆரோக்கியத்தை முன்கூட்டியே மதிப்பீடு செய்வது, பெரிய பிரச்னைகளைத் 
தவிர்க்க உதவும்.
முடிவாக, இதயநோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல; அது இளம் தலைமுறையையும் தாக்கக்கூடிய அமைதியான அபாயமாக மாறியுள்ளது. அதனால், “எனக்கு எதுவும் ஆகாது” என்ற எண்ணத்தை விட்டு, விழிப்புணர்வுடன் வாழ்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான
 வாழ்க்கை முறை
, முறையான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் இதயநோய்களை முன்கூட்டியே தடுப்பது சாத்தியம். நம் உடல்நலமே நம் எதிர்காலம் என்பதால், அதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


பாதுகாப்பு நிறுவனத்தைக் குறிவைத்து யேர்மனியில் தீ வைப்பு: இருவர் கைது

. யேர்மனியில் மியூனிக்கில் உள்ள ஒரு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் அரசியல் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதா என புலனாய்வாளர்கள் விசாரித்து
 வருகின்றனர். 
மியூனிக்கில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நடந்த தீ வைப்புத் தாக்குதலைத் தொடர்ந்து , பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் முயற்சியாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பவேரிய மாநில குற்றவியல் காவல் அலுவலகம் (LKA) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதில் அரசியல் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதா என புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக எல்.கே.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அந்த செய்தித் தொடர்பாளர் உடனடியாக அடையாளம் காட்டவில்லை.
இருப்பினும், யேர்மன் இராணுவத்திற்கான தகவல் தொடர்பு அமைப்புகளைத் தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனமான ரோட் & ஷ்வார்ஸின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் தீ வைக்கப்பட்டதாக பில்ட் என்ற பத்திரிகை 
செய்தி வெளியிட்டது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் நடவடிக்கையை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதோடு, எங்கள் நிறுவன வளாகம் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியதாக உள்ளூர் பொது ஒளிபரப்பு நிறுவனமான பி.ஆர். தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை நள்ளிரவு வாக்கில், மியூனிக்கின் பெர்க் ஆம் லைம் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தின் மீது ஒரு வாகனத்திலிருந்து பல தீமூட்டும் சாதனங்கள் வீசப்பட்டதாக காவல்துறை
 தெரிவித்துள்ளது. 
LKA-வின் கூற்றுப்படி, அருகிலுள்ள கட்டிட வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் இயங்கி வருகின்றனர்.
குறைந்தது ஒரு தீமூட்டும் சாதனமாவது தீப்பொறியை ஏற்படுத்தியது. அதை காவல்துறை அதிகாரிகள் அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டபோதிலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மியூனிக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், மற்றொரு தீமூட்டும் சாதனத்தை சிறப்புப் படைகள் செயலிழக்கச் செய்ய 
வேண்டியிருந்தது.
சிறிது நேரத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர், 28 வயதுப் பெண் மற்றும் 38 வயது ஆண் ஆகிய இருவரும் அருகிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பல்கேரியக் குடிமக்கள் என LKA அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வியாழக்கிழமை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


எரிபொருள் விலை யேர்மனியில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது

தற்போது  யேர்மனியில் பெட்ரோல் விலை புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக ADAC வாகன சங்கம் வியாழக்கிழமை
 தெரிவித்தது.
நேற்றுப் புதன்கிழமை அன்று, மிகவும் குறைந்த விலை பெட்ரோல் வகையான E10-க்கு, வாகன ஓட்டிகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக €2.215 செலுத்தியதாக ADAC தெரிவித்துள்ளது. இது ஒரு அமெரிக்க கேலனுக்கு சுமார் $9.73 என்பதற்குச் சமமாகும்.
தடைகள் எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், மார்ச் 2022-ல் முந்தைய சாதனை படைக்கப்பட்டது.
இம்முறை, ஈரானில் நடந்து வரும் போரினால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. நுகர்வோர் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக யேர்மனி , பெட்ரோல் மீது தற்காலிக எரிபொருள் வரிச் சலுகையை 
அமல்படுத்தியிருந்தது , ஆனால் அது யூன் மாத இறுதியில் காலாவதியாகிவிட்டது.
வசந்த காலத்தில் எட்டிய உச்ச விலையை விட கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருப்பதால், தற்போதைய பெட்ரோல் விலை மிகவும் அதிகம் என ADAC கருதுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 2 செப்டம்பர், 2026

ஆப்பிளின் iPhone 18 Pro அறிமுகம் செப்டம்பர் ஒன்பதாம் திகதி

ஆப்பிள் (Apple )நிறுவனத்தின் புதிய iPhone 18 Pro Series ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை Apple.com மற்றும் Apple TV செயலி மூலம் நேரலையில் பார்வையிட முடியும்.
மேலும், புதிய iPhone 18 Pro Series போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நேரடி விற்பனை செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் முன்னாள் மேயரின் மகன் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாநகர மேயர் மொஹமட் முஸாமிலின் 47 வயதுடைய மகன் மொஹமட் நிஷாம் ஜமால்தீன், நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 02ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL-503 விமானம் மூலம் லண்டன் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையொன்றுடன் தொடர்புடையதாக அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத் தடை அமுலில் இருந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேற முயன்றதால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மத வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் போதனைகளுக்கு எதிராக சிங்கப்பூரில் கடுமையான நடவடிக்கை

சிங்கப்பூர் அரசு மத வெறுப்பு, மதப் பிரிவினை மற்றும் வன்முறையைத் தூண்டும் போதனைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
2017ல் இந்தியாவைச் சேர்ந்த இமாம் நல்லா முகமது அப்துல் ஜமீல், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் பற்றிய அவமதிப்பான கருத்துகளுக்காக அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு
 அனுப்பப்பட்டார்.
அதேபோல், 2017ல் இஸ்மாயில் மெங்க் (Mufti Menk) மற்றும் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இரு வெளிநாட்டு இஸ்லாமியப் போதகர்களுக்கும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
2022ல் இந்தோனேசியப் போதகர் அப்துல் சோமத்துக்கும் சிங்கப்பூர் நுழைவு மறுக்கப்பட்டு, அவர் வந்த அதே நாளில் Batamக்கு திருப்பி
 அனுப்பப்பட்டார்.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் அவரது தீவிரவாத மற்றும் மதப் பிரிவினையை ஊக்குவிக்கும் போதனைகளை காரணமாகக் 
குறிப்பிட்டது.
முக்கியமாக, இது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரான கொள்கை அல்ல, பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் மத வெறுப்பு அல்லது பிளவைத் தூண்டும் கருத்துகளுக்காக சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

லண்டனில்.உள்ள பொலிஸ் பாய்க்கு பிடியாணை தொடர்கிறது

நாட்டில் மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்ஸ{க்குத்’ தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி  
கட்டளையிட்டுள்ளது.
ஏற்கனவே  கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த
 வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.
ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு
 எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று 
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர். 
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.