திங்கள், 4 மே, 2026

காணாமல் போன முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் .முல்லைத்தீவு -கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து
 இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர். 
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இரண்டு மீனவர்களும் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி விகாரை வீதியை விடுவிக்கிறோம் என இனவாதிகளுக்கு தீனி போட முயற்சி

யாழ் .தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்பதாகக் கூறி சிலர் இனவாதிகளுக்கு தீனி போடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காணி அளவீடு 
நடைபெறவில்லை.
மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து 
வருகின்றோம். இந்த விகாரையானது, எமது ஆட்சிகாலத்தில் கட்டபட்ட ஒன்றல்ல.
 காணிகளை மீள கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். எமது அரசாங்கத்தில் காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை.
காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை. எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.
பவானி வீதியை மிக துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம். அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் என குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கும் போது அதனை குழப்புகின்றனர்.
விகாரை விடயத்தில், பலாலி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 3 மே, 2026

நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் .2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, எக்ஸ்பிரஸ் நுழைவு, மாகாண நாமினி திட்டங்கள் (PNPs) மற்றும் குடும்ப அனுசரணை திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் திட்டங்களிலும் கனடாவின் நிரந்தர குடியிருப்பு (PR) செயலாக்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பிரிவுகளில், தோராயமாக 4 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. குடும்ப அனுசரணை கட்டணம் மட்டும், அதிகப்படியாக 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
நீங்கள் குடியிருப்பு அனுமதிக்கு ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும், The Right of Permanent Residence Fee (RPRF) கட்டணத்தை பிறகு செலுத்தலாம் என திட்டமிருப்பீர்கள் என்றால் இப்போது நீங்கள் புதிய கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.
நீங்கள் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்பே இணையவழியில் விண்ணப்பமும் செய்து, உங்கள் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதை ஏற்றுக்கொண்டு விட்டது என்றால், நீங்கள் கூடுதலாக எதுவும் செய்யத்தேவையில்லை.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் பிரித்தானியாவில் திடீரென கைது

தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் பிரித்தானியாவில் திடீரென கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது .
ஸ்காட்லாந்தின் தர்சோ நகரில் வசித்து வந்த  சேம் ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
கடந்த ஏப்ரல் 13ம் திகதி, வழக்கமான பதிவிற்காக போலீஸ் நிலையம் சென்றபோது அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, குடியேற்றத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 
இலங்கையில் பௌத்த துறவியாக இருந்த சேம் ஹேரத், அங்கிருந்த சில உயர்மட்டத் துறவிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களைப் அம்பலப்படுத்தியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறார். 
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்த இவர், தர்சோ நகரில் ஒரு தன்னார்வலராகவும், அன்பானவராகவும் மக்கள் மத்தியில் 
பெயரெடுத்துள்ளார்.
தற்போது இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார் .அவரை நாடு கடத்துவதைத் தடுக்க சட்டப் நடவடிக்கைகள் 
தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான சட்டச் செலவுகளை ஈடுகட்ட ‘GoFundMe’ மூலம் மக்கள் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை சுமார் 2,000 பவுண்டுகள் வரை நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தேவாலயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 2 மே, 2026

நாடில் கணிதத்தில் ஓட்டமாவடி மாணவி தேசிய மட்டப் போட்டியில் 'மெரிட் பாஸ்' சாதனை

நாட்டில் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் தரம் 6 மாணவி என்.நீபா ஷைனப் (N. Neeba Zainab) 'மெரிட் பாஸ்' (Merit Pass) பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். 
வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் வெற்றி பெற்று, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய இவர், தற்போது அடுத்த கட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 
கணித ஆசிரியர் எம்.எம். நவாஸின் புதல்வியான இவருக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி - இரு எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான இன்று  இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் 
             காணப்பட்டுள்ளன.
 இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக  246 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில்  243 எலும்புக்கூடுகள் முழுமையாக 
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான கறுப்பு நிற மண் சேகரிக்கப்பட்டு, தற்போது உலர விடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி
 வைக்கப்படவுள்ளன.
 புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
இது குறித்த உறுதியான தகவல்கள் அப்பணிகளின் பின்னரே தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 1 மே, 2026

நாட்டில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு எரிபொருள் விலை மாற்றம் இல்லை

நாட்டில்  வெள்ளிக்கிழமை.01-05-2026.இன்று எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
எரிபொருள் விலை திருத்தம் குறித்து இன்று தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.