புதன், 29 ஏப்ரல், 2026

தற்போது மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் கப்பல்கள்

தற்போது ஈரான் மீதான போர் காரணமாக, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக
 பனாமா கால்வாய் அதிகார சபையின் நிதித் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
"மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை சீராகும் வரை இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று விக்டர் வியல் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி
 வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் கடற்கரையோரம் உள்ள நீர்வழியினைத் தவிர்ப்பதற்காக வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்ட அல்லது வேறு நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் இப்போது பனாமா கால்வாய் வழியாகப்
 பயணிக்கின்றன.
இந்தக் கால்வாயைக் கடப்பதற்கான சராசரி கட்டணம் ஒரு கப்பலுக்கு 300,000 டொலர் முதல் 400,000 டொலர் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், கடைசி நிமிடத்தில் கால்வாயைக் கடப்பதற்கான அனுமதியை உறுதி செய்ய சில கப்பல்கள் கூடுதலாக 425,000 டொலர் வரை கட்டணம் செலுத்துவதாக அசோசியேட்டட் பிரஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.                                                      என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சில நிறுவனங்கள் விமானங்கள் கட்டுப்படியாகாத இயக்கச் செலவுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது

 தற்போது ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை "
தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும், சில நிறுவனங்கள்
 "செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்" இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மே 1 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்னதாக, அவசர விலை நிவாரணத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் இக்கூட்டமைப்பு கோரிக்கை
 விடுத்துள்ளது.
மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டும் இலாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 11-18 டொலரிலிருந்து தற்போது 130 டொலருக்கும் அதிகமாக 
உயர்ந்துள்ளது.
இது மசகு எண்ணெய் விலையை விட (பீப்பாய் ஒன்றுக்கு 72 டொலரிலிருந்து 118 டொலராக உயர்வு) மிக வேகமாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. கொவிட்-19 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற "கிரெக் பேண்ட்" விலை நிர்ணய முறையை 
அறிமுகப்படுத்துமாறு 
இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. 
இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நியாயமான இலாபத்தைப் பெறுவதுடன், வானூர்தி நிறுவனங்களின் சுமையைக் குறைக்க முடியும். ஏப்ரல் 1 அன்று உள்நாட்டு வானூர்தி எரிபொருள் 
விலையை 25 வீதம் மட்டுமே உயர்த்திய அரசாங்கம், சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 100 வீதம் அதிகரித்துள்ளது.
இதனால் சர்வதேச சேவைகளை நடத்துவது சாத்தியமற்றதாகிவிட்டதோடு, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வானூர்தி எரிபொருளுக்கு தற்போது 11 வீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதுடன், மாநில அளவிலான மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 29 வீதம் மற்றும் டெல்லியில் 25 வீத வரி 
வசூலிக்கப்படுகிறது.
மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய மையங்களிலும் 16 வீதம் முதல் 20 வீத வரை வரி காணப்படுகிறது. இந்தியாவின் 95 சதவீத விமானப் போக்குவரத்துச் சந்தையைக் கொண்டுள்ள இந்த நிறுவனங்கள், போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் போன்றவற்றால்
 ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க கலால் வரி மற்றும் வற் வரி குறைப்பு போன்ற அவசர நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கனேடிய பிரதமர் எரிபொருள் மீதான உற்பத்தி வரியை நீக்குவதாக அறிவிப்பு

கனடா  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர் மார்க் கார்னி
 அறிவித்துள்ளார்.
இந்த வரி நீக்கம் வரும் திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை அமலில் இருக்கும். இதன் மூலம் பெட்ரோல் லீட்டருக்கு 10 காசுகள், டீசல் லீட்டருக்கு 4 காசுகள் குறையும், விமான எரிபொருள் லீட்டருக்கு 4 காசுகள் வரி நீக்கப்படும்.
இந்த தற்காலிக வரிச் சலுகையினால் அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் கார்னி, "ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது கனடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த 'வரி விடுமுறை' ஒரு பாலமாக அமையும்," என்று ஒட்டாவாவில் 
தெரிவித்தார்.
தற்போது கனடாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் சராசரி விலை 1.76 டொலராக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இது 1.26 டொலராக இருந்தது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

யாழ் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பேருந்துகளில் பயணிகள் சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தொலைபேசி பேச தடை

.புதிய சட்டத்திட்டங்கள் சுவிற்சர்லாந்திலே  2026ம் ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்டது. அது கட்டடச் சட்டங்கள், பயணச் சட்டங்கள் என்ற பல 
வகையாக உள்ளது. 
இந்நிலையில், ஸுக் மாநிலத்தில் பேருந்துகளில் நாங்கள் பயணிக்கும் போது எந்த உணவுகளையும் அதற்குள்ளே வைத்துச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. 
அதே வழியில் தற்போது லவுசான்மாநிலத்தில் பேரூந்துகளில் இருந்து தொலைப்பேசி பேசுவது தடை 
செய்யப்பட்டிருக்கிறது. 
தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் மேற்குறிபிடிப்பட்ட சட்டம் தொடரும் என நம்பப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் தொடருந்து ஓட்டுநர்களின் அதிரடி முடிவு: வேகம் குறையும் புகையிரதங்கள்.

இலங்கையில் தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன 
தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொடருந்து பயணங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து ஊழியர்கள் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
"சாகரிகா தொடருந்து தடம் புரண்ட சம்பவத்திற்காக சாரதி உள்ளிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் கடமைக்கு சமூகமளித்தாலும், நிர்வாகம் அவர்களைப் பணியில் அமர்த்துவதில்லை. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட தவறு அல்ல" 
எனத் தெரிவித்தார்.
தொடருந்தில் 80 சதவீதமானவற்றில் வேகத்தை அளவிடும் கருவிகள் சரியாக இயங்குவதில்லை எனவும், தொடருந்து தண்டவாளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் அவர்
 குற்றம் சாட்டினார்.
"இதுவரை காலமும் ஓட்டுநர்கள் தமது வேலைப் பாதுகாப்பைப் பணயம் வைத்தே தொடருந்தை சரியான நேரத்திற்கு இயக்கினர். ஆனால் இனி அந்த அவதானத்தை எடுக்கப் போவதில்லை.
வேகக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதால் தொடருந்து தாமதமாகவே இயங்கும்" எனத் தெரிவித்தார். குறைபாடுகள் உள்ள தொடருந்துகளைத் திருத்திக் கொடுக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ள அவர்கள், அவ்வாறு செய்யத் தவறினால் அந்த தொடருந்துகளை இயக்குவதில் இருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பணி நேரம் மற்றும் சலுகைகளில் மாற்றம்

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள் (Scanned Signatures), டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு முதன்மையாக "meet.gov.lk" தளத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 02/2026 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி 
வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களை
 மேம்படுத்துமாறும்,
 தரவுப் பாதுகாப்பு (Data Protection) தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.