புதன், 5 ஆகஸ்ட், 2026

இன்று தங்கம், மற்றும் வெள்ளி விலையில் மீண்டும் அதிரடி உயர்வு

தற்போது  சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்.05-08-2026. இன்று  அதிகரித்துள்ளன.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,132.03 அமெரிக்க டொலருக்கும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 60.83 அமெரிக்க டொலருக்கும் விற்பனை
 செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை உயர்வின் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் பெறுமதி மாற்றம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக கூறப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 

நாட்டில் முதன்முறையாக அரச நிதியில் அதிவேக நெடுஞ்சாலை திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள்

நாட்டில்..தேசிய அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு, 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் 132 கிலோமீற்றர் நீளத்திற்கு விரிவாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான முக்கிய திட்டங்களில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம மற்றும் பொத்துஹெர – கலகெதர ஆகிய பகுதிகளின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
மேலும், குருணாகல் – கலேவெல இடையிலான 38 கிலோமீற்றர் பகுதியின் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.233 பில்லியன் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்புடன் 12 ஒப்பந்தப் பொதிகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 
முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் வெளிநாட்டு கடன்களை நம்பாமல் இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் பாடசாலை பையை உயிர் காக்கும் கருவியாக மாற்றிய மாணவன்

நாட்டில்..2023ம் ஆண்டில் பாடசாலை பையை உயிர் காக்கும் பையாக மாற்றி வெள்ளத்தில் தப்பிக்க இலங்கை மாணவன் ஒருவர் 
வழிகாட்டியுள்ளார்.
இலங்கையின் காலி, பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த லென்துவ என்ற பள்ளி மாணவன், தனது அபார சிந்தனையால் பள்ளிப் பையை ஒரு உயிர் காக்கும் உபகரணமாக்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும்
 ஈர்த்துள்ளான்.
ஆபத்துக் காலங்களில் மாணவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் இவன் உருவாக்கிய இந்த எளிய கண்டுபிடிப்பு, சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த மாணவனின் தந்தை ஒரு கடலோர உயிர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடலில் ஏற்படும் ஆபத்துகள், நீரில் மூழ்கி மனித உயிர்கள் பலியாவது மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்து தனது தந்தை மூலம் இந்த மாணவன் சிறு வயது முதலே நிறையக் கேட்டு வளர்ந்துள்ளான்.
இத்தகைய விபத்துகளில் இருந்து, குறிப்பாக பள்ளி மாணவர்களின் உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற தீவிர சிந்தனையே இவனது புதிய கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக அமைந்தது.
இதற்கு ஒரு சிறந்த தீர்வாக, அம்மாணவன் தினசரி பள்ளிக்கு எடுத்துச் செல்லும் சாதாரண பள்ளிப் பையையே (School Bag) அவசரகாலத்தில் தண்ணீரில் மிதக்கும் 'உயிர் காக்கும் பையாக' (Life-saving Bag) 
மாற்றியமைத்தான்.
வெள்ளத்திலோ அல்லது ஆழ்கடலிலோ எதிர்பாராத விதமாக விழ நேரிட்டால், இந்தப் பையை ஒரு பாதுகாப்பு உடற்பகுதி மிதவை போல பயன்படுத்தி, நீரில் மூழ்காமல் நீண்ட நேரம் மிதக்க முடியும் என்பதை அவன் நீரில் இறங்கி வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டினான்.
சிறு வயதிலேயே சுயநலமின்றி, பிறரது பாதுகாப்பிற்காக ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து இந்த மாணவன் உருவாக்கிய கண்டுபிடிப்பு இலங்கைக்குக் கிடைத்த ஒரு பெருமிதமாகும். 
இயற்கை பேரிடர்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த பாதுகாப்பு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நாட்டில் கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் இயங்கும்

நாட்டில்  சீரற்ற வானிலை காரணமாக.04-08-2026- இன்று மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் 05-08-2026-நாளை  வழமைபோல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழை மற்றும் பாதகமான வானிலை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய வானிலை நிலைமையை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, நாளை முதல் கல்வி நடவடிக்கைகளை வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டில் சஜீத் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க
 வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த மக்கள் சிலர் இன்றைய தினம் 04.08.2026 கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2018ம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது.
இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து தங்களுடைய பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்படுடுகின்ற 
நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது வீட்டுத்திட்ட மிகுதி பணத்தை வழங்குமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளித்திருந்தனர்  
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் திருக்கோவிலில் நெல் கொள்வனவில் தராசு மோசடி அம்பலம்

நாட்டில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் தராசு மோசடி, பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் அதிகாரிகளின் துரித தலையீட்டின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக எடைபோட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர், தராசின் அளவீட்டில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பிரதேச சபை தவிசாளருக்கு தகவல் 
வழங்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தவிசாளர் மற்றும் அதிகாரிகள், பயன்படுத்தப்பட்ட தராசை பரிசோதித்தபோது அது தவறான அளவீட்டைக் காட்டியமை உறுதிப்படுத்தப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த விவசாயிக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சுமார் ரூ.2.5 இலட்சம் நிதி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நெல் கொள்வனவாளர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நெல் விற்பனை செய்யும் போது 
பயன்படுத்தப்படும் தராசுகளின் அளவீடுகளை விவசாயிகள் கவனமாக சரிபார்க்குமாறும், தராசு மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 067 226 5018 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் வழங்குமாறும் திருக்கோவில் பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாடில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது 
என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
அறிவித்துள்ளது.
தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அனைத்துக் கணக்கீடுகளின்படி,
 நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலக்கரியின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை, மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.