செவ்வாய், 23 ஜூன், 2026

சில பகுதிகளில் சுவிட்சர்லாந்தில் வெப்ப அலை எச்சரிக்கை விடுப்பு

பல பகுதிகள் வெப்ப அலை  சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கையை அதன் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நியூகேட்டல் ஏரி, பீல் ஏரி மற்றும் முர்டன் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள், மத்திய வாலாய்ஸ் மற்றும் ஜெனீவா ஏரிப் பகுதிகள் அனைத்தும் உயர் அபாய நிலைக்கு நகர்ந்துள்ளதாக மெட்டியோஸ்விஸ்
 தெரிவித்துள்ளது.
எஸ்டாவேயர் (ஃப்ரிபோர்க் மாகாணம்), நிடாவ் மற்றும் அனெட் (பெர்ன் மாகாணம்), ப்ளைன் டி எல்'ஓர்ப் மற்றும் குட்ரெஃபின் (வாட் மாகாணம்), ஜெனீவா ஏரிப் பகுதி மற்றும் மத்திய வாலாய்ஸ் ஆகிய பகுதிகள் நிலை 4க்கு நகர்ந்துள்ளன.
ஏற்கனவே இந்த நிலையில் உள்ள வடமேற்கு சுவிட்சர்லாந்துடன் (பேசல் பகுதி மற்றும் டெலெமாண்ட் பள்ளத்தாக்கு) இவையும்
 இணைகின்றன.
மெட்டியோஸ்விஸ்ஸின் கூற்றுப்படி, உயர் அபாயம் என்பது, குறைந்தது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, இரவில் கூட வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படாது என்பதாகும். 
இந்த வெப்ப அலையின் போது, ​​இரத்த ஓட்டப் பிரச்சனைகள் மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படுவதற்கு கணிசமான அபாயம் உள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி அகழ்வாராய்ச்சி மூன்று சந்தேகநபர்கள் கைது

இலங்கை செமமது காப்பகப் பகுதிக்குள் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை போகஸ்வேவ பொலிசார் 
கைது செய்துள்ளனர். 
போகஸ்வேவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று (22) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. 
சந்தேகநபர்களிடம் இருந்து  அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கைது செய்யப்பட்ட நபர்கள் நச்சதுவ மற்றும் பூனாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் வயது முறையே 23, 38 மற்றும் 74 என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 போகஸ்வேவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மூன்று நாள் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில்

நாட்டில்  டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஜூன் 24 முதல் 26 வரை மூன்று நாள் நாடு தழுவிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று 22-06-2026.)நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, அரசாங்க நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளை உள்ளடக்கிய குறுகிய கால டெங்கு கட்டுப்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவரிக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்யப்பட்டது. 
மேலும், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் 600 கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு
 குறிப்பிட்டது. 
 மேலும், முப்படைகளின் தலைமையில் ஒரு கண்காணிப்புப் பிரிவை நிறுவுவதற்கும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், உள்ளூர் மட்டத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள
 சமூக வலுவூட்டல் மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 22 ஜூன், 2026

நாட்டில் தாதியர்கள் மத்தியில் அதிகரிக்கும் மன அழுத்தம்: பணிச்சுமையே காரணம்

நாட்டில்  உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் 
தெரிவித்துள்ளது.
தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 23,000 தாதியர்களுக்கும், சுமார் 14,000 கனிஷ்ட ஊழியர்களுக்கும் வெற்றிடங்கள் நிலவுவதாக 
சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தாதி ஒருவருக்கு இரண்டு தாதியர்களின் வேலைப் பழுவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் 
அவர் கூறினார்.
சில சந்தர்ப்பங்களில் தாதியர்கள் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் தாங்க முடியாத வேலைப் பளு உருவாகியுள்ளதாகவும், அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த நிலைமையே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை உடனடியாக தயாரிக்காவிட்டால், வைத்தியசாலை கட்டமைப்பு மேலும் வீழ்ச்சியடையும் என தென்னே ஞானானந்த தேரர் எச்சரித்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மீனவர்களின் பிரச்சினை - ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம்

நாட்டில் மீனவர் குழுவொன்று இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 
தங்கள் தொழிலை மேற்கொள்வதற்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்டப்டள்ளது. 
இந்த போராட்டம் நாளைய தினமும் முன்னெடுக்கப்படும் என்றும்,  எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் 2,000-க்கும் அதிகமான மீனவர்களை இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்போவதாகவும் அகில இலங்கை மீனவர் சங்கம் எச்சரித்துள்ளது. 
 இதற்கு முன்னதாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் பின்னர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அச் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்தார். 
 மேலும், அந்த வாக்குறுதிக்கமைய நாரா (NARA) நிறுவனம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதிக்குள் கடலடி மற்றும் கடற்கரை சார்ந்த களப் பரிசோதனைகளை முடித்திருந்த போதிலும், ஐந்து மாதங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது ஆயுர்வேத வைத்தியசாலை

.நாட்டில் .கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக-22.06.2026 இன்றைய தினம்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது 
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன்,
 பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் பரமலிங்கம் சத்தியநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள், தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 21 ஜூன், 2026

தற்போது பெண்களை இலக்கு வைத்து சமூக ஊடக மோசடி பொலிஸார் எச்சரிக்கை

தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மோசடி  சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை
 விடுத்துள்ளனர். 
நிதி மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நாடு முழுவதும் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 
சில சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 
போதைப்பொருள் அல்லது மயக்கமருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்கள் நினைவிழந்த பின்னர் துஷ்பிரயோகம் அல்லது திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 
   இன்னும் சிலர் பெண்களின் நம்பிக்கையை வெல்வதற்காக திருமண வாக்குறுதிகளை வழங்கி, பின்னர் தந்திரமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்துள்ளனர். இவ்வாறான சில சம்பவங்கள் படுகொலை போன்ற பாரிய குற்றங்களிலும் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 இதனையடுத்து, புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினர் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், இவ்வாறான நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தகவல்களைத் திரட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 சமூக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களிடம் பணம், நகைகள் அல்லது
 இதர பெறுமதிமிக்க
 பொருட்களை ஒப்படைக்க வேண்டாம் என்றும் முகம் தெரியாத நபர்களுடன் முக்கியமான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறான மோசடிகளுக்கு ஆளானவர்கள் அல்லது இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
 மேலும், 118, 119, 107 அல்லது 109 பொலிஸ் அவசர உதவி எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.