சனி, 27 ஜூன், 2026

ஓடும் பேருந்திற்குள் யாழில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு இராணுவ கப்டன் கைது

யாழில்  ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது
 செய்யப்பட்டுள்ளார்.
யாழ்  நகர் பகுதியில் இருந்து  பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்
. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ் பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , 
குறித்த நபரை கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட நபரை யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சியில் போதைப்பொருள் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

நாட்டில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இரண்டு பெறுமதி மிக்க தொலைபேசிகள், வெளிநாட்டு நாணயத்தாள்கள் இரண்டு சமையல் எரிவாயு, 3 கிராம் ஜஸ் போதைப் பொருளையும் தர்மபுரம் 
பொலிசார் மீட்டனர். 
இதேவேளை, புன்னைநீராவி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் சோதனையிட்ட பொழுது 4 கிராமம் 520 மில்லி கிராம் ஹெராயின் குறித்த சந்தேக நபர்களிடம் காணப்பட்டதை அடுத்து நான்கு இளைஞர்களும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றி முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிநிலைய பொறுப்பதிகாரி திசாநாயக தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கனடா யூரோவிஷன் போட்டியில் சேர தகுதி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்க உலக நாடுகள் மேடையேறும்போது, ​​அவர்கள் ஒரு புதிய போட்டியாளரைக் காணக்கூடும்.
போட்டியில் பங்கேற்பதற்கான ஒரு தேவையாக உள்ள
, ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் (EBU) சிபிசி/ரேடியோ-கனடா முழு உறுப்பினராக ஆனதைத் தொடர்ந்து, கனடா இப்போது இந்தப் பாடல் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து ஐரோப்பாவுடன் நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை நாடி வரும் பிரதமர் மார்க் கார்னி, தனது 2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கனடா இந்தப் பாடல் போட்டியில் சேரும் யோசனையை முன்வைத்தார்.
இந்தப் போட்டியில் சேரும் முதல் ஐரோப்பியரல்லாத நாடு கனடா அல்ல; இஸ்ரேலும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து போட்டியிடுகின்றன, மேலும் மொராக்கோ 1980ல் போட்டியிட்டது.
யூரோவிஷன் போட்டிக்கான விதிகளின்படி, ஐரோப்பிய ஒளிபரப்பு வாரியத்தில் (EBU) உறுப்பினர்களாக உள்ள ஒளிபரப்பு நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 26 ஜூன், 2026

பொது இடங்களில் பாரிஸில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிப்பு

கடுமையான வெப்ப காலநிலை காரணமாக பாரிஸில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், தற்போது மது விற்பனை செய்வதற்கும் பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
வெப்ப அலையின் போது மருத்துவமனைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது இன்று நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை 
பல நாட்களாக புழுக்கத்தில் ஆழ்த்திய வெப்ப அலை நிலைமைகள் படிபடியாக குறைந்து கிழக்கு நோக்கி நகரவிருக்கின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் மயிலிட்டியில் பத்தாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

யாழ் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக இன்றைய தினம் பத்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை 
முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினமும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தங்காலையில் பேருந்து விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில்  தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் 
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 25 ஜூன், 2026

இந்தியர் சிங்கப்பூரில் விமான பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதால் சிறைத்தண்டனை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக, 35 வயதான இந்தியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் திவாரியும் அவரது நான்கு நண்பர்களும் தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​ஒரு பெண் விமானப் பணிப்பெண் அவர்களைக் கடந்து சென்றபோதெல்லாம் 
சிரித்துள்ளனர்.
உணவு விருப்பங்களைப் பற்றிக் கேட்பதற்காக அந்த விமானப் பணிப்பெண் அவர்களின் இருக்கைகளுக்கு வந்தபோது, ​​திவாரி தனது கையை நீட்டி அவரது காலில் உரசியதாகவும், அதன்பிறகு அவரது நண்பர்கள் சிரிக்கத் தொடங்கியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள்
 தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 
காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில், அந்த மதியமே பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 9 அன்று நடந்திருந்தாலும், இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் ஒரு தொந்தரவு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட திவாரிக்கு, தற்போது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.90,000க்கும் மேல் இழப்பீடு வழங்க திவாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.