வெள்ளி, 17 ஏப்ரல், 2026

நீங்கள் அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு மாற்று வழி:

மக்கள் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை மூன்றாம் திதியான 'அட்சய திருதியை' என்றாலே பலரது நினைவுக்கும் வருவது தங்கம் 
வாங்குவதுதான்.
ஆனால், தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதில்லை, இந்நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எளிமையான வழிபாடுகளுமே வற்றாத செல்வத்தைத் தரும் என்பது ஐதீகம்.
தங்கம் வாங்க இயலாதவர்கள் கூட, தங்கள் இல்லத்தில் குபேர யோகத்தைப் பெற செய்ய வேண்டிய எளிமையான 'அட்சய பானை' இரகசியம் குறித்து
 இங்கே காண்போம்.
அட்சயம் என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். இந்நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற உங்கள் வீட்டில் உள்ள ஒரு பித்தளை அல்லது வெண்கல பானையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பானையைச் சுத்தப்படுத்தி குங்குமம் இட்டு, அதன் உள்ளே பச்சரிசியை முழுமையாக நிரப்ப வேண்டும். தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், அந்த அரிசி பானையின் மேல் ஒரு நாணயத்தை அல்லது 
வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு தங்க நகையை
 வைத்து அலங்கரிக்கலாம்.
பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்டி, துளசி மற்றும் மலர்களால் அலங்கரித்து நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள் 
என்பது நம்பிக்கை.
இதேவேளை உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதம். ஆலமர இலையில் 'மகா மிருத்யுஞ்ஜய' மந்திரத்தை ஜெபித்து, அந்த இலையை நோயாளியின் தலையணையின் கீழ் வைப்பதன் மூலம் தீராத நோய்களும் விரைவில் குணமாகும் என .
அட்சய திருதியை அன்று நாம் பிறருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு பல மடங்கு புண்ணியமாகத் திரும்பும். ஏழைகளுக்கு உணவு, குடை மற்றும் நீர்மோர் வழங்குவது மறுபிறவியில் ராஜயோக
 வாழ்க்கையைத் தரும்.
ஆடை தானம் நோய்களைத் தீர்க்கும்; பழங்களைத் தானம் செய்வதால் உயர் பதவிகள் தேடி வரும். கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இன்று பானகம் தானம் செய்வது விசேஷம்.
இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது தீராத வறுமையை நீக்கி, குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும். புண்ணிய நதிகளில் நீராடி, உங்களால் முடிந்த சிறு உதவியை எளியவர்களுக்குச் செய்வதன் மூலம் இந்த அட்சய திருதியையில் குறைவில்லாத செல்வத்தையும், பேரானந்தத்தையும் பெற்றிடுங்கள்! என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்: நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR கட்டாயம்

.இலங்கையில் பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் 
நிறைவுக்கு வருகிறது
இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் உயர்கல்வித் தரம்: புதிய அறிக்கையின் முக்கிய தகவல்கள்

.இலங்கையில்  2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி ,  கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் 
அடைந்துள்ளது.
குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, கலாநிதி (PhD) பட்டதாரிகள்: 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது. 
இது மொத்த மக்கள் தொகையில் 0.1% ஆகும். பல்கலைக்கழக பட்டதாரிகள்: பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2012 இல் 358,052 (3.0%) ஆக காணப்பட்ட இந்த எண்ணிக்கை, 2024 இல் 780,958 (5.6%) ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாம் நிலை கல்வி (Tertiary Education): மூன்றாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களின் எண்ணிக்கை 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக கணிசமான வளர்ச்சியைப் பதிவு 
செய்துள்ளது.
உயர்தரம் (G.C.E. A/L): க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரித்துள்ளது.
இடைநிலைக் கல்வி (Secondary Education): இடைநிலைக் கல்வியைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்ந்துள்ளது. 
இது இரண்டு காலப்பகுதிகளிலும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 58% ஆகும். ஆரம்பக் கல்வி (Primary Education): ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பாடசாலை செல்லாதோர்: முறையான பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்களின் எண்ணிக்கை 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்தத் தரவுகளின்படி, இலங்கையில் அடிப்படை மற்றும் ஆரம்பக் கல்வி மட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வித் தகைமைகளை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளமை உறுதியாகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 16 ஏப்ரல், 2026

நாட்டில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் நாளை செயல்படாது

நாட்டில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட பொது சேவைகள் 
 நாளை 17-04-2026. செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




இலங்கை முழுவதும் மேற்பட்ட சோதனையில் சிக்கிய நாநூறு வர்த்தகர்கள்

.நாடு முழுவதும்  சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகைகளின் போது, விதிமுறைகளை மீறிய 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 2000 விசேட முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள்
 சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தமை
 மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை 
விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் வசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 15 ஏப்ரல், 2026

யாழ்ப்பாணத்தின் மீது இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது 
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சூரியன் வடக்கு நோக்கி நகரும் போது, இன்று வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சியில் 
நிலவுகிறது.
அதற்கமைய இன்றைய தினம் நண்பகல் 12:10 மணியளவில் பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை, வருத்தலைவிளான், வசாவிளான் மற்றும் மணற்காடு ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

விசேட செய்தி: கொழும்பு திரும்புவோருக்கு இன்று முதல் கூடுதல் பஸ்கள் மற்றும் ரயில்கள்

சொந்த ஊர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்காக  சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, 15-04-2026.இன்று.முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 
அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக
 பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால் இந்தத் தற்காலிக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.