செவ்வாய், 21 மார்ச், 2023

பரிசில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்! - 140 பாடசாலைகள் மூடப்படுகிறது

ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைத் அடுத்து, வரும் வியாழக்கிழமை பரிசில் 140 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து, பரிசில் உள்ல 645 ஆரம்ப பாடசாலைகளில் 140 பாடசாலைகள் மூடப்படுகின்றன. 70 வீதமான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலை நிறுத்தத்தோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பகல் 2 மணி அளவில் Place de la Bastille பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றினைய 
தீர்மானித்துள்ளனர். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 20 மார்ச், 2023

பிரித்தானியாவில் நிர்வாண குளியல் அமர்வுக்கு தடை விதித்துள்ளது

பிரித்தானியாவில் ”டர்கிஷ் பாத்ஸ்” எனப்படும் விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல் அமர்வுகளில் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
அதனை தொடர்ந்து விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல்களுக்கு பிரித்தானிய நகரம் 
தடை விதித்துள்ளது.
ஹாரோகேட் டர்கிஷ் ஸ்பாவில் (Harrogate Turkish Baths) உள்ள விக்டோரியன் வசதி எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க குளியலறைகளில் ஆண்களும் பெண்களும் குளியல் அமர்வுகளுக்கு 
அனுமதிக்கப்படுகின்றனர். 
இந்த குளியலின் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் குளியல் உடைகள் தேவைப்படுவது இல்லை.ஆனால்  டர்கிஷ் பாத்ஸ் ஹாரோகேட்டில் அதிகரித்து வரும் தகாத நடத்தை பற்றிய புகார் தொடர்ந்து, பிரித்தானிய நகரம் ஒற்றை பாலின குளியல் அமர்வுகளுக்கு 
தடை விதித்துள்ளது.
இதன்மூலம் அனைத்து குளியல் அமர்வுகளிலும் நீச்சலுடைகள் இப்போது கட்டாயம் என்று செயல்பாட்டு முடிவு 
எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹாரோகேட் கவுன்சில் அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நாங்கள் கவனிக்க வேண்டிய கடமை உள்ளது.
மேலும் அனைத்து ஒற்றை பாலின அமர்வுகளும் பாதுகாப்பான சூழலில் செயல்பட, மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல் உடைகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரோகேட் அதன் டர்கிஷ் குளியல் பகுதிகளுக்கு 120 ஆண்டுகளாக வெகு தொலைவில் உள்ள மக்களை அதிகமாக 
ஈர்த்து வருகிறது.
இந்த குளியல் அமர்வை பார்வையிட 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக பின்பற்றப்பட்டு
 வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 19 மார்ச், 2023

நாட்டில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மெக்னிரியூட் அளவு கோளில் 3 ரிக்டர் அளவில் புவியர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் 
தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் 
குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 18 மார்ச், 2023

சுமார் நாற்பது அரச நிறுவனங்களை இலங்கையில் மூட திட்டம்

இலங்கையில் சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  
பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார். 
செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 
தெரிவித்தார். 
இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார். 
குறித்த நிறுவனங்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 17 மார்ச், 2023

குலபடா கிராமத்தில் தலை மற்றும் வாயின்றி பிறந்த விசித்திரக் குழந்தை;

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை 
ஒன்று பிறந்துள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் 
காணப்பட்டனர்.
ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியால் துடித்ததை அடுத்து ஆம்புலன்ஸில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் 
செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் வாகனத்திலேயே அவர் தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை வாயும் தலையும் இல்லாமல் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. சுடாமணி பாங்கிரிபோசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்போது தலையின்றி குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 16 மார்ச், 2023

தலைநகர் பாரிஸ்சில் குவிந்த குப்பைகளால் குறைக்கூறும் சுற்றுலாப்பயணிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் 
கனவாக இருக்கலாம்.
ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்நிலையில் குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.
அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன. பிரான்ஸில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறை கூறுகின்றனர். இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 15 மார்ச், 2023

டெல்லி பொலிஸ் சைபர் குற்றங்களைத் தடுக்க ட்ரூகோலர் செயலியுடன் ஒப்பந்தம்

 

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ‘ட்ரூகோலர் செயலி’ நிறுவனத்துடன் இந்தியாவிலுள்ள டில்லி பொலிஸ்
 ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து டில்லி பொலிஸ் சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறியதாவது, ட்ரூகோலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் செல்போன் மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகொலர் செயலியுடன் டெல்லி பொலிஸ் ஒப்பந்தம் 
செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக புகார்களை பெற்ற டில்லி பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ரூகோலர் 
செயலி காண்பிக்கும்.
எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க இலட்சிணையும் வழங்கப்படும். மேலும், செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் 
போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Blogger இயக்குவது.