புதன், 1 ஜூலை, 2026

நாட்டில் பேருந்து கட்டணம் பன்னிரண்டு சதவீதத்தினால் அதிகரிப்பு

நாட்டில்  பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 
 சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான
 கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வேகமாக கனடாவில் பரவி வரும் தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை

. கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய லைம் நோய்(Lyme disease) பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் 
அதிகரித்துள்ளன.
கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை
.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வடக்கில் பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துநர்களுக்கு சீருடை அறிமுகம்

 நாட்டில் வடமாகாணத்தில் சாரதிகள் ,நடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று 
விஜயம் செய்தார். 
அமைச்சரை அதிகார சபையின் தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் வரவேற்றார். வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் உத்தியோகத்தர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடிருந்தார்.
தொடர்ந்து வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநருக்கான சீருடை அறிமுகம் செய்து
 வைக்கப்பட்டது. 
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாரதிகள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு தெரிவிக்கத்தக்க வகையில் தொலைபேசி இலக்கம் பதிக்கப்பட்ட சீருடையானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 30 ஜூன், 2026

தங்கம்,மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் மீண்டும் சரிவு

மீண்டும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்பான முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், 
தங்கம் மற்றும் 
வெள்ளியின் விலை-30-06-2026- இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,965.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
 அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.47 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு, இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் 
தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடையடையக் கூடுமென வர்த்தக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

நாட்டில்  3.074 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்  வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அனுராதப்புர மேல் நீதிமன்றம் 
தீர்ப்பளித்துள்ளது. 
இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.
 இந்த வழக்கு நான்கு வருடங்களுக்கும் மேலாக 
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரால் சந்தேகத்திற்கு
 இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல் - தினசரி பாதிப்பு ஆயிரத்தை தொட்டது

நாட்டில் தற்போது நிலவும் மழைப் பொழிவு காரணமாக இலங்கையில் டெங்கு பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு 
கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. 
 இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 54,000-ஐத் தாண்டியுள்ளது என்றும், இதுவரை மொத்தமாக 54,189 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் NDCU கூறியுள்ளது. 
 தினமும் 950 முதல் 1,000 வரையிலான டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் சபாநாயகர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
 மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,030 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர உள்ளதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு

 நாட்டில்  அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில்  கடந்த ஜூன் 14 ஆம் திகதி  
நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால் பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த
 நிகழ்விற்குப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமை தாங்கியிருந்ததுடன், பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் இதில் 
கலந்துகொண்டிருந்தனர்.
 அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த கின்னஸ் சாதனை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவே பொதுமக்களுக்குக் 
காண்பிக்கப்பட்டது.
எனினும், இந்த நிகழ்வு தொடர்பாகப் பெறப்பட்ட கின்னஸ் சான்றிதழில் இலங்கையின் பெயரோ, இலங்கையின் எந்தவொரு 
அரச நிறுவனத்தின் பெயரோ அல்லது இலங்கையர் ஒருவரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன செயலாளருமான துமிந்த நாகமுவ அம்பலப்படுத்தியுள்ளார். 
மாறாக, இந்த கின்னஸ் சான்றிதழின் உரிமை ஒரு இந்திய நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள அதன் கிளை நிறுவனத்திற்கும்  மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்வில் பங்கேற்ற சுமார் 5,000 மாணவர்களின் குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் முதற்கட்டமாகப் பெருமளவிலான பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து
 தற்போதைய சூழலில், சான்றிதழுக்காக தலா 3,450 ரூபாயும், லோகோ (முத்திரை) மற்றும் இதர தேவைகளுக்காக தலா 2,350 ரூபாயும் பெற்றோர்களிடம் இருந்து மீண்டும் வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றன. 
இறுதியாக, இலங்கை பிள்ளைகளின் உழைப்பும், பெற்றோர்களின் பணமும் ஒரு இந்தியத் தனியார் நிறுவனத்திற்குப் புகழையும் கின்னஸ் சாதனையையும் பெற்றுக்கொடுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 
அநீதிக்குத் தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு
 எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அனைத்து விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதிக்கோரி போராட்டம் நடைபெற்றது.

யாழ்  செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக 
நடைபெற்றது.
 நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளையும் சேர்த்து, மொத்தமாக அடையாளம் காணப்பட்ட 427 எலும்புக்கூடுகளை நினைவுறுத்தும் வகையில் 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், கடத்தப்பட்டு மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு  தங்களது நீதிக்கான குரலை எழுப்பினர்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அரச பாடசாலை ஆசிரியர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில்உள்ள  அரச பாடசாலை ஆசிரியர்களில் நூற்றுக்கு 44 வீதமானோர் (44%) கடுமையான மன முறிவிற்கும் (Burnout) மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பது ரஜரட்ட பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும், அவர்களின் இந்த மனநிலை வீழ்ச்சிக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 238 ஆசிரியர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களில் 81% க்கும் அதிகமானோர், தங்களது மாதாந்த வருமானம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நிலவும் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக, 77% ஆசிரியர்கள் தங்களின் அத்தியாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் 78% க்கும் அதிகமானோர் மேலதிக வருமான வழிகளைத் தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களில் 30.4% சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் சமூக ரீதியாகத் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், பதகளிப்பு (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மனநலப் பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
மாதாந்தம் எந்தவொரு சேமிப்பும் இல்லாதிருத்தல் மற்றும் அன்றாடச் செலவுகளைக் கட்டாயமாகக் கட்டுப்படுத்த வேண்டிய 
சூழல் ஏற்பட்டமையே இவர்களின் மனநலம் சீர்குலைவதற்குக் பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 28 ஜூன், 2026

யாழ் காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

யாழ் காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை
 விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (29) முற்பகல் 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதேவேளை மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கடமையின்போது கொண்டுச் சென்ற துப்பாக்கியை மீளக் கையளிக்கவில்லை பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

நாட்டில் யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் குறித்த அதிகாரி நேற்று (27) சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் 
ஆஜர்படுத்தப்பட்டார்.
 இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவக்க கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்துமுன்னெடுத்துவருக்கின்றனர்.என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இந்திய அணி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது

நடைபெற்ற 10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் 
குவித்தது.
அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 56 ஓட்டங்களும் ஸ்மிருதி மந்தனா 38 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், பெர்ரி 56 ஓட்டங்களும் கார்ட்னர் 53 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 27 ஜூன், 2026

ஓடும் பேருந்திற்குள் யாழில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு இராணுவ கப்டன் கைது

யாழில்  ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது
 செய்யப்பட்டுள்ளார்.
யாழ்  நகர் பகுதியில் இருந்து  பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்
. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ் பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , 
குறித்த நபரை கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட நபரை யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சியில் போதைப்பொருள் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

நாட்டில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இரண்டு பெறுமதி மிக்க தொலைபேசிகள், வெளிநாட்டு நாணயத்தாள்கள் இரண்டு சமையல் எரிவாயு, 3 கிராம் ஜஸ் போதைப் பொருளையும் தர்மபுரம் 
பொலிசார் மீட்டனர். 
இதேவேளை, புன்னைநீராவி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் சோதனையிட்ட பொழுது 4 கிராமம் 520 மில்லி கிராம் ஹெராயின் குறித்த சந்தேக நபர்களிடம் காணப்பட்டதை அடுத்து நான்கு இளைஞர்களும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றி முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிநிலைய பொறுப்பதிகாரி திசாநாயக தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கனடா யூரோவிஷன் போட்டியில் சேர தகுதி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்க உலக நாடுகள் மேடையேறும்போது, ​​அவர்கள் ஒரு புதிய போட்டியாளரைக் காணக்கூடும்.
போட்டியில் பங்கேற்பதற்கான ஒரு தேவையாக உள்ள
, ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் (EBU) சிபிசி/ரேடியோ-கனடா முழு உறுப்பினராக ஆனதைத் தொடர்ந்து, கனடா இப்போது இந்தப் பாடல் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து ஐரோப்பாவுடன் நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை நாடி வரும் பிரதமர் மார்க் கார்னி, தனது 2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கனடா இந்தப் பாடல் போட்டியில் சேரும் யோசனையை முன்வைத்தார்.
இந்தப் போட்டியில் சேரும் முதல் ஐரோப்பியரல்லாத நாடு கனடா அல்ல; இஸ்ரேலும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து போட்டியிடுகின்றன, மேலும் மொராக்கோ 1980ல் போட்டியிட்டது.
யூரோவிஷன் போட்டிக்கான விதிகளின்படி, ஐரோப்பிய ஒளிபரப்பு வாரியத்தில் (EBU) உறுப்பினர்களாக உள்ள ஒளிபரப்பு நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 26 ஜூன், 2026

பொது இடங்களில் பாரிஸில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிப்பு

கடுமையான வெப்ப காலநிலை காரணமாக பாரிஸில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், தற்போது மது விற்பனை செய்வதற்கும் பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
வெப்ப அலையின் போது மருத்துவமனைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது இன்று நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை 
பல நாட்களாக புழுக்கத்தில் ஆழ்த்திய வெப்ப அலை நிலைமைகள் படிபடியாக குறைந்து கிழக்கு நோக்கி நகரவிருக்கின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் மயிலிட்டியில் பத்தாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

யாழ் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக இன்றைய தினம் பத்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை 
முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினமும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தங்காலையில் பேருந்து விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில்  தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் 
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 25 ஜூன், 2026

இந்தியர் சிங்கப்பூரில் விமான பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதால் சிறைத்தண்டனை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக, 35 வயதான இந்தியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் திவாரியும் அவரது நான்கு நண்பர்களும் தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​ஒரு பெண் விமானப் பணிப்பெண் அவர்களைக் கடந்து சென்றபோதெல்லாம் 
சிரித்துள்ளனர்.
உணவு விருப்பங்களைப் பற்றிக் கேட்பதற்காக அந்த விமானப் பணிப்பெண் அவர்களின் இருக்கைகளுக்கு வந்தபோது, ​​திவாரி தனது கையை நீட்டி அவரது காலில் உரசியதாகவும், அதன்பிறகு அவரது நண்பர்கள் சிரிக்கத் தொடங்கியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள்
 தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 
காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில், அந்த மதியமே பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 9 அன்று நடந்திருந்தாலும், இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் ஒரு தொந்தரவு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட திவாரிக்கு, தற்போது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.90,000க்கும் மேல் இழப்பீடு வழங்க திவாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு

நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் வழங்கப்படும் என நலவாழ்வு உதவித்தொகை வாரியம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசுமஉதவித்தொகைத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது, அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு
 வருகின்றன.
2023-ல், நான்கு பிரிவுகளின் கீழ் கிட்டத்தட்ட 16 லட்சம் மக்கள் அஸ்வேசுமா உதவித்தொகையைப் பெற்றனர். மேலும், ஏப்ரல் 2025-ல், நான்காவது பிரிவான இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 3,15,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. 
 மூன்றாவது பிரிவான நலிவடைந்தோர் பிரிவைச் சேர்ந்த 4,25,000 பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அஸ்வேசுமா உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த இரண்டு பிரிவுகளில் ஏழையாகவோ அல்லது கடும் வறுமையில் உள்ள குடும்பங்களோ இருந்தால், அவர்கள் மறு குடியமர்வு உதவித்தொகையைப் பெற முடியும் என்று நலவாழ்வு உதவித்தொகை வாரியத்தின் உதவி ஆணையர் திரு. ஆஷான் நடாகா தெரிவித்தார்.  .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் ஜூலை முதல் நாள் முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

நாட்டில்  ஜூலை முதல் நாள் முதல் வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு  தனியார் பேருந்து சங்கங்கள், தேசியப் போக்குவரத்து ஆணையத்திடம் கோரிக்கை
 விடுத்துள்ளன.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. கெமுனு விஜேரத்ன, இக்கோரிக்கை நேற்று எழுத்துப்பூர்வமாக 
விடுத்துள்ளார். 
அதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசியப் போக்குவரத்து ஆணையத்துடன் கட்டணத் திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  "வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தம் 5ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படும் என்று நாங்கள் முன்னர் அறிவித்திருந்தோம். டீசல் விலை ஆய்வைப் பார்த்த பிறகு, அது மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
வழக்கம் போல் ஜூலை 1ஆம் திகதி வருடாந்திர பேருந்துக் கட்டணத்தைத் திருத்தி அமைப்பதற்காக, எங்கள் சங்கங்கள் அனைத்துடனும் விவாதித்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, நேற்று எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்தோம். 
மேலும், இந்த 5 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த தேசியப் போக்குவரத்து ஆணையமும் முயன்று வருகிறது. நாங்கள் எங்கள் விலைகள் அனைத்தையும் தெரிவித்துள்ளோம். இருப்பினும், ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15%-க்கும் அதிகமான சதவீதமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 24 ஜூன், 2026

கடும் வெப்ப அலை காரணமாக இங்கிலாந்தில் நூற்குக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடல்

கடும் அலை காரணமாக இங்கிலாந்தில்  பக்கிங்ஹாம்ஷயரில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும், 125 பள்ளிகள் முழுமையாக மூடவோ அல்லது குறைக்கப்பட்ட வேலை நேரத்தைக் கொண்டிருக்கவோ 
முடிவு செய்துள்ளன.
பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பள்ளிகள் மூடப்படுவது குறித்த விவரங்களை அந்தந்தப் பள்ளிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சில பள்ளிகள் வெள்ளிக்கிழமை வரை மீண்டும் திறக்கப்படாது. பல பள்ளிகள் இணையவழி கற்றலுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின்படி, பக்கிங்ஹாம்ஷயரின் சில
பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வெப்பநிலை 35°C (95°F) வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு இந்தோனேசியாவில் பலர் பாதிப்பு

எரிமலை வெடிப்பு  இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் அமைந்துள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை இன்று சக்திவாய்ந்த
 முறையில் வெடித்தது. 
இந்த வெடிப்பின் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மேகம் வானில் பரவியதாக அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பின் பின்னர் அப்பகுதியில் எச்சரிக்கை நிலை தொடர்ந்தும் அமலில் உள்ளது. 
அதிகரித்த எரிமலைச் செயல்பாடுகள் காரணமாக அந்தப் பகுதி ஏற்கனவே அபாய மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வெடிப்பினால் பலர் பாதிக்கப்பட்டதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள்
 தெரிவிக்கின்றன. 
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எரிமலையை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்..
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சியில் அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாட்டில் . கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கை
 முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வாகன இலக்கத் தகடுகள் எதுவும் பொருத்தப்படாமல் இயக்கப்பபட்டமை மோட்டார் சைக்கிள்களுக்கு உரிய முறையான சட்டபூர்வ
 ஆவணங்கள் இன்றிச் செலுத்தப்பட்டமை தகுந்த சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத நபர்களால் இவை ஓட்டி வரப்பட்டமை ஆகிய காரணங்களால் இந்த மோட்டார் சைக்கிள்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 23 ஜூன், 2026

சில பகுதிகளில் சுவிட்சர்லாந்தில் வெப்ப அலை எச்சரிக்கை விடுப்பு

பல பகுதிகள் வெப்ப அலை  சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கையை அதன் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நியூகேட்டல் ஏரி, பீல் ஏரி மற்றும் முர்டன் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள், மத்திய வாலாய்ஸ் மற்றும் ஜெனீவா ஏரிப் பகுதிகள் அனைத்தும் உயர் அபாய நிலைக்கு நகர்ந்துள்ளதாக மெட்டியோஸ்விஸ்
 தெரிவித்துள்ளது.
எஸ்டாவேயர் (ஃப்ரிபோர்க் மாகாணம்), நிடாவ் மற்றும் அனெட் (பெர்ன் மாகாணம்), ப்ளைன் டி எல்'ஓர்ப் மற்றும் குட்ரெஃபின் (வாட் மாகாணம்), ஜெனீவா ஏரிப் பகுதி மற்றும் மத்திய வாலாய்ஸ் ஆகிய பகுதிகள் நிலை 4க்கு நகர்ந்துள்ளன.
ஏற்கனவே இந்த நிலையில் உள்ள வடமேற்கு சுவிட்சர்லாந்துடன் (பேசல் பகுதி மற்றும் டெலெமாண்ட் பள்ளத்தாக்கு) இவையும்
 இணைகின்றன.
மெட்டியோஸ்விஸ்ஸின் கூற்றுப்படி, உயர் அபாயம் என்பது, குறைந்தது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, இரவில் கூட வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படாது என்பதாகும். 
இந்த வெப்ப அலையின் போது, ​​இரத்த ஓட்டப் பிரச்சனைகள் மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படுவதற்கு கணிசமான அபாயம் உள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.