திங்கள், 22 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் அதிகரிக்கும் லஞ்சம்

நாட்டில் (திருத்தப்பட்ட செய்தி )வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.  
வவுனியா குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.  
இந்நிலையில் ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் 
அதிகாலையிலேயே
 இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருப்போருக்க காலை
 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது 
வழங்கமாக உள்ளது.
இதன்போது வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில் ரவுடிகள் போன்று செயற்படும் சிலர் ஒருவருக்கு 
தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்களை வழங்குவதாக 
தெரிவிக்கப்படுகின்றது. 
இதனால் அங்கு பணம் கொடுக்காமல் இரவு பகலாக வரிசையில் நிற்பவர்கள் குறித்த தினத்தில் கடவுச்சீட்டை பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுவதோடு முரண்பாடான நிலைமைiயும் 
ஏற்படுகின்றது.  
இதற்குமப்பால் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடிவதாகவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
எனவே வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்புகையில் பணம் வாங்கி வரிசையில் இலக்கத்தினை பெற்றுகொடுக்கும் கும்பல் தினமும் அதிகளவில் பணத்தினை சம்பாதித்து 
செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது என பொலிஸார் விசனம் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

உலக அமைதிக்கான வவுனியாவில் ஆன்மீக நடைபயணம்

நாட்டில்  உலக அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் வவுனியாவில் ஸ்ரீ சத்திய சாயி சர்வதேச நிறுவனம் இலங்கை மற்றும் வவுனியா சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது.  
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள 
சத்திய சாயி நிலையத்தின் விசேட வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்னர் அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் ஆரம்பமான 
நிலையில், மீண்டும்  மீண்டும் சத்திய சாயி நிலையத்தை நடைபயணம் வந்தடைந்திருந்தது. 
இதில் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்தும் கொண்டிருந்ததோடு தங்க நிறத்திலான தேரில் சத்திய சாய்பாபாவின் படம் தாங்கி இழுத்துச்செல்லப்பட்டிருந்தமையும்
    என்பது குறிப்பிடத்தக்க

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 20 ஏப்ரல், 2024

இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை நியூசிலாந்தில் திறப்பதற்கு தீர்மானம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு 
தெரிவித்துள்ளது. 
வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்  பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.  
இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் குழு தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு 
வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு,
 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா
 மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் முதன்மை 
நோக்கங்களாகும். வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஏப்ரல், 2024

நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு

நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 இதனை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.
 கொழும்பு காலிமுகத்திடல், புதுக்கடை , பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் இரவு வேளைகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
 அவர் தெரிவித்தார்.
 சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 18 ஏப்ரல், 2024

நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு இரு பொலிஸார் கைது

நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  
இவர் மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் டொருட்டியாவ பொபேலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆவார். 
இவர்கள் 18-04-2024.அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 17 ஏப்ரல், 2024

நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதன்படி, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை
 அதிகரிக்கலாம்.  
குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் நெடுங்கேணியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழா இடம்பெற்றது.

வவுனியா நெடுங்கணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா.16-04-2024. இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் வவுனியா
 வடக்கு வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வானது நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில்
 இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.  
இதன்போது பாரம்பரிய முறையில் விருந்தினர்களை 
வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. 
இந் நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஷ்குமார், வவுனியா வடக்கு பிரதேச
 செயலாளர் இ.பிரதாபன் மற்றும் முக்கியஸ்தர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Blogger இயக்குவது.