ஞாயிறு, 3 டிசம்பர், 2023

உகாண்டாவில் செயற்கை கருவுறுதல் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

உகாண்டாவைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் செயற்கை கருவுறுதல் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவமனையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நின்றுவிடும். அதனால் அதன்பின்னர் கருவுறுதலுக்கான வாய்ப்பு என்பது பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 
ஆனால் மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் மகத்தான வளர்ச்சியால் 70 வயது மூதாட்டிக்கு குழந்தை பிறப்பு சாத்தியமாகியுள்ளது
. உகாண்டாவை சேர்ந்த 70 வயதான சஃபினா நமுக்வயா 
என்ற பெண் தனக்கு குழந்தை வேண்டும் என்று மருத்துவரை அணுகியபோது மருத்துவர் முதலில் மிகவும் யோசனை
 செய்திருக்கிறார்.
ஆனாலும் சஃபினா நமுக்வயா விடாப்பிடியாக மருத்துவரை தொல்லை கொடுத்ததனால் அவருக்கு கருவுறுதலுக்கான சாத்தியம் உள்ளதா என பரிசோதனைகளை செய்திருக்கிறார். 
அதில் நல்ல உடல் நலத்தோடு அவர் இருப்பது மருத்துவருக்கு தெரியவந்தது. இதையடுத்து விந்து தானம் பெறப்பட்டு அவருக்கு 
செயற்கை கருவூட்டல் நடைபெற்றது. ஆச்சரியப்படும் 
வகையில் கரு வளர்ந்து அதுவும் இரட்டை கருவாக 
உருவெடுத்தது.
மருத்துவமனையிலேயே தங்க வைத்து அவருக்கு முழுமையான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் விளைவாக ஒன்பதாம் மாத இறுதியில் சஃபினா நமுக்வயா இரட்டை குழந்தைகளை
 பெற்று எடுத்தார்.
 இயல்பான சுகப்பிரசவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் சிசேரியன் செய்யப்பட்டது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். தாயும், சேய்களும் நலமாக உள்ளனர். இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 2 டிசம்பர், 2023

ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத்தரிப்பு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது

கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் 
வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு
 செய்யப்பட உள்ளது.
 இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து 30 டொலர்கள் அபராதம் அறவீடு செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த அபராதத் தொகை 75 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அபராதத் தொகை குறைவானதாக காணப்பட்டதனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் நிலவி வருவதாக 
காவல்துறையிர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 1 டிசம்பர், 2023

இந்திய இரண்டு நகரங்கள் உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்

லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 2 இந்திய நகரங்கள் 
இடம்பெற்றுள்ளன.
அகமதாபாத் 8-வது இடத்தையும், சென்ன 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
 சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஈரான்
 நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும், லிபியாவின் திரிபோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 30 நவம்பர், 2023

கொரியாவில் நாய் இறைச்சி தடைக்கு எதிராக பண்ணையாளர்கள் போராட்டம்

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
 வருகின்றனர்.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். 
இந்நிலையில் நாய்க்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த
 செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் 
இயற்ற பரிசீலித்தது. 
பின்னர் நாய் இறைச்சிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணையாளர்கள், நாய் இறைச்சி பிரியர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் இறங்கி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக 
அந்த நாட்டில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 29 நவம்பர், 2023

யாழ் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி அபகரிக்கப்படும் அபாயம்

யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக
 ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் 
தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.
“அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி தொடர்பில் அண்மையில் பொது அமைப்புகளுடன் சங்கானை பிரதேச செயலாளர் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார்.
அதன் போது, குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு 
திணைக்களத்தின் 
வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரம் கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. 
கவே, வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் எதிர்க்கிறேன். இதேவேளை, குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள 
குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் 
சந்தேகிக்கின்றனர்.
எனவே,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 28 நவம்பர், 2023

தென் கொரியாவில் கவிதை எழுதியதற்காக சிறைத் தண்டனை விதிப்பு

வடகொரியாவைப் புகழ்ந்து கவிதை எழுதியதற்காக தென் கொரியாவில் 68 வயது நபர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்தது, 
இது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில்வழங்கப்பட்டது. “ஒருமைப்பாட்டின் வழிமுறகள்” 
என்ற தலைப்பில் கவிதை 2016 இல் வடக்கின் மாநில 
ஊடகங்களில் 
மேலும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பெயர் குறிப்பிடுவது போல, கவிதை இரண்டு கொரியாக்களை ஒன்றிணைக்க வாதிடுகிறது. வடகொரிய பாணி சோசலிச அமைப்பில் 
இரு கொரியாக்களும் ஒன்றிணைந்தால் இலவச வீடு, 
இலவச மருத்துவம், இலவசக் கல்வி கிடைக்கும் என்று அந்தக் கவிதையில் நாயகன் கூறியுள்ளார்.
அந்த நபர் முன்னர் ஒரு தனி சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 10 மாதங்கள் சிறையில் இருந்தார். 2013 ஆம் ஆண்டில், அவர் வட கொரியாவின் இராணுவத்தைப் புகழ்ந்து ஆன்லைன் கருத்துகளையும் வெளியிட்டார்,
 மேலும் அடுத்த ஆண்டுகளில் தென் கொரிய வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தை தொடர்ந்து வெளியிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 27 நவம்பர், 2023

நாட்டில் வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை 
குறிப்பிட்டுள்ளார். 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் 
இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை 
எடுத்துள்ளோம்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள 
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கமைய, 
எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர். அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.