ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

 இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 332.60 ரூபா
ஜப்பானிய யென் 2.18 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 450.09 ரூபா
யூரோ 386.85 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.76 ரூபா
சுவிஸ் பிராங் 409.98 ரூபா
கனடிய டாலர் 241.04 ரூபா
கத்தார் ரியால் 91.94 ரூபா
குவைத் தினார் 1080.10 ரூபா
சவுதி ரியால் 89.88 ரூபா
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் பலாலி சந்தியில் தமது காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்

நாட்டில் வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில்-13-09-2026- இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்
 கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் 
அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து 
வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வவுனியா வெடுக்குநாறிமலையில் பதின் ஒரு அடி புத்தர் இருந்தாராம்

இலங்கை  வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம். அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில்  ஓன்றரை மணிநேரம் பிரித்து ஓதி
 பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதுவரை சைவ மக்களை மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என்று பொலிசார் கூறியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு ஸ்தானம்.. 2012 ற்கு முன்னர் அங்கு 11அடி புத்தர் சிலை இருந்தது. அது எங்களிடம் உள்ளது. மீண்டும் அதனை இங்கு நிறுவப் போகின்றோம்.
சைவ வழிபாடு 2013 இற்கு பின்னரே வந்தது. தமிழர்கள் போலி நம்பிக்கையில் வழிபடுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்..
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 12 செப்டம்பர், 2026

நாட்டில் பிக்குகள் ஆதிலிங்கேஸ்வரருக்கு பூசை வழிபாடு நடாத்தியுள்ளனர்

நாட்டில்  பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை வழிபாடுகளை
 நடாத்தியுள்ளது.
அத்துடன் இது தமது புண்ணிய பூமி எனவும் ஆலய பூசகர் நிர்வாகத்தினருடன் முரண்பட்டு உச்சிமலையில் உள்ள சூலத்தை அகற்றுமாறு கோரியதுடன் விரைவில் இவ்விடத்தில் விகாரை ஒன்று கட்டப்படுமென தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்கள்.
வெடுக்கு நாரி மலையில் சைவ வழிபாட்டை அச்சுறுத்தி உச்சிமலையில் தமது வழிபாட்டை சட்டவிரோதமாக மேற்கொள்ள வருகைதந்த கல்கமுவ சாந்த போதிதேரருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் பாதுகாப்பளிக்க பத்துக்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து நூற்று ஐம்பது வரையான பொலிசாரும் ஐம்பதுக்கு 
மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பை வழங்க உச்சிமலையில் ஆதிலிங்கேஸ்வரருக்கு அருகில்  வட்ட வடிவமாக தாமரைப்பூவினை அடுக்கி சில பொருட்களைப்பரப்பி ஒன்றரை மணிநேரம் பிரித் 
ஓதியிருந்தனர்.
இதனிடையே வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் பூசை வழிபாட்டில் இடம்பெறும் இடையூறுகளை தடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களோடு அங்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் சாவகச்சேரியில் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியும், 
அந்த வாக்குறுதிகளை 
நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, வலி. வடக்கில் தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள்
 சுட்டிக்காட்டினர்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 600 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ள போதிலும், அதனைப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், தமிழ் மக்களின் பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் தொடர்பான நடவடிக்கைகள் மூலம் திட்டமிட்டு பல்வேறு விடயங்கள் திணிக்கப்படுவதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் 
தெரிவித்தனர்.
இவ்வாறான விடயங்களை கண்டித்தும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு

இலங்கை தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக
 மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் ‘SLNS தம்மன்னா’ முகாமைச் சேர்ந்த கடற்படையினர் வழமையான கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த மணல் திட்டில் இளைஞர் ஒருவர் தனியாக இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற கடற்படையினர், இளைஞரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து 
வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட இளைஞரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கடற்படையினர் அவருக்கு உடனடியாக தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 
வழங்கியுள்ளனர்.
கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் தென்னிந்தியாவில் இருந்து கடல் வழியாக பயணம் செய்து இலங்கை கடற்பரப்பை வந்தடைந்தவர் என தெரியவந்துள்ளது.
முதலுதவி மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் 
வழங்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அந்த இளைஞர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

நாம் பதின் நான்கு நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

முட்டை  மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத் 
தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற
 கொழுப்பு கிடைக்கிறது 
முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.
இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
 பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை
 தொடர்ந்து பார்க்கலாம்.
மூளைக்கு நல்லது: முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
கொலஸ்ட்ரால்: முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.
கண்களுக்கு நல்லது: மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
முடி, சருமம், நகங்களுக்கு: முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு 
உதவுகின்றன.
முக்கிய ஊட்டச்சத்துக்கள்: முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல 
சத்துக்கள் உள்ளன.
பசியைக் கட்டுப்படுத்தும்: காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.
முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.