வியாழன், 7 மே, 2026

சூரிச்சில் சிகிச்சை சுவிட்சர்லாந்தில் முதல் ஹன்டா வைரஸ் தொற்று

சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அவர் தற்போது சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மத்திய பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இவர், பல ஹன்டா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்ட உல்லாசக் கப்பலில் முன்னர் பயணித்தவர்.
FOPH- இன் தகவல்படி , அந்த நபர் ஏப்ரல் மாத இறுதியில் தனது மனைவியுடன் தென் அமெரிக்கப் பயணம் முடித்துத் திரும்பியிருந்தார். 
நோயின் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையின்
 (HUG) குறிப்பு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நபரின் மனைவிக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை, ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அந்த நோயாளி வேறு நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாரா என்பது குறித்து மாகாண அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கைபேசி கவர் மூலம் போதைப்பொருள் கடத்தல் இளம் துறவி கைது

இலங்கை மெனிக்ஹின்ன,ஹுரிகடுவ பகுதியில் உள்ள ஒரு விகாரையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படும் 23 வயது இளம் துறவி ஒருவர் ரங்கலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
அவரிடமிருந்து 10 கிராம் 'ஐஸ்' அல்லது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டபோது, ​​அந்த போதைப்பொருள் அவரது கைபேசியின் பின்பக்க உறைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் 
கூறுகின்றனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர். ஜயந்த சமரக்கோனின் அறிவுறுத்தலின் பேரில், ரங்கலா பொலிஸ் நிலைய பொறுப்பதாரி நிஷாந்த விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரால் இந்தச் சோதனை 
நடத்தப்பட்டது. 
சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தத் துறவி குறித்து ரங்கலா பொலிஸ் மேலும் விசாரணை நடத்தி வருகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 6 மே, 2026

மீண்டும் சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் உயர்ந்த தங்கத்தின் விலை

மீண்டும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 
 கொழும்பு ஹெட்டிவீதி  தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8 மணியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை   7,000  ரூபாயால் உயர்ந்துள்ளது.
 அதன்படி,   22 காரட் தங்கத்தின் விலை 363,400 ரூபாவாகுவும்,  24 காரட் தங்கத்தின் விலை  395,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட வீதி புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 குறித்த கலந்துரையாடலில் I ROAD பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி புனரமைப்பு பணிகள்  கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நலிவு காரணமாக தடைப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நாட்டில் இன்றைய வானிலை பல பகுதிகளிலும் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

இலங்கையில்  பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்கு மேல் கடுமையான மழை பொழிவு பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 
 மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும். 
 இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் ஹொரணையில் பரபரப்பு சம்பவம் நான்கு பெண்கள் கைது

நாட்டில்  ஹொரண மற்றும் கோனப்பொல பகுதிகளைச் சேர்ந்த 26–29 வயதுடைய நான்கு பெண்கள், அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, ஹொரண பெல்லபிட்டிய பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு குளிக்கச் சென்ற இவர்கள், அங்கு மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் போதை நிலையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவர்களை நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அவர்கள் மது போதையில் இருந்ததாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று 
வருகின்றன.
 சம்பவம் தொடர்பான தகவல்கள் பொலிஸ் அறிக்கைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றன; விசாரணையின் பின்னரே முழு உண்மை உறுதியாகும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 4 மே, 2026

காணாமல் போன முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் .முல்லைத்தீவு -கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து
 இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர். 
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இரண்டு மீனவர்களும் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.