சனி, 11 ஜூலை, 2026

நாட்டில் இருந்து துருக்கிக்கு சென்ற விமானம் நடுவானில் அவசரநிலை அறிவிப்பு

நாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்ட ஏர்பஸ் A330 பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால்  அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுக்கொண்டிருந்த விமானமே இந்த அவசரநிலையை அறிவித்துள்ளது. 
 எரிபொருள் எரிப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்காக குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு காயல் அருகே உள்ள கடல் பகுதிக்கு மேல் வட்டமடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 10 ஜூலை, 2026

யாழ் தொண்டமானாறு அச்சுவேலி வீதிப் புனரமைப்பு: வீதியோரக் கழிவுகளால் பணியாளர்கள் அவதி

 தற்போது யாழில்  நிலவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மிக வேகமாக அழுகித் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. 
இதனால் நாள் முழுவதும் வீதியில் நின்று வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சாதாரண வீட்டுக் குப்பைகளையும் தாண்டி, பயன்படுத்தப்பட்ட சிறுவர் மலக் கழிவுகள் (Diapers), மனிதக் கழிவுகள் மற்றும் அழுகிய நிலையில் உள்ள இறந்த மிருகங்களின் உடலங்கள் போன்ற சினேகப்பூர்வமற்ற, ஆபத்தான கழிவுகளே இப்பகுதியில் வீசப்படுவதாகப் பணியாளர்கள் கவலை
 தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்துக்கான ஒரு முக்கிய வீதி அபிவிருத்திப் பணி மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய பொதுமக்களே இவ்வாறான பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரிய விடயம் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீதியோரங்களில் இவ்வாறான அநாகரிகமான முறையில் கழிவுகளைக் கொட்டும் நபர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும் (பிரதேச சபை), சுகாதாரப் பிரிவினரும் (PHI) உடனடியாக இப்பகுதியில் விசேட கண்காணிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மன்னாரில் தரம் ஐந்து சிறுயை ஆசிரியை அடித்ததில் வைத்தியசாலையில்

நாட்டில் மன்னாரில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட மேலதிக வகுப்பின் போது, ஆசிரியை கேட்ட கேள்விக்கு மாணவி தவறான பதிலளித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும்.
ஆசிரியை சக மாணவர்களின் முன்னிலையில் மாணவியின் கன்னத்தில் மிகக் கொடூரமாகப் பலமுறை அறைந்துள்ளார். இதனால் சிறுமியின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, உட்புறமாக இரத்தக்கட்டுகளும் (இரத்தக் கண்டல்கள்) ஏற்பட்டுள்ளன.
சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோரால் அவர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை
 பெற்று வருகிறார்.
ஆசிரியைக்கு எதிராக மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
 செய்துள்ளனர்.
சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மன்னார் பொலிஸார் விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர். 
சம்பந்தப்பட்ட ஆசிரியையைக் கைது செய்ய அல்லது அவரிடம் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

பொதுமக்களுக்கு யாழில் இடையூறு விளைவித்த முப்பதிற்கும் மேற்பட்ட யாசகர்கள் கைது

சில பகுதிகளில் சுற்றுலாத்துறைக்கு யாழில் இடையூறுஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30ற்கும் அதிகமான யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றாலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவேகானந்தராஜா 
குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு 
செல்லப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் குறித்த நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் 
கண்டறியப்பட்டது. 
இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு இனிவரும் நாள்களில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 9 ஜூலை, 2026

நாட்டில் கடந்த இருபத்திநான்கு மணி நேரத்தில் ஆயிரத்திமுன்நூறு டெங்கு நோயாளிகள்

   
    இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 1300 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 65034 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர், டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்தார்

டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆகும். டெங்கு ஒழிப்புப் பணியின் நான்காவது நாள் இன்று. ஏராளமான பகுதிகள் குழுக்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 23 பிரிவுகளில் சுகாதார மருத்துவ அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள பல இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொசுக்கள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் மருதங்கேணி காணி சுவீகரிப்பு நிறுத்தம் - அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு

நாட்டில் யாழ்  வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இராணுவத் தேவைக்காகத் தனியார் காணி ஒன்றை உத்தியோகபூர்வமாகச் சுவீகரிக்கும் முயற்சி இன்று (ஜூலை 9) பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்பால் தற்காலிகமாகக் 
கைவிடப்பட்டுள்ளது. 
எனினும், அதன் பின்னர் காணியைப் பார்வையிடச் சென்ற காணி உரிமையாளரையும் பிரதேச செயலக அதிகாரிகளையும் இராணுவத்தினர் அங்கிருந்து திருப்பி அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு எதிர்ப்பு மருதங்கேணியில் அமைந்துள்ள 10 ஆவது விஜயபாகு காலாட்படைப் பிரிவின் முகாமிற்கு அருகிலுள்ள தனியார் காணியை நில அளவை செய்து, இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதற்கு இன்று காலை ஏற்பாடுகள்
 செய்யப்பட்டிருந்தன. 
இதற்காகப் பிரதேச செயலக காணி அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் வருகை தந்திருந்தனர். இதையறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,
 உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் அக்காணியில் திரண்டு உக்கிரமான எதிர்ப்பை
 வெளியிட்டனர். 
அத்துடன், அக்காணியை இராணுவத்திற்கு வழங்க வேண்டாம் என அதன் உரிமையாளரிடமும் அவர்கள் நீண்டநேரம் கோரிக்கை 
விடுத்தனர். சுமார் 30 ஏக்கருக்கும் அதிக பரப்பளவைக் கொண்ட அக்காணியில், 20 ஏக்கரை மட்டும் தனியாக அடையாளப்படுத்திச் 
சுவீகரிக்கும் திட்டத்திற்கு ஆரம்பத்தில் உரிமையாளர் இணங்கியிருந்தாலும், மக்களின் தொடர் எதிர்ப்புக் காரணமாகத் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 
இறுதியில், "எனது காணியை அளக்க அனுமதிக்க
 முடியாது" என நில அளவைத் திணைக்களத்திற்கு அவர் எழுத்து மூலம் கடிதம் வழங்கியதை அடுத்து இன்றைய அளவீட்டுப் பணிகள் தடுத்து
 நிறுத்தப்பட்டன.
அதிகாரிகளையும் உரிமையாளரையும் விரட்டிய இராணுவம் நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, காணி உரிமையாளரும் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களும் உண்மை நிலவரத்தைக் கண்டறிய 10 ஆவது விஜயபாகு படைப்பிரிவு வளாகத்தில் உள்ள அக்காணியைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த காணி ஏற்கனவே இராணுவத் தேவைக்காக அளவிடப்பட்டுத் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இராணுவப் பகுதிக்குள் சட்டப்பூர்வ அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளர் உட்பட யாரும் நுழைய முடியாது என்றும் கூறி இராணுவத்தினர் அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து திருப்பி 
அனுப்பியுள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வந்த சமயம், கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது எவ்வித அனுமதியுமின்றி இராணுவத் தேவைக்காக முதன்முறையாக இக்காணி அளவீடு 
செய்யப்பட்டிருந்தது. 
அந்தச் சட்டவிரோத அளவீட்டை 13 வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக இறுதிப்படுத்த முயன்றபோதே, மக்களின் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் மட்டக்களப்பு, அம்பாறையில் மனித உடலால் உணரமுடியாத வெப்பநிலை

நாட்டில்  மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி,  இன்று (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்  சில இடங்களில்,  வெப்பநிலையானது  மனித உடல் உணரும் வெப்பநிலையின் அளவை விட உச்சம் தொட வாய்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆகவே வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து 
செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. 
 எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.