வெள்ளி, 1 மே, 2026

நாட்டில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு எரிபொருள் விலை மாற்றம் இல்லை

நாட்டில்  வெள்ளிக்கிழமை.01-05-2026.இன்று எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
எரிபொருள் விலை திருத்தம் குறித்து இன்று தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இன்று யாழில் திரண்ட மக்கள்: சுதந்திர மனித உரிமை அமைப்பின் மே தினப் போராட்டம்

இன்று  இலங்கையின் 137-வது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சுதந்திர மனித உரிமை அமைப்பினால் (Freedom Human Rights Organization) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கவனயீர்ப்புப் பேரணி இன்று யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமாக
 நடைபெற்றது.​
இந்தப் பேரணியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுலோகங்கள் ஏந்தப்பட்டிருந்தது, இனங்களைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்தின் பலத்தை பறைசாற்றுவதாக அமைந்தது "தொழிலாளர்களைப் பாதுகாப்போம்", "தொழில் முயற்சியைப் பாராட்டுவோம்" போன்ற பாதுகாப்பு வாசகங்கள் முழங்கப்பட்டன.
உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் சுதந்திரமான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கத்தோலிக்க மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் இந்தப் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவை வழங்கினர்.
தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் சுலோக அட்டைகளை ஏந்தி, யாழ். பொது நூலக முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 30 ஏப்ரல், 2026

அவுஸ்திரேலியவில் சுகமில்லாத மகனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தாய்

தாய் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி, பொதுமக்களிடம் நிதி வசூலித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அவுஸ்திரேலியத் தாய்க்கு அந்த நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை 
விதித்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயதுடைய இந்தப் பெண், தனது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டுள்ளார்.
இதனை நம்பிய பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறுவனின் மருத்துவச் செலவுக்காகப் பெருமளவு நிதியை 
வழங்கியுள்ளனர்.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தத் தாய் செய்த செயல்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுவன் புற்றுநோயாளி என்று நம்புவதற்காக அவனது தலைமுடி மற்றும் புருவங்களைச் சிரைத்துள்ளார்.
உடலின் பல்வேறு பகுதிகளில் கட்டுகளைப் போட்டு, அவனை எப்போதும் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர வைத்து 
நாடகமாடியுள்ளார்.
வசூலித்த பணத்தை மகனின் மருத்துவத்திற்குப் பயன்படுத்தாமல், தனது ஆடம்பரத் தேவைகளுக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் செலவிட்டுள்ளார். சிறுவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதும், அவனுக்குப் புற்றுநோய் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், பணத்திற்காகத் தாய் திட்டமிட்டு இந்த நாடகத்தை ஆடியது 
அம்பலமானது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, "ஒரு தாய் தனது சொந்தப் பிள்ளைக்கே இழைத்த இந்தக் கொடுமை மன்னிக்க முடியாதது"
 என்று சாடினார்.
பணத்திற்காகப் பிள்ளையின் ஆரோக்கியத்தையும் அடையாளத்தையும் சிதைத்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தொடருந்து பயணிகளின் கவனத்திற்கு: வடக்கிற்கான சேவைகளில் புதிய திருத்தங்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று, வவுனியா - புளியங்குளம் பகுதியில் இயந்திர சிக்கலுக்கு 
உள்ளாகியுள்ளது.
இதனால் வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அசங்க சமரசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தொடருந்தின் இயந்திர சிக்கலைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 29 ஏப்ரல், 2026

தற்போது மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் கப்பல்கள்

தற்போது ஈரான் மீதான போர் காரணமாக, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக
 பனாமா கால்வாய் அதிகார சபையின் நிதித் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
"மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை சீராகும் வரை இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று விக்டர் வியல் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி
 வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் கடற்கரையோரம் உள்ள நீர்வழியினைத் தவிர்ப்பதற்காக வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்ட அல்லது வேறு நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் இப்போது பனாமா கால்வாய் வழியாகப்
 பயணிக்கின்றன.
இந்தக் கால்வாயைக் கடப்பதற்கான சராசரி கட்டணம் ஒரு கப்பலுக்கு 300,000 டொலர் முதல் 400,000 டொலர் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், கடைசி நிமிடத்தில் கால்வாயைக் கடப்பதற்கான அனுமதியை உறுதி செய்ய சில கப்பல்கள் கூடுதலாக 425,000 டொலர் வரை கட்டணம் செலுத்துவதாக அசோசியேட்டட் பிரஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.                                                      என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சில நிறுவனங்கள் விமானங்கள் கட்டுப்படியாகாத இயக்கச் செலவுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது

 தற்போது ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை "
தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும், சில நிறுவனங்கள்
 "செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்" இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மே 1 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்னதாக, அவசர விலை நிவாரணத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் இக்கூட்டமைப்பு கோரிக்கை
 விடுத்துள்ளது.
மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டும் இலாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 11-18 டொலரிலிருந்து தற்போது 130 டொலருக்கும் அதிகமாக 
உயர்ந்துள்ளது.
இது மசகு எண்ணெய் விலையை விட (பீப்பாய் ஒன்றுக்கு 72 டொலரிலிருந்து 118 டொலராக உயர்வு) மிக வேகமாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. கொவிட்-19 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற "கிரெக் பேண்ட்" விலை நிர்ணய முறையை 
அறிமுகப்படுத்துமாறு 
இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. 
இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நியாயமான இலாபத்தைப் பெறுவதுடன், வானூர்தி நிறுவனங்களின் சுமையைக் குறைக்க முடியும். ஏப்ரல் 1 அன்று உள்நாட்டு வானூர்தி எரிபொருள் 
விலையை 25 வீதம் மட்டுமே உயர்த்திய அரசாங்கம், சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 100 வீதம் அதிகரித்துள்ளது.
இதனால் சர்வதேச சேவைகளை நடத்துவது சாத்தியமற்றதாகிவிட்டதோடு, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வானூர்தி எரிபொருளுக்கு தற்போது 11 வீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதுடன், மாநில அளவிலான மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 29 வீதம் மற்றும் டெல்லியில் 25 வீத வரி 
வசூலிக்கப்படுகிறது.
மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய மையங்களிலும் 16 வீதம் முதல் 20 வீத வரை வரி காணப்படுகிறது. இந்தியாவின் 95 சதவீத விமானப் போக்குவரத்துச் சந்தையைக் கொண்டுள்ள இந்த நிறுவனங்கள், போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் போன்றவற்றால்
 ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க கலால் வரி மற்றும் வற் வரி குறைப்பு போன்ற அவசர நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கனேடிய பிரதமர் எரிபொருள் மீதான உற்பத்தி வரியை நீக்குவதாக அறிவிப்பு

கனடா  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர் மார்க் கார்னி
 அறிவித்துள்ளார்.
இந்த வரி நீக்கம் வரும் திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை அமலில் இருக்கும். இதன் மூலம் பெட்ரோல் லீட்டருக்கு 10 காசுகள், டீசல் லீட்டருக்கு 4 காசுகள் குறையும், விமான எரிபொருள் லீட்டருக்கு 4 காசுகள் வரி நீக்கப்படும்.
இந்த தற்காலிக வரிச் சலுகையினால் அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் கார்னி, "ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது கனடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த 'வரி விடுமுறை' ஒரு பாலமாக அமையும்," என்று ஒட்டாவாவில் 
தெரிவித்தார்.
தற்போது கனடாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் சராசரி விலை 1.76 டொலராக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இது 1.26 டொலராக இருந்தது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.