திங்கள், 11 மே, 2026

நாளை புதிய விதி முகநூல் பாவிக்கிறவர்களுக்கு புதிய சட்ட திட்டம் அமுல்

நாளை  புதிய  விதி முகநூல்(Facebook)  பமெட்டா என்றும் அழைக்கப்படும்) தொடங்குகிறது என்பதை மறக்காதீர்கள். இது உங்கள் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. இன்றுதான் கடைசி நாள்!!!
60 Minutes நிகழ்ச்சியின்படி: Facebook Meta இப்போது பொது நிறுவனமாகிவிட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் இதுபோன்ற ஒரு குறிப்பை 
பதிவிட வேண்டும்.
நீங்கள் குறைந்தது ஒரு முறையாவது இத்தகைய அறிக்கையை வெளியிடாவிட்டால், உங்கள் புகைப்படங்கள் மற்றும் உங்கள் சுயவிவரத்தில் உள்ள ஸ்டேட்டஸ் அப்டேட்கள் உட்பட அனைத்து தகவல்களையும் பயன்படுத்த அனுமதி அளித்ததாக தொழில்நுட்ப ரீதியாக 
புரிந்துகொள்ளப்படும்.
நான் இதன்மூலம் அறிவிக்கிறேன்: Facebook அல்லது Meta எனது எந்த தனிப்பட்ட தரவுகளையும் பயன்படுத்த எனது அனுமதியை நான் 
வழங்கவில்லை.
இந்த செய்தியில் எங்காவது உங்கள் விரலை அழுத்திப் பிடித்திருங்கள். “Copy” என்று வரும். அதை கிளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் பக்கத்திற்குச் சென்று, புதிய போஸ்ட் உருவாக்குங்கள். காலியான இடத்தில் எங்காவது விரலை வைத்து அழுத்துங்கள். “Paste” வரும், அதை
 கிளிக் செய்யுங்கள்.
இது முழுமையான மொழிபெயர்ப்பு. நீங்கள் நேரடியாக காப்பி செய்து பயன்படுத்தலாம்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நாளை சகல கிளினிக்குகளும் வழமை போல் இயங்கும்

 யாழ்  போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, நாளை (11.05.2026) முதல் வைத்தியசாலையின் சகல கிளினிக்குகளும் (Clinics) மற்றும் மருத்துவ
 சேவைகளும்
 வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி
 அறிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் 
அபாயம் நிலவியது.
இருப்பினும், சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ், கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் தேவையான மருந்துகள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மருந்துகளுக்கு மேலதிகமாக, இன்னும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் நோயாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி நாளை முதல் தமது கிளினிக் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தர முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளாஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் ர்.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு சுவிஸ் நாட்டில் பல வங்கிகளில் வங்கிக் கணக்கு திறக்க தடை


சுவிஸ் நாட்டில் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு. UNS வங்கி உட்பட மேலும் சில வங்கிகளில் வங்கிக் கணக்கு
 ஆரம்பிக்க முடியாது. 
காரணம் உலகில் அமெரிக்கர்களுக்கு அதிக அபாயம் இருக்கின்றதாம். பல  நாடுகளோடு போர். பல நாடுகளுக்காக போர் என பல நாடுகள்,  இனங்கள், மதங்களோடு அமெரிக்கா எதிர்ப்பை 
சம்பாதித்துள்ளது.
 ஒரு புறம் தன்னை பாதுகாக்க மற்றும் வியாபாரம் அத்தோடு உலகின் முதல்தர வல்லரசு மோகம். இவைகளைக் கொண்டே இவர்கள் உலகில் அபாயமானவர்கள் என வங்கிகளால் 
 நிராகரிக்கப்படுகின்றனர். 
அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க  பிரஜாவுரிமை உள்ளவர்கள் சுவிஸ் காப்புறுதி நிறுவனங்களில் ஆயுட் காப்பீடு செய்ய முடியாது. விண்ணப்பம் நிரப்பும்போது நீங்கள் அமெரிக்க பிரஜாவுரிமையா என கேள்வி கேட்கப்படும். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 10 மே, 2026

நாட்டில் தெனியாய கல்வி வளையத்தின் நான்கு பாடசாலைகளுக்கான விடுமுறை நீட்டிப்பு

இங்கு  மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் மேலும் இரண்டு நாட்களுக்கு 
மூடப்பட்டிருக்கும். 
 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக , சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெனியாய மண்டல கல்வி இயக்குனர் நிஷாக ஹெட்டியாராச்சி 
தெரிவித்தார். 
 அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழி மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை நாளை (11) மற்றும் மறுநாள் (12) மூடப்பட்டிருக்கும். . என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தெதுரு ஓயா மற்றம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுள் திறப்பு

இலங்கையில் .தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வான்கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு 11,100 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை, இன்று  பிற்பகல் 01.15 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், நான்கு வான் கதவுகள் தலா மூன்று அடி வீதமும், இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறந்துவிடப்பட்டுள்ளன. 
 இதன் ஊடாக வினாடிக்கு 8,113 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 9 மே, 2026

புதிய சட்டம் சுவிஸ் நாட்டில் மருத்துவ காப்புறுதியின் "பிரான்சிஸ்300 பிராங்குகளை 400 ஆக மாற்ற ஆலோசனை

மருத்துவக்காப்புறுதிக்கு .சுவிஸ் நாட்டில்  வருட ஆரம்பத்தில் பொறுப்புக் கட்டணம் குறைந்தது பிரான்சிஸ் (FRANCHISE) 300 இலிருந்து CHF 400 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை ஆரம்பித்துள்ளது. 
இது மக்கள் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைக்க ஊக்குவிப்பதற்காக. 
கொண்டு வரும் சட்டம் ஆகும். ஆனால் மக்கள் ஆதரவு பொறுத்து வருட இறுதியிலே முடிவு வரும் என நம்பப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் விசேட அறிவிப்பு - 18 சதவீதத்தால் உயரும் மின் கட்டணம்

நாட்டில் மின் கட்டண உயர்விற்கு  இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL)  அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் மின் கட்டணமானது 18 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 
இக் கட்டண உயர்வானது 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது. 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது
 என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது. 
இதன்படி இந்த விலை உயர்வு மொத்த நுகர்வோர் தளத்தில் சுமார் 5 சதவீதமானோரை  மட்டுமே பாதிக்கும் என்றும், இதன்மூலம் 95 சதவீதமான  மக்கள் அதிக செலவுகளிலிருந்து திறம்பட பாதுகாக்கப்படுவார்கள் என்றும் PUCSL உறுதிப்படுத்தியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.