ஞாயிறு, 17 மே, 2026

உங்கள் பற்களை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்

உங்கள் பற்களை பாதுகாப்பதற்கு நம்மில் பலருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய 
காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான 
பின்பே பல்பிரச்சனை
 வந்த நிலையில், தற்போது குழந்தையிலேயே பிரச்சனை வந்துவிடுகின்றது
.சொத்தை பல், ஈறுகளில் பிரச்சனை, பல்வலி போன்ற 
பிரச்சனையை சந்தித்து வருகின்றோம். இதற்கு தீர்வு மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தவறான பழக்கமாகும். இந்நிலையில் மருத்துவமனை செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பல் பிரச்சனைக்கு
 சில இயற்கையான தீர்வினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதினா இலையினை வெயிலில் காயவைத்து 
பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் வலி ஏற்படாது. அதே போன்று வேப்பம் குச்சியினால் பல் துலக்கினால் பல் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக
 காணப்படும்.
ஓமம், கிராம்பு, கற்பீரம் இவற்றினை தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து பின்பு வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் 
வீக்கம் தீர்ந்துவிடும்.
இதே போன்று கொய்யா இலைகளை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும். மேலும் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த வாய் கொப்பளித்தால் பல் வலி
 பிரச்சனை தீரும்.
சாப்பிட்ட பின்பு ஒவ்வொரு முறையும் நன்றாக வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன்பு மற்றும் எழுந்த பின்பு கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும்.
பற்களை தேய்க்கும் போது ஈறுகளை நன்றாக தேய்த்து தடவி கழுவ வேண்டுமாம். அவ்வாறு செய்தால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடைகின்றது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

போதைப்பொருளுடன் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் 
சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, அவரது பொருட்களை
 சோதனை செய்தனர்.
அப்போது அவரது பொருட்களில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா 
கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 16 மே, 2026

அமுலாகும் புதிய சட்டம் கனடாவில் மீறினால் மூவாயிரம் டாலர்கள் வரை அபராதம்

கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள பைப்பிங் பிளவர் (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் கொடுமை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.
வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைப் பலகைகளை மதிக்காமல் நடந்துகொண்டால் 2000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்

இலங்கையில் இந்த நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
.எனினும், ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அதுகுறித்து அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதனை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளது” என அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.  
இதனிடையே 2013ம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தது.
அதன் மூலம் முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பிளவுண்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடாத்த இலங்கை அரசு தற்போது அறிவிப்புக்களை விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் நவற்கிரி அச்சுவேலியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி

இன்று  நாட்டிற்கு வடகிழக்காக வளிமண்டலத்தில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகச் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அச்சுவேலி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று முதல் இடைவிடாது கனமழை
 கொட்டித் தீர்த்துள்ளது.
திடீரெனப் பொழிந்த இந்த அதிகளவிலான மழைவீழ்ச்சி காரணமாக அச்சுவேலி நகரின் முக்கிய வீதிகள், தாழ்நிலப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. 
அச்சுவேலி - பருத்தித்துறை பிரதான வீதியின் சில இடங்களில் வௌ்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி, நவற்கிரி , சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, இப்பகுதியில் அதிகளவில் பயிரிடப்படும் மிளகாய், வெங்காயம் மற்றும் மரக்கறித் தோட்டங்கள் 
வௌ்ளநீரினால் சூழப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என உள்ளூர் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் நகர்வு மற்றும் தீவிரத்தன்மையை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து
 வருகின்றது. 
இதன் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணம், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மேலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என
 எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 15 மே, 2026

இன்று இலங்கையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சி

தற்போது உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதனைத் தொடர்ந்து, இலங்கையிலும்  15, -05-2026.இன்று  தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம்: நேற்றைய விலையான 395,000 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 394,000 ரூபாவாக
 பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம்: நேற்றைய விலையான 363,400 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 362,400 ரூபாவாக
 பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை மாற்றமே உள்நாட்டிலும் தங்கம் விலை குறைய பிரதான காரணமாக அமைந்துள்ளமை 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

நாட்டில் மாரவில பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது, அதிக விலைக்கு அரிசி விற்ற பல வர்த்தகர்கள் அடையாளம்
 காணப்பட்டனர்.
கட்டுப்பாட்டு விலையை மீறி நுகர்வோரைச் சுரண்டிய வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் இவ்வாறான சுற்றிவளைப்புகள்
 தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது அதன் 
அதிகபட்ச சில்லறை விலையை (MRP) சரிபார்க்குமாறும், மேலதிக விலைக்கு 
விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.