திங்கள், 27 ஜூலை, 2026

இலங்கையில் டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை: தடுப்பூசியைப் பெற அனுமதி கோரிக்கை

இலங்கையில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், "புதிய டெங்கு தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்னரே செலுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பு பெற முடியும்.
பல நாடுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், இலங்கையிலும் இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

விமான ஓடுபாதைக்குள் கனடாவில் புகுந்த வாகனம் ஓட்டுநர் கைது

 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். 
மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது.
இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு 
திரும்பியது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைத . என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கடுமையான விலங்கு நலச் சட்டம்: சிறப்பு வர்த்தமானி வெளியீடு

நாட்டில்  விலங்குகள் நலனைப் பாதுகாக்கவும், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கவும் புதிய விலங்கு நலச் சட்ட வரைவு சிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின் கீழ் விலங்குகளைத் தாக்குதல், துன்புறுத்துதல், பட்டினி போடுதல், சட்டவிரோதப் போட்டிகள் மற்றும் வேட்டையாடுதல் போன்ற செயல்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 2,50,000 ரூபாய் வரை அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்
 விதிக்கப்படும்.
அத்துடன், கொடூரமான முறையில் விலங்குகளைக் கொல்பவர்களுக்கு 5,00,000 ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க சட்ட வரைவு பரிந்துரைக்கிறது.
மேலும், செல்லப்பிராணி விற்பனையகங்கள் மற்றும் இனப்பெருக்க மையங்களுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, விலங்குகளைப் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வோர் மீது 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி


.இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.63 ரூபா
ஜப்பானிய யென் 2.10 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 454.79 ரூபா
யூரோ 388.95 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 241.14 ரூபா
சுவிஸ் பிராங் 418.76 ரூபா
கனடிய டாலர் 242.69 ரூபா
கத்தார் ரியால் 94.08 ரூபா
குவைத் தினார் 1108.18 ரூபா
சவுதி ரியால் 92.03 ரூபா
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சுங்கத்துறையில் தேங்கிக் கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்

இலங்கையில் இறக்குமதியாளர்கள் இன்னும் சுங்க அனுமதி செயல்முறையை முடிக்காததால், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 
இவற்றில் சுமார் 625 வாகனங்கள் இலங்கைக்கு வந்ததில் இருந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக துறைமுகத்தில் உள்ளதாக சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் சந்தனா புஞ்சிஹேவா 
தெரிவித்துள்ளார். 
இந்த வாகனங்கள் எதுவும் சுங்க விதிமீறல்களுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சுங்கச் சட்டத்தின் 129-வது பிரிவின் கீழ், சுங்க விதிமீறல்கள் எதுவும் இல்லாதபோதிலும் உரிமை கோரப்படாமல் இருக்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் ஏலம் விடப்படும் அல்லது ஒப்பந்தப்புள்ளி செயல்முறை மூலம் விற்கப்படும் என்று புஞ்சிஹேவா கூறினார்.
இலங்கை சட்டத்தின்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும், உரிய வரிகள் மற்றும் தீர்வைகளைச் செலுத்திய பின்னர், வந்தடைந்த ஒரு மாதத்திற்குள் சுங்க அனுமதி பெற வேண்டும். அவ்வாறு செய்ய இறக்குமதியாளர்கள் தவறினால், அப்பொருட்களை
 விற்பனை செய்யவும், அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை வசூலிக்கவும், அதன் மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து துறைமுக மற்றும் கிடங்குக் கட்டணங்களைச் செலுத்தவும் சுங்கத்துறைக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வேகமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம்

.பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது. நாட்டில் நிலவும் வெப்பநிலை தீயணைப்பு பணிகள் சவாலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இந்நிலையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 03 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாட்ரிட் புறநகரப் பகுதிகளில் வானிலை சற்று மாறியதால் தீயணைப்பு வீரர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.
 இருப்பினும், "முன்னால் இன்னும் கடினமான நாட்கள் உள்ளன" என்று பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez ) 
தெரிவித்துள்ளார்.
 இதற்கிடையில், வலென்சியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 70 வயதிற்கு மேற்பட்டதாக நம்பப்படும் ஒருவர் தனது காருக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 மேலும் இந்த அவசரநிலையை சமாளிக்க பிரான்ஸ் அரசு இராணுவத்தையும் களமிறக்கியுள்ளது. தீ பரவாமல் தடுக்கும் வகையில் புதர்களை அகற்றுதல் மற்றும் தீ தடுப்பு பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
 பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், தேவையான காலம் முழுவதும் அரசு மக்களுடன் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் குழந்தைகள் மத்தியில் பரவும் காய்ச்சல் பெற்றோர் கவனத்தில் அலட்சியம் வேண்டாம்

நாடில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
 குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளதாகவும், இந்நிலைமை மேலும் அதிகரித்தால் வைத்தியசாலையின் கொள்ளளவை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் 
அவர் தெரிவித்தார்.
 எனவே, தமது குழந்தைகளுக்குக் காய்ச்சல் காணப்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட வைத்தி நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
 மேலும், வீடுகளிலிருந்து கை வைத்தியம் செய்வதன் மூலம் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதற்கான பொன்னான நேரம் வீணாகிறது என்றும், சுய சிகிச்சைகளைத் தவிர்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.