வெள்ளி, 11 செப்டம்பர், 2026

நாம் பதின் நான்கு நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

முட்டை  மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத் 
தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற
 கொழுப்பு கிடைக்கிறது 
முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.
இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
 பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை
 தொடர்ந்து பார்க்கலாம்.
மூளைக்கு நல்லது: முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
கொலஸ்ட்ரால்: முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.
கண்களுக்கு நல்லது: மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
முடி, சருமம், நகங்களுக்கு: முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு 
உதவுகின்றன.
முக்கிய ஊட்டச்சத்துக்கள்: முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல 
சத்துக்கள் உள்ளன.
பசியைக் கட்டுப்படுத்தும்: காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.
முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் மயிலிட்டியில் இருபத்தி ஓராவது வாரமாக தொடரும் போராட்டம்

நாட்டில் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் ,  அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் அராலியில் கடும் கோடையிலும் பெருக்கெடுத்த கிணறுகள்: ஆச்சரியத்தில் மக்கள்,

 

ஆய்வுக்கு அழைப்பு  யாழ் அராலி கிழக்கு – மலையாளங்காடு ஐயனார் ஆலய காணியில் அமைந்துள்ள கிணறு உட்பட அதனைச் சூழவுள்ள மேலும் சில கிணறுகளில், வழமைக்கு மாறாக நீர்மட்டம் திடீரென பெருமளவில் உயர்ந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடும் கோடை
 வெயிலும் எல்நினோ வறட்சியும் நிலவி வரும் இக்காலகட்டத்தில், பொதுவாக நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் செல்லும் நிலையில், இங்குள்ள ஒரு கிணற்றில் நீர் தரைமட்டத்தைத் தாண்டி வெளிநோக்கி பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
அத்துடன் அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் நீர்மட்டம் நில மட்டத்தை எட்டியுள்ளதுடன், மேலும் இரண்டு கிணறுகளிலும் நீர் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
​இந்த திடீர் மாற்றத்திற்கு மத்தியில், வழமையாக இருந்த நீரின் தன்மை மாறி தற்போது அது தெளிவான நன்னீராக மாறியுள்ளதாகவும்
, ஒரு கிணற்றின் நீர் மிதமான வெதுவெதுப்பான சூட்டுடன் 
காணப்படுவதாகவும்
 பிரதேச மக்கள் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகின்றனர். கடும் 
வறட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ள இந்த விசித்திர நிகழ்வை அப்பகுதி மக்கள் “ஐயனாரின் புதுமை” என பக்திப் பரவசத்துடன் நம்பி 
வழிபட்டு வருகின்றனர்.
​இருப்பினும், மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மதிக்கும் அதேவேளை, இதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் புவியியல் காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகின்றது.
நிலத்தடி நீர் ஓட்டத்தில் ஏற்பட்ட திடீர் இயக்கம், புவியியல் மாற்றங்கள் அல்லது நிலத்தடி நீர்மட்ட அழுத்தத்தில் ஏற்பட்ட அழுத்த மாறுபாடுகள் காரணமாக இந்த நீர் ஊற்று ஏற்பட்டிருக்கலாம் என
 கருதப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட துறைசார் புவியியல் மற்றும் நீரியல் நிபுணர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து, நீரின் வெப்பநிலை, உவர்ப்புத்தன்மை, pH மற்றும் EC அளவுகளை விரிவாக பரிசோதித்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




செவ்வாய், 8 செப்டம்பர், 2026

நாட்டில் பெருமளவு போதைப்பொருள்களுடன் இருவர் கைது

நாட்டில்  சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த 
இரண்டு வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்களாவர். இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டுபவர்களாகப் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு
 வந்து சேர்ந்துள்ளனர்.
இதன்போது வருகை முனையத்தில் அறிவிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் 'பசுமைப் பாதை' (Green Channel) வழியாகப் போதைப்பொருள் தொகையைக் கடத்திச் செல்ல
 முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களின் இரண்டு பயணப் பைகளுக்குள் இருந்த விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக 'திராட்சைப் பசை' போன்று வெளிப்புறத்தில் தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றித் தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சிறீதரன் எம்.பி யாழ். ஆயருடன் . முக்கிய கலந்துரையாடல்

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை,   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் , பயங்கரவாதத் தடைச்சட்டம்  
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படுவதாகக் 
கூறப்படும் சிங்களமயமாக்கல் திட்டமான 
கீழ் மல்வத்து ஓயா திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக,  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

துரித கெதியில் யாழில்.முன்னெடுக்கப்படும் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள்

யாழ்  மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன.
இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அராலி  பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத்
 தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை 
உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
எல் நோ தாக்கத்தினால் இம்முறை யாழ்ப்பாணத்திற்கு 
அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , மழை காலம் ஆரம்பிக்க முதல் , குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 7 செப்டம்பர், 2026

நல்லூர் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

யாழ், நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு-09-09-2026-அன்று விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
 அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.