செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

நிவாரணம் அளிக்கலாம் காய்ச்சலுக்கு துளசி–கிராம்பு கஷாயம்:

உங்களுக்கு துளசி மற்றும் கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் வெதுவெதுப்பான கஷாயம், காய்ச்சல் நேரத்தில் தொண்டை அசௌகரியம் மற்றும் உடல் சோர்வுக்கு ஓரளவு தற்காலிக நிவாரணம் 
அளிக்கலாம். 
இருப்பினும், இது வைரஸ் காய்ச்சலைக் குணப்படுத்தும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல. காய்ச்சல் இருக்கும் போது 
போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவ 
உணவுகளை
 எடுத்துக்கொண்டு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ, பல நாட்கள் தொடர்ந்து
 நீடித்தாலோ அல்லது மூச்சுத்திணறல், கடுமையான பலவீனம் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்: அரசாங்கம் மறுப்பு

நாட்டில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், குறித்த இடம் கிளிநொச்சி மாவட்டத்தின் முகன்பம் பகுதியில் உள்ள கண்ணகிபுரத்தில் அமைந்துள்ளதாகத்
 தெரிவித்தார். இந்தக் காணி 1919ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புப் பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் 
அவர் குறிப்பிட்டார்.
அரச காணியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பயிர்ச்செய்கை மற்றும் கட்டுமானங்களே இந்த விவகாரத்தின் பின்னணியாகும். இது தொடர்பாகப் பல தடவைகள் நீதிமன்றத் தலையீடுகளும் இடம்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த இடத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தியாகராசா குலதீபன் என்பவருக்கு எதிராக ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 10 ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டதாகவும், பின்னர் அது 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டு கற்றாழை மற்றும் மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆடை உற்பத்தி நிலையத்தைக் கொண்ட மூன்று மாடிக் கட்டடமும் அந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த நபரை காணியிலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்ததாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, இந்த விவகாரம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமுடன் தொடர்புடையது அல்ல. அரச சொத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், பயிர்ச்செய்கை மற்றும் மணல் அகழ்வு தொடர்பான குற்றச்சாட்டுகளையே இது உள்ளடக்கியதாக அவர் 
விளக்கமளித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிரதேச தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், அரச காணிகளில் இதுபோன்ற
 சட்டவிரோத
 நடவடிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலும் பதிவாகின்றன என்றார்.
எனவே, இத்தகைய சம்பவங்களை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புலம்பெயர்ந்தோர் சுவிட்சர்லாந்திருந்து தானாகவே வெளியேறு கின்றனர்

.தற்போது 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 40,000 புலம்பெயர்ந்தோர் வெளியேறியுள்ள நிலையில், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 4.3 சதவிகிதம் அதிகம் என்கிறது புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, மக்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு, வேலைதான் முக்கிய காரணமாக உள்ளது.
ஆக, வேலைக்காக வருபவர்கள், வேலைச்சூழல் மோசமானதாக மாறும்போதோ, வேறு ஏதாவது ஒரு நாட்டில் நல்ல வேலை கிடைக்கும்போதோ சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
அத்துடன், வேறு பல காரணங்களுடன், பணி ஓய்வும் மற்றொரு 
காரணமாக உள்ளது.
அதாவது, சுவிட்சர்லாந்தில் வேலை செய்பவர்கள் பணி ஓய்வு பெறும்போது, தங்கள் நாடுகளில் கிடைக்கும் சுவிஸ் ஓய்வூதியத் தொகை, சுவிட்சர்லாந்தில் இருக்கும்போது கிடைக்கும் தொகையை விட சற்று அதிகமாக உள்ளதால் அதன் காரணமாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் 
துவங்கியுள்ளனர் பலர்.
இதற்கிடையில், ஒரு பக்கம் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வர, சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையோ குறையத் துவங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 74,112. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் குறைவு ஆகும்.
விடயம் என்னவென்றால், பல நாடுகள் புலம்பெயர்ந்தோரை தொல்லையாக கருதத் துவங்கியுள்ள நிலையில், பேபி பூமர்கள் என
 அழைக்கப்படும் 1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்தவர்கள் மொத்தமாக பணி ஓய்வுபெறும்போது, அதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை பல நாடுகள் விரைவில் உணரப்போகின்றன என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 17 ஆகஸ்ட், 2026

சித்த மருத்துவரின் விளக்கம் மஞ்சளை மிஞ்சும் மருந்து உண்டா

என்று நம் முன்னோர் கூறியது வெறும் பழமொழி அல்ல. மஞ்சளை மிஞ்சும் மருந்துண்டா  நமது உணவு, அன்றாடப் பராமரிப்பு மற்றும் 
பாரம்பரிய மருத்துவ முறைகளில் மஞ்சள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மஞ்சளின் முக்கியக் கூட்டுப்பொருளான குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பண்புகளைக் கொண்டதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சித்த மருத்துவப் பார்வையில் மஞ்சள் சித்த மருத்துவத்தில் மஞ்சள் “மஞ்சள்” / “ஹரித்ரா” போன்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு, பல்வேறு உடல் நலப் பயன்பாடுகளுக்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக மஞ்சள்
 • சிறு வீக்கம் மற்றும் அழற்சி
 • தொண்டை கரகரப்பு, தொண்டை அசௌகரியம்
 • சளி, இருமல் • சரும அரிப்பு மற்றும் தடிப்பு
 • சிறு காயங்கள் மற்றும் தோல் அழற்சி
 • செரிமானக் கோளாறுகள்
 • வாய்ப்புண் போன்ற சிறிய தொந்தரவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மஞ்சள் பால் சளி, இருமல் அல்லது தொண்டை கரகரப்பு போன்ற நேரங்களில், சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அருந்துவது நம் வீடுகளில் தலைமுறைகளாகப் பின்பற்றப்படும்
 பாரம்பரிய வழக்கம்.
இது தொண்டைக்கு இதமான உணர்வைத் தரலாம்; ஆனால் தொற்றுகள் அல்லது நீடித்த அறிகுறிகளுக்கு இது மாற்று சிகிச்சை அல்ல. வேப்பிலை + மஞ்சள் குளியல் வேப்பிலைக் கொழுந்து
 மற்றும் மஞ்சள் சேர்த்த தண்ணீரில் குளிப்பதும் பாரம்பரிய சருமப் பராமரிப்பு முறைகளில் ஒன்று.
மஞ்சள் மற்றும் வேப்பிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள் + உப்பு வெந்நீர் கொப்பளித்தல் தொண்டை கரகரப்பு, லேசான தொண்டை அசௌகரியம் அல்லது வாயில் ஏற்படும் சிறிய அழற்சி போன்ற நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வாய் கொப்பளிப்பது நம் பாரம்பரியத்தில் காணப்படும் ஒரு எளிய
 வீட்டுப் பழக்கம்.
குறிப்பாக உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கொப்பளிப்பது தொண்டை அசௌகரியத்தைத் தற்காலிகமாகக் குறைக்க உதவலாம். மஞ்சளில் உள்ள குர்குமினுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் 
கூறுகின்றன. 
இருப்பினும், மஞ்சள் கொப்பளிப்பது தொண்டைத் தொற்று அல்லது வேறு நோயை குணப்படுத்தும் என்பதற்கு போதுமான மருத்துவ ஆதாரம் இல்லை. கொப்பளிக்கும் நீரை விழுங்காமல் 
துப்பிவிட வேண்டும்.
குழந்தைகள் சரியாக கொப்பளித்து துப்ப முடியும் வயதில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். பெண்களின் மஞ்சள் குளியல் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது நமது பாரம்பரிய அழகு மற்றும் சருமப் பராமரிப்பு முறைகளில் ஒன்று.
மஞ்சள் சருமத்தின் தோற்றத்தையும் சுத்தமான உணர்வையும் மேம்படுத்த உதவலாம்.
ஆனால் மஞ்சள் தேய்ப்பதால் தேவையற்ற உடல் முடி நிரந்தரமாக அகலும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. உணவில் மஞ்சள் தினசரி சமையலில் அளவோடு மஞ்சள் சேர்த்துக் கொள்வது
 எளிய நல்ல பழக்கம்.
ஆனால் ஒரு விஷயம் மிகவும் முக்கியம்: மஞ்சள் ஒரு அற்புதமான பாரம்பரிய உணவுப் பொருள்; எல்லா நோய்களுக்கும் ஒரே
 மருந்து அல்ல.
புற்றுநோய், ஆஸ்துமா, நாள்பட்ட புண்கள், படர்தாமரை, கடுமையான தோல் நோய்கள் போன்றவற்றிற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை நிறுத்திவிட்டு மஞ்சளை மட்டும் 
பயன்படுத்தக் கூடாது.
மேலும், அதிக அளவில் மஞ்சள் அல்லது குர்குமின் supplements எடுத்துக்கொள்வதும் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. பாரம்பரியமும் அறிவியலும் இணைந்தால்… மஞ்சள் — நம் சமையலறையின்
 பொக்கிஷம்.
சித்த மருத்துவத்தின் பாரம்பரிய மூலிகை. நவீன ஆய்வுகளின் கவனத்தையும் பெற்ற இயற்கைப் பொருள்.
அளவோடு உணவில் சேர்ப்போம்… பாரம்பரியத்தை அறிவோடு பயன்படுத்துவோம்… நோய் வந்தால் சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவோம்! “மஞ்சளை மிஞ்சும் மருந்துண்டா  நமது மருத்துவர் கூருகின்றார் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நகை திருட்டு வழக்கில் தேடப்படும் கொம்பனித் தெருவில் உள்ள கோவில் பூசாரி

முருகன் கோவிலின் சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஸ்லேவ் ஐலண்ட் முருகன் கோவிலின் தலைமை அர்ச்சகருக்கு 
கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
சதீஸ்வரன் குருக்கள் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த அர்ச்சகர் கோயிலின் நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு கோட்டஹேனாவில் உள்ள நியூ செட்டி தெருவில் ஒரு சொத்தை வாங்கியதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
காணாமல் போன கோயில் மதிப்புமிக்க பொருட்களைக் கண்டறியவும், கூறப்படும் பணத்தில் வாங்கப்பட்ட சொத்தை ஆய்வு செய்யவும் விசாரணைகள் தொடர்கின்றன. சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

உலகின் முதல் மின்சாரத்தில் இயங்கும் பெரிய விமானம் சோதனை வெற்றி

 அமெரிக்காவில் .மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி பெற்றது. முழுக்க முழுக்க மின்சாரத்தில்
 இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான ‘எக்ஸ்1’-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நியூயார்க் விமான
 நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று 27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது. 
இதற்கு வெறும் ரூ.477 மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவே தற்போது உலகின் மிகப்பெரிய பேட்டரியில் இயங்கக்கூடிய மின்சார 
விமானம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 30 பேர் அமரக்கூடிய வணிகரீதியான பயணிகள் விமானத்தை உருவாக்கி வருகிறது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில்  நாணய மாற்று பெறுமதி


 

Blogger இயக்குவது.