வெள்ளி, 3 ஏப்ரல், 2026

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் பிரித்தானியாவில் 44,000 கார்களை திரும்ப பெறுகின்றன

 ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள சுமார் 44000 கார்களை மீளக் கோரியுள்ளது. வாகனத்தின் இன்ஜின் பகுதியில் தீவிபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேசோலின் துகள் வடிகட்டிக் குழாய்க்கும் 48-வோல்ட் பெல்ட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லாததே இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் எனக் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பிரச்சினையானது ஈரமான சூழ்நிலைகளில், இன்ஜின் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து, தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2023 மற்றும் 2026க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பியூஜோ, சிட்ரோயன், டிஎஸ் ஆட்டோமொபைல்ஸ், வாக்ஸ்ஹால், லான்சியா, ஆல்ஃபா ரோமியோ, ஜீப் மற்றும் ஃபியட் ஆகிய நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மீளக் கோரப்படுகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் முடிவுக்கு வருகிறதா எரிபொருள் வரிசை இலங்கைக்குக் கைகொடுக்கும் ரஷ்யா

உத்தியோகபூர்வ மகா இலங்கைக்கு  விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ரஷ்ய முதலீட்டாளர்கள் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதை ஊக்குவிக்கவும், ரஷ்யாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நிலவும் சுமார் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அமைச்சர் விஜித ஹேரத் 
சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக எரிசக்தித் துறையில் ரஷ்யா வழங்க முன்வந்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 2 ஏப்ரல், 2026

வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்..மட்டக்களப்பு சாதனை

.நாட்டில்  2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31-03-2026.அன்று  நள்ளிரவு உத்தியோகபூர்வமாக
 வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் முதலிடம்: சாதனை மாணவர்தெ. திருக்குமரன்

அகில இலங்கை ரீதியில் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழிமூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் 
தெய்வேந்திரன் திருக்குமரன் 
 முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த விடயத்தை பாடசாலையின் அதிபர் இளவேந்தி நிர்மலராஜ் எமது செய்திப் பிரிவுக்கு உறுப்படுத்தினார். அத்துடன், உயர்தர வணிகப் பிரிவில் மட்டக்களப்பு, 
காத்தான்குடி மகா 
வித்தியாலய மாணவன் மொஹமட் சுபைதீன் மொஹமட் பர்தான், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக, பாடசாலையின் அதிபர் அஹமட் லெப்பை சப்ரி எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என 
குறிப்பிடப்பட்டுள்ளது
. இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பரீட்சை மோசடிகள் அல்லது ஏனைய காரணங்களுக்காக, 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெறுபேறுகள் தொடர்பாகத் திருப்தியடையாத மாணவர்கள், தமது 
விடைத்தாள்களை மறுசீராய்வு செய்வதற்
கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 

புதன், 1 ஏப்ரல், 2026

நாட்டில் இருளில் மூழ்கும் வீதிகள்; அதிகரித்துவரும் விபத்துக்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள்

இலங்கையில்அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீதி மின்விளக்குகளை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அணைப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு ஜனாதிபதி, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அந்த சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இலங்கையில் அதிகளவிலான வீதி விபத்துக்கள் இடம்பெறும் காலப்பகுதியாக இந்த இரவு நேரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறானதொரு நேரத்தில் திட்டமிட்டு வீதி விளக்குகளை அணைப்பதானது, வீதிப் பாதுகாப்பை வேண்டுமென்றே சீர்குலைப்பதாகும். இதனை ஒரு மரணத்திற்குத் துணைபோகும் செயலாகவே 
நாம் பார்க்கிறோம்.
வீதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தல்.
பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்தல் என்பவற்றிற்கு இந்த விடயம் வழிவகுக்கும். அதேபோன்று பொதுமக்களின் பாதுகாப்பு முற்றாக சீர்குலையும்.
ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பசில் ராஜபக்ச இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கு எதிராகவும் எமது அமைப்பு குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போதைய அரசாங்கம் இவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்களை தவிர்த்து, முறையாகச் செயற்படுமானால், அன்று இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட பசில் ராஜபக்ச போன்றவர்களை சட்டப்பூர்வமாக இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என 
நாம் நம்புகிறோம்.
வீதி மின்விளக்குகள் மற்றும் சமிஞ்ஞை விளக்குகளுக்கு சூரிய சக்தியைப் (Solar Power) பயன்படுத்துவதற்கோ அல்லது மின்சாரத் தடையின் போது அவை இயங்குவதை உறுதிப்படுத்தும் முறையையோ இதுவரை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. 
இது மனித உயிர்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.

கல்வி அமைச்சு உடல் மற்றும் உள ரீதியான வன்முறையற்ற பாடசாலைச் சூழலை உருவாக்கக் நடவடிக்கை

இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான தண்டனைகளை வழங்குவதையும் முற்றாகத் தடைசெய்து கல்வி அமைச்சு புதிய கட்டளையை பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தல் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் வெளியிடப்பட்டுள்ள 11/2026 இலக்க புதிய சுற்றுநிருபத்தின்படி, தண்டனை என்ற பெயரில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 461/2012 (FR) இலக்க உயர் நீதிமன்ற
 தீர்ப்பின் அடிப்படையில், உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் "பூச்சிய சகிப்புத்தன்மை" (Zero Tolerance) கொள்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்: தண்டனை வழங்கும் நோக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மாணவர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டப்படி
 நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு தண்டனைகளை வழங்குவதை விடுத்து, அவர்களின் நேர்மறையான நடத்தைகளை ஊக்குவிக்கும் முறைகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 31 மார்ச், 2026

வட்டக்கச்சி மாணவன் கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பிடித்தார்

நாட்டில் இந்து வித்தியா விருத்திக்கழகம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடத்தைப் பெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த 
தரம் 07 மாணவன் 
கோ.தமிழரங்கன் தனது பரிசுப் பணத்தை முழுமையாக மாவட்ட விவாதிகள் கழகத்திற்கு வழங்கியுள்ளார். இந்த செயல் எங்களுக்கு பெருமையையும் நன்றியையும் அளிக்கிறது. 
தனது வெற்றியை தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளாமல், கழக வளர்ச்சிக்காக பகிர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. விவாதிகள் கழகத்தின்
 சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியை 
தெரிவித்துக்கொள்கிறோம். 
தமிழரங்கனின் இந்த செயல், மாவட்டத்தில் உள்ள சவால்கள் இருந்தாலும் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு நல்ல நினைவூட்டலாக உள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.