வியாழன், 16 ஜூலை, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது கணவர் கைது

 நாட்டில்  போதைப் பொருளை பதுக்கிய குற்றச்சாட்டின்பேரில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியரும் அவரது கணவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 
குறித்த இருவரும் இணைந்து சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
கொழும்பு வடக்கு பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
விசாரணைகளில் இந்த தம்பதியினர்  சில காலமாக இந்தப் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது 
 தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித் இருவரும் இன்றைய தினம் மாளிகாவந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்ட நிலையில், நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம்

இலங்கையில் .வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு
 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் 
16-07-2026-அன்று பிற்பகல் நடைபெற்றது. 
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து தனித்தனியாக 
ஆராயப்பட்டது.
நாட்டிற்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றான வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) குறித்து இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் தற்போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாகத் தீர்த்து, வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இதனை முழுமையாக உள்ளடக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக சேவைகளை மிகவும் திறம்பட மற்றும் விரைவாக மேற்கொள்வதற்காக, டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பது குறித்தும்
 விவாதிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை, முன்மொழியப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு (District Secretary's Fund Pool) மாற்றுவதற்கு 
திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்தந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை மிகுந்த செயல்திறனுடன் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் சுற்றுலா அமைச்சின் கீழுள்ள அரச சொத்துக்கள் மற்றும் காணிகள் குறித்து முறையான அறிக்கை எதனையும் தயாரித்திருக்கவில்லை என்பது இக்கூட்டத்தில் 
வெளிச்சத்திற்கு வந்தது. 
இது குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, அமைச்சின் கீழ் உள்ள அனைத்துச் சொத்துக்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு 
அறிவுறுத்தினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் அசுர வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, வரும் 2030ஆம் ஆண்டளவில் இத்துறைக்கு சுமார் 08 இலட்சம் மனித வளங்கள் (பணியாளர்கள்) தேவைப்படுவார்கள் என இக்கலந்துரையாடலில் மதிப்பிடப்பட்டது.
தற்போதுள்ள ஹோட்டல் பாடசாலைகளினால் (Hotel Schools) நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துதல். இளைஞர், யுவதிகள் மத்தியில் இத்துறை சார்ந்த பயிற்சிகளைப் 
பிரபலப்படுத்துதல்.
நவீன சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப பயிற்சி நெறிகளைத் தரம் உயர்த்துதல். போன்ற முக்கிய வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டத்தின் காணி உரிமைப் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரச காணி உரிமைச் சிக்கல்கள், மகாவலி திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வேலைவாய்ப்பின்மை, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பில் சுற்றுலா முதலீடுகளை 
ஊக்குவிப்பது
 மற்றும் நியூசிலாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 15 ஜூலை, 2026

இலங்கையில் தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை இன்று திறப்பு

நாட்டில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில்.15-07-2026- இன்று  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்
 எட்டப்பட்டுள்ளது .
சுமார் 60 ஆண்டு காலக் கனவான மகாவலி பெருந்திட்டத்தின் கீழ், தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை இன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டு (Tunnel Breakthrough) மக்கள் பார்வைக்குத் திறக்கப்படுவது மிக முக்கியமானதொரு நிகழ்வாகும்.
இந்த மாபெரும் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் இதனால் மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் , சுரங்கப்பாதையின் நீளம்: 27.7 கிலோமீட்டர் (தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை) முக்கிய திட்டம்: 
வட மத்திய கால்வாய்த் திட்டம் (மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ்) நிதியுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மகாமீகஸ்வேவ மற்றும் கொதுருவாவ ஆகிய இரு வேறு முனைகளிலிருந்து நவீன சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBM) மூலம் தோண்டப்பட்டு, இன்று நிலத்தடியில் துல்லியமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
பெரும்போகம் மற்றும் சிறுபோகம் 
ஆகிய இரு போக 
விளைச்சல்களுக்காக 74,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குத் தங்குதடையின்றி இந்த மூலம் தண்ணீர் வழங்கப்படும்.
240 கி.மீ நீளமுள்ள வட மத்திய கால்வாய் வழியாக 12 முக்கிய நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் 1,505 குளங்களுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும். நேரடியாக 25,000 விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் வாழ்வாதார
 நன்மை அடைவர்.
வடமத்திய மாகாணம் பகுதியில் பல தசாப்தங்களாகக் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாசுபட்ட நீரால் நிலவி வரும் தீராத சிறுநீரக நோய்ப் பிரச்சினைக்கு இத்திட்டம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
ஆண்டுக்கு 70 மில்லியன் கன மீட்டர் சுத்தமான குடிநீர் இந்த அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இலங்கையின் உலர் வலய விவசாயிகளின் வாழ்விலும், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த நீர் விநியோகக் கட்டமைப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் பதுளை அரச பேருந்து நிலைய மலசலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

நாட்டில் பதுளை அரச பேருந்து தரிப்பிடத்தில் (CTB Bus Stand) அமைந்துள்ள பொது மலசலக்கூடம் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, மிக மோசமான சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவது குறித்து நாளாந்தம் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பயணிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த முக்கிய பேருந்து நிலையத்தில், ஒரு பொது மலசலக்கூடத்தை கூட ஒழுங்காக பராமரிக்க முடியாத நிலையில் பதுளை மாநகர சபையும், பேருந்து நிலைய அதிகாரிகளும் தங்களது பொறுப்பிலிருந்து நழுவி வருவதாக குற்றம்
 சாட்டுகின்றனர்.
தற்போது நிலவும் அதிக துர்நாற்றம் காரணமாக பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளும் சுவாசப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 
குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த மலசலக்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்" என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் 
தெரிவித்தார்.
பொதுமக்களிடம் 30 ரூபாய் வீதம் நாளாந்தம் பெருந்தொகை பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணம் எங்குச் செல்கிறது? ஏன் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை? என்ற கேள்வி
 எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான அரசியல் பிரதிநிதிகளும், உரிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு இதற்கு 
நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பேருந்து நிலையத்தை 
முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க நேரிடும் எனவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வாய் புற்றுநோயைத் தடுக்க புகையிலை வெற்றிலை விற்பனைக்கு தடை

நாட்டில் வாய் புற்றுநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில், புகையிலை மற்றும் பாக்கு கலந்த வெற்றிலைக் கூட்டுகளை (Betel Quid) விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனைகளை முன்னெடுக்க பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் (PHIs) தீர்மானித்துள்ளது.
புகையிலை கலந்த வெற்றிலைச் சுருள்களைத் தயாரிப்பது, கடைகளில் காட்சிப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தற்போதைய சட்டங்களின்படி முற்றிலும் தடைசெய்யப்பட்ட குற்றமாகும். 
இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக எந்தவித சலுகையுமின்றி நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் ஆண்களிடையே அதிகம் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோயே முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 
நாளாந்தம் பெருமளவிலானோர் இந்த நோயினால் உயிரிழக்கும் அவலம் தொடர்வதாலேயே, இந்தத் தடையை மிகத் தீவிரமாக அமல்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் பாக்கு மற்றும் புகையிலை கலந்த போதை தரும் வெற்றிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய விசேட அதிகாரிகள் குழுக்கள் 
நியமிக்கப்பட்டுள்ளன. 
பொதுமக்களும் தங்களது ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் எனவும், தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து அருகில் உள்ள PHI.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 14 ஜூலை, 2026

உங்கள் முகத்தில் ஐஸ் கட்டி தேய்ப்பது நல்லதா இதன் பக்கவிளைவுகள் என்ன

சமூக ஊடகங்கள் மற்றும் அழகு பராமரிப்பு தளங்களில் சமீபகாலமாக "ஐஸ் பேசியல்" (Ice Facial) அல்லது முகத்தில் ஐஸ் கட்டியைத் தேய்க்கும் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. பலரும் தங்களது 
தினசரி சரும பராமரிப்பில் இதை ஒரு முக்கியப் பகுதியாக மாற்றி வருகிறார்கள்.
ஆனால், இந்த ஐஸ் பேசியல் உண்மையில் சருமத்திற்கு எந்த அளவுக்கு நன்மை தரும்? இதில் உள்ள பக்கவிளைவுகள் என்ன? 
என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உடனடி நன்மைகள்: தற்காலிக புத்துணர்ச்சி
காலையில் எழும்போது முகம் வீக்கமாக இருப்பது அல்லது சோர்வாகக் காணப்படுவது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு ஐஸ் கட்டி ஒரு எளிய தீர்வாக அமைகிறது. 
வீக்கம் குறையும்: 
முகத்தில், குறிப்பாக கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தை (Puffy Eyes) ஐஸ் கட்டி தேய்ப்பதன் மூலம் உடனடியாகக் குறைக்க முடியும். 
இறுக்கமான சருமம்: 
ஐஸ் கட்டியின் குளிர்ச்சி சருமத்தின் இரத்த நாளங்களைச் சுருக்கி, முகம் தற்காலிகமாக இறுக்கமாகவும் இளமையாகவும் தோன்றுவதற்கு உதவுகிறது.
புத்துணர்ச்சி:
சோர்வடைந்த முகத்திற்கு இது ஒரு சிறந்த, உடனடி புத்துணர்ச்சியை (Instant Glow) தருகிறது. 
உண்மையா, வெறும் கட்டுக்கதையா?
ஐஸ் பேசியல் பற்றி பரவலாகப் பேசப்படும் சில கருத்துக்களில் உள்ள உண்மைகள் இதோதுளைகள் சுருங்குமா?
ஐஸ் கட்டி தேய்ப்பதால் முகத்தில் உள்ள சருமத் துளைகள் (Pores) நிரந்தரமாகச் சுருங்கிவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், இது ஒரு தற்காலிக விளைவு மட்டுமே.
குளிர்ச்சியால் தற்காலிகமாகச் சுருங்கும் துளைகள், சிறிது நேரத்தில் முகம் சாதாரண வெப்பநிலைக்குத் திரும்பியதும் பழைய நிலைக்கு வந்துவிடும். 
சருமம் வெண்மையாகுமா?
முகத்தில் ஐஸ் தேய்ப்பதால் சருமத்தின் நிறம் வெண்மையாக மாறாது. ஆனால், இரத்த ஓட்டம் தற்காலிகமாக அதிகரிப்பதால் முகம் சற்று பிரகாசமாகத் தோன்றும், அவ்வளவுதான். 
நீண்ட நேரம் பயன்படுத்தினால் ஆபத்தா? 
ஐஸ் கட்டியை நேரடியாகவும், நீண்ட நேரமும் சருமத்தில் பயன்படுத்துவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கை:
ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் நீண்ட நேரம் வைத்தால், அது "ஐஸ் பர்ன்" (Ice Burn) எனப்படும் பனிப்புண்ணை ஏற்படுத்தலாம்.
இது சருமத்தில் கடுமையான எரிச்சல், சிவப்புத் தழும்புகள் அல்லது சருமக் செல்கள் சேதமடைவதற்கு வழிவகுக்கும்.பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? 
முகத்திற்கு ஐஸ் பேசியல் செய்ய விரும்பினால், கீழே உள்ள எளிய மற்றும் பாதுகாப்பான வழிமுறையைப் பின்பற்றலாம்: 
நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம்: ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் தேய்ப்பதைத் தவிர்த்து, ஒரு மெல்லிய, சுத்தமான பருத்தித் துணியில் (Cotton Cloth) சுற்றிப் பயன்படுத்தவும். 
நேர அளவு முக்கியம்: முகத்தில் 1 முதல் 2 நிமிடங்களுக்கு மேல் ஐஸ் கட்டியைத் தேய்க்கக் கூடாது. 
மென்மையான மசாஜ்: வட்ட இயக்கத்தில் (Circular Motion) மிகவும் மெதுவாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html  


Blogger இயக்குவது.