ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

 இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் 
வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 312.53 ரூபா
ஜப்பானிய யென் 2.04 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 422.49 ரூபா
யூரோ 369.04 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 224.28 ரூபா
சுவிஸ் பிராங் 405.75 ரூபா
கனடிய டாலர் 229.59 ரூபா
கத்தார் ரியால் 86.62 ரூபா
குவைத் தினார் 1033.02 ரூபா
சவுதி ரியால் 84.11 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் .புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் - மக்களுக்கு அழைப்பு.

நாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் நாளை நடைபெறவுள்ளது. 
இதற்காக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது. 
பயங்கரவாத தடைச் சட்டமே வேண்டாம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படும் இந்த கையெழுத்து போராட்டம் நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 21 பிப்ரவரி, 2026

நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாகவும், 21-02-2026.இன்று மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி,
  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்
 கூடிய மழை பெய்யும். 
அதேநேரம் பிற இடங்களில்  பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 
சில பகுதிகளில் 75MM மழைவீழச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் .புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குடும்ப பெண்

நாட்டில் . முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6.5 கிராம் கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். அடசூரிய அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்படி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக 6.5 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

பணிப்பாளர் எச்சரிக்கை யாழ்.போதனாவைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்பினால் கடுமையான நடவடிக்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக  காவல்துறையினா்  ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும்.
இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தினமும் இரவு பகலாக பணியாற்றி, வார்டுகள், நடைபாதைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மிகுந்த 
தூய்மையுடன் பராமரித்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் வைத்தியசாலை சுத்தமான சூழலை நிலைநிறுத்தி வருகிறது.
ஆயினும், சிலர் வெற்றிலைப் பயன்படுத்தி எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு முரணானதோடு, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்கும் பாதிப்பை 
ஏற்படுத்தக்கூடியது.
அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு 
அமைவாக, வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை முழுவதும் 
பதியப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இத்தடை மீறப்படின், சம்பந்தப்பட்டவர்கள்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு 
கொண்டு வருகிறோம்.
இந்த வைத்தியசாலை உங்கள் அனைவரின் வைத்தியசாலையாகும். அதனை சுத்தமாகவும் சுகாதாரமான சூழலுடனும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, இத்தகைய 
செயல்களில் இருந்து
 முழுமையாக விலகி, சுத்தம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தமது உறவுகளை தேடி ஆரம்பித்த போராட்டம் 09வது ஆண்டு இன்று நிறைவடைகின்ற நிலையில் தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக காலை 10.30மணிக்கு ஆம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக சென்று டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் முன்பாக நிறைவடைந்தது. 
2017ம் ஆண்டு 02ம் மாதம் 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது உறவுகளைத்தேடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் 3287 நாட்கள் நிறைவடைந்துள்ளது
.வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 
உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 
இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப் பெறவில்லை.
நாம் தள்ளாடும் முதிர்ந்த வயதிலும் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம், பிள்ளைகளைத் தேடி அலையும் தாய்மார்களாகிய எங்களின் கண்ணீருக்கு என்ன பதில்? மீண்டும் சர்வதேச நாடுகளுக்கு
 நாம் வலியுறுத்துவது யுத்தத்திற்கு முன்பும் பின்பும் எமது தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன ஒடுக்குமுறைகளின் மிக உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை, நாம் எம் கண் முன்னே பார்த்து சொல்லனாத் துயரத்தை 
அனுபவித்தோம்.
குறிப்பாக புதைகுழிகள் பல மூடப்பட்டுள்ளன. தற்போது செம்மணி புதைகுழிக்கான அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுகொண்டு 
இருக்கின்றது. 
எனவே அதற்கான சர்வதேச தலையீடு அவசியம் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம். படுகொலையை செய்யும் இராணுவத்திற்கு பதவி உயர்வு வழங்கும் நாட்டில் எமக்கான நீதி 
வழங்கப்பட மாட்டாது . 
எனவே தான் நாம் சர்வதேச நீதி கேட்டு 3287 நாட்களைக் கடந்து போராடி வருகின்றோம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சாட்சிகளாக இருந்த 400 மேற்பட்ட தாய் தந்தையரை இழந்து 
நிற்கின்றோம். 
அவர்களின் பிள்ளையின் உண்மை நிலை அறியாமல் ஏக்கத்துடன் மரணித்து விட்டார்கள். 
மிகுதியாக எஞ்சியிருக்கும் சாட்சியங்களாக இருக்கின்ற நாங்களும் இறப்பதற்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கண்டறிய சர்வதேச சிறப்பு சுயாதின விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம். எனவே பின்வரும் கோரிக்கைகளையும் 
முன்வைக்கின்றோம் 
1.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும். 
2.அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும்.
3. நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை[P.T.A]அத்தோடு புதிதாக அமுல்படுத்த இருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்[PSTA] இரண்டு சட்டங்களும் உடனடியாக நீக்கப்படவேண்டும். 4. இராணுவ முகாம்கள் வட கிழக்கில் 
மூடப்பட வேண்டும். 
5.வட கிழக்கில் மனித புதைகுழிக்கான அகழ்வு பணியை கண்காணிக்க சர்வதேச நிபுணர்களின் தலையீடுவேண்டும். 
6. பத்திரிகையாளர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் புலனாய்வுத் துறையின் அச்சுறுத்தல் உடனடியா 
நிறுத்தப்பட வேண்டும். 
7. பொளத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். 
8. எமது தாயகத்தின் வளச் சுரண்டல்
 நிறுத்தப்படவேண்டும். 
9. அனத்து வகையாக தாயகத்தில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




வியாழன், 19 பிப்ரவரி, 2026

உங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளால் ஏற்படும் ஆபத்து

 பூனைகள் மூலம் இலங்கையில் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர்.
 கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள்  பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால்  ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய்,  
நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் பரவக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.