புதன், 15 ஏப்ரல், 2026

யாழ்ப்பாணத்தின் மீது இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது 
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சூரியன் வடக்கு நோக்கி நகரும் போது, இன்று வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சியில் 
நிலவுகிறது.
அதற்கமைய இன்றைய தினம் நண்பகல் 12:10 மணியளவில் பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை, வருத்தலைவிளான், வசாவிளான் மற்றும் மணற்காடு ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

விசேட செய்தி: கொழும்பு திரும்புவோருக்கு இன்று முதல் கூடுதல் பஸ்கள் மற்றும் ரயில்கள்

சொந்த ஊர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்காக  சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, 15-04-2026.இன்று.முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 
அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக
 பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால் இந்தத் தற்காலிக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

தங்கம் மற்றும் வெள்ளி விலை உலக சந்தையில் அதிரடி அதிகரிப்பு

தற்போது .சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 
இன்று 15-04-2026.அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலகளாவிய பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதிய முதலீடுகளே இந்த விலை அதிகரிப்புக்கு (Safe-haven assets) காரணமாக அமைந்துள்ளது.
​அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,829.53 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் 79.49 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. ​சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என பொருளாதார 
நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் 24 கரட் தங்கத்தின் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் உலகப் பொருளாதாரக் காரணிகள் தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் தளம்பல் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

நாட்டில் கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்

இலங்கையில் கடந்த 10ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை 163,291,065 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த 3 நாட்களில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதில் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 59,815,450 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 
கடந்த 11 ஆம் திகதி 1,53,807 வாகனங்களுக்காக ரூ. 5,82,08,695 வருமானமும் 12-ஆம் திகதி 1,18,684 வாகனங்களுக்காக ரூ. 4,52,66,920 வருமானமும் ஈட்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


 

இலங்கையில் சூரிய மின்சக்தி இணைப்புகளை துண்டிக்க அறிவுறுத்தல்

நாட்டில் சித்திரை புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்கக்கிழமை (14), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழமையை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதால், தேசிய மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது
தமது வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களின் கூரை மேல் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளைக் கொண்டிருப்பவர்கள், இன்று பிற்பகல் 3:00 மணி வரை தமது இன்வெர்ட்டர்களை சுயமாக அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், தேசிய அளவில் மின்சாரப் பயன்பாடு பெருமளவில் சரிவடைந்துள்ளது.
மின்சாரத் தேவை மிகக் குறைவாக இருக்கும் இவ்வேளையில், சூரிய சக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்கட்டமைப்பிற்குள் செலுத்தப்பட்டால், அது விநியோக முறையில் பாரிய தொழில்நுட்பக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என மின்சாரத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தைப் பாதுகாப்பாகவும், தடையின்றியும் முன்னெடுப்பதற்காகவே இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
EDL (Private) Limited மற்றும் NSO (Private) Limited ஆகிய நிறுவனங்களின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், மின்சாரத் தடைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என தேசிய மின்கட்டமைப்புச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் இரணைதீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்கள் கைது

நாட்டில்  கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில், ஒரு விசைப்படகுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு இரணைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பிற்குள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து (14.04.2026)-இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் திரு எஸ். சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த நால்வரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 13 ஏப்ரல், 2026

ஆய்வு தகவல் பெருந்தோட்ட மக்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்:

 ஆய்வு தகவல் இலங்கையின் பெருந்தோட்டப்புறங்களிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளவர்களில் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும்
 வீடமைப்புத் தொகைமதிப்பு அறிக்கையின்படி, இலங்கையிலிருந்து தற்காலிகமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விரிவான தரவுகள் பல முக்கிய சமூகப் பொருளாதாரப் போக்குகளை வெளிப்படுத்துகின்றன. 
இந்த ஆய்வில், ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தற்காலிகமாக வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது அத்தகைய 
நோக்குடன் சென்ற 672,249 நபர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களில் ஆண்களின் பங்களிப்பு 61.4 சதவீதமாகவும் பெண்களின் பங்களிப்பு 38.6 சதவீதமாகவும் காணப்படுவதுடன், இந்தத் தரவுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள அந்தந்த வீடுகளின் எஞ்சிய உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியான பரம்பலை அவதானிக்கும்போது, இலங்கையின் பொருளாதார மையங்களாகத் திகழும் 
கம்பஹா, கொழும்பு மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவானோர் 
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.  குறிப்பாக கம்பஹா மாவட்டத்திலிருந்து 12.8 சதவீதத்தினரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10.6 சதவீதத்தினரும் தற்காலிகமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதற்கு
 நேர்மாறாக, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மிகக்குறைந்த சதவீதத்தினர் (தலா 0.2 வீதம்) பதிவாகியுள்ளனர். 
இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறத் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற போதிலும், தோட்டப்புறத் துறையில் மாத்திரம் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 
காணப்படுவது ஒரு
தனித்துவமான அம்சமாகும். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் நோக்குகையில், நாட்டின் உழைக்கும் சக்தியாகக் கருதப்படும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட பிரிவினரே 66.8 சதவீத பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளனர்.  18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 27.9 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 2.4 சதவீதமாகவும் 
காணப்படுகின்றனர். 
புலம்பெயர்வுக்கான முதன்மைக் காரணியாகத் தொழில் வாய்ப்பு விளங்குவதுடன், மொத்த எண்ணிக்கையில் 86 சதவீதமானோர் வேலைவாய்ப்புக்காகவே வெளிநாடு சென்றுள்ளனர். கல்விக்காகப் புலம்பெயர்ந்தோர் 8 சதவீதமாக இருப்பதுடன், அவர்கள் பெரும்பாலும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட பிரிவினராகவும், கொழும்பு
 மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். 
நாடுகளின் அடிப்படையில் 
பார்க்கும்போது, மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைத் தொழிலாளர்களின் பிரதான இலக்காகத் தொடர்ந்தும் நீடிக்கின்றன. ஒட்டுமொத்தமாக குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியா 
ஆகிய நாடுகளில் அதிகப்படியான இலங்கையர்கள் வசிக்கின்றனர். 
பாலின ரீதியாக நோக்குகையில், தொழில் நிமித்தம் செல்லும் ஆண்களில் 18.3 சதவீதத்தினர் ஐக்கிய அரபு இராச்சியத்தையும், பெண்களில் 34.3 சதவீதத்தினர் குவைத் நாட்டையும் தெரிவு செய்துள்ளனர்.
 அதேவேளை, 
உயர்கல்வியைத் தொடர்வதற்காக வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியா (24.1 வீதம்) மற்றும் ஜப்பான் (21.3 வீதம்) ஆகிய நாடுகளைத் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  இவை தவிர, குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காக அல்லது அவர்களுடன் தங்குவதற்காக இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செல்லும் போக்கும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
!என்பதும்  குறிப்பிடத்தக்கது
 
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

   

 

Blogger இயக்குவது.