வியாழன், 9 ஏப்ரல், 2026

நாட்டில் சுகாதார அமைச்சரின் அதிரடி உத்தரவு: மருத்துவத் துறையில் பெரும் மாற்றம்

தற்போது .மத்திய கிழக்கு போர் நிலைமைக்கு மத்தியில் நாட்டிலும் மக்கள் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் போதே அரச மருத்துவர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், சுகாதார சேவைக்கு புதிதாக இணைந்துள்ள இளம் மருத்துவர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவ பயிற்சிக்கு 
பின்னரான மருத்துவ நியமனங்களை வழங்கியமைக்கு 
எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பின்னரான மருத்துவ நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், இந்த மருத்துவ நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 பேரும் முதல் முறையாக நியமிக்கப்படுவதால் இதற்கு
 இடமாற்று சபைக்கு எவ்வித தொடர்பும் இல்லை 
என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, அவர்கள் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட அரச மருத்துவமனைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணியில் இணையவுள்ளனர்.
இந்த நிலையில், புதிய மருத்துவர்கள் தங்களுடைய இடமாற்றங்களை ஏற்றுக்கொண்டு சேவையில் இணையும் போது, அதனை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது பொருத்தமற்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கு முகம் கொடுப்ப தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் 
அறிவித்துள்ளார்.
அத்துடன், புதிய மருத்துவர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியாமல் சேவையில் இணைந்துக் கொள்ளுமாறும் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சேவையில் இணையும் யாரும் தங்களுடைய பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையின் ஊடாக உரிய பாதுகாப்புகள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று சுவிஸில் தங்கம் விலை வீழ்ச்சி நூறு பிராங்குகள் குறைவு.

இன்று சுவிட்சர்லாந்தில் தங்க நகைகளின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலை தற்போது கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, தினமும் சுமார் 100 சுவிஸ் பிராங்குகள் வரை தங்க நகைகளின் விலை குறைந்து வருவது சந்தையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் உலகளாவிய போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்திற்கு அந்நேரத்தில் அதிகமான கோரிக்கை ஏற்பட்டது. 
இதனால் தங்க நகைகள் மற்றும் தங்கப் பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தன. ஆனால் தற்போது அந்தப் போர் நிலைமை முடிவுற்றதுடன், உலக சந்தையில் அமைதி நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. 
இதன் விளைவாக தங்கத்திற்கு இருந்த அதிக கோரிக்கை குறைந்து, அதன் விலை படிப்படியாக சரிவை நோக்கி செல்கிறது. இதே போக்கே சுவிட்சர்லாந்திலும் தெளிவாகக் 
காணப்படுகிறது.
விலை குறைவால், தங்க நகைகள் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. குறிப்பாக திருமணம் மற்றும் விழாக்கால தேவைகளுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் இந்நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என வணிகர்கள்
 தெரிவிக்கின்றனர்.
எனினும், உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் மாற்றங்கள் தங்க விலையை மீண்டும் பாதிக்கக்கூடியவை என்பதால், முதலீடு செய்யும் முன் கவனமாக ஆராய வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், போர் காரணமாக உயர்ந்த தங்க விலை, தற்போது அமைதி நிலை காரணமாக குறைந்து வருவது சுவிஸ் சந்தையில் ஒரு முக்கிய பொருளாதார மாற்றமாக பார்க்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஏப்ரல், 2026

.பயிற்சி மருத்துவர்கள் பிரித்தானியாவில் ஆறு நாள் வேலை நிறுத்தம்

.இன்று  பிரித்தானியாவில் பயிற்சி மருத்துவர்கள் ஆறு நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் அதி அவசர சிகிச்சைகள் தொடர்ந்தாலும், தாமதமான சந்திப்புகளால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும் என சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் 
ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், 2026-2027 முதல் சராசரியாக 4.9 சதவிகித அடிப்படை ஊதிய உயர்வை உள்ளடக்கிய அரசாங்கத்தின் 
சலுகையை நிராகரித்தது.
அதே நேரத்தில், கூடுதலாக 1,000 பயிற்சி இடங்களுக்கான சலுகை கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை: நோயாளர்கள் அவதி

நாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர் 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைமில் நாளார்ந்தம் பல ஆயிரம் நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்ற நிலையில் வைத்தியசாலையில் மருந்தாளருக்கான வெற்றிடம் காணப்படுவதால் மருந்துகளை பெறும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நீண்ட தூரங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மருந்து பெறுவதற்கு நீண்ட வரிசையாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அசெளகரியங்களை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

சர்வதேச விமானங்களை ஈரான் போருக்குப் பிறகு ரத்து செய்த இந்திய விமான நிறுவனங்கள்

மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து, அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட விமானங்களை
 ரத்து செய்துள்ளன.
முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் பரவலாக மூடப்பட்டதால், குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான நீண்ட தூர வழித்தடங்களில், விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை இடைநிறுத்தவோ அல்லது மாற்றுப்பாதையில் இயக்கவோ 
நிர்பந்திக்கப்பட்டன.
"சராசரியாக, இந்திய விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருவழிப் பயணங்களையும் சேர்த்து தினமும் சுமார் 300 முதல் 350 விமானங்களை இயக்கி வந்தன. 
இன்று அந்த எண்ணிக்கை 80-90 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், இந்த நிலைமை தொடங்கியதிலிருந்து, அதாவது பிப்ரவரி 28 முதல், மொத்த விமானங்களின் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியுள்ளது,"
 என்று மேற்கு 
ஆசிய நிலவரங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அசங்பா சுபா ஆவோ குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலத்திரனியல் ஸ்கூட்டர் இங்கிலாந்தில் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை


இங்கிலாந்து முழுவதும் இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் தீ விபத்துகள் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளன. சுமார் 432 இ-பைக் தீ விபத்துகளும், 147 இ-ஸ்கூட்டர் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. 
இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இந்த அபாயகரமான தீ விபத்துகள், பெரும்பாலும் பழுதடையும் பேட்டரிகள், மாற்று கருவிகள் அல்லது சார்ஜர்களால் ஏற்படுவதாக
 கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைந்த கடுமையான விதிமுறைகளைக் கொண்ட ஆன்லைன் சந்தைகள் மூலம் வாங்கப்படும் “குறைந்த விலைப் பொருட்களால்” இவை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஏற்படும் தீ வேகமாகப் பரவி, நச்சு ஆவியை உருவாக்கக்கூடும். இது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 6 ஏப்ரல், 2026

நாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து, ரயில் சேவைகள்

நாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி சுமார் 1500 மேலதிக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 
ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள்
 இயக்கப்படவுள்ளன.
காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரயில்வே திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட ரயில் சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.