ஞாயிறு, 5 ஜூலை, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

. இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 339.52 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 454.65 ரூபா
யூரோ 389.67 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 238.50 ரூபா 
சுவிஸ் பிராங் 424.59 ரூபா
கனடிய டாலர் 240.06 ரூபா
கத்தார் ரியால் 93.79 ரூபா
குவைத் தினார் 1104.19 ரூபா
சவுதி ரியால் 91.71 ரூபா
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் நிட்டம்புவவில் யானைத் தந்தம் மற்றும் தந்த ஆபரணங்களுடன் சந்தேகநபர் கைது

.நாட்டில் நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, தந்தத்தால் செய்யப்பட்ட மோதிரம் மற்றும் யானை வடிவிலான தந்தப் பதக்கம் (Pendant) ஆகியவற்றுடன் நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
ஹொரகொல்ல தேசிய பூங்கா மற்றும் மேற்கு மாகாண வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோபேய்கனே 
பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் குறித்த யானைத் தந்தப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யத் தயாராக இருந்த போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 
அவர் இந்த யானைத் தந்தப் பொருட்களை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமதிப்புமிக்க யானைத் தந்தப் பொருட்களும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில்; யானைத் தந்தம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் என்பன 'விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நினைவூட்டியுள்ளது.
மேலும், யானைத் தந்த ஆபரணங்கள் உள்ளிட்ட விலங்கு உடற்பாகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சர்வதேச ஆழ்கடலில் அதிசய உலகம்: இரு வாரங்களில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

பிரேசிலின் கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன கடல்சார் ஆய்வில், வெறும் இரண்டு வார காலப்பகுதிக்குள் 31 புதிய விசித்திர உயிரினங்கள்
 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“Falkor” எனப்படும் நவீன ஆய்வுக் கப்பலில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை முன்னெடுத்திருந்தனர். 
இவர்கள் கடலின் நடுக்கடல் பகுதியை (mid-ocean zone) மையமாகக் கொண்டு தங்களது ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தத் தீவிர தேடுதலின் போது விசித்திரமான நண்டுகள், ஜெல்லிமீன்கள், சீப்பு ஜெல்லிகள் (comb jellies), புழு வகைகள் மற்றும் இதுவரை அறிந்திராத புதிய வகை ஓட்டுடலிகள் (crustaceans) உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன. 
இவை பெருங்கடலின் உயிரியல் பல்வகைமையை (marine biodiversity) மேலும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்கு, “Squid” எனப்படும் அதிநவீன நுண்ணோக்கி தொழில்நுட்பம் (microscope technology) முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன் மூலம் ஆழ்கடலில் பிடிபடும் உயிரினங்களின் செல் அமைப்புகளைக் கரைக்குக் கொண்டு வராமலேயே, கப்பலிலேயே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு
 வழிவகுத்துள்ளது.
பெருங்கடலின் பெரும்பகுதி இன்னும் மனிதர்களால் முழுமையாக ஆராயப்படாமலேயே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், இவ்வாறான தொடர் ஆய்வுகள் மனிதகுலத்தின்
 உயிரியல் அறிவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் கடல் சூழல் குறித்த புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் எனத் தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இணையவழியூடான விண்ணப்பிக்கலாம்

நாட்டில்  நேற்றைய தினம் (ஜூலை 03, 2026) முதல் இணையவழியூடாக (Online) விண்ணப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த மாதம் ஜூலை 23, 2026 உடன் விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை நிறைவடைகிறது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அவர்களின் அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
தங்களது பாடசாலை அதிபர்கள் (Principals) ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அறிவுறுத்தல்களின்படி தாங்களாகவே நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, தாமதக் கட்டணங்கள் அல்லது கடைசி நேர தொழில்நுட்பத் தடைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகளை சுவீகரிக்க திட்டம் மக்கள் எதிர்ப்பு

நாட்டில் கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் 
பச்சிலைப்பள்ளி முகாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 25.73:ஏக்கர் தனியார் காணியினை 4வது மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணிக்காக சுவிகரிப்பதற்காகவும்,   இயக்கச்சி 
எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள 12 ஏக்கர் தனியார் காணியினை சுவீகரிப்பதற்காகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள   பச்சிலை பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன்,  இராணுவ தேவைக்காக இந்த காணிகளை சுவிகரிக்க முடியாது 
எனக் குறிப்பிட்டுள்ளார். 
 இது தொடர்பில் மேலும் கருத்த வெளியட்ட அவர்,  இது முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள். குறிப்பாக எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். தற்சமயம் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. 
ஏற்கனவே இந்த இரு காணிகளும் நில அளவை செய்ய முயற்சித்த போதும் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த காணிகளை இராணுவ தேவைகளுக்கு வழங்க முடியாது. அந்த காணி உரிமையாளர்கள் பல்வேறு
 நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து இருக்கிறார்கள் எனவே அந்த காணிகளை உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் டிஜிட்டல் பாதையில் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகள்

நாட்டில் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் "eAyurvedic" என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை நவீனப்படுத்தி, மக்களுக்கு விரைவான மற்றும் இலகுவான 
சேவைகளை வழங்குதல்.
இத்திட்டம் தற்போது அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 
நடைபெற்றது.
டொக்டர் யூ.எல்.நிகாயா (கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர்) டொக்டர் எம்.ஏ.நபீல் (கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர்) வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் (கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் பாலமுரளி அவர்களால், இந்த "eAyurvedic" செயலி 
எவ்வாறு இயங்குகிறது 
மற்றும் இதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துடன் நவீன தொழில்நுட்பம் இணைக்கப்படுவது, நோயாளர்களின் தரவுகளைப் பேணவும், சிகிச்சைகளை முறைப்படுத்தவும் பெரிதும் உதவும்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

நாட்டில்  லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம், இன்று (03) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு
12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4,465 ரூபாய் 
05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1,792 ரூபாய் 
2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 835 ரூபாய்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு
12.5 கிலோ சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4965 ரூபாய்
5 கிலோகிராம் சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1988 ரூபாய்
சர்வதேச எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, அதன் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக, தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.