வெள்ளி, 17 ஜூலை, 2026

நாட்டில் வவுனியாவில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

நாட்டில் வவுனியாவில் 14 வயதுடைய தனது சொந்த மகளைத் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம்: 
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை:
2022 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தந்தைக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
தண்டனை விபரம்:
4 குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு & அபராதம்: 
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும், நீதிமன்றத்திற்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
"பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் பதின் மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம்

யாழ்  வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக-17-07-2026- இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை
 முன்னெடுத்தனர்..
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் ,  அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி
 வெள்ளிக்கிழமைகளில்
 போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் அஸ்வெசும நிதி தொடர்பில் மோசடி மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் அஸ்வெசும பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து நலவாழ்வு நலன்கள் வாரியம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
 இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்கள், வாரியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் போல் நடித்து, வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அஸ்வெசும பயனாளிகளைத் தொடர்புகொண்டு வருவதாக
 குறிப்பிடப்பட்டுள்ளது.
 அழைப்பவர்கள் பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிப்பதாகக் கூறுவது அல்லது பெறுநர்களிடமிருந்து பணத்தைக் கோருவதற்காக வேறு காரணங்களைக் கூறுவது போன்ற செயல்களில் 
ஈடுபட்டுள்ளனர்.
 இந்த நடவடிக்கைகள் வாரியத்தின் அறிவோ அல்லது அங்கீகாரமோ இன்றி மேற்கொள்ளப்படுவதாக நலவாழ்வு நலன்கள் வாரியம்
 வலியுறுத்தியுள்ளது.
 இதுபோன்ற சம்பவங்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு பொதுமக்களுக்கு வாரியம் அறிவுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பாகக் கள அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறும் 
அறிவுறுத்தியுள்ளது.
 மேலும், இதுபோன்ற அழைப்புகளைப் பெற்ற பயனாளிகள், சம்பந்தப்பட்ட காவல் பிரிவின் குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) முறைப்பாடு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 16 ஜூலை, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது கணவர் கைது

 நாட்டில்  போதைப் பொருளை பதுக்கிய குற்றச்சாட்டின்பேரில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியரும் அவரது கணவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 
குறித்த இருவரும் இணைந்து சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
கொழும்பு வடக்கு பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
விசாரணைகளில் இந்த தம்பதியினர்  சில காலமாக இந்தப் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது 
 தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித் இருவரும் இன்றைய தினம் மாளிகாவந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்ட நிலையில், நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம்

இலங்கையில் .வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு
 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் 
16-07-2026-அன்று பிற்பகல் நடைபெற்றது. 
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து தனித்தனியாக 
ஆராயப்பட்டது.
நாட்டிற்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றான வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) குறித்து இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் தற்போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாகத் தீர்த்து, வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இதனை முழுமையாக உள்ளடக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக சேவைகளை மிகவும் திறம்பட மற்றும் விரைவாக மேற்கொள்வதற்காக, டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பது குறித்தும்
 விவாதிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை, முன்மொழியப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு (District Secretary's Fund Pool) மாற்றுவதற்கு 
திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்தந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை மிகுந்த செயல்திறனுடன் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் சுற்றுலா அமைச்சின் கீழுள்ள அரச சொத்துக்கள் மற்றும் காணிகள் குறித்து முறையான அறிக்கை எதனையும் தயாரித்திருக்கவில்லை என்பது இக்கூட்டத்தில் 
வெளிச்சத்திற்கு வந்தது. 
இது குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, அமைச்சின் கீழ் உள்ள அனைத்துச் சொத்துக்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு 
அறிவுறுத்தினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் அசுர வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, வரும் 2030ஆம் ஆண்டளவில் இத்துறைக்கு சுமார் 08 இலட்சம் மனித வளங்கள் (பணியாளர்கள்) தேவைப்படுவார்கள் என இக்கலந்துரையாடலில் மதிப்பிடப்பட்டது.
தற்போதுள்ள ஹோட்டல் பாடசாலைகளினால் (Hotel Schools) நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துதல். இளைஞர், யுவதிகள் மத்தியில் இத்துறை சார்ந்த பயிற்சிகளைப் 
பிரபலப்படுத்துதல்.
நவீன சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப பயிற்சி நெறிகளைத் தரம் உயர்த்துதல். போன்ற முக்கிய வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டத்தின் காணி உரிமைப் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரச காணி உரிமைச் சிக்கல்கள், மகாவலி திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வேலைவாய்ப்பின்மை, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பில் சுற்றுலா முதலீடுகளை 
ஊக்குவிப்பது
 மற்றும் நியூசிலாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 15 ஜூலை, 2026

இலங்கையில் தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை இன்று திறப்பு

நாட்டில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில்.15-07-2026- இன்று  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்
 எட்டப்பட்டுள்ளது .
சுமார் 60 ஆண்டு காலக் கனவான மகாவலி பெருந்திட்டத்தின் கீழ், தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை இன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டு (Tunnel Breakthrough) மக்கள் பார்வைக்குத் திறக்கப்படுவது மிக முக்கியமானதொரு நிகழ்வாகும்.
இந்த மாபெரும் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் இதனால் மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் , சுரங்கப்பாதையின் நீளம்: 27.7 கிலோமீட்டர் (தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை) முக்கிய திட்டம்: 
வட மத்திய கால்வாய்த் திட்டம் (மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ்) நிதியுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மகாமீகஸ்வேவ மற்றும் கொதுருவாவ ஆகிய இரு வேறு முனைகளிலிருந்து நவீன சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBM) மூலம் தோண்டப்பட்டு, இன்று நிலத்தடியில் துல்லியமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
பெரும்போகம் மற்றும் சிறுபோகம் 
ஆகிய இரு போக 
விளைச்சல்களுக்காக 74,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குத் தங்குதடையின்றி இந்த மூலம் தண்ணீர் வழங்கப்படும்.
240 கி.மீ நீளமுள்ள வட மத்திய கால்வாய் வழியாக 12 முக்கிய நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் 1,505 குளங்களுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும். நேரடியாக 25,000 விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் வாழ்வாதார
 நன்மை அடைவர்.
வடமத்திய மாகாணம் பகுதியில் பல தசாப்தங்களாகக் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாசுபட்ட நீரால் நிலவி வரும் தீராத சிறுநீரக நோய்ப் பிரச்சினைக்கு இத்திட்டம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
ஆண்டுக்கு 70 மில்லியன் கன மீட்டர் சுத்தமான குடிநீர் இந்த அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இலங்கையின் உலர் வலய விவசாயிகளின் வாழ்விலும், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த நீர் விநியோகக் கட்டமைப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.