வியாழன், 27 ஆகஸ்ட், 2026

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

கிளிநொச்சி.கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை
 தனது தாயார் பெர்னதேத்தம்மாவின் நினைவாக மற்றுமொரு 
இயந்திரமும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் 
மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில், உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்
திரு  சிவஞானம் சிறீரன்,
“போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மண், இழப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் இந்தச் சூழலில், மக்களின் உயிரைக் காக்கும் இத்தகைய உயரிய உதவி என்பது நெஞ்சார நினைவுகூர்ந்து 
போற்றத்தக்கது. சிறுநீரக நோயாளிகளின் அவசியத் தேவையை உணர்ந்து, வட மாகாண மருத்துவமனைகளின்
 மேம்பாட்டிற்காக இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களை வழங்கி பேராதரவு தந்த செந்தில்குமரன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்”
 எனத் தெரிவித்தார்.
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை (Kilinochchi DGH), மல்லாவி ஆதார மருத்துவமனை
 (Mallavi BH) மற்றும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை (Vavuniya DGH) ஆகிய மருத்துவமனைகளுக்கு ஆறு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு 
நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான 
கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) கலந்துகொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் நிறுவனர் செந்தில்குமரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சேரலாதன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் 
வேழமாலிகிதன், பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், இலங்கைக்கான கனடா 
உயர்ஸ்தானிகராலய அரசியல் அலுவலர் சாகித்தியனன், கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர்களான கௌரவ சிவமோகன், கௌரவ 
ஆனந்தவடிவேல், கௌரவ எழில்வேந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் திரு குணராஜ், மாவட்ட பொது மருத்துவமனையின் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்றைய தினம் யாழ் தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் 
வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்  கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை  ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் முன்நூறு கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சோலார் மின்கலன்களை நிறுத்துமாறு கோரிக்கை

நாட்டில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலன்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டமைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை சூரிய மின்கலன்களை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 26 ஆகஸ்ட், 2026

யாழ் பலாலி வீதியில் செல்வ சந்நிதி உற்சவத்தை அடுத்து மக்கள் நடந்து செல்ல அனுமதி

யாழ்  தொண்டமானாறு  செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் 
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஊடாக செல்லும் பலாலி வீதி கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு , நேர கட்டுப்பாட்டுடன் வீதி 
திறந்து விடப்பட்டது.
இந்நிலையில்  தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு செல்லும்
காவடிகள் , பாத யாத்திரைகளுக்காக குறித்த வீதியூடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் நடந்து செல்லவும் , வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



.நாட்டில் வடக்கில் காணிகளை விடுவிப்போம் - விடுவிக்காத காணிகளுக்கு இழப்பீடு

யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான படையினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கு நியாமான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரட்ணாயக்க 
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அது தொடர்பான உத்தரவுகளை 
பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
கடந்த 36 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பலாலி வீதியை நாம் முழுமையாக நாம் திறந்து வைத்தோம். அதேபோல் காணிகளையும் விடுவிப்போம்.
கடந்த காலங்களில் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் அதன் உரிமையாளர்களை விவசாயம் செய்ய மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர். 
தற்போது அந்த காணிகளை முழுமையாக விடுவித்து அந்த காணிகளில் வீடமைத்து அதில் உரிமையாளர்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டவுள்ளனர்.
அத்துடன் பலாலி கிழக்கில் உள்ள காணிகளை 
விடுவிப்பதுடன், ஏனைய பகுதிகளில் முப்படையினர் வசமுள்ள சிறிய சிறிய காணிகளையும் முற்றாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காணிகளை விடுவிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கு தீர்வினை
 பெறுவது அல்லது, அதற்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்  
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திபெத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் கிராமங்களை அழித்தது

.இன்று நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதோடு, பாலங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்த நிலையில், எல்லையின் மறுபுறத்தில் உள்ள திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் "பெரும் உயிரிழப்புகள்" ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
கடுமையாக உயிரிழப்புகள் அல்லது சொத்து இழப்புகள் ஏற்படலாம். ஆனால், தற்போதைக்கு என்னால் உறுதியாகக் கூற முடியாது என நேபாள பிராந்திய அதிகாரி நரேந்திர பரியார் ராய்ட்டர்ஸிடம் 
தெரிவித்தார்.
நேபாளம், மலைப்பாங்கான ரசுவா பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, ஆனால் வெள்ள நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க
 முடியவில்லை.
மீட்புப் பணிகளுக்கு ராணுவமும் காவல்துறையும் உதவி வருவதாக நேபாள பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

தற்போது முழுமையாக கம்பஹாவில் நீர் விநியோகம் வழமைக்கு

தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம்  முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக 
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 
தெரிவித்துள்ளது.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரம் தொடர்பில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாகப் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.