ஞாயிறு, 24 மே, 2026

திருட்டு மற்றும் நாசவேலைகளில் அமெரிக்காவில் ஈடுபட்ட இந்தியர் கைது

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE), 26 வயதான இந்தியரான பர்மிந்தர்பால் சிங் கைது செய்துள்ளதாக
 தெரிவித்துள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான பர்மிந்தர்பால் சிங்கை கைது செய்தது. 
சிங்கின் குற்றப் பதிவில் வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் ஆகியவை அடங்கும். அவர் நாடு கடத்தப்படும் வரை ICE காவலில் வைக்கப்பட்டுள்ளார்"
 என்று கூறியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சிங்குக்கு வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் எண்பது இலட்சம் ரூபாய் மதிப்பிலான பதினெட்டு தங்கச் சங்கிலிகள் கொள்ளை

நாட்டில்  .சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 அவரிடம் இருந்து 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 குறித்த நபர் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பகுதிகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
அவரிடம்  முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளமைதெரியவந்துள்ளது. 
 சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 23 மே, 2026

நாட்டில் கல்முனையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு பேரணி

நாட்டில்  தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி.23-05-2026. இன்று  தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.
“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக
 ஊர்வலமாகச் சென்றனர். 
பின்னர், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையால் சமூகத்திற்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். 
இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கனடா விமான நிலையங்களில் எபோலா பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன

பயணிகளுக்காக விமான நிலையங்களில் எபோலாவிற்கான மேம்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கனடாவின் உயர்மட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர். ஜோஸ் ரெய்மர் ஒரு மெய்நிகர் செய்தியாளர் 
சந்திப்பின் போது, ​​ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவும் அபாயம்
 கனடியர்களுக்கு குறைவாகவே உள்ளது என்று
 தெரிவித்துள்ளார்.
"ஒன்டாரியோவில் நடத்தப்பட்ட ஆரம்ப சோதனை மற்றும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தும் சோதனை இரண்டும் எதிர்மறையானவை" என்று ரெய்மர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 22 மே, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 354.24 ரூபா
ஜப்பானிய யென் 2.27 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 479.74 ரூபா
யூரோ 414.75 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 258.04 ரூபா
சுவிஸ் பிராங் 455.32 ரூபா
கனடிய டாலர் 259.74 ரூபா
கத்தார் ரியால் 98.49 ரூபா
குவைத் தினார் 1165.01 ரூபா
சவுதி ரியால் 95.68 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் பாதிப்பு : மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்கள்

கொழும்பு  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் நிலவும் கடுமையான மழை மற்றும் மோசமான வானிலை
 காரணமாக, அங்கு தரையிறங்க வந்த 9 சர்வதேச விமானங்கள் மத்தள
 ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை வேளையில் பெய்த அதிக மழை காரணமாக விமான நிலைய ஓடுதளப் பகுதியில் பார்வைத்திறன் (Visibility) கணிசமாகக் குறைவடைந்ததை அடுத்தே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய
 அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையத் தகவல்களின்படி, அதிகாலை வேளையில் தரையிறங்கவிருந்த பின்வரும் நிறுவனங்களின் விமானங்கள் இவ்வாறு மத்தளவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன:என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 21 மே, 2026

இலங்கையில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

இலங்கையில் மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ள
மையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. 
காட்டுப் பகுதியில் உள்ள மின் பாதையே இவ்வாறு அறுந்து விழுந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் சம்பவ இடத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில் மாலிசிறிபுரப் பண்ணைக்கு அருகிலிருந்து ஓமரகொல்ல வரையிலும், ஓமரகொல்லவிலிருந்து மதஹபோல கந்த வரையிலும், ஹெவனதென்னவிலிருந்து கட்டுவலந்த வரையிலும் உள்ள பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.