சனி, 20 ஜூன், 2026

யாழ் சுன்னாக வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் சாதாரணதரப் பரீட்சையில் சாசாதனை

யாழில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். 
ரமேஷ் தர்சானந் (மிகக் குறைந்த பார்வையுடையவர்) A, 2B, 4C, S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 
ரெஜிறொபின்ஸ் கீர்த்தனா (இவர் மிகக் குறைந்த பார்வையுடையவர்) 2A, 3C, 2S. பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 
சிவானந்தன் மோனிசா (இவர் முற்றாகப் பார்வையற்றவர்) 3C, 4S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 
மாணவர்கள் மூவருக்கும்  எமது இணையங்களின் நல் வாழ்த்துக்கள்.உரித்தாகுக ..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் சாதாரணதரப் பரீட்சை முடிவுகள்: 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி

நாட்டில் சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய 
நாடளாவிய ரீதியில்
11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (ஒன்பது பாடங்கள்) ஏ சித்தி பெற்றுள்ளதாகவும், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகாகுமாரி 20-06-2026-இன்று தெரிவித்துள்ளார் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் நானுஓயா பதுளை ரயில் பாதை உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது

நாட்டில்  தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் கடந்த ஏழு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்துச் சேவை இன்று (20) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேற்கொண்ட தீவிர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, புகழ்பெற்ற 'பொடி மெனிகே' ரயிலின் வருகையுடன் இந்த ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து 
வைக்கப்பட்டது.
நாட்டில் நானுஓயா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வைத் தொடர்ந்து இந்த ரயில் பாதை பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மலைநாட்டு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது பயணிகள் நானுஓயாவிலிருந்து பதுளை வரை தடையின்றிப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன், நிலச்சரிவுப் பாதிப்புக்குள்ளான 
ஏனைய பகுதிகளையும் முழுமையாகச் சீரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு முதல் பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவையைத் தடையின்றி வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 

வெள்ளி, 19 ஜூன், 2026

நாட்டில் நாளை அம்பலாங்கொடையில் விசேட போக்குவரத்துத் திட்டம் அவசர அறிவிப்பு

நாட்டில் அம்பலாங்கொடை நகர்ப் பகுதியில் நாளை (சனிக்கிழமை) விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நாளை நகரில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வு/அபிவிருத்திப் பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டே இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதனால், நாளை அம்பலாங்கொடை நகருக்குள் நுழையும் மற்றும் நகரைத் தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் வாகனங்கள், அம்பலாங்கொடை நகருக்குள் நுழைவதைத் தவிர்த்து, குறிப்பிட்ட சந்திப்புகளில் இருந்து மாற்று வழிகள் ஊடாக திருப்பி
 விடப்படவுள்ளன.
காலி திசையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களும் நகரின் பிரதான வீதி நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு தடையின்றி பயணிப்பதற்கான சிறப்புப் போக்குவரத்து ஒழுங்குகள்
 செய்யப்பட்டுள்ளன.
நாளை அம்பலாங்கொடை நகருக்குள் அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள வாகன ஓட்டிகள், சாத்தியமான இடங்களில் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் என 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் மேலதிக காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கி, தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


யாழ் செம்மணியில் அதிரடிப் போராட்டம்: நீதிமன்றத் தடையும் முறியடிப்பு

யாழில் சித்துபாத்தி மனித புதைகுழிப் பகுதிக்கு நீதி அமைச்சர் விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
"நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு" எனும் பிரதான கோஷத்தை முன்வைத்து, தங்களின் நீதிக்கான போராட்டத்தை உறவுகள் வீதியில் இறங்கி வெளிப்படுத்தினர்.
முன்னதாக, சித்துபாத்தி இந்து மயான சூழல், யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் நீதிமன்றப் பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படும் என யாழ்ப்பாணம் காவல்துறையினர் நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றைச் செய்திருந்தனர்.
அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க பிரதிநிதிகளான சிவகுமார் இளங்கோதை, கனகரஞ்சினி, சிவானந்தன் ஜெனிட்டா, வேலன் சுவாமிகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்பினருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி, சித்துபாத்தி இந்து மயான ஏ9 வீதி தொடக்கம் பஸ்ரியன் சந்தி வரையிலும், அங்கிருந்து யாழ்ப்பாண காவல்துறை நிலையம் வரையான பிரதான வீதியிலும் வீதி மறியல் செய்வதோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.
தடையை உடைத்துத் திரண்ட மக்கள் வெள்ளம்
 நீதிமன்றத் தடை உத்தரவையடுத்து, போராட்டத்தை முடக்கும் நோக்கில் பெருமளவிலான காவல்துறையினர் செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதிகளில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும், இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் இந்த போராட்டத்தில் 
கலந்துகொண்டனர். 
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுலோகங்களைத் தாங்கியவாறு, கண்ணீருடனும் ஆக்ரோஷத்துடனும் அவர்கள் தங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்கும் வருகை தரவுள்ள நீதி அமைச்சருக்கும் எதிராகப் பதிவு செய்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 

நாட்டின் மண்ணின் பெருமையாய் மக்கள் நெஞ்சில் வாழும் சேவகன்: கிளிநொச்சி முத்து மணிவிழா காணும் வரலாற்றுத் திருநாள்

கிளிநொச்சி முத்து மணிவிழா காணும்
ஆளுமைகளை அணிகலன்களாகக் கொண்ட ஆணழகனே,
கூட்டுறவும் வாழ்வியலும் உங்கள் வாழ்வின் வசந்தங்களே.
கல்வியியலை வாழ்வியலுடனும்,
வாழ்வியலை கல்வியியலுடனும் இணைத்து
பல தலைமுறைகளின் பாதையை ஒளிரச் செய்த பெருமகனே!
சூழல்நேயத்தை மனிதநேயமாகக் கொண்டு உழைத்த உத்தமனே, 
ஆணிவேர்வரை ஆராய்ந்து எழுதும் ஆற்றல் உமக்கே உரியது. 
உங்கள் குரலில் விளக்கவுரை கேட்க, 
சிவனும் மகனும் எழுந்தருளி நிற்பார்களோ! 
பக்தர்களாய் நாம் பரவசம் அடைவோம். 
உங்களுக்கு ஓய்வா? 
திட்டங்களே திணறுகின்றனையா! 
செயல்களே சிந்திக்கின்றனையா! 
உங்கள் சிந்தனையின் சக்கரம் ஓய்ந்தால், 
பல கனவுகளின் பயணமும் நின்றுவிடுமே! 
“Sustainability” இனி sustain ஆகிடுமோ? 
DITWA எமக்குப் பேரிடர் அல்ல; 
ஆனால் உங்கள் ஓய்வே
எம் மண்ணுக்குப் பேரிடராகும்! 
அன்பை விதைத்து, பண்பை அறுவடை செய்த 
அருமை மனிதரே! 
ஓய்வு என்பது உங்கள் பணிக்கு முடிவல்ல, 
புதிய பணிகளின் தொடக்கமே.
தங்கள் ஓய்வுக்காலம் சிறக்கவும்,
நீண்ட ஆயுளும், நிறைந்த உடல்–உள ஆரோக்கியமும் பெற்று, 
இன்னும் பல ஆண்டுகள் சமூகத்திற்கு ஒளிவிளக்காய் திகழவும் 
எமது இந்த இணையத்தின்  நல் வாழ்த்துகள் .உரித்தாகுக  .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 18 ஜூன், 2026

புதிய சட்டம்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறுவர்களுக்கு சமூக ஊடக கணக்குகள் தடை

புதிய சட்டம்  ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் பதின்ஐந்து வயதினர்   (Teenagers) சமூக ஊடகத் தளங்களில் கணக்குகளைத் (Social Media Accounts) துவங்குவதற்கும் பயன்படுத்துவதற்குமான குறைந்தபட்ச வயது எல்லை 15 ஆக அதிகாரப்பூர்வமாக சட்டத்தின் மூலம் 
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியிலான அச்சுறுத்தல்கள், கணினித் திரை அடிமைத்தனம் (Screen Addiction) மற்றும் மனநல பாதிப்புகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதையும், அவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை (Digital Safety) உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Meta (Facebook, Instagram), TikTok, Snapchat மற்றும் X (Twitter) போன்ற அனைத்து முன்னணி சமூக ஊடக நிறுவனங்களும் இந்த 15 வயது எல்லையைத் தங்களின் தளங்களில் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். 
வயது சரிபார்ப்புக்கான (Age Verification) அதிநவீன தொழில்நுட்ப முறைகளை அவர்கள் கையாள வேண்டும். 15 வயதிற்குட்பட்ட தங்களின் 
பிள்ளைகள் போலி விபரங்களை வழங்கி
 சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
விதிகளை மீறும் பட்சத்தில் பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
சட்டத்தை மீறி 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களைக் கணக்குகளைத் துவங்க அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக மில்லியன் கணக்கில் அபராதம் விதிக்கவும், தற்காலிகத் தடை விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.