வியாழன், 14 மே, 2026

தற்போது நாட்டில் தேவைக்கு அதிகமாக பொலிஸ் நிலையங்களை மூட நடவடிக்கை

தற்போது  நாட்டில்  காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக பொது 
மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், போயவலான பொலிஸ் நிலையம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த நிலையங்களுக்கு பதிலாக புதிய இடங்களை தேடுவதை விட, தற்போதைய சூழலில் தேவையற்ற ரீதியில் இயங்கி கொண்டிருக்கும் சில பொலிஸ் நிலையங்களை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
தேவையற்ற நிலையில் இயங்கும் நிலையங்களை மூடுவதன் மூலம் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து வளங்களை மிகவும் தேவையான இடங்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் பொலிஸ் சேவையை 
மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கான மீளாய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் அமையவுள்ளது என்றார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் சம்பூர் மகா வித்தியாலயத்திற்கு புதிய இரு மாடி கட்டிட பணிகள் ஆரம்பம்

நாட்டில் மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 
கோலாகலமாக நடைபெற்றது.​ திட்ட விபரங்கள்:​முதற்கட்ட நிதி ஒதுக்கீடு: ரூ. 16 மில்லியன் (முதலாம் மாடிக்காக).​இரண்டாம் கட்டம்: அடுத்த மாடிக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் மேற்கொள்ளப்படும்.​
அடிக்கல் நாட்டி வைத்தவர்கள்:​கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் இணைந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.​
கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்:​பாடசாலை அதிபர் புண்ணியமூர்த்தி பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,​எஸ். ஆர். ஹசந்தி - கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்.​எ.எல்.சிராஜ் - மூதூர் வலய கல்விப் பணிப்பாளர்.​
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.எம். சப்ரான்.​வலயக் கல்வி அலுவலகப் பிரதி பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள்.​
கல்வி வளர்ச்சியில் புதிய மைல்கல்!​இந்த புதிய கட்டிட வசதி மூலம் சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் சூழல் மேம்படுவதுடன், பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் இது ஒரு முக்கிய அங்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஏர் இந்தியா சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது

தற்போது .ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏர் இந்தியா6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக  
ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும் 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் 
அறிவித்துள்ளது.
ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஆகஸ்ட் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 13 மே, 2026

நாட்டில் வடக்கிற்கும் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை

நாட்டில்  மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது

 அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக 
வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான
 நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் நில உரிமைக்காக ஒன்றிணைந்த வடகிழக்கு: கேப்பாப்பிலவில் கலந்துரையாடல்

நாட்டில்   முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் இன்று (13.05.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நில உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த கள விஜயமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை
 ஆகிய மாவட்டங்களின் செயற்பாட்டாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வாட்டுவாகல்,
 வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் நிலப் பறிப்பால் பாதிக்கப்பட்ட மக்களும், சிவில் அமைப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
குருந்தூர் மலை விவகாரம் மற்றும் அதன் தற்போதைய நிலை. கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகள்.
கேப்பாப்பிலவு மக்களின் நீண்டகால காணி மீட்புப் போராட்டம். வாட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தாபாய கடற்படை முகாமினால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகள்.
தனித்தனியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை விட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் "நில மீட்பிற்கான ஒருங்கிணைந்த செயலணி" ஒன்றை உருவாக்கி, பலமான கூட்டுப் போராட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 
நில அபகரிப்புக்கு எதிராக வடகிழக்கு மக்கள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இச்சந்திப்பு மீள உறுதிப்படுத்தியது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm

இலங்கை கட்டுநாயக்கவில் நான்கு கோடி ரூபா போதைப்பொருள் வேட்டை - இந்திய தொழிலதிபர் கைது

இலங்கை  .கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து இன்று அதிகாலை 12:30 மணிக்கு Thai Airways (TG-307) விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த 29 வயதுடைய இந்திய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தன்னிடம் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவுமில்லை எனக் கூறி, விமான நிலையத்தின் 'Green Channel' ஊடாக வெளியேற முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரை 
வழிமறித்தனர். 
அவரது இரண்டு பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 389 கிராம் எடையுள்ள உயர்தர 'குஷ்' (Kush) போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான இந்தியப் பிரஜை மற்றும் 
போதைப்பொருள்
 என்பன மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 12 மே, 2026

யாழ் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ் பலாலி   சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் 11-05-2026.அன்று   திங்கட்கிழமை நடைபெற்றது.
அதன் போதே விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, குறித்த கலந்துரையாடலில்,
மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் பாடசாலைகளை, அரசிற்கு கையளித்த குறித்த அமைப்புகளிடமே மீண்டும் கையளித்தல் மற்றும் ஒவ்வொரு வலயத்திலும் மூடப்படும் ஒரு பாடசாலையை நவீன ஆய்வுகூட வசதிகளுடன் மேம்படுத்துதல் குறித்துப் 
பரிசீலிக்கப்பட்டது. 
மேலும், பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பிரபல்யமான பாடசாலைகளுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாக நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்கு 
நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி 
செய்தல். அத்துடன், யாழ் போதனா மருத்துவமனையைச் சூழவுள்ள நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு
, வீதியோரங்களில் தரித்து நிற்கும் வெளிமாவட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்துக்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல். கீரிமலை, காங்கேசன்துறை, பலாலி வீதிகளில் (764, 769 வழித்தடங்கள்) முன்னைய பாதைகளிலேயே பேருந்து சேவைகளை அனுமதிக்கக் கோருதல் மற்றும் தம்பாலை – இடைக்காடு – வளலாய் வீதியைப் பலாலி வீதியுடன் இணைப்பதற்கான எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விரைவாக விடுவித்தல் தொடர்பில்
 பேசப்பட்டது. 
மேலும், தீவுப்பகுதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறைக்கான போக்குவரத்து மேம்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
யாழ். நகரம் உட்பட வட மாகாணத்தில் உள்ள சிறிய
 மற்றும் நடுத்தரக் குளங்களை நன்னீர் தேங்கி நிற்கும் வகையில் புனரமைப்பதுடன், வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த ஆளுநர் நா.வேதநாயகன், 
சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் கொள்கை ரீதியான முடிவுகளைக் கொண்டிருப்பதால், அவை தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. 
அதேவேளை, மாகாண நிர்வாகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்களை மிக விரைவாக ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ என உறுதியளித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.