செவ்வாய், 26 மே, 2026

இலங்கை வலி. வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்

நாட்டில்  யாழ், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர். 
குறித்த குழுவினருடன் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை நேரில் 
பார்வையிட்டனர். 
"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
அதன் ஒரு கட்டமாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் , பலாலி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் , உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளுக்குள் சென்று காணி விடுவிப்பு தொடர்பிலான சாத்தியங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தனர். 
அதனை தொடர்ந்து பலாலி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் குறித்த குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இத்தாலியில் அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து நோக்கி சென்ற ஈஸிஜெட் விமானம்

விமனந்தில் ஒரு பயணியின் பையில் பவர் பேங்க் சார்ஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து நோக்கிச் சென்ற ஈஸிஜெட் விமானம் ஒன்று ரோம் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகத் 
தெரியவந்துள்ளது.
எகிப்தின் ஹுர்கடாவிலிருந்து லண்டன் லூட்டன் நோக்கிச் சென்ற EZY2618 விமானம், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" இத்தாலி தலைநகரில் தரையிறங்கியது.
விமானத்தின் பொருட்கள் அறையில் கையடக்க சார்ஜர் இருப்பதை ஒரு பயணி விமானப் பணியாளர்களிடம் தெரிவித்ததை அடுத்து, "பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க" விமானத்தை திருப்பி விட கேப்டன் முடிவு செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பவர் பேங்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறியப்படுகிறது, ஆனால் விமானப் பயணத்தின் போது பொருட்கள் அறையில் பவர் பேங்குகளை சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என விதிமுறைகள் கூறுகின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 25 மே, 2026

நாட்டில் நாற்பது நாடுகளுக்கான இலவச விசா செயல்முறை இன்று முதல் நடைமுறைக்கு

நாட்டிற்கு  வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

 அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், 
கஜகஸ்தான், குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம்  மற்றும் அமெரிக்கா ஆகிய 40 நாடுகளின் பிரஜைகள் இந்த சலுகையை பெற முடியும். 
 இதேவேளை குறித்த 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளும்  இலங்கைக்கு வருகைத் தர முன்னர் இணையவழி சுற்றுலா
 அனுமதி  ஒன்றைப் பெற்றுக்கொள்வதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 மேலும் இந்த இலவச விசாவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், அதற்குரிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா காலத்தை நீடிப்பதற்குக் விண்ணப்பிக்கலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் பணம் அச்சிடுதல் பற்றிய தவறான தகவல்கள் மத்திய வங்கி :மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் பணம் அச்சிடுதல், பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று விகிதம் தொடர்பில் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. 
 இவ்வாறான விடயங்கள், அதுகுறித்த விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் புரிதலுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவை என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 
 இத்தகைய தொழில்நுட்ப அறிவு இல்லாத தரப்பினரால் இந்நாட்களில் வெளியிடப்பட்டு வரும் தவறான கூற்றுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 24 மே, 2026

திருட்டு மற்றும் நாசவேலைகளில் அமெரிக்காவில் ஈடுபட்ட இந்தியர் கைது

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE), 26 வயதான இந்தியரான பர்மிந்தர்பால் சிங் கைது செய்துள்ளதாக
 தெரிவித்துள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான பர்மிந்தர்பால் சிங்கை கைது செய்தது. 
சிங்கின் குற்றப் பதிவில் வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் ஆகியவை அடங்கும். அவர் நாடு கடத்தப்படும் வரை ICE காவலில் வைக்கப்பட்டுள்ளார்"
 என்று கூறியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சிங்குக்கு வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் எண்பது இலட்சம் ரூபாய் மதிப்பிலான பதினெட்டு தங்கச் சங்கிலிகள் கொள்ளை

நாட்டில்  .சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 அவரிடம் இருந்து 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 குறித்த நபர் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பகுதிகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
அவரிடம்  முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளமைதெரியவந்துள்ளது. 
 சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 23 மே, 2026

நாட்டில் கல்முனையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு பேரணி

நாட்டில்  தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி.23-05-2026. இன்று  தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.
“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக
 ஊர்வலமாகச் சென்றனர். 
பின்னர், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையால் சமூகத்திற்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். 
இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.