வியாழன், 6 ஆகஸ்ட், 2026

. கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் யாழில் திருட்டு

யாழில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது. 
உரும்பிராய் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் , தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து தயார் செய்த பின்னர் , தூக்கத்திற்கு
 சென்றுள்ளனர் 
 காலையில் எழுந்து பார்த்த போது , ஆடைகள் களையப்பட்டு , நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை வீட்டார் பார்த்து , அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
 முறைப்பாடு செய்தனர் 
முறைப்பாட்டின் பிரகாரம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் , தாலிக்கொடி உள்ளிட்ட 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் .மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம்

நாட்டில் .மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைப் பகிரங்கப்படுத்தக்கூடிய வகையில், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காகக் கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் திருகோணமலை பாடசாலையில் குளவிக்கொட்டி : மாணவர்கள் வைத்தியசாலையில்

நாட்டில் திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில்.06-08-2026- இன்றுகாலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மூன்று மாணவர்களின் நிலைமை தீவிரமடைந்ததையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 5 ஆகஸ்ட், 2026

இன்று தங்கம், மற்றும் வெள்ளி விலையில் மீண்டும் அதிரடி உயர்வு

தற்போது  சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்.05-08-2026. இன்று  அதிகரித்துள்ளன.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,132.03 அமெரிக்க டொலருக்கும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 60.83 அமெரிக்க டொலருக்கும் விற்பனை
 செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை உயர்வின் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் பெறுமதி மாற்றம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக கூறப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 

நாட்டில் முதன்முறையாக அரச நிதியில் அதிவேக நெடுஞ்சாலை திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள்

நாட்டில்..தேசிய அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு, 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் 132 கிலோமீற்றர் நீளத்திற்கு விரிவாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான முக்கிய திட்டங்களில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம மற்றும் பொத்துஹெர – கலகெதர ஆகிய பகுதிகளின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
மேலும், குருணாகல் – கலேவெல இடையிலான 38 கிலோமீற்றர் பகுதியின் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.233 பில்லியன் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்புடன் 12 ஒப்பந்தப் பொதிகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 
முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் வெளிநாட்டு கடன்களை நம்பாமல் இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் பாடசாலை பையை உயிர் காக்கும் கருவியாக மாற்றிய மாணவன்

நாட்டில்..2023ம் ஆண்டில் பாடசாலை பையை உயிர் காக்கும் பையாக மாற்றி வெள்ளத்தில் தப்பிக்க இலங்கை மாணவன் ஒருவர் 
வழிகாட்டியுள்ளார்.
இலங்கையின் காலி, பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த லென்துவ என்ற பள்ளி மாணவன், தனது அபார சிந்தனையால் பள்ளிப் பையை ஒரு உயிர் காக்கும் உபகரணமாக்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும்
 ஈர்த்துள்ளான்.
ஆபத்துக் காலங்களில் மாணவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் இவன் உருவாக்கிய இந்த எளிய கண்டுபிடிப்பு, சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த மாணவனின் தந்தை ஒரு கடலோர உயிர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடலில் ஏற்படும் ஆபத்துகள், நீரில் மூழ்கி மனித உயிர்கள் பலியாவது மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்து தனது தந்தை மூலம் இந்த மாணவன் சிறு வயது முதலே நிறையக் கேட்டு வளர்ந்துள்ளான்.
இத்தகைய விபத்துகளில் இருந்து, குறிப்பாக பள்ளி மாணவர்களின் உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற தீவிர சிந்தனையே இவனது புதிய கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக அமைந்தது.
இதற்கு ஒரு சிறந்த தீர்வாக, அம்மாணவன் தினசரி பள்ளிக்கு எடுத்துச் செல்லும் சாதாரண பள்ளிப் பையையே (School Bag) அவசரகாலத்தில் தண்ணீரில் மிதக்கும் 'உயிர் காக்கும் பையாக' (Life-saving Bag) 
மாற்றியமைத்தான்.
வெள்ளத்திலோ அல்லது ஆழ்கடலிலோ எதிர்பாராத விதமாக விழ நேரிட்டால், இந்தப் பையை ஒரு பாதுகாப்பு உடற்பகுதி மிதவை போல பயன்படுத்தி, நீரில் மூழ்காமல் நீண்ட நேரம் மிதக்க முடியும் என்பதை அவன் நீரில் இறங்கி வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டினான்.
சிறு வயதிலேயே சுயநலமின்றி, பிறரது பாதுகாப்பிற்காக ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து இந்த மாணவன் உருவாக்கிய கண்டுபிடிப்பு இலங்கைக்குக் கிடைத்த ஒரு பெருமிதமாகும். 
இயற்கை பேரிடர்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த பாதுகாப்பு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நாட்டில் கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் இயங்கும்

நாட்டில்  சீரற்ற வானிலை காரணமாக.04-08-2026- இன்று மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் 05-08-2026-நாளை  வழமைபோல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழை மற்றும் பாதகமான வானிலை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய வானிலை நிலைமையை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, நாளை முதல் கல்வி நடவடிக்கைகளை வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.