வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் அஞ்சல் ஓட்டத்தில் கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனை

நாட்டில்  14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 . 50 மீற்றர் அஞ்சல் ஓட்டம்.வெற்றி பெற்ற பாடசாலை: கொழும்பு மகளிர் கல்லூரி (Ladies' College, Colombo) - முதலிடம்.எடுத்துக்கொண்ட நேரம்: 26.88 வினாடிகள்
 (புதிய சாதனை)., 
கடந்த 2024 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்யாராமய பாடசாலை நிலைநாட்டியிருந்த 27.2 வினாடிகள் என்ற சாதனையே, 
தற்போது கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகளால்
 முறியடிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாக, கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ் முழுமையான அனுசரணையுடன் 
நடைபெறுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இளைஞர் கைது

நாட்டில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் காரில் கஞ்சா போதைப் பொருளை கடத்திய நபர் ஒருவர் கைது
 செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய நபராவார். 
வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில்  78 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 
 நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீடுகள் அறிமுகம்

நாட்டில்   சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீடுகளைக் குறிப்பிடுவது தொடர்பான விதிமுறைகளைத் திருத்தி
, ஒரு விசேஷ வர்த்தமானி அறிவிப்பு இன்று 
வெளியிடப்பட்டது. 
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
1980-ஆம் ஆண்டின் 26-ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32-ஆம் பிரிவின் கீழ் இந்தத் திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
புதிய திருத்தங்களின்படி, சர்க்கரை கலந்த திரவ உணவுகளின் பொட்டலங்களில் காட்டப்பட வேண்டிய சிவப்பு,
 ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரவின்படி, 100 மில்லிலிட்டருக்கு 8.0 கிராமுக்கு மேல் சர்க்கரை உள்ள பானங்களுக்கு சிவப்பு நிறமும், 2.5 முதல் 8.0 கிராம் வரை 
சர்க்கரை உள்ள பானங்களுக்கு ஆரஞ்சு நிறமும், 2.5 கிராமுக்குக் குறைவாக 
சர்க்கரை உள்ள பானங்களுக்குப் பச்சை நிறமும் பயன்படுத்தப்பட வேண்டும்.
 கூடுதலாக, கண்ணாடிக் குப்பிகளில் இடம் குறைவாக உள்ள சமயங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு மாற்றுச் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 1 ஜூலை, 2026

நாட்டில் பேருந்து கட்டணம் பன்னிரண்டு சதவீதத்தினால் அதிகரிப்பு

நாட்டில்  பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 
 சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான
 கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வேகமாக கனடாவில் பரவி வரும் தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை

. கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய லைம் நோய்(Lyme disease) பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் 
அதிகரித்துள்ளன.
கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை
.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வடக்கில் பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துநர்களுக்கு சீருடை அறிமுகம்

 நாட்டில் வடமாகாணத்தில் சாரதிகள் ,நடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று 
விஜயம் செய்தார். 
அமைச்சரை அதிகார சபையின் தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் வரவேற்றார். வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் உத்தியோகத்தர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடிருந்தார்.
தொடர்ந்து வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநருக்கான சீருடை அறிமுகம் செய்து
 வைக்கப்பட்டது. 
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாரதிகள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு தெரிவிக்கத்தக்க வகையில் தொலைபேசி இலக்கம் பதிக்கப்பட்ட சீருடையானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 30 ஜூன், 2026

தங்கம்,மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் மீண்டும் சரிவு

மீண்டும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்பான முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், 
தங்கம் மற்றும் 
வெள்ளியின் விலை-30-06-2026- இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,965.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
 அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.47 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு, இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் 
தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடையடையக் கூடுமென வர்த்தக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.