ஞாயிறு, 19 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.53 ரூபா
ஜப்பானிய யென் 2.12 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 458.62 ரூபா
யூரோ 390.35 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.38 ரூபா
சுவிஸ் பிராங் 423.46 ரூபா
கனடிய டாலர் 243.42 ரூபா
கத்தார் ரியால் 94.05 ரூபா
குவைத் தினார் 1108.93 ரூபா
சவுதி ரியால் 91.96 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் பலாலி சந்தியில் ஐந்தாவது வாரமாக தொடர்ந்த போராட்டம்

யாழ் வலி வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு 
பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
 நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் .ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தீவிபத்து

நாட்டில் ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்.19-07-2026- இன்று காலை  தீ விபத்து
 ஏற்பட்டுள்ளது. 
தெஹிவளை  தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 18 ஜூலை, 2026

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம்:மாநகர முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

.மிகவும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி (ஆடி மாதம்) கொடியேற்றத்துடன் கோலாகலமாக
 ஆரம்பமாகவுள்ளது.
திருவிழாக் காலத்தில் நாட்டின் நாலாதிசைகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (MOH Office) இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
திருவிழாக் காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பின்வரும் அத்தியாவசியப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது: பக்தர்களுக்கான தூய்மையான குடிநீர் விநியோகம் மற்றும் தற்காலிக மலசலகூட வசதிகள்.
ஆலய சூழலில் விசேட சுகாதார மற்றும் துப்புரவுப் பணிகள் (சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பு). போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள் (Parking). தற்காலிக வியாபாரக் கடைகளை முறைப்படுத்துதல் மற்றும் அன்னதான விநியோகக் கண்காணிப்பு.
இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதிநிதிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மக்கள் பயனடையும் வகையில் வன்னேரிக்குளத்தில் இலவச மருத்துவ முகாம்

யாழ் மருத்துவச் சங்கம் (JMA) மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை (RDHS Kilinochchi) ஆகியன இணைந்து இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தன.
நடைபெற்ற இடம்: கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் (Primary Medical Care Unit) இம்முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. 
இதனால் அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் பயனடைந்தனர். பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள்: கிராமப்புற மக்களுக்கான விசேட மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவ நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பொது வைத்திய நிபுணர்கள் (Physicians) குழந்தை வைத்திய நிபுணர்கள் (Pediatricians) சத்திரசிகிச்சை நிபுணர்கள் (Surgeons) தோல் மற்றும் சருமநோய்களுக்கான நிபுணர்கள் (Dermatologists) பெண்நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் (Gynecologists) பல் மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் (Dentists) கண் 
மருத்துவ நிபுணர்கள் (Ophthalmologists) வழங்கப்பட்ட சேவைகள்: முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக
 வழங்கப்பட்டன.
பரிசோதனை வசதிகள்: நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், முறையான சிகிச்சைகளைத் தீர்மானிப்பதற்கும் அவசியமான குருதிப் பரிசோதனைகளும் (Blood Tests) இந்த மருத்துவ முகாம் வளாகத்திலேயே இலவசமாக முன்னெடுக்கப்பட்டமை .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் புகைப்பிடிப்பவர்களால் அரசாங்கத்திற்கு 214 பில்லியன் ரூபாய் நிதி இழப்பு

இலங்கையில். புகைப்பிடிப்பதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக பேராசிரியர் எல்.எல். அமில இசுரு
 தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் நாளாந்தம் சுமார் 50 பேர் மரணமடைவதுடன், ஒரு ஆண்டுக்கு 20,000 இளம் உயிர்கள் இதனால் பறிபோவதாகவும் அவர் 
சுட்டிக்காட்டினார். 
நேற்று நடைபெற்ற நேர்காணல் ஒன்றின்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார். 
புகைப்பவர்களின் நேரடி மற்றும் மறைமுக சுகாதாரப் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 214 பில்லியன் ரூபாயைச் செலவிட வேண்டியுள்ளதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிகரெட் புகைப்பவர்கள் தங்களைச் சுற்றியுள்ள புகைக்காத பொதுமக்களுக்கும், குறிப்பாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் தீங்கை விளைவிப்பதுடன், உலகளவில் இவ்வாறு 
மற்றவர்கள் 
வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் காரணமாக மாத்திரம் வருடாந்தம் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலகளாவிய சுகாதாரத் தரவுகள் எச்சரிக்கின்றன. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 17 ஜூலை, 2026

நாட்டில் வவுனியாவில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

நாட்டில் வவுனியாவில் 14 வயதுடைய தனது சொந்த மகளைத் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம்: 
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை:
2022 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தந்தைக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
தண்டனை விபரம்:
4 குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு & அபராதம்: 
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும், நீதிமன்றத்திற்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
"பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.