புதன், 29 ஜூலை, 2026

நாட்டில் மன்னார் புனித சவேரியார் கல்லூரியில் கலைக் கண்காட்சி ஆரம்பம்

நாட்டில் மன்னாரில், பிரபல பாடசாலை களில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (National School) ஏற்பாட்டில், மாணவர்களின் மறைந்த மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத் திறமைகளை
 வெளிக்கொணரும் "சவேரியன் முகிழூம் வெளி" எனும் விஷுவல் ஆர்ட்ஸ் (Visual Art Exhibition - 2026) கண்காட்சி இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலையின் ஜோசப் மண்டபத்தில் ஆரம்பமானது.
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச. சாந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நேசரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
வைத்தார். இந்நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான . ஜி. ஆத்தவன், திருமதி. எஸ். சுதர்சினி மற்றும் கல்வி வலயத்தின் நடன ஆசியுரை திருமதி. எல். எஸ். ஏ. ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 
சிறப்பித்தனர்.
மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஓவியங்கள், சிற்பங்கள், மரச் செதுக்கல் கள் உள்ளிட்ட பல நுண்கலை ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த அற்புதமான கலைப் படைப்புகள் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை 
பெற்று வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக செவ்வாய்க்கிழமை (28): காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. புதன்கிழமை (29): காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
 நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது மாணவர்களின் 
திறமைகளை
 ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்துள்ளமை.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது

இந்த ஆண்டில்  இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
 தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் 167,401 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 9.7% மற்றும் 16.2% என்ற வலுவான வளர்ச்சி பதிவு 
செய்யப்பட்டிருந்தது.
ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தக் காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 38,785 பேர் வருகை தந்துள்ளனர்.
ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் 332,468 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. மாதாந்த செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் மீளெழுச்சி பெற்று வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சுவிஸ் விமானம் அமெரிக்காவின் பாங்கோர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது

சுவிஸ்  சூரிச் மற்றும் நியூயார்க் இடையே இயங்கிய சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (SWISS) விமானம், விமானத்தில் புகை ஏற்பட்டதன் காரணமாக, அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள பாங்கோர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.
விமானம் பாதுகாப்பாகவும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தரையிறங்கியதாக விமான நிறுவனம்
 உறுதிப்படுத்தியது. 
வணிக வகுப்பு கேபினின் முன்பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத ஒரு மூலத்திலிருந்து புகை உருவானதாகவும் சுவிஸ் நிறுவனம் 
குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். விமானம் தரையிறங்கிய பிறகு, அவர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது, ​​தீ அல்லது வெப்பத்திற்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை.
இந்நிலையில், விமானத்தில் இருந்த 208 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர். 
சுவிஸ் தேசிய விமான நிறுவனம், பயணிகளுக்கு உதவி வருவதாகவும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த அயராது உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 28 ஜூலை, 2026

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில்  கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில பகுதிகளில் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் முல்லைத்தீவு பிரதான வீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில்  கிளிநொச்சி மாவட்டத்தின் A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆம் கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள புளியம்பொக்கனை முதலாவது பாலம் இன்று (28) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
40 மீற்றர் நீளமுடைய இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பெருந்தொற்று 
மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் ரூ.206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதையடுத்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாலத்தை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு 
கையளித்தார்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புனரமைப்புப் பணிகள் தாமதமான காலப்பகுதியில் இரண்டு உயிரிழப்புகள் மற்றும் பல வீதி விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், பாலம் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை அப்பகுதி மக்களால் வரவேற்கப்படுகிறது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கம்பளையில் இருபது இலட்சம் கையூட்டல்: இருவர் கைது

இலங்கையில் பேராதனை போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் டெண்டர் போட்டியில் இருந்து விலகுவதற்காக, 20 இலட்சம் லஞ்சம் பெற்ற இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
 கைது செய்துள்ளது.
குறிப்பிட்ட உணவு விநியோகக் ஒப்பந்தத்திற்கான டெண்டரில், தனது தந்தை மற்றும் மாமனார் பெயர்களில் விலைமனுக்களைச் சமர்ப்பிக்காமல் இருக்கவும், இதன்மூலம் போட்டித்தன்மையைத் தவிர்க்கவும் முதன்மைச் சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடம் முதலில் 30 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரியுள்ளார். 
பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் இத்தொகை 25 இலட்சமாக குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாயாகப் பேசப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று காலை கம்பளை 
அஞ்சல் நிலைய
 வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து 20 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டபோதும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்டபோதும் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட இருவர் சுமார் 30 நிமிட இடைவெளியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 27 ஜூலை, 2026

இலங்கையில் டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை: தடுப்பூசியைப் பெற அனுமதி கோரிக்கை

இலங்கையில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், "புதிய டெங்கு தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்னரே செலுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பு பெற முடியும்.
பல நாடுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், இலங்கையிலும் இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.