சனி, 8 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் பன்னிரண்டு சுவிட்சர்லாந்தில் தென்படும் சூரிய கிரகணம் தொடர்ந்து படியுங்கள்

ஆகஸ்ட் 12-08-2026 அன்று, சுவிட்சர்லாந்தில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தென்படும். அதை பாதுகாப்பாகக் காண நீங்கள் தயாரா? உங்கள் கண்களை எவ்வாறு சரியாகப் பாதுகாப்பது என்பதை அறிய 
தொடர்ந்து படியுங்கள்.
ஆகஸ்ட் 12, 2026 அன்று, பலரின் பார்வையும் வானத்தை நோக்கியிருக்கும்: சுவிட்சர்லாந்தில் ஒரு சூரிய கிரகணம் தென்படும். 
சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்லும், அப்போது அது சூரியனைப் பகுதியளவு மறைக்கும். 
இந்த நிகழ்வு மாலை 7:00 மணியளவில் தொடங்கி இரவு 9:00 மணியளவில் முடிவடைகிறது. 
சூரிய கிரகணம் இரவு சுமார் 8:15 மணிக்கும் 8:20 மணிக்கும் இடையில் அதன் உச்சத்தை அடைகிறது, அப்போது சந்திரன் சூரியனை ஏறக்குறைய முழுமையாக மறைக்கும். 
தடையற்ற பார்வை கொண்ட உயரமான இடங்களிலிருந்து இந்த நிகழ்வை குறிப்பாகக் காணலாம். சூரியன் பகுதியளவு மறைக்கப்பட்டிருந்தாலும், அதை நேரடியாகப் பார்ப்பது விழித்திரையைப் பாதிக்கக்கூடும். 
எனவே, உங்கள் கண்களைப் பாதுகாத்து, சூரியனைக் காண்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு கண்ணாடி
களை அணியுங்கள்.
பாதுகாப்புக் கண்ணாடிகள் ISO 12312-2:2015 தரச்சான்றிதழ் பெற்றதாகவும், CE முத்திரையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாடில் தரம்-ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

.நாடில் தரம்-ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.08.2026) இடம்பெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே 
தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 2723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம் முறை தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைகளுக்காக மொத்தம் 294,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன் அவர்களில் சிங்கள மொழியில் 220,366 விண்ணப்பதாரர்களும், தமிழ்மொழியில் 73,723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.
முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்பட்டு நாளை காலை-09.30 மணியளவில் தொடங்கி முற்பகல்- 10.45 மணியளவில் நிறைவடையும்.அதன் பின்னர் சிறிய இடைவேளைக்குப் பின்னர் முற்பகல்-11.15 மணி முதல் பிற்பகல்-12.15 மணி வரையான ஒரு மணி நேர காலம் பகுதி-01 வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.
மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணிக் கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாகப் பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு 
வர வேண்டும்.
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து தங்களது பரீட்சை இலக்கத்தைச் சரியாகக் குறிப்பிட்டு தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும். 
கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சட்டவிரோதமாக கனடாவில் இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேஸ்பிரிட்ஜில் உள்ள லிட்டில் ரோடு பகுதியில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் இயங்கி வருவதாக எழுந்த சந்தேகத்தின் 
பேரில், கடந்த வசந்த காலத்தில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
சோதனை ஆணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த 4,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சா சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த விசாரணை நடவடிக்கையின் முடிவில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நார்த் யார்க் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

நாட்டில் பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் மீண்டும் ஆரம்பம்

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் -10-08-2026-திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் லங்கா மெட்ரோவின் புதிய சலுகை: ரூ. 799-க்கு வாரஇறுதியில் வரம்பற்ற பயணம்

 நாட்டில் லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம், 799 ரூபாய் என்ற ஒற்றைக் கட்டணத்தில் வாரஇறுதி நாட்கள் முழுவதும் மெட்ரோ பேருந்து சேவையில் வரம்பற்ற பயணத்தை அனுபவிக்கும் வகையில் வாரஇறுதி அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
நண்பர்களைச் சந்திக்கச் செல்வது, பல்கலைக்கழகங்களுக்கு பயணிப்பது, நகரத்தை வலம் வருவது அல்லது குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்வது என வாரஇறுதிப் பயணங்களுக்குப் பயணிகளுக்கு
 அதிக வசதியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் வகையில் இந்த அனுமதிச்சீட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் தெரிவித்தது.
இந்த வாரஇறுதி அனுமதிச்சீட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 மணி வரை 
செல்லுபடியாகும்.
இந்த இரண்டு நாள் காலப்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவைகளில் வரம்பற்ற முறையில் பயணிக்க முடியும்என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டு மக்களுடன் இணைந்த அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியே எமது எதிர்பார்ப்பு

நாட்டு அரசாங்கம் தனித்த ஓர் அமைப்பாக இருந்து மக்களை ஆட்சி செய்வதை விட, மக்களுடன் இணைந்து அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது 
எதிர்பார்ப்பாகும்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயமிக்க அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதியாகச் செயற்பட்டு வருகின்றோம். 
அதற்கு பொறுமை, அடக்கம், சுயபரிசீலனை மற்றும் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவை மிகவும் அவசியமானவை. சர்வதேசக் கற்கைகள் சங்கத்தினால் (ISA) தெற்காசியாவில்
 முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “உலக அரசியலில் தெற்காசியா” என்ற தலைப்பிலான மாநாடு ஆகஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. 
இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

. கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் யாழில் திருட்டு

யாழில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது. 
உரும்பிராய் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் , தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து தயார் செய்த பின்னர் , தூக்கத்திற்கு
 சென்றுள்ளனர் 
 காலையில் எழுந்து பார்த்த போது , ஆடைகள் களையப்பட்டு , நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை வீட்டார் பார்த்து , அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
 முறைப்பாடு செய்தனர் 
முறைப்பாட்டின் பிரகாரம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் , தாலிக்கொடி உள்ளிட்ட 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.