சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இணையவழியூடான விண்ணப்பிக்கலாம்

நாட்டில்  நேற்றைய தினம் (ஜூலை 03, 2026) முதல் இணையவழியூடாக (Online) விண்ணப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த மாதம் ஜூலை 23, 2026 உடன் விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை நிறைவடைகிறது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அவர்களின் அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
தங்களது பாடசாலை அதிபர்கள் (Principals) ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அறிவுறுத்தல்களின்படி தாங்களாகவே நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, தாமதக் கட்டணங்கள் அல்லது கடைசி நேர தொழில்நுட்பத் தடைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகளை சுவீகரிக்க திட்டம் மக்கள் எதிர்ப்பு

நாட்டில் கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் 
பச்சிலைப்பள்ளி முகாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 25.73:ஏக்கர் தனியார் காணியினை 4வது மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணிக்காக சுவிகரிப்பதற்காகவும்,   இயக்கச்சி 
எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள 12 ஏக்கர் தனியார் காணியினை சுவீகரிப்பதற்காகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள   பச்சிலை பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன்,  இராணுவ தேவைக்காக இந்த காணிகளை சுவிகரிக்க முடியாது 
எனக் குறிப்பிட்டுள்ளார். 
 இது தொடர்பில் மேலும் கருத்த வெளியட்ட அவர்,  இது முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள். குறிப்பாக எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். தற்சமயம் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. 
ஏற்கனவே இந்த இரு காணிகளும் நில அளவை செய்ய முயற்சித்த போதும் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த காணிகளை இராணுவ தேவைகளுக்கு வழங்க முடியாது. அந்த காணி உரிமையாளர்கள் பல்வேறு
 நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து இருக்கிறார்கள் எனவே அந்த காணிகளை உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் டிஜிட்டல் பாதையில் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகள்

நாட்டில் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் "eAyurvedic" என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை நவீனப்படுத்தி, மக்களுக்கு விரைவான மற்றும் இலகுவான 
சேவைகளை வழங்குதல்.
இத்திட்டம் தற்போது அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 
நடைபெற்றது.
டொக்டர் யூ.எல்.நிகாயா (கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர்) டொக்டர் எம்.ஏ.நபீல் (கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர்) வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் (கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் பாலமுரளி அவர்களால், இந்த "eAyurvedic" செயலி 
எவ்வாறு இயங்குகிறது 
மற்றும் இதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துடன் நவீன தொழில்நுட்பம் இணைக்கப்படுவது, நோயாளர்களின் தரவுகளைப் பேணவும், சிகிச்சைகளை முறைப்படுத்தவும் பெரிதும் உதவும்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

நாட்டில்  லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம், இன்று (03) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு
12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4,465 ரூபாய் 
05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1,792 ரூபாய் 
2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 835 ரூபாய்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு
12.5 கிலோ சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4965 ரூபாய்
5 கிலோகிராம் சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1988 ரூபாய்
சர்வதேச எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, அதன் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக, தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


உயிரிழந்த தமிழர்களின் நினைவாக சுவிற்சர்லாந்தில் வீதி திறந்து வைப்பு

சுவிசில் .37 வருடத்திற்கு முன் தீ தாக்குதலில் உயிரிழந்த 04 தமிழர்கள் நினைவாக கூர் ( Chur )மாநிலத்தில் வீதி ஒன்று இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பேர்ன் சிவன் கோவில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா தமிழ்ப்பூசை முறைப்படி வழிபாடுகளை மேற்கொள்ள Chur நகரத்தின் முதல்வர் ஹான்ஸ்மார்டின்மியூலி நிகழ்வில் கலந்து கொண்டு உத்தியாக பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்தப்பகுதியில் ​1989ம் ஆண்டு ஜூலை 2ம் திகதி தமிழர் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல் ஒன்றில் நான்கு தமிழ் அகதிகள் உயிரிழந்தனர் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நினைவூட்டல் மற்றும் சமூக நீதிக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நாட்டு நகராட்சி சார்பில் ஒரு குறிப்பிட்ட பாதைக்கு மேற்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.​
இந்த தீ தாக்குதலில் கந்தையா பாலமுரளி, கந்தையா பாலமுகுந்தன், சத்திவேல் தம்பிராஜா, தேவராஜா சின்னத்தம்பி ஆகியோர் உயிரிழந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சி ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுள்

 

நாட்டில்  கிளிநொச்சி ஏ9 வீதியில் ஏற்படும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக, பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை அடிப்படையாகக் கொண்டு கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தடை விதிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் பகுதி பகுதி: இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையான ஏ9 வீதிப் பகுதி.
நேரங்கள்:
காலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை
பகல் 01:00 மணி முதல் 02:00 மணி வரை
ரிப்பர் (Tipper) வாகனங்கள் உட்பட அனைத்துக் கனரக வாகனங்கள். கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இன்றைய தினம் (03) கிளிநொச்சி நகர்பகுதியில் காவல்துறையினரால் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிராந்தியத்திற்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் புத்திக குணசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் அஞ்சல் ஓட்டத்தில் கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனை

நாட்டில்  14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 . 50 மீற்றர் அஞ்சல் ஓட்டம்.வெற்றி பெற்ற பாடசாலை: கொழும்பு மகளிர் கல்லூரி (Ladies' College, Colombo) - முதலிடம்.எடுத்துக்கொண்ட நேரம்: 26.88 வினாடிகள்
 (புதிய சாதனை)., 
கடந்த 2024 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்யாராமய பாடசாலை நிலைநாட்டியிருந்த 27.2 வினாடிகள் என்ற சாதனையே, 
தற்போது கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகளால்
 முறியடிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாக, கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ் முழுமையான அனுசரணையுடன் 
நடைபெறுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.