செவ்வாய், 30 மே, 2023

நாட்டில் பேலியகொடை மீன் சந்தையில் அதிகரித்த கோழி இறைச்சி, மீன் , முட்டை விலைகள்

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை 
வெளியிட்டுள்ளனர்.
1000 – 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 – 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. இதனுடன் சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பலயா 1400 ரூபாவிற்கும் பாறை 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சால 400 ரூபாவிற்கும் லின்னா 1500 ரூபாவிற்கும் விற்பனை 
செய்யப்படுகிறது.
இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கூறிள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 29 மே, 2023

சேலம் நகரரில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு 1000 ரூபாய் அபராதம்

ஹெல்மட் அணிந்து காரை ஓட்டவில்லை எனக்கூறி சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே டூவீலர் மெக்கானிக்கான வெற்றிவேலின் செல்போன் எண்ணிற்கு.28-05-2023. அன்று குறுஞ்செய்தி
 ஒன்று வந்துள்ளது.
அதில், சேலம் சாலையில் காரில் செல்லும் போது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு வாரமாக காரை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்த நிலையில் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் 
வெற்றிவேல் தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலம் போக்குவரத்து காவல்துறையினர் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 28 மே, 2023

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறியில் மீண்டும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.
எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று 
நம்பப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.
அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை 
சமர்ப்பிக்க உள்ளார்.
முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு 
தெரிவித்துள்ளது.
2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் 
வாக்களிக்கவில்லை.
இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை 
விடுத்துள்ளது.
அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது
 அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், 
ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 27 மே, 2023

ஒமிக்ரோன் திரிபின் புதிய கொரோனா அலையால் :சீனாவில் 6.5 இலட்சம் பேர் பாதிப்பு

சீனா முழுவதும் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி  ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடையும் எனவும் வாரத்துக்கு 6.5 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பெய்ஜிங் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர் வாங் குவாங்பா தெரிவிக்கையில், சீனாவில் புதிய கொரோனா அலை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு மிதமாகவே உள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் நுரையீரல் தொற்று நிபுணர் ஜாங் நான்ஷான் 
தெரிவிக்கையில், ஒமிக்ரோன் XBB வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக 2 தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். 
விரைவில் மேலும் 4 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
எனவே ,சீனாவில் இருந்து ஒமிக்ரோன் XBB வைரஸ் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீனாவின் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 26 மே, 2023

இலங்கை இளைஞர்களை ஏமாற்றி வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது

இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால்.26-05-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 
 சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. 
 அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும்
 கைது செய்தனர்.
 சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 
 தொடர்புடைய சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 
 இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து.26-05-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 
 வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட இந்த நபர், அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை வந்துள்ளார். 
 உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
 தெரிவித்துள்ளது. 
 சந்தேகத்திற்குரிய கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 25 மே, 2023

நாட்டில் மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்க மறுப்பு

கிளிநொச்சி கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்விப் பணிமணையில் 
முறையிட்டுள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று கிளிநொச்சி கோணாவில் தமிழ் வித்தியாலயத்தில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் 
வழங்கப்பட்டுள்ளன.
இதில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களுக்கான அனுமதியட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க 
மறுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்று முறைப்பாடளித்தனர்.
குறித்த மூன்று மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 24 மே, 2023

யாழ் தையிட்டி விகாரையை தமிழர்களிடம் ஒப்படைக்க தயார்: பிரபல தேரர் அதிரடி

நாட்டிலேயே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருப்பதாக பொகவந்தலாவ ராகுல தேரர் 
தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் 
தெரிவிக்கையில்,
திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்த காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள். அந்த விகாரை கட்டப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள் என கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும் எங்களுக்கு சரிவர தெரியவில்லை. அவர்களோடு நாங்கள் அமர்ந்து பேச தயாராக இருக்கின்றோம். அன்பு உறவுகளே வாருங்கள், உங்கள் ஆவணங்களோடு. நாங்கள் இதை சட்ட ரீதியாக ஒப்படைப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். நாங்கள் ஒரு பரிபாலன சபையை அமைத்து அந்த விகாரையை உங்கள் கையிலே
 ஒப்படைக்கிறோம்.
நாங்களும் வருகின்றோம். அதன்பிறகு அந்த விகாரை பொது மக்கள் கையில் ஒப்படைக்கப்படும். தமிழ் பேசுகின்ற அனைத்து உறவுகளும் சென்று அந்த இடத்திலே உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Blogger இயக்குவது.