புதன், 18 பிப்ரவரி, 2026

நாட்டில் ரூபாய் ஐயாஆயிரத்தை கையூடலாக பெற்ற நீதிபதி கைது

நாட்டில் வாழைச்சேனையில் உள்ள கோறளைப்பற்று பகுதியில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நேற்று அவரை கைது செய்துள்ளதாக 
அறிவித்துள்ளது. 
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம்
 தெரிவித்துள்ளது. 
சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவி குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் கோரி பராமரிப்பு வழக்கு தொடர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
முறைப்பட்டாளர் தேவையான கொடுப்பனவுகளைச் செய்யத் தவறியதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. 
இந்நிலையில்  திறந்த பிடியாணையை இரத்து செய்ய வேண்டி குறித்த வழக்கின்   சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க மேற்படி நீதிபதி  5,000 ரூபாயை லஞ்சமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில்  லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


.நாட்டில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் நீதி சபையில் சிறீதரன் சுட்டிக்காட்டு

யாழ் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் செயற்பாடுகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான 
விசாரணை அவசியம், இதற்கு இது வரையில் சரியான
 விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 
குற்றம் சாட்டியுள்ளார். 
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் ஒருவர் 
உயிரிழந்தார். 
இந்த சிறுவனின் உறவினர் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இந்த சம்பவத்துக்கும் நீதி
 கிடைக்கவில்லை. 
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு 2026.01.13 ஆம் திகதியன்று ' இலங்கையில் மோதல்கள்சார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள்' தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை 
வெளியிட்டுள்ளது. 
இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கமோ அல்லது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரோ பதிலளிக்கவில்லை. இலங்கையில் 1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறைகள் தீவிரமடைந்தன. 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் 23 பெண்களும், 04 ஆண்களும் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து சாட்சியமளித்துள்ளார்கள்.அறிக்கையில் ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 
 1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இந்த நாட்டில் கூர்மையடைந்தன. குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள். ஒருசிலர் பதவிகளிலும் உள்ளார்கள். இந்த
 அரசாங்கம் சட்டத்தை மதித்து செயற்படுவதாயின் இந்த அறிக்கையை 
அடிப்படையாகக் கொண்டு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 
 யுத்த சூழலில் உயிர்பிழைத்தவர்கள் புகாரளிப்பதற்கு
 முடியாத அளவுக்கு பல்வேறுப்பட்ட வகையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நீதிக்கான காத்திருப்பும் காலவோட்டத்தில் 
கேள்விக்குள்ளாக்கப்படுவது நீதி பொறிமுறைக்கு முரணானது. ஆகவே இந்த அறிக்கை பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது .
 ஆகவே நீதி வழங்கலில் இந்த அறிக்கையை ஒரு ஆதாரமாக கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

நாட்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண த
ரப் பரீட்சை .17-02-2026.இன்று  ஆரம்பமாகவுள்ளது. 
 பரீட்சைகள் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சை 
எழுதவுள்ளனர். 
 பரீட்சை இன்று முதல் 2026 பிப்ரவரி 26 வரை நடைபெறும். பரீட்சார்த்திகள் பரீட்சை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு சமூகமளிக்க
 வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் வலி. வடக்கில் தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க முற்படும் இராணுவம்

யாழ் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை
 நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு
 தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 16 பிப்ரவரி, 2026

யாழ் .காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு 
படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை
 கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து
 நடவடிக்கையின் போது, 
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த 
மீனவர்கள் பிடிபட்டனர்.
காங்கேசன்துறைக்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் படகோட்டிகள் உட்பட 25 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2 இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களது படகுகளும் கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை அண்மைக்காலமாக தீவிரப்படுத்தியுள்ளமை 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கையில் மலையக ரயில் சேவைகள் விரைவில் வழமைக்கு திரும்பும்

நாட்டில் .நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை ரயில் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக நானுஓயா ரயில்வே நிலையம் 
தெரிவித்துள்ளது.
 மேலும் மலையக மார்க்கத்தின் டிட்வாவுக்கு முந்தைய வழக்கமான ரயில் சேவைகளை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
 குறிப்பாக நானுஓயா ரயில் நிலையத்திற்கும் ஹட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த 
பகுதிகளில் மீள் கட்டமைப்பு பணிகள் துரிதக் கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
தற்போது மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நாட்டில் .O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகை

நாட்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே 
தெரிவித்துள்ளார்.
 நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளன.
 மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் 
அறிவித்துள்ளார். 
 டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும்  பரீட்சை ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.