ஞாயிறு, 15 மார்ச், 2026

நாட்டில் கொக்குத்தொடுவாயில் தமிழர் காணியில் உப்பளம் அமைக்கும் பணி

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த
 சிங்களவர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள தொடர்சியாக 
முயற்சிக்கப்பட்டு வருகின்றது 
இந்த முயற்சி குறித்து முன்பே பல தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், நேற்றுமுன்தினம் வவுனியாவில் கூட்டம் ஒன்றில் 
கலந்துகொண்ட விவசாய அமைச்சர் லால்காந்த இந்த உப்பளம் அமைக்கும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபடமாட்டாது என உறுதியளித்தார் .
எனினும், அதனை மீறியும் நேற்றுகுறித்த நிறுவனத்தினால் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உப்பளம் அமைக்கும் முயற்சி தொடர்பாக
 நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அப்பகுதிக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு காணி
 உரிமையாளர்களான கொக்குதொடுவாய் தமிழ் மக்களோடும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இப்பகுதியில் , உப்பளம் அமைக்கும் வேலைகளுக்காக தங்கி நிற்கும் மணலாறு ஜனகபுர பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் முரண்பாடான நிலைமையை உருவாக்கி, தமக்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பாரிய நீரிறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி கொக்கிளாய் கடல் நீரேரியிலிருந்து கால்வாய் மூலமாக நீரை உப்பள வயல்களுக்கு பாய்ச்சும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த வயல்நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளை கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் எனும் பேரில் வனஜீவராசிகள் திணைகளம் எல்லைக்கற்களை 
இட்டு பயிர் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என காணி உரிமையாளர்களான கொக்குதொடுவாய் மக்களுக்கு தடை
ஏற்படுத்தி வந்தனர். இதனால் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத நிலை காணப்பட்டது,
 ஆனால் தற்போது அதே வனஜீவராசிகள் திணைக்களத்தால் சரணாலயம் என ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இந்த உப்பளம் அமைக்கப்பட்டு வருகிறது, ஆனால் வனஜீவராசிகள் திணைக்களம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் 
குற்றம்சாட்டுகின்றனர்.
மகாவலி அதிகார சபையின் ஆதரவோடு 48 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை ஆக்கிரமித்து இந்த உப்பளம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து, விவசாய நிலங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கொக்குத்தொடுவாய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் கட்டுவான் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் கைது

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக 
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும்
 கைது செய்தனர். 
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் , மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மூன்றாவது நபரிடமிருந்து வாள் ஒன்றினையும் 
மீட்டுள்ளனர். 
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 14 மார்ச், 2026

நாட்டில் பத்து மணிக்குப் பின் பாடசாலை விளையாட்டுச் செயற்பாடுகளை குறைக்க அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் போது மாணவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் போது மாணவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 
லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இதனைத் 
தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் விளையாட்டு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாணவர்களுக்கு அடிக்கடி இடைவேளைகளை வழங்கி அவர்களை நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தங்க வைப்பது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக விளையாடுவதைத் தவிர்த்து, மாணவர்களுக்கு அதிகளவில் நீர் மற்றும் உப்புச்சத்து அடங்கிய பானங்களை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரித்து மயக்கம், சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படக்கூடும் எனவும் மருத்துவ நிபுணர் 
எச்சரித்துள்ளார்.
அத்துடன், மாணவர் ஒருவருக்கு மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவரை
 குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றி, தேவைப்படின் அருகிலுள்ள அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா அறிவுறுத்தியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தற்போது விமான எரிபொருள் விலை பாரியளவில் உயர்வு- கட்டணங்கள் உயரும்

தற்போது விமான எரிபொருள் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு 
தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்ததை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான எரிபொருள் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு 
நெருக்கடி காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்ததை 
அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஒரு கலன் 2.25 அமெரிக்க டொலராக இருந்த விமான எரிபொருளின் விலை, தற்போது 4 டொலரைத் கடந்துள்ளதாகவும் பிரதி 
அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விலையேற்றம் விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்
 சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களில் எந்த வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் அவர் 
உறுதியளித்துள்ளார்.
எனினும், புதிதாகப் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு அன்றைய சந்தை விலைக்கு ஏற்பவே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கின் சில வான்பரப்புகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், விமானப் பயணங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மேலதிக எரிபொருள் செலவை நிறுவனங்கள் சுமக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து குறுகிய காலத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சலுகை விலையில் எரிபொருள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 13 மார்ச், 2026

சில பகுதிகளுக்கு நாட்டில் பலத்த மின்னல் எச்சரிக்கை

நாட்டின் சில மாகாணங்களிலும் மாவட்டங்களிலும்.13-03-2026- இன்று  பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



இலங்கைக்கு இந்த ஆண்டு 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

 நாட்டிற்கு 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை^
 தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை 
தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 623,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை
 குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 115,772 பயணிகள் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து 66,164 பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 56,114 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 45,939 பயணிகளும், சீனாவில் இருந்து 39,725 பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.
இவர்களைத் தவிர பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 66,996 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 12 மார்ச், 2026

சன் டிராக்ட், அன்ரனா யாழில்.விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

 இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை யாழில்  சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை 
முன்னெடுத்துள்ளனர். 
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமையவே பொலிசார் இந்த நடவடிக்கையை
 முன்னெடுத்துள்ளனர். 
இந்தியாவின் செய்மதி தொலைக்காட்சி சேவைகளை பெற்று கொள்வதற்கான , சன் டிராக்ட், வீடியோ கோன், டாட்டா ஸ்கை , டிஸ் ரிவி போன்ற டிஸ் அன்ரனாக்களை விற்பனை செய்யும் நிலையங்கள்,
 மற்றும் அவற்றுக்கான தொலைக்காட்சி 
சேனல்களுக்கான கட்டணங்களை அறவீடு செய்யும் நிலையங்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிகள் இன்றி அவை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு , விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை
 செய்யப்பட்டு வருவதனால் நாட்டிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதனால் , அவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.