வெள்ளி, 22 மே, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 354.24 ரூபா
ஜப்பானிய யென் 2.27 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 479.74 ரூபா
யூரோ 414.75 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 258.04 ரூபா
சுவிஸ் பிராங் 455.32 ரூபா
கனடிய டாலர் 259.74 ரூபா
கத்தார் ரியால் 98.49 ரூபா
குவைத் தினார் 1165.01 ரூபா
சவுதி ரியால் 95.68 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் பாதிப்பு : மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்கள்

கொழும்பு  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் நிலவும் கடுமையான மழை மற்றும் மோசமான வானிலை
 காரணமாக, அங்கு தரையிறங்க வந்த 9 சர்வதேச விமானங்கள் மத்தள
 ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை வேளையில் பெய்த அதிக மழை காரணமாக விமான நிலைய ஓடுதளப் பகுதியில் பார்வைத்திறன் (Visibility) கணிசமாகக் குறைவடைந்ததை அடுத்தே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய
 அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையத் தகவல்களின்படி, அதிகாலை வேளையில் தரையிறங்கவிருந்த பின்வரும் நிறுவனங்களின் விமானங்கள் இவ்வாறு மத்தளவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன:என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 21 மே, 2026

இலங்கையில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

இலங்கையில் மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ள
மையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. 
காட்டுப் பகுதியில் உள்ள மின் பாதையே இவ்வாறு அறுந்து விழுந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் சம்பவ இடத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில் மாலிசிறிபுரப் பண்ணைக்கு அருகிலிருந்து ஓமரகொல்ல வரையிலும், ஓமரகொல்லவிலிருந்து மதஹபோல கந்த வரையிலும், ஹெவனதென்னவிலிருந்து கட்டுவலந்த வரையிலும் உள்ள பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி பவானி வீதி விவகாரம்: பொலிஸாரின் தடை மனு மீதான கட்டளை ஜூன் 25க்கு ஒத்திவைப்பு

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதியினை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி 
பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான கட்டளை, எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம்
 உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் (மே 21) இவ்வழக்கு மீதான கட்டளை வழங்கப்படும் என கடந்த 11ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில், இன்றைய அமர்வின் போது இக்கட்டளை அடுத்த மாதம் ஜூன் 25 ஆம் திகதிக்கு 
ஒத்திவைக்கப்பட்டது.
இவ்விவகாரத்தின் பின்னணி விபரங்கள் வருமாறு: வீதி அளவீடும் விகாராதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதமும் தையிட்டி விகாரை வளாகத்திற்குள் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து, வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பிரதேச சபையே வேலியை அகற்றி அதற்கான செலவீனத்தை 
விகாராதிபதியிடமிருந்து அறவிடும் எனவும் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பொலிஸாரின் அச்சுறுத்தலும் நீதிமன்ற மனுவும் பிரதேச சபை விகாரை வேலியை அகற்ற முற்படுவதாக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இம்முறைப்பாட்டின் பிரகாரம் தவிசாளரை அழைத்த பொலிஸார், "வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்பணியைக் கைவிட வேண்டும்" என அச்சுறுத்தும் தொனியில் கூறினர். 
எனினும், பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தவிசாளர் பொலிஸாரிடம் மறுத்துரைத்தார். இதனையடுத்து, வீதியை மீட்கும் பணியை வலி. வடக்கு பிரதேச சபை கைவிட வேண்டும் எனத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
சுமந்திரனின் வாதமும் தள்ளிவைக்கப்பட்ட கட்டளையும் இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஒருதலைப்பட்சமாக உத்தரவிட முடியாது எனக் கூறி வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு
 விடுத்திருந்தது.
அதன்படி கடந்த 11ஆம் திகதி அவர்கள் மன்றில் முன்னிலையான போது, அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகிப் பிரதேச சபை தரப்பு வாதங்களை 
முன்வைத்தார். 
இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்புக் கட்டளையே, தற்போது ஜூன் 25ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 20 மே, 2026

நாட்டில் அரிசி, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்பு

தற்போது இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி  காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் காலத்தில் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சுவிஸ் சூரிச் மற்றும் பெங்களூரு இடையே நேரடி விமான சேவை ஆரம்பமகாயுள்ளன

 

சுவிஸ்  சூரிச் சர்வதேச விமான சேவை, பெங்களூரு மற்றும் சூரிச் இடையே ஒரு புதிய நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. 
இந்தப் புதிய வழித்தடம், 2026 அக்டோபர் 25 முதல் 2027 மார்ச் 27 வரை இயக்கப்படும் என்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
 முழுவதும் உள்ள இடங்களுக்குத் தொடர் பயணச் சேவையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பெங்களூரிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல விரும்பும் பயணிகள் துபாய், கத்தார் அல்லது ஜெர்மனி வழியாக விமானம் மாறி தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம், பயணிகள் எங்கும் இறங்கி மாறாமல் பெங்களூருவிலிருந்து 9 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தை சென்றடைய முடியும்.
.  .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 19 மே, 2026

நாட்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு நிதியுதவி

நாட்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டால், அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு  மாதம் 10,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) அதிகாரிகள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். 
பாராளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தொடர்புடைய அறிக்கையை இன்று வெளியிட்டது. 
இதன்படி வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாத வருமானம் 400 அமெரிக்க டாலரைத் தாண்டும் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஆரம்ப ஒதுக்கீடாக ரூ 10,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
 இத்திட்டத்திற்காக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.