புதன், 17 ஜூன், 2026

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பூனைகள் வியட்நாமில் மீட்பு

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் கடந்த மூன்று வருடங்களாக தெற்கு பகுதி முழுவதும் பூனைகளைத் திருடி, இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை அந்நாட்டு காவல்துறை 
கைது செய்துள்ளது.
அவர்களிடமிருந்து உயிருடன் இருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகளும், பனிக்கட்டியில் வைக்கப்பட்டிருந்த 80 இறந்த
 பூனைகளும் மீட்கப்பட்டன.
வியட்நாம் சட்டப்படி பூனை இறைச்சி விற்பனைக்கு அனுமதி இருந்தாலும், அதற்கான முறையான சான்றிதழ்கள் அவசியமாகும். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை சர்வதேச விலங்கு நல அமைப்பான ‘ஹியூமேன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ்’ (Humane World for Animals) பாராட்டியுள்ளது.
 மீட்கப்பட்ட பூனைகளில் 40 பூனைகள் இதுவரை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனினும், திருடப்பட்டபோது ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் காரணமாக மீட்கப்பட்ட பூனைகளில் சுமார் 100 பூனைகள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது காவல் நிலையத்தில் சான்றுகளாக வைக்கப்பட்டுள்ள எஞ்சிய பூனைகளுக்குத் தேவையான உணவு மற்றும் மின்விசிறி 
வசதிகளை விலங்கு நல அமைப்பு செய்து கொடுத்துள்ளதுடன், அவற்றைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


டெஸ்லா காரை எரித்து சுவிஸ் ஜெனீவாவில் G7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு

சுவிஸ்  ஜெனீவா நகரில் G7 உச்சிமாநாட்டிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இவியன் நகரில் G7 மாநாடு தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நகரின் நடுவே ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்கள் ஒரு டெஸ்லா காருக்குத் தீ வைத்துள்ளனர். மேலும், வங்கி ஜன்னல்களை உடைத்தும், பொலிஸார் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகையையும்
 பயன்படுத்தினர்.
"G7 கூட்டணி வேண்டாம்" என்று வலியுறுத்தும் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் 20,000 பேர் 
கலந்துகொண்டனர்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் பெரும் பணக்கார நாடுகளான G7 நாடுகளின் வசம் மட்டுமே இருப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஜெனீவா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; கிளிநொச்சியில் நபர் கைது

நாட்டில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கிளிநொச்சி பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வரும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்த சந்தேக நபர், நபர் ஒருவரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து நேற்று (16) நண்பகல் வேளையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வாக்குறுதிகளை வழங்கி, பாதிக்கப்பட்டவரிடமிருந்து ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு நெருக்கமான தொகையைப் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார் 
என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 16 ஜூன், 2026

நாட்டில் டெங்கு தொற்றால் கடுமையான அழுத்தத்திற்கு சுகாதாரத்துறை :மக்களிடம் வேண்டுகோள்

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ எச்சரித்துள்ளார் 
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் சேர்க்கை காரணமாக, குறிப்பாக கொழும்பில் உள்ள சில மருத்துவமனைகள் ஏற்கனவே நெரிசலை சந்தித்து
 வருவதாகக் கூறினார். 
 "நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், மருத்துவமனை அமைப்பால் சமாளிக்க முடியாமல் போகலாம். நாம் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்," என்று 
அவர் கூறினார். 
 மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சுமையைக் குறைப்பதற்கு, டெங்கு பரவுவதைத் தடுப்பதே மிகவும் பயனுள்ள வழியாகும் என்று வலுயுறுத்திய அவர், நடைபெற்று
 வரும் டெங்கு
 தடுப்புத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்கவும், தங்கள் வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சுவிஸ் ஜெனீவாவில் சுவிஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகள் இடையே பேச்சுவார்த்தை

சுவிஸ் ஜனாதிபதிகை பார்மெலின், ஜெனீவா விமான நிலையத்தில் தனது உக்ரைன் நாட்டு சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை இருதரப்பு சந்திப்பிற்காக வரவேற்றுள்ளார். 
கீவ் மற்றும் மாஸ்கோ இடையேயான மோதலில் சுவிட்சர்லாந்தின் நல்லெண்ண முயற்சிகள், உக்ரைனின் புனரமைப்பு மற்றும் அந்நாட்டுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை சந்திப்பின் போது 
பேசப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியை வரவேற்ற சுவிஸ் ஜனாதிபதி, "ஜனவரியில் நடந்த டாவோஸ் மாநாட்டிற்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ரௌஸ்டெம் உமரோவ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் குகதாஸ் மாதுலன் உலகையே திரும்பி பார்க்க வைத்த இளம் வீரன்

யாழ்  சிறுவன்  இந்தியா A அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், வெறும் 2 போட்டிகள் மட்டுமே விளையாடி அனுபவம் கொண்ட 19 வயது இளம் வீரன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 
நேற்று நடந்த இந்தியா A அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்து 'சூப்பர் ஓவர்' என்ற நிலைக்குச் சென்றது. 
அப்போது இலங்கை அணி சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடி 16 ஓட்டங்கள் குவித்தது. 
இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது. 
இந்நிலையில், எதிரணியில் எந்தவொரு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் சந்தித்த மற்றும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வைபவ் சூரியவன்ஷி இலங்கையை சேர்ந்த 19 வயது இளைஞனின் பந்துவீச்சிற்கு 
திணறியுள்ளார். 
குறித்த ஓவரில் இரண்டு வீரர்களையும் தனது துல்லியமான பந்துவீச்சு வித்தையால் நிலைகுலையச் செய்து, அந்த சூப்பர் ஓவரையே ஒட்டுமொத்தமாக அடக்கி, இலங்கை A அணிக்கு ஒரு காவிய வெற்றியைப் பெற்று தந்துள்ளார் யாழ்ப்பாணத்து மண்ணின் 
வீரன் குகதாஸ் மாதுலன். 
தோனி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களாலேயே பாராட்டுப் பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வாகி, இன்று இலங்கை நாட்டின் 'A' அணியை அசாத்தியமாக வெற்றி பெற வைத்திருக்கும் இந்த யாழ்ப்பாணத்து சிங்கம், தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே ஒரு
 மாபெரும் உத்வேகம். 
நேற்றைய வெற்றி தம்புள்ளையில் இலங்கை 'ஏ' அணிக்கு கிடைத்த ஒரு மறக்க முடியாத வெற்றி ஆகும். 
நம் மண்ணின் பிள்ளைகள் தடைகளை உடைத்து, உலக மேடையில் சாதிக்கும் போது பிறக்கும் அந்தப் பெருமித சந்தோஷத்திற்கு ஈடு இணையே ஏதுமில்லை. இன்னும் பல உயரங்களைத் தொட 
மாதுலனுக்கு இந்த இணையத்தின் நல் வாழ்த்துக்கள் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 15 ஜூன், 2026

சமையல் எண்ணெய் விநியோக நிறுவனத்தில் யாழில் நிதி மோசடி: விற்பனைப் பிரதிநிதி கைது

சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை யாழில்  மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய நபர் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் மேற்கொண்ட உள்ளக விசாரணையின் போது மோசடி தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு 
செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், போலியான ஆவணங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி முத்திரைகள் (Rubber Stamps) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தற்போது 
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சிலர் இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடையிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாக கூடுதல் கைது நடவடிக்கைகளும் இடம்பெறலாம் என 
தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.