செவ்வாய், 28 ஜூலை, 2026

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில்  கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில பகுதிகளில் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் முல்லைத்தீவு பிரதான வீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில்  கிளிநொச்சி மாவட்டத்தின் A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆம் கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள புளியம்பொக்கனை முதலாவது பாலம் இன்று (28) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
40 மீற்றர் நீளமுடைய இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பெருந்தொற்று 
மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் ரூ.206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதையடுத்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாலத்தை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு 
கையளித்தார்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புனரமைப்புப் பணிகள் தாமதமான காலப்பகுதியில் இரண்டு உயிரிழப்புகள் மற்றும் பல வீதி விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், பாலம் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை அப்பகுதி மக்களால் வரவேற்கப்படுகிறது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கம்பளையில் இருபது இலட்சம் கையூட்டல்: இருவர் கைது

இலங்கையில் பேராதனை போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் டெண்டர் போட்டியில் இருந்து விலகுவதற்காக, 20 இலட்சம் லஞ்சம் பெற்ற இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
 கைது செய்துள்ளது.
குறிப்பிட்ட உணவு விநியோகக் ஒப்பந்தத்திற்கான டெண்டரில், தனது தந்தை மற்றும் மாமனார் பெயர்களில் விலைமனுக்களைச் சமர்ப்பிக்காமல் இருக்கவும், இதன்மூலம் போட்டித்தன்மையைத் தவிர்க்கவும் முதன்மைச் சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடம் முதலில் 30 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரியுள்ளார். 
பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் இத்தொகை 25 இலட்சமாக குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாயாகப் பேசப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று காலை கம்பளை 
அஞ்சல் நிலைய
 வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து 20 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டபோதும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்டபோதும் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட இருவர் சுமார் 30 நிமிட இடைவெளியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 27 ஜூலை, 2026

இலங்கையில் டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை: தடுப்பூசியைப் பெற அனுமதி கோரிக்கை

இலங்கையில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், "புதிய டெங்கு தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்னரே செலுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பு பெற முடியும்.
பல நாடுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், இலங்கையிலும் இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

விமான ஓடுபாதைக்குள் கனடாவில் புகுந்த வாகனம் ஓட்டுநர் கைது

 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். 
மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது.
இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு 
திரும்பியது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைத . என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கடுமையான விலங்கு நலச் சட்டம்: சிறப்பு வர்த்தமானி வெளியீடு

நாட்டில்  விலங்குகள் நலனைப் பாதுகாக்கவும், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கவும் புதிய விலங்கு நலச் சட்ட வரைவு சிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின் கீழ் விலங்குகளைத் தாக்குதல், துன்புறுத்துதல், பட்டினி போடுதல், சட்டவிரோதப் போட்டிகள் மற்றும் வேட்டையாடுதல் போன்ற செயல்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 2,50,000 ரூபாய் வரை அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்
 விதிக்கப்படும்.
அத்துடன், கொடூரமான முறையில் விலங்குகளைக் கொல்பவர்களுக்கு 5,00,000 ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க சட்ட வரைவு பரிந்துரைக்கிறது.
மேலும், செல்லப்பிராணி விற்பனையகங்கள் மற்றும் இனப்பெருக்க மையங்களுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, விலங்குகளைப் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வோர் மீது 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி


.இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.63 ரூபா
ஜப்பானிய யென் 2.10 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 454.79 ரூபா
யூரோ 388.95 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 241.14 ரூபா
சுவிஸ் பிராங் 418.76 ரூபா
கனடிய டாலர் 242.69 ரூபா
கத்தார் ரியால் 94.08 ரூபா
குவைத் தினார் 1108.18 ரூபா
சவுதி ரியால் 92.03 ரூபா
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.