சனி, 12 செப்டம்பர், 2026

நாட்டில் பிக்குகள் ஆதிலிங்கேஸ்வரருக்கு பூசை வழிபாடு நடாத்தியுள்ளனர்

நாட்டில்  பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை வழிபாடுகளை
 நடாத்தியுள்ளது.
அத்துடன் இது தமது புண்ணிய பூமி எனவும் ஆலய பூசகர் நிர்வாகத்தினருடன் முரண்பட்டு உச்சிமலையில் உள்ள சூலத்தை அகற்றுமாறு கோரியதுடன் விரைவில் இவ்விடத்தில் விகாரை ஒன்று கட்டப்படுமென தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்கள்.
வெடுக்கு நாரி மலையில் சைவ வழிபாட்டை அச்சுறுத்தி உச்சிமலையில் தமது வழிபாட்டை சட்டவிரோதமாக மேற்கொள்ள வருகைதந்த கல்கமுவ சாந்த போதிதேரருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் பாதுகாப்பளிக்க பத்துக்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து நூற்று ஐம்பது வரையான பொலிசாரும் ஐம்பதுக்கு 
மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பை வழங்க உச்சிமலையில் ஆதிலிங்கேஸ்வரருக்கு அருகில்  வட்ட வடிவமாக தாமரைப்பூவினை அடுக்கி சில பொருட்களைப்பரப்பி ஒன்றரை மணிநேரம் பிரித் 
ஓதியிருந்தனர்.
இதனிடையே வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் பூசை வழிபாட்டில் இடம்பெறும் இடையூறுகளை தடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களோடு அங்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் சாவகச்சேரியில் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியும், 
அந்த வாக்குறுதிகளை 
நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, வலி. வடக்கில் தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள்
 சுட்டிக்காட்டினர்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 600 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ள போதிலும், அதனைப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், தமிழ் மக்களின் பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் தொடர்பான நடவடிக்கைகள் மூலம் திட்டமிட்டு பல்வேறு விடயங்கள் திணிக்கப்படுவதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் 
தெரிவித்தனர்.
இவ்வாறான விடயங்களை கண்டித்தும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு

இலங்கை தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக
 மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் ‘SLNS தம்மன்னா’ முகாமைச் சேர்ந்த கடற்படையினர் வழமையான கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த மணல் திட்டில் இளைஞர் ஒருவர் தனியாக இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற கடற்படையினர், இளைஞரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து 
வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட இளைஞரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கடற்படையினர் அவருக்கு உடனடியாக தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 
வழங்கியுள்ளனர்.
கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் தென்னிந்தியாவில் இருந்து கடல் வழியாக பயணம் செய்து இலங்கை கடற்பரப்பை வந்தடைந்தவர் என தெரியவந்துள்ளது.
முதலுதவி மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் 
வழங்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அந்த இளைஞர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

நாம் பதின் நான்கு நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

முட்டை  மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத் 
தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற
 கொழுப்பு கிடைக்கிறது 
முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.
இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
 பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை
 தொடர்ந்து பார்க்கலாம்.
மூளைக்கு நல்லது: முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
கொலஸ்ட்ரால்: முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.
கண்களுக்கு நல்லது: மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
முடி, சருமம், நகங்களுக்கு: முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு 
உதவுகின்றன.
முக்கிய ஊட்டச்சத்துக்கள்: முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல 
சத்துக்கள் உள்ளன.
பசியைக் கட்டுப்படுத்தும்: காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.
முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் மயிலிட்டியில் இருபத்தி ஓராவது வாரமாக தொடரும் போராட்டம்

நாட்டில் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் ,  அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் அராலியில் கடும் கோடையிலும் பெருக்கெடுத்த கிணறுகள்: ஆச்சரியத்தில் மக்கள்,

 

ஆய்வுக்கு அழைப்பு  யாழ் அராலி கிழக்கு – மலையாளங்காடு ஐயனார் ஆலய காணியில் அமைந்துள்ள கிணறு உட்பட அதனைச் சூழவுள்ள மேலும் சில கிணறுகளில், வழமைக்கு மாறாக நீர்மட்டம் திடீரென பெருமளவில் உயர்ந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடும் கோடை
 வெயிலும் எல்நினோ வறட்சியும் நிலவி வரும் இக்காலகட்டத்தில், பொதுவாக நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் செல்லும் நிலையில், இங்குள்ள ஒரு கிணற்றில் நீர் தரைமட்டத்தைத் தாண்டி வெளிநோக்கி பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
அத்துடன் அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் நீர்மட்டம் நில மட்டத்தை எட்டியுள்ளதுடன், மேலும் இரண்டு கிணறுகளிலும் நீர் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
​இந்த திடீர் மாற்றத்திற்கு மத்தியில், வழமையாக இருந்த நீரின் தன்மை மாறி தற்போது அது தெளிவான நன்னீராக மாறியுள்ளதாகவும்
, ஒரு கிணற்றின் நீர் மிதமான வெதுவெதுப்பான சூட்டுடன் 
காணப்படுவதாகவும்
 பிரதேச மக்கள் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகின்றனர். கடும் 
வறட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ள இந்த விசித்திர நிகழ்வை அப்பகுதி மக்கள் “ஐயனாரின் புதுமை” என பக்திப் பரவசத்துடன் நம்பி 
வழிபட்டு வருகின்றனர்.
​இருப்பினும், மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மதிக்கும் அதேவேளை, இதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் புவியியல் காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகின்றது.
நிலத்தடி நீர் ஓட்டத்தில் ஏற்பட்ட திடீர் இயக்கம், புவியியல் மாற்றங்கள் அல்லது நிலத்தடி நீர்மட்ட அழுத்தத்தில் ஏற்பட்ட அழுத்த மாறுபாடுகள் காரணமாக இந்த நீர் ஊற்று ஏற்பட்டிருக்கலாம் என
 கருதப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட துறைசார் புவியியல் மற்றும் நீரியல் நிபுணர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து, நீரின் வெப்பநிலை, உவர்ப்புத்தன்மை, pH மற்றும் EC அளவுகளை விரிவாக பரிசோதித்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




செவ்வாய், 8 செப்டம்பர், 2026

நாட்டில் பெருமளவு போதைப்பொருள்களுடன் இருவர் கைது

நாட்டில்  சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த 
இரண்டு வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்களாவர். இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டுபவர்களாகப் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு
 வந்து சேர்ந்துள்ளனர்.
இதன்போது வருகை முனையத்தில் அறிவிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் 'பசுமைப் பாதை' (Green Channel) வழியாகப் போதைப்பொருள் தொகையைக் கடத்திச் செல்ல
 முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களின் இரண்டு பயணப் பைகளுக்குள் இருந்த விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக 'திராட்சைப் பசை' போன்று வெளிப்புறத்தில் தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றித் தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.