ஞாயிறு, 17 மே, 2026

உங்கள் பற்களை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்

உங்கள் பற்களை பாதுகாப்பதற்கு நம்மில் பலருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய 
காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான 
பின்பே பல்பிரச்சனை
 வந்த நிலையில், தற்போது குழந்தையிலேயே பிரச்சனை வந்துவிடுகின்றது
.சொத்தை பல், ஈறுகளில் பிரச்சனை, பல்வலி போன்ற 
பிரச்சனையை சந்தித்து வருகின்றோம். இதற்கு தீர்வு மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தவறான பழக்கமாகும். இந்நிலையில் மருத்துவமனை செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பல் பிரச்சனைக்கு
 சில இயற்கையான தீர்வினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதினா இலையினை வெயிலில் காயவைத்து 
பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் வலி ஏற்படாது. அதே போன்று வேப்பம் குச்சியினால் பல் துலக்கினால் பல் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக
 காணப்படும்.
ஓமம், கிராம்பு, கற்பீரம் இவற்றினை தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து பின்பு வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் 
வீக்கம் தீர்ந்துவிடும்.
இதே போன்று கொய்யா இலைகளை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும். மேலும் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த வாய் கொப்பளித்தால் பல் வலி
 பிரச்சனை தீரும்.
சாப்பிட்ட பின்பு ஒவ்வொரு முறையும் நன்றாக வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன்பு மற்றும் எழுந்த பின்பு கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும்.
பற்களை தேய்க்கும் போது ஈறுகளை நன்றாக தேய்த்து தடவி கழுவ வேண்டுமாம். அவ்வாறு செய்தால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடைகின்றது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

போதைப்பொருளுடன் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் 
சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, அவரது பொருட்களை
 சோதனை செய்தனர்.
அப்போது அவரது பொருட்களில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா 
கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 16 மே, 2026

அமுலாகும் புதிய சட்டம் கனடாவில் மீறினால் மூவாயிரம் டாலர்கள் வரை அபராதம்

கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள பைப்பிங் பிளவர் (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் கொடுமை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.
வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைப் பலகைகளை மதிக்காமல் நடந்துகொண்டால் 2000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்

இலங்கையில் இந்த நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
.எனினும், ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அதுகுறித்து அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதனை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளது” என அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.  
இதனிடையே 2013ம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தது.
அதன் மூலம் முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பிளவுண்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடாத்த இலங்கை அரசு தற்போது அறிவிப்புக்களை விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் நவற்கிரி அச்சுவேலியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி

இன்று  நாட்டிற்கு வடகிழக்காக வளிமண்டலத்தில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகச் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அச்சுவேலி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று முதல் இடைவிடாது கனமழை
 கொட்டித் தீர்த்துள்ளது.
திடீரெனப் பொழிந்த இந்த அதிகளவிலான மழைவீழ்ச்சி காரணமாக அச்சுவேலி நகரின் முக்கிய வீதிகள், தாழ்நிலப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. 
அச்சுவேலி - பருத்தித்துறை பிரதான வீதியின் சில இடங்களில் வௌ்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி, நவற்கிரி , சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, இப்பகுதியில் அதிகளவில் பயிரிடப்படும் மிளகாய், வெங்காயம் மற்றும் மரக்கறித் தோட்டங்கள் 
வௌ்ளநீரினால் சூழப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என உள்ளூர் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் நகர்வு மற்றும் தீவிரத்தன்மையை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து
 வருகின்றது. 
இதன் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணம், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மேலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என
 எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 15 மே, 2026

இன்று இலங்கையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சி

தற்போது உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதனைத் தொடர்ந்து, இலங்கையிலும்  15, -05-2026.இன்று  தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம்: நேற்றைய விலையான 395,000 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 394,000 ரூபாவாக
 பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம்: நேற்றைய விலையான 363,400 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 362,400 ரூபாவாக
 பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை மாற்றமே உள்நாட்டிலும் தங்கம் விலை குறைய பிரதான காரணமாக அமைந்துள்ளமை 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

நாட்டில் மாரவில பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது, அதிக விலைக்கு அரிசி விற்ற பல வர்த்தகர்கள் அடையாளம்
 காணப்பட்டனர்.
கட்டுப்பாட்டு விலையை மீறி நுகர்வோரைச் சுரண்டிய வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் இவ்வாறான சுற்றிவளைப்புகள்
 தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது அதன் 
அதிகபட்ச சில்லறை விலையை (MRP) சரிபார்க்குமாறும், மேலதிக விலைக்கு 
விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மியாகி மாகாணத்தி ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

இன்று ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 
 இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 14 மே, 2026

தற்போது நாட்டில் தேவைக்கு அதிகமாக பொலிஸ் நிலையங்களை மூட நடவடிக்கை

தற்போது  நாட்டில்  காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக பொது 
மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், போயவலான பொலிஸ் நிலையம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த நிலையங்களுக்கு பதிலாக புதிய இடங்களை தேடுவதை விட, தற்போதைய சூழலில் தேவையற்ற ரீதியில் இயங்கி கொண்டிருக்கும் சில பொலிஸ் நிலையங்களை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
தேவையற்ற நிலையில் இயங்கும் நிலையங்களை மூடுவதன் மூலம் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து வளங்களை மிகவும் தேவையான இடங்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் பொலிஸ் சேவையை 
மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கான மீளாய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் அமையவுள்ளது என்றார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் சம்பூர் மகா வித்தியாலயத்திற்கு புதிய இரு மாடி கட்டிட பணிகள் ஆரம்பம்

நாட்டில் மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 
கோலாகலமாக நடைபெற்றது.​ திட்ட விபரங்கள்:​முதற்கட்ட நிதி ஒதுக்கீடு: ரூ. 16 மில்லியன் (முதலாம் மாடிக்காக).​இரண்டாம் கட்டம்: அடுத்த மாடிக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் மேற்கொள்ளப்படும்.​
அடிக்கல் நாட்டி வைத்தவர்கள்:​கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் இணைந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.​
கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்:​பாடசாலை அதிபர் புண்ணியமூர்த்தி பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,​எஸ். ஆர். ஹசந்தி - கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்.​எ.எல்.சிராஜ் - மூதூர் வலய கல்விப் பணிப்பாளர்.​
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.எம். சப்ரான்.​வலயக் கல்வி அலுவலகப் பிரதி பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள்.​
கல்வி வளர்ச்சியில் புதிய மைல்கல்!​இந்த புதிய கட்டிட வசதி மூலம் சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் சூழல் மேம்படுவதுடன், பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் இது ஒரு முக்கிய அங்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஏர் இந்தியா சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது

தற்போது .ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏர் இந்தியா6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக  
ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும் 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் 
அறிவித்துள்ளது.
ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஆகஸ்ட் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 13 மே, 2026

நாட்டில் வடக்கிற்கும் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை

நாட்டில்  மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது

 அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக 
வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான
 நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் நில உரிமைக்காக ஒன்றிணைந்த வடகிழக்கு: கேப்பாப்பிலவில் கலந்துரையாடல்

நாட்டில்   முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் இன்று (13.05.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நில உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த கள விஜயமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை
 ஆகிய மாவட்டங்களின் செயற்பாட்டாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வாட்டுவாகல்,
 வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் நிலப் பறிப்பால் பாதிக்கப்பட்ட மக்களும், சிவில் அமைப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
குருந்தூர் மலை விவகாரம் மற்றும் அதன் தற்போதைய நிலை. கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகள்.
கேப்பாப்பிலவு மக்களின் நீண்டகால காணி மீட்புப் போராட்டம். வாட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தாபாய கடற்படை முகாமினால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகள்.
தனித்தனியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை விட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் "நில மீட்பிற்கான ஒருங்கிணைந்த செயலணி" ஒன்றை உருவாக்கி, பலமான கூட்டுப் போராட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 
நில அபகரிப்புக்கு எதிராக வடகிழக்கு மக்கள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இச்சந்திப்பு மீள உறுதிப்படுத்தியது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm

இலங்கை கட்டுநாயக்கவில் நான்கு கோடி ரூபா போதைப்பொருள் வேட்டை - இந்திய தொழிலதிபர் கைது

இலங்கை  .கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து இன்று அதிகாலை 12:30 மணிக்கு Thai Airways (TG-307) விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த 29 வயதுடைய இந்திய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தன்னிடம் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவுமில்லை எனக் கூறி, விமான நிலையத்தின் 'Green Channel' ஊடாக வெளியேற முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரை 
வழிமறித்தனர். 
அவரது இரண்டு பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 389 கிராம் எடையுள்ள உயர்தர 'குஷ்' (Kush) போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான இந்தியப் பிரஜை மற்றும் 
போதைப்பொருள்
 என்பன மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 12 மே, 2026

யாழ் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ் பலாலி   சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் 11-05-2026.அன்று   திங்கட்கிழமை நடைபெற்றது.
அதன் போதே விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, குறித்த கலந்துரையாடலில்,
மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் பாடசாலைகளை, அரசிற்கு கையளித்த குறித்த அமைப்புகளிடமே மீண்டும் கையளித்தல் மற்றும் ஒவ்வொரு வலயத்திலும் மூடப்படும் ஒரு பாடசாலையை நவீன ஆய்வுகூட வசதிகளுடன் மேம்படுத்துதல் குறித்துப் 
பரிசீலிக்கப்பட்டது. 
மேலும், பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பிரபல்யமான பாடசாலைகளுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாக நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்கு 
நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி 
செய்தல். அத்துடன், யாழ் போதனா மருத்துவமனையைச் சூழவுள்ள நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு
, வீதியோரங்களில் தரித்து நிற்கும் வெளிமாவட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்துக்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல். கீரிமலை, காங்கேசன்துறை, பலாலி வீதிகளில் (764, 769 வழித்தடங்கள்) முன்னைய பாதைகளிலேயே பேருந்து சேவைகளை அனுமதிக்கக் கோருதல் மற்றும் தம்பாலை – இடைக்காடு – வளலாய் வீதியைப் பலாலி வீதியுடன் இணைப்பதற்கான எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விரைவாக விடுவித்தல் தொடர்பில்
 பேசப்பட்டது. 
மேலும், தீவுப்பகுதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறைக்கான போக்குவரத்து மேம்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
யாழ். நகரம் உட்பட வட மாகாணத்தில் உள்ள சிறிய
 மற்றும் நடுத்தரக் குளங்களை நன்னீர் தேங்கி நிற்கும் வகையில் புனரமைப்பதுடன், வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த ஆளுநர் நா.வேதநாயகன், 
சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் கொள்கை ரீதியான முடிவுகளைக் கொண்டிருப்பதால், அவை தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. 
அதேவேளை, மாகாண நிர்வாகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்களை மிக விரைவாக ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ என உறுதியளித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி செல்வச் சந்நிதியில் நடைபெற்றது

நாட்டில் .தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வாரம் இன்று முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது
 அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது
 தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது
 மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக
 மாறியிருந்தது.
இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும், எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும், இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது. ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு 
நடைபெற்றது.
இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.ஜீட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பகரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிரைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 
கலந்துகொண்டனர்.
திருகோணமலை -பாட்டாளிபுரம் பகுதியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
 ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சு பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மற்றும் கனகபுரம் வீதியில் 
வாகன வாடகை உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் இன்று காலை 10 மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
 பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி 
செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் 
வாங்கி பருகினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு.12-05-2026. இன்று  காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர்.
இறுதிப் போரின்போது உணவின்றி தவித்த மக்களுக்கு கஞ்சி எவ்வாறு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப் பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 11 மே, 2026

நாளை புதிய விதி முகநூல் பாவிக்கிறவர்களுக்கு புதிய சட்ட திட்டம் அமுல்

நாளை  புதிய  விதி முகநூல்(Facebook)  பமெட்டா என்றும் அழைக்கப்படும்) தொடங்குகிறது என்பதை மறக்காதீர்கள். இது உங்கள் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. இன்றுதான் கடைசி நாள்!!!
60 Minutes நிகழ்ச்சியின்படி: Facebook Meta இப்போது பொது நிறுவனமாகிவிட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் இதுபோன்ற ஒரு குறிப்பை 
பதிவிட வேண்டும்.
நீங்கள் குறைந்தது ஒரு முறையாவது இத்தகைய அறிக்கையை வெளியிடாவிட்டால், உங்கள் புகைப்படங்கள் மற்றும் உங்கள் சுயவிவரத்தில் உள்ள ஸ்டேட்டஸ் அப்டேட்கள் உட்பட அனைத்து தகவல்களையும் பயன்படுத்த அனுமதி அளித்ததாக தொழில்நுட்ப ரீதியாக 
புரிந்துகொள்ளப்படும்.
நான் இதன்மூலம் அறிவிக்கிறேன்: Facebook அல்லது Meta எனது எந்த தனிப்பட்ட தரவுகளையும் பயன்படுத்த எனது அனுமதியை நான் 
வழங்கவில்லை.
இந்த செய்தியில் எங்காவது உங்கள் விரலை அழுத்திப் பிடித்திருங்கள். “Copy” என்று வரும். அதை கிளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் பக்கத்திற்குச் சென்று, புதிய போஸ்ட் உருவாக்குங்கள். காலியான இடத்தில் எங்காவது விரலை வைத்து அழுத்துங்கள். “Paste” வரும், அதை
 கிளிக் செய்யுங்கள்.
இது முழுமையான மொழிபெயர்ப்பு. நீங்கள் நேரடியாக காப்பி செய்து பயன்படுத்தலாம்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நாளை சகல கிளினிக்குகளும் வழமை போல் இயங்கும்

 யாழ்  போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, நாளை (11.05.2026) முதல் வைத்தியசாலையின் சகல கிளினிக்குகளும் (Clinics) மற்றும் மருத்துவ
 சேவைகளும்
 வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி
 அறிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் 
அபாயம் நிலவியது.
இருப்பினும், சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ், கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் தேவையான மருந்துகள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மருந்துகளுக்கு மேலதிகமாக, இன்னும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் நோயாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி நாளை முதல் தமது கிளினிக் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தர முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளாஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் ர்.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு சுவிஸ் நாட்டில் பல வங்கிகளில் வங்கிக் கணக்கு திறக்க தடை


சுவிஸ் நாட்டில் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு. UNS வங்கி உட்பட மேலும் சில வங்கிகளில் வங்கிக் கணக்கு
 ஆரம்பிக்க முடியாது. 
காரணம் உலகில் அமெரிக்கர்களுக்கு அதிக அபாயம் இருக்கின்றதாம். பல  நாடுகளோடு போர். பல நாடுகளுக்காக போர் என பல நாடுகள்,  இனங்கள், மதங்களோடு அமெரிக்கா எதிர்ப்பை 
சம்பாதித்துள்ளது.
 ஒரு புறம் தன்னை பாதுகாக்க மற்றும் வியாபாரம் அத்தோடு உலகின் முதல்தர வல்லரசு மோகம். இவைகளைக் கொண்டே இவர்கள் உலகில் அபாயமானவர்கள் என வங்கிகளால் 
 நிராகரிக்கப்படுகின்றனர். 
அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க  பிரஜாவுரிமை உள்ளவர்கள் சுவிஸ் காப்புறுதி நிறுவனங்களில் ஆயுட் காப்பீடு செய்ய முடியாது. விண்ணப்பம் நிரப்பும்போது நீங்கள் அமெரிக்க பிரஜாவுரிமையா என கேள்வி கேட்கப்படும். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 10 மே, 2026

நாட்டில் தெனியாய கல்வி வளையத்தின் நான்கு பாடசாலைகளுக்கான விடுமுறை நீட்டிப்பு

இங்கு  மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் மேலும் இரண்டு நாட்களுக்கு 
மூடப்பட்டிருக்கும். 
 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக , சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெனியாய மண்டல கல்வி இயக்குனர் நிஷாக ஹெட்டியாராச்சி 
தெரிவித்தார். 
 அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழி மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை நாளை (11) மற்றும் மறுநாள் (12) மூடப்பட்டிருக்கும். . என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தெதுரு ஓயா மற்றம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுள் திறப்பு

இலங்கையில் .தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வான்கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு 11,100 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை, இன்று  பிற்பகல் 01.15 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், நான்கு வான் கதவுகள் தலா மூன்று அடி வீதமும், இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறந்துவிடப்பட்டுள்ளன. 
 இதன் ஊடாக வினாடிக்கு 8,113 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 9 மே, 2026

புதிய சட்டம் சுவிஸ் நாட்டில் மருத்துவ காப்புறுதியின் "பிரான்சிஸ்300 பிராங்குகளை 400 ஆக மாற்ற ஆலோசனை

மருத்துவக்காப்புறுதிக்கு .சுவிஸ் நாட்டில்  வருட ஆரம்பத்தில் பொறுப்புக் கட்டணம் குறைந்தது பிரான்சிஸ் (FRANCHISE) 300 இலிருந்து CHF 400 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை ஆரம்பித்துள்ளது. 
இது மக்கள் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைக்க ஊக்குவிப்பதற்காக. 
கொண்டு வரும் சட்டம் ஆகும். ஆனால் மக்கள் ஆதரவு பொறுத்து வருட இறுதியிலே முடிவு வரும் என நம்பப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இலங்கையில் விசேட அறிவிப்பு - 18 சதவீதத்தால் உயரும் மின் கட்டணம்

நாட்டில் மின் கட்டண உயர்விற்கு  இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL)  அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் மின் கட்டணமானது 18 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 
இக் கட்டண உயர்வானது 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது. 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது
 என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது. 
இதன்படி இந்த விலை உயர்வு மொத்த நுகர்வோர் தளத்தில் சுமார் 5 சதவீதமானோரை  மட்டுமே பாதிக்கும் என்றும், இதன்மூலம் 95 சதவீதமான  மக்கள் அதிக செலவுகளிலிருந்து திறம்பட பாதுகாக்கப்படுவார்கள் என்றும் PUCSL உறுதிப்படுத்தியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் .ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி சிசிரிவியில் மாட்டிய திருடன்

நாட்டில் விசுவமடு பகுதியி வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை அலேக்காக திருடிச் சென்ற நபர், சிசிரிவி கமராவில் சிக்கியுள்ளார்.
முல்லைத்தீவு - வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்று காலை 
திருடப்பட்டுள்ளது. 
வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை அங்கு வந்த நபர் ஒருவர் பொறுமையாகக் காத்திருந்து 
திருடிச் சென்றுள்ளார். 
வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் ப
திவாகியுள்ளது.
சிசிரிவி பதிவை வைத்துக்கொண்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உரியவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து
 வருகின்றனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 8 மே, 2026

நாட்டில் வானிலை மாற்றம் பல பகுதிகளில் நூறு மி.மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு

 நாட்டில்  சுற்றுவட்டாரத்தில் நிலவும் தாழ்மட்ட வளிமண்டல சீர்குலைவின் காரணமாக,   மழைப்பொழிவு நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 
 பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது. 
 மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் உண்டாகும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.