வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

சுமார் 10 மில்லியன் யூரோ பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் மோசடி 9 பேர் கைது

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 9 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024ம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் அடங்குவதாக வழக்கறிஞர் அலுவலகம்
 தெரிவித்துள்ளது.
டிக்கெட் சோதனைகளை தவிர்ப்பதற்காக சுற்றுலா வழிகாட்டிகள் அருங்காட்சியக ஊழியர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பிரான்ஸ் மற்றும் துபாயில் உள்ள ரியல் எஸ்டேட்டில் சில பணத்தை முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது. 
அதிகாரிகள் 957,000 யூரோக்களுக்கு மேல் ($1.13 மில்லியன்) பறிமுதல் செய்துள்ளனர். இதில் 67,000 யூரோக்கள் ($79,459) வெளிநாட்டு நாணயமும், வங்கிக் கணக்குகளில் இருந்து 486,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பாராளுமன்றத்தின் இலங்கை தூதரகப் பணிகளுக்கான நியமனங்கள்

நாட்டில் பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு நான்கு தூதரகத் தலைவர்களின் பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. 
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பெப்ரவரி 06 பாராளுமன்றத்தில் குழு கூடிய போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதராக ஹொரண மஹாவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசிற்கான
 இலங்கை உயர் ஸ்தானிகராக வர்ணகுலசூரிய பீட்டர் ரோஹன் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசிற்கான
 இலங்கைத் தூதராக அனுர விதானகே மற்றும் பாலஸ்தீன மாநிலத்திற்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது ஃபௌசர் ஆகியோரின் பரிந்துரைகளை குழு அங்கீகரித்தது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 12 பிப்ரவரி, 2026

நாட்டில் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக இசட்- புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கே இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் குறித்த மாணவர்கள் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பப்படி பட்டப்படிப்புகளைப் தொடர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்காக மொத்தம் 200 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அந்தவகையில், புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


விமானம் மொகடிஷுவில் உடைந்து வீழ்ந்தது: 55 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்டார்ஸ்கை ஏர்லைன்ஸ் (StarSky Airline) விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
📍 இந்த விமானம் ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தைச் சந்தித்துள்ளது.
விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாமல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. ஜசீரா கடற்கரை (Jasiira Beach) ஓரமாக விமானம் வழக்கத்திற்கு மாறாகத் தாழ்வாகப் பறந்ததை அங்கிருந்த மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.
📸 விமானம் கடற்கரையோர ஆழமற்ற நீர்ப்பகுதியில் விழுந்ததும், அதிலிருந்த பயணிகள் அவசரமாக வெளியே குதித்துத் தப்பித்துள்ளனர். நேரில் பார்த்தவர்கள் எடுத்த வீடியோவில், விமானத்தின் ஒரு சிறகு (Wing) முற்றிலும் உடைந்து தனியாக நீரில் மிதப்பது போன்ற காட்சிகள்
 பதிவாகியுள்ளன.
🆘 விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கினர். விமானத்தில் பயணித்த 55 பயணிகளும் 
பாதுகாப்பாக 
மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைச் சோமாலிய விமானப் போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.



புதன், 11 பிப்ரவரி, 2026

நாட்டில் .க.பொ.த சாதாரண தர பரீட்சை - நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை

நாட்டில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவது.11-02-2026. இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள  பரீட்சைகள் திணைக்களம், சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 
 இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது கட்சியும் அருகிலுள்ள காவல் நிலையம், காவல் தலைமையகம் அல்லது பரீட்சைத் துறைக்கு முறைப்பாடு அளிக்கலாம் என 
அறிவித்துள்ளது. 
இதற்கிடையில், பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 வரை நாடு முழுவதும் உள்ள 3,545  மையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




 

நாடில் கொழும்புக்கும் அகமதாபாத்திற்கும் இடையே நேரடி விமான சேவை


கொழும்புக்கும் இந்தியாவின் அகமதாபாத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று
 வருகின்றன. 
 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அகமதாபாத்திற்கு நேரடி விமான சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக  சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ருவான் ரணசிங்க
 தெரிவித்தார். 
 “இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழியாக கொழும்புக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க நாங்கள் நம்புகிறோம். 
இதன் மூலம், இலங்கையில் உள்ள பக்தர்கள் குஜராத்துக்குச் சென்று மத யாத்திரை நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்” என்று துணை அமைச்சர் ருவான் ரணசிங்க மேலும் கூறினார்.
..என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

நாட்டில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம்

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி
 வேலைத்திட்டம் தொடர்பில், உலக வங்கி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை
 மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி
 எமது நாட்டுக்கு 
வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 
குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல்
 வளங்களை (சுற்றுலா, 
மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், 
தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும்
 நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு 
எதிர்பார்க்கப்படுகின்றது. 
இதனடிப்படையில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை
 மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கும் வகையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.







 

Blogger இயக்குவது.