திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு

 நாட்டில்  அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில்  கடந்த ஜூன் 14 ஆம் திகதி  
நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால் பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த
 நிகழ்விற்குப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமை தாங்கியிருந்ததுடன், பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் இதில் 
கலந்துகொண்டிருந்தனர்.
 அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த கின்னஸ் சாதனை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவே பொதுமக்களுக்குக் 
காண்பிக்கப்பட்டது.
எனினும், இந்த நிகழ்வு தொடர்பாகப் பெறப்பட்ட கின்னஸ் சான்றிதழில் இலங்கையின் பெயரோ, இலங்கையின் எந்தவொரு 
அரச நிறுவனத்தின் பெயரோ அல்லது இலங்கையர் ஒருவரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன செயலாளருமான துமிந்த நாகமுவ அம்பலப்படுத்தியுள்ளார். 
மாறாக, இந்த கின்னஸ் சான்றிதழின் உரிமை ஒரு இந்திய நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள அதன் கிளை நிறுவனத்திற்கும்  மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்வில் பங்கேற்ற சுமார் 5,000 மாணவர்களின் குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் முதற்கட்டமாகப் பெருமளவிலான பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து
 தற்போதைய சூழலில், சான்றிதழுக்காக தலா 3,450 ரூபாயும், லோகோ (முத்திரை) மற்றும் இதர தேவைகளுக்காக தலா 2,350 ரூபாயும் பெற்றோர்களிடம் இருந்து மீண்டும் வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றன. 
இறுதியாக, இலங்கை பிள்ளைகளின் உழைப்பும், பெற்றோர்களின் பணமும் ஒரு இந்தியத் தனியார் நிறுவனத்திற்குப் புகழையும் கின்னஸ் சாதனையையும் பெற்றுக்கொடுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 
அநீதிக்குத் தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு
 எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அனைத்து விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதிக்கோரி போராட்டம் நடைபெற்றது.

யாழ்  செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக 
நடைபெற்றது.
 நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளையும் சேர்த்து, மொத்தமாக அடையாளம் காணப்பட்ட 427 எலும்புக்கூடுகளை நினைவுறுத்தும் வகையில் 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், கடத்தப்பட்டு மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு  தங்களது நீதிக்கான குரலை எழுப்பினர்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அரச பாடசாலை ஆசிரியர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில்உள்ள  அரச பாடசாலை ஆசிரியர்களில் நூற்றுக்கு 44 வீதமானோர் (44%) கடுமையான மன முறிவிற்கும் (Burnout) மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பது ரஜரட்ட பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும், அவர்களின் இந்த மனநிலை வீழ்ச்சிக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 238 ஆசிரியர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களில் 81% க்கும் அதிகமானோர், தங்களது மாதாந்த வருமானம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நிலவும் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக, 77% ஆசிரியர்கள் தங்களின் அத்தியாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் 78% க்கும் அதிகமானோர் மேலதிக வருமான வழிகளைத் தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களில் 30.4% சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் சமூக ரீதியாகத் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், பதகளிப்பு (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மனநலப் பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
மாதாந்தம் எந்தவொரு சேமிப்பும் இல்லாதிருத்தல் மற்றும் அன்றாடச் செலவுகளைக் கட்டாயமாகக் கட்டுப்படுத்த வேண்டிய 
சூழல் ஏற்பட்டமையே இவர்களின் மனநலம் சீர்குலைவதற்குக் பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 28 ஜூன், 2026

யாழ் காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

யாழ் காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை
 விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (29) முற்பகல் 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதேவேளை மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கடமையின்போது கொண்டுச் சென்ற துப்பாக்கியை மீளக் கையளிக்கவில்லை பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

நாட்டில் யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் குறித்த அதிகாரி நேற்று (27) சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் 
ஆஜர்படுத்தப்பட்டார்.
 இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவக்க கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்துமுன்னெடுத்துவருக்கின்றனர்.என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இந்திய அணி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது

நடைபெற்ற 10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் 
குவித்தது.
அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 56 ஓட்டங்களும் ஸ்மிருதி மந்தனா 38 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், பெர்ரி 56 ஓட்டங்களும் கார்ட்னர் 53 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 27 ஜூன், 2026

ஓடும் பேருந்திற்குள் யாழில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு இராணுவ கப்டன் கைது

யாழில்  ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது
 செய்யப்பட்டுள்ளார்.
யாழ்  நகர் பகுதியில் இருந்து  பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்
. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ் பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , 
குறித்த நபரை கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட நபரை யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.