புதன், 4 மார்ச், 2026

நான்கு நாட்களில் யாழில் 7.5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகம்:

கடந்த நான்கு நாட்களில் யாழில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை
 பெற்று சென்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முனபாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு 
செய்யப்படுவதனால் , 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீட்டர் பெட்ரோல்
 கொலன்னவளையில்
 இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் , இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் புல்மோட்டை நகரில் சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது.

நாட்டில்  புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
03-03-2026.அன்று இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
இதன்போது பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அர்பத் நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். 
சந்தேகநபர்.04-03-2026. இன்று குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 3 மார்ச், 2026

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பயணிகள்மத்திய கிழக்கில் சிக்கித் தவிப்பு

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது மத்திய கிழக்கில் சிக்கித் தவிப்பதாக வெளியுறவு அமைச்சு
 தெரிவித்துள்ளது.
பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளதால், சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ தீர்வு இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டவுடன் சுவிஸ் பயணிகள் வணிக விமானங்கள் மூலம் திரும்ப முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று உயர் தூதரக அதிகாரி மரியன்னே ஜென்னி 
குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுமார் 4,000 பேர், ஆதரவு தேவைப்படும் பயணிகளைக் கண்காணிக்கும் அமைச்சகத்தின் பயண நிர்வாக செயலியில், பிராந்தியத்தில் சிக்கித் தவிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து பயணிக்கவிருந்த விமான சேவைகள் இன்றும் இரத்து

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள்.03-03-2026. இன்றைய தினமும்.இரத்து செய்யப்பட்டுள்ளன. 
அதன்படி, நாட்டிலிருந்து வெளியேறவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 
இதேவேளை.03-03-2026., நாளைதினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 
மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் 
தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று 
அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும், இன்று காலை சில விமானப் பயணங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 2 மார்ச், 2026

நாட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு! எரிபொருளைப் பதுக்கிய சிலர் கைது

தற்போது  நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு 
எரிபொருள் கையிருப்பு 
உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது 
சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினமும்.02-03-2026.வழமை போன்று எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், காலை 9.45 மணி வரை 29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக
 டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
மேலும், நேற்றையதினம் (01) மாத்திரம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 39 இலட்சத்து 20 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் 
மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மக்கள் இவ்வாறு அநாவசியமாகப் பதற்றமடைந்து தொடர்ச்சியாக வரிசைகளில் காத்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் 
மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான செயலாகும் எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டி.ஜே. ராஜகருணா இதன்போது தெரிவித்தார்.
 இது தொடர்பில் நேற்றையதினமும் (01) பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும்
 குறிப்பிட்டார்.
இவ்வாறு எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



விசேட அறிவிப்பு ஐக்கிய அமீரக வாழ் இலங்கையர்களுக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிப்பதாகவும், தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரத் தேவைகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக விசேட சேவையொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, பாதுகாப்பான இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான ஆலோசனைகளைத் தூதரகம் மற்றும் துபாய் கொன்சியூலர் அலுவலகம் தமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாகத் தொடர்ந்து 
வெளியிட்டு வருவதால், அவற்றைச் சரிபார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், யாரேனும் அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்றிருந்தால், விமானச் சேவை மற்றும் தமது பயண முகவர்களுடன் தொடர்பைப் பேணுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்புகள் மற்றும் அதிகாரபூர்வ செய்திகளை 
மட்டுமே நம்புமாறும், அமீரகத்தில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் மற்றும் அங்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 1 மார்ச், 2026

இன்று வர்த்தக வங்கிகளில் இலங்கையில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டாலர் 312.38 ரூபா
ஜப்பானிய யென் 2.03 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 422.56 ரூபா
யூரோ 369.91 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 225.76 ரூபா
சுவிஸ் பிராங் 407.10 ரூபா
கனடிய டாலர் 229.73 ரூபா
கத்தார் ரியால் 86.53 ரூபா
குவைத் தினார் 1032.35 ரூபா
சவுதி ரியால் 84.09 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.