நாட்டில் சுற்றுவட்டாரத்தில் நிலவும் தாழ்மட்ட வளிமண்டல சீர்குலைவின் காரணமாக, மழைப்பொழிவு நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் உண்டாகும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html














