புதன், 16 செப்டம்பர், 2026

இரவில் உறங்குவதற்கு முன்நீரிழிவு நோயாளிகள் இதை குடிங்க

இரவில் உறங்குவதற்கு முன்  நீரிழிவு நோயாளிகள் பெருங்காயத்தண்ணீரை இரவு உறங்கும் முன் குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும். பெருங்காயத்தில் காணப்படும் சில செயல்திறன் மிக்க சேர்மங்கள், உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவும். உடல் சரியான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யும்போது, ​​இரத்த சர்க்கரை அளவு திடீரென உயராது. இதனால், நீரிழிவு நோயை சமாளிப்பது எளிதாகும்.
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெருங்காயத் தண்ணீர் வயிற்றில் உள்ள செரிமான
 நொதிகளைத் தூண்டுகிறது. இதை இரவில் குடித்தால் காலையில் வயிற்றைச் சுத்தப்படுத்தவும், அஜீரணக் கோளாறிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
மெதுவான வளர்சிதை மாற்றம் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும். பெருங்காயத் தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது, 
இது கலோரிகளை எரிக்கவும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த உறைவுகளைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுவதன் மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது வாயுத் தொல்லை சில சமயங்களில் இரவில் தூங்குவதைக் கடினமாக்கும். பெருங்காயத் தண்ணீர் வயிற்றை அமைதிப்படுத்தி, நீங்கள் ஆழ்ந்து தூங்க உதவுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

நாட்டில் சட்டவிரோத கடற்றொழிலை தடுக்கக் கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கோரிக்கை

நாட்டில் வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
. இதன்போது, வடமராட்சி கிழக்கு மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழிலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு 
கோரிக்கை விடுத்தனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடல் வளங்களை அழித்து வருவதாகவும், இதனால் பாரம்பரிய மற்றும் சிறு தொழில் மீனவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக செயற்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, சட்டவிரோத கடற்றொழிலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உரிய தரப்புகள் உடனடியாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வலியுறுத்தினர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தற்போது இரத்த சோகையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள் குறித்து எச்சரிக்கை

இந்த இரத்த சோகை என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் 
பிரச்சினை அல்ல. 
வயது, உணவுப் பழக்கம், கர்ப்பம், இரத்த இழப்பு மற்றும் சில நீண்டகால நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரத்த சோகை ஏற்படக்கூடும். எனவே, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே 
கண்டறிவது முக்கியம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்தின் தேவை அதிகரிப்பதால் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு 
அதிகமாக உள்ளது.
அதேபோன்று, அதிகளவு மாதவிடாய் இரத்தப்போக்கு உள்ள பெண்களும் தொடர்ச்சியான இரத்த இழப்பு காரணமாக
 பாதிக்கப்படலாம்.
வேகமாக வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் அதிகளவு இரும்புச்சத்து தேவைப்படுவதால் இரத்த சோகை 
ஏற்படும் அபாயம் உள்ளது.
முதியவர்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகவும் இந்நிலை
 ஏற்படலாம்.
முழுமையான சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும். 
மேலும், சிறுநீரக நோய், குடல் நோய்கள் மற்றும் சில நாள்பட்ட அழற்சி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரத்த சோகை ஏற்படக்கூடும். தொடர்ச்சியான சோர்வு, தலைச்சுற்றல், முகம் வெளிறிப்போதல், மூச்சுத்திணறல் மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்றவை இரத்த சோகையின் பொதுவான அறிகுறிகளாக
 இருக்கலாம்.
இரும்புச்சத்து, வைட்டமின் B12 மற்றும் ஃபோலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வதுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளுடன் வைட்டமின் C நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்வது
 பயனுள்ளதாகும்.
இரத்த சோகை பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியதால், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தேவையான இரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




திங்கள், 14 செப்டம்பர், 2026

இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மிணி கார கொழுக்கட்டை

இன்று விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடும்

 வகையில், கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள். அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொழுக்கட்டை மாவு / பச்சரிசி மாவு – 1 கப்

உப்பு– ½ டீஸ்பூன்

நெய் – 1–2 டீஸ்பூன்

சுடுநீர் – தேவையான அளவு அரைக்க

பச்சை மிளகாய் – 3

தேங்காய் – ½ கப்

கறிவேப்பிலை – 1 கொத்து

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 1–2

பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – ¼ டீஸ்பூன்

வேக வைத்த கொழுக்கட்டை – தேவையான அளவு

அரைத்த தேங்காய் விழுது – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு மற்றும் நெய் சேர்த்து, சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.

இதற்கிடையில், மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த கொழுக்கட்டையைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாக கிளறுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்மிணி கொழுக்கட்டை தயார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தமிழின படுகொலை! சர்வதேச தரப்புக்கள் ஏற்பதில் தொடர்ந்தும் தயக்கம் காண்பிக்கின்றன

; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றசாட்டு கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பட்டால் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் இறுதியில் நல்லூர் கிட்டுபூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரகடனக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது. அன்றிலிருந்து இனப்படுகொலை நடைபெற்றமைக்கான சாட்சியங்களை எத்தனையோ இடங்களில் வெளிப்படுத்தியும் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச சமூகம் ஏற்க 
மறுத்து வருகிறது.
எமது தாயகத்தில் தமிழினத்தை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று அரங்கேற்ற ஆரம்பித்ததை அடுத்தே ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். அதன்பின்னர் முள்ளிவாய்க்காலில் அந்த இனப்படுகொலை உச்சமடைந்து தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இதனை ஆதராங்களுடன் வெளிப்படுத்தியுள்ளபோதம் சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 

நாட்டில் மன்னார் மீனவர்களின் வலையில் சிக்கிய முன்நூறு கிலோ கொப்பரா மீன்

நாட்டில் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில்-14-09-2026- இன்று அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
 சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இது
 வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும்
 ஏற்படுத்தியுள்ளது.
மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

 இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 332.60 ரூபா
ஜப்பானிய யென் 2.18 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 450.09 ரூபா
யூரோ 386.85 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.76 ரூபா
சுவிஸ் பிராங் 409.98 ரூபா
கனடிய டாலர் 241.04 ரூபா
கத்தார் ரியால் 91.94 ரூபா
குவைத் தினார் 1080.10 ரூபா
சவுதி ரியால் 89.88 ரூபா
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.