புதன், 8 ஏப்ரல், 2026

.பயிற்சி மருத்துவர்கள் பிரித்தானியாவில் ஆறு நாள் வேலை நிறுத்தம்

.இன்று  பிரித்தானியாவில் பயிற்சி மருத்துவர்கள் ஆறு நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் அதி அவசர சிகிச்சைகள் தொடர்ந்தாலும், தாமதமான சந்திப்புகளால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும் என சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் 
ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், 2026-2027 முதல் சராசரியாக 4.9 சதவிகித அடிப்படை ஊதிய உயர்வை உள்ளடக்கிய அரசாங்கத்தின் 
சலுகையை நிராகரித்தது.
அதே நேரத்தில், கூடுதலாக 1,000 பயிற்சி இடங்களுக்கான சலுகை கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை: நோயாளர்கள் அவதி

நாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர் 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைமில் நாளார்ந்தம் பல ஆயிரம் நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்ற நிலையில் வைத்தியசாலையில் மருந்தாளருக்கான வெற்றிடம் காணப்படுவதால் மருந்துகளை பெறும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நீண்ட தூரங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மருந்து பெறுவதற்கு நீண்ட வரிசையாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அசெளகரியங்களை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

சர்வதேச விமானங்களை ஈரான் போருக்குப் பிறகு ரத்து செய்த இந்திய விமான நிறுவனங்கள்

மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து, அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட விமானங்களை
 ரத்து செய்துள்ளன.
முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் பரவலாக மூடப்பட்டதால், குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான நீண்ட தூர வழித்தடங்களில், விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை இடைநிறுத்தவோ அல்லது மாற்றுப்பாதையில் இயக்கவோ 
நிர்பந்திக்கப்பட்டன.
"சராசரியாக, இந்திய விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருவழிப் பயணங்களையும் சேர்த்து தினமும் சுமார் 300 முதல் 350 விமானங்களை இயக்கி வந்தன. 
இன்று அந்த எண்ணிக்கை 80-90 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், இந்த நிலைமை தொடங்கியதிலிருந்து, அதாவது பிப்ரவரி 28 முதல், மொத்த விமானங்களின் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியுள்ளது,"
 என்று மேற்கு 
ஆசிய நிலவரங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அசங்பா சுபா ஆவோ குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலத்திரனியல் ஸ்கூட்டர் இங்கிலாந்தில் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை


இங்கிலாந்து முழுவதும் இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் தீ விபத்துகள் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளன. சுமார் 432 இ-பைக் தீ விபத்துகளும், 147 இ-ஸ்கூட்டர் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. 
இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இந்த அபாயகரமான தீ விபத்துகள், பெரும்பாலும் பழுதடையும் பேட்டரிகள், மாற்று கருவிகள் அல்லது சார்ஜர்களால் ஏற்படுவதாக
 கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைந்த கடுமையான விதிமுறைகளைக் கொண்ட ஆன்லைன் சந்தைகள் மூலம் வாங்கப்படும் “குறைந்த விலைப் பொருட்களால்” இவை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஏற்படும் தீ வேகமாகப் பரவி, நச்சு ஆவியை உருவாக்கக்கூடும். இது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 6 ஏப்ரல், 2026

நாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து, ரயில் சேவைகள்

நாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி சுமார் 1500 மேலதிக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 
ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள்
 இயக்கப்படவுள்ளன.
காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரயில்வே திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட ரயில் சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் சூரியன் உச்சம் கொடுப்பதால் வெப்பம் அதிகரிப்பு வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப அறிவுறுத்தலை 
விடுத்துள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்'நாட்டின் பல மாகாணங்களில் 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த வெப்ப அதிகரிப்பு நிலவும் என
 எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாள் முழுவதும் போதியளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருப்பதுடன், அவ்வப்போது வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.
இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியவும். கடுமையான வெயில் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ளவும்.
முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும்.தொடர்ச்சியாக நிலவும் இந்த வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் அதிகமான எரிபொருட்களுடன் முப்பத்தி ஒரு பேர் கைது

 இலங்கைமுழுவதும் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 03 முதல் நேற்று (04) வரை மேற்கொள்ளப்பட்ட  இந்த கைது நடவடிக்கையின் போது 47,006 லிட்டர் டீசல், 2,668 லிட்டர் பெற்றோல் மற்றும் 2,706 லிட்டர் மண்ணெண்ணெய் உட்பட 52,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.