ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026
நாட்டில் திருக்கேதீச்சர ஆலய வளாகத்திற்குள் பௌத்த விகாரை பெயர்பலகை
மன்னார் திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தெரிவித்துள்ளார்.
மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் , தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.
ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன் பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி
எழுப்பு கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் நீதிமன்ற
கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன?
குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
நாட்டில் அங்குலானா கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் மீட்பு
நாட்டில் அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான துவோரா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பதினொரு கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் இருந்த வீரர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்
தெரிவித்தார்.
கடற்படையின் கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியது.
அதன்படி, ஆபத்தில் சிக்கிய கப்பலைக் கண்காணிக்கவும், மீட்பு நடவடிக்கைக்கு உதவவும் ஒரு Mi-17 ஹெலிகாப்டரும், ஒரு பெல் 412 ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்தி
சனி, 15 ஆகஸ்ட், 2026
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி
இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 337.15 ரூபா
ஜப்பானிய யென் 2.14 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 456.84 ரூபா
யூரோ 390.72 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.84 ரூபா
சுவிஸ் பிராங் 416.67 ரூபா
கனடிய டாலர் 243.65 ரூபா
கத்தார் ரியால் 93.23 ரூபா
குவைத் தினார் 1092.75 ரூபா
சவுதி ரியால் 91.15 ரூபா
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
நீதியின் ஓலம் யாழில் ஆரம்பம் - திங்கள்கிழமை மாபெரும் பேரணி
யாழ் செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
செம்மணி புதைகுழிக்கு நீதிகோரி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம், எதிர்வரும், 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெற்று , 17ஆம் திகதி யாழ். நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்து , பேரணியாக ,நல்லூர் கோயில் வீதியிலுள்ள ஐநா அலுவலகத்தில் சென்று மகஜர் கையளிப்பதோடு நிறைவடையவுள்ளமை
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
யாழ் செய்திகள்
நாட்டில். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றப்பட்டனாம்
நாட்டில். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபரிடமிருந்து சுமார் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கல்லின் எடை தொடர்பான தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இது மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக
அமையக்கூடும்.
சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட திருகோணமலை பொது வைத்தியசாலை மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உள்நாட்டுச்செய்திகள்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026
நாட்டில். கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி காபெட் வீதியாக அபிவிருத்தி
நாட்டில் மாவட்டத்தின் கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி 1.3 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் – சம்புகுளம் மூலிகைப் பண்ணைக்குச் செல்லும் பிரதான வீதி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான அங்குரார்ப்பண
நிகழ்வு நடைபெற்றது.
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுமார் 1.3 கிலோமீற்றர் நீளமான இவ்வீதி முதல் முறையாக காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது
குறித்த வீதியானது அபிவிருத்தி பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் பகுதியிலும் 55 மில்லியன் நிதி ஒதுக்கீடு இரண்டு கிலோமீட்டர் கார்பெட் வீதி புணரமைப்பு பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இன்பராஜ் நளாயினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்கள்
கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராம மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளதாகத் தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், 2010ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் முதன்முறையாக சம்புகுளம் கிராமத்திற்கு வருகை தந்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.
அப்போது தற்போதைய ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர், கிராம மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த அனுபவம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராமத்துடன் தொடர்புடைய முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் சம்புகுளம் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்று வந்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்திக்கும் சம்புகுளம் மக்களுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் உறவு தொடர்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உள்நாட்டுச்செய்திகள்
நாட்டில் பொலிஸ் சீருடை மாற்றம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கணிப்பை எதிர்பார்க்கும் அரசு
லங்கை காவல் துறையினரின் (Police) பாரம்பரிய காக்கி நிற சீருடையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் பாதுகாப்புத் துறையில் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்பவும், சர்வதேச தரத்திற்கு இணையாகவும் இந்த மாற்றங்களைச் செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
சீருடை மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்,பழமையான நடைமுறை,தற்போதைய காக்கி சீருடை முறை பிரித்தானியர் ஆட்சிக்கால மரபுகளைத் தொடர்ந்து 1974ம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும். இது தற்கால நவீன தேவைகளுக்குப் பொருந்தவில்லை
எனக் கருதப்படுகிறது.
இலங்கையின் அதிக வெப்பம் மற்றும் வியர்வை தரக்கூடிய காலநிலைக்கு தற்போதைய தடிமனான காக்கி ஆடைகள் காவலர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் காவல்துறைக்கு நீலம் அல்லது பிற நவீன நிறங்கள் பயன்படுத்தப்படுவதால், இலங்கை காவல் துறையையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது இதன் நோக்கமாகும்.
காக்கி நிறத்திற்குப் பதிலாக சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் கடும் நீல நிறம் (Dark Blue) அல்லது சாம்பல் நிறம் கலந்த ஆடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பொதுமக்களிடமும், அதிகாரிகள் மட்டத்திலும் கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆலோசனைகள்
நடத்தப்படுகின்றன.
வெப்பத்தைத் தாங்கக்கூடிய, காற்றோட்டமான, வியர்வையை எளிதில் உறிஞ்சக்கூடிய பாலியஸ்டர் கலப்பு (Polyester blends) அல்லது நைலான் போன்ற நவீன துணி வகைகளைப் பயன்படுத்த
ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தடிமனான தோல் வார்ப்பட்டைகளுக்கு (Leather belts) பதிலாக இலேசான தந்திரோபாய பெல்ட்கள் (Tactical belts) மற்றும் நீண்ட நேரம் அணிந்திருக்கக்கூடிய சௌகரியமான காலணிகள் (Tactical boots) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி உதவிகள்சீருடை மாற்ற ஆலோசனைகள் ஒருபுறமிருக்க, தற்போதைய இலங்கை காவல் துறையினரின் (Sri Lanka Police) நலனைக் கருதி, சீருடைகள் மற்றும் காலணிகளை கொள்வனவு செய்வதற்காக 7,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
நாட்டில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தல்
நாட்டில் வீதிப் போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகள் மறைவான இடங்களில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விபத்துகளைத் தடுப்பது மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும், போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் இடங்களில் கடமையில் ஈடுபடுவதன் மூலம்,
விதிமீறல்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
ஒரு தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம்: கண்டுகளித்த மக்கள்
இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இங்கிலாந்தும் ஐரோப்பாவும் தங்களின் மிக பிரம்மாண்டமான சூரிய கிரகணத்தைக் கண்டுள்ளன. ஒரு தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் இந்த நிகழ்வை மில்லியன் கணக்கான மக்கள் கண்டனர்
இது பிரிட்டிஷ் கோடை நேரப்படி -12-08-2026-அன்று இரவு 7 மணிக்குச் சற்றுப் பிறகு உச்சத்தை அடைந்தபோது, பெரும்பாலானோர்
சூரியனின் 90%-க்கும் அதிகமான பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
ஆனால், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகள் முழு சூரிய கிரகணத்தின் முழுமையான இருளையும் கண்கொள்ளாக் காட்சியையும் அனுபவித்தன.
முழு கிரகணத்தின் பாதை, மக்கள் கூட்டத்திலிருந்தும் தொலைநோக்கிகளிலிருந்தும் வெகு தொலைவில், ரஷ்யாவின் சைபீரியாவின் வடமுனையில் தொடங்கியது.
ஆனால் அது விரைவில் ஆர்க்டிக் பெருங்கடலைச் சுற்றி வளைந்து, மாலை வேளையில் ஐஸ்லாந்தை வந்தடைந்தது; பின்னர் தெற்கு
நோக்கிப் பாய்ந்து, தனது அற்புதத்தின் ஒரு பகுதியை ஐக்கிய ராச்சியத்திற்கும் காட்டியது.
வடக்கு ஸ்காட்லாந்தில் சுமார் 18:00 BST மணிக்கும், இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையில் 18:20 மணிக்குச் சற்று முன்னரும் இந்தப் பகுதி கிரகணம் தொடங்கியது.
முதலில் அது புலப்படவில்லை, ஆனால் மேகமற்ற வானத்தைப் பெற்றிருந்த மக்கள், சந்திரன் சூரியனைச் சிறிது சிறிதாக மறைப்பதை
கவனித்தனர்
மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் வானம் தெளிவாக இருந்ததால், ஒரு மணி நேரத்திற்கு சந்திரன் மெதுவாக சூரியனைக் கடந்து சென்ற காட்சியை அவர்களால்
காணமுடிந்தது.
சந்திரன் மெதுவாகவும் உறுதியாகவும் சூரியனின் பெரும்பகுதியை மறைத்தது - அவ்வாறு செய்யும்போது அது ஒரு ஒளி மங்கச் செய்தது.
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பார்க்கும்போது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை முற்றிலும் நேர்க்கோட்டில்
அமையவில்லை.
இதன் விளைவாக ஒரு பகுதி கிரகணம் ஏற்பட்டது. ஐக்கிய ராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளில் சந்திரன் சூரியனை சுமார் 90% மறைத்தது. இது 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாடு கண்ட மிக பிரம்மாண்டமான
கிரகணமாகும். கார்ன்வாலில், இந்த மறைப்பு 95% வரை இருந்தது.
ஸ்பெயினில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணப் பாதையில் திரண்டிருந்த மக்கள், சந்திரனுக்குப் பின்னால் சூரியன் மறைந்த சிவப்பு
ஒளியுடன் கூடிய அந்த அரிய நிகழ்வைக் கண்டு இரசித்தனர். சூரிய வட்டத்தின் 93% வரை
மறைத்து மற்றும் -12-08-2026-அன்று இரவு சுவிற்சர்லாந்தின் பாடன் ( ஆறோ- AG ) எனும் இடத்தில் 7.00 மணி முதல் 8.00 மணி வரை இந்த அறிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
யாழ் செம்மணி மனிதப் புதைகுழி புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்
யாழ் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்டுவது என்பது குறித்து.13-08-2026- இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா
தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்டிருந்த மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பகுதியில் இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள்
வெளிப்பட்டுள்ளன.
அவற்றில் 530 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பகுதியில் இருந்து ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
யாழ் செய்திகள்
யாழ் வடமராட்சி வடக்கில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் இரு புதிய வீடுகள் கையளிப்பு
யாழ் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீட்டு வசதியற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் தரமானதுமான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திரலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்
யாழ்ப்பாண மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனால் பயனாளியான ஸ்ரீகரன் சதீஸ்வரனுக்கு புதிய வீடு உத்தியோகபூர்வமாகக்
கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் சந்திரமூர்த்தி, புதிய வீடு கையளிக்கப்பட்டதன் மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இது முக்கிய ஆதரவாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
இதேவேளை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/412 கிராம அலுவலர் பிரிவிலும் சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மற்றுமொரு புதிய வீடு நேற்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விலும் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனால் பயனாளியான மகேந்திரராஜா மகேஸ்வரிக்கு வீடு உத்தியோகபூர்வமாகக்
கையளிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை
பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் மற்றும் பிரதீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
யாழ் செய்திகள்
புதன், 12 ஆகஸ்ட், 2026
இன்று சுவிற்சர்லாந்தில் 1999ம் ஆண்டுக்கு பிறகு தென்பட்ட சூரிய கிரகணம்
இன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு அரிய வானியல் நிகழ்வு சுவிற்சர்லாந்தில்
நிகழ்ந்துள்ளது.
Tags :
உலக ச்செய்திகள்
கடல்..வெப்பமடைவதால் அதிகரிக்கும் அந்நிய உயிரினங்கள்: விஞ்ஞானிகள் கவலை
தற்போது . மத்திய தரைக்கடல் பகுதியில் அந்நிய கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு கடல் வெப்பநிலை உயர்ந்து வருவதும், சூயஸ் கால்வாய் வழியாக வெப்பமண்டலப் பகுதிகளைச் சேர்ந்த உயிரினங்கள் மத்திய தரைக்கடலுக்குள் நுழைவதும் முக்கிய காரணங்களாகக்
கூறப்படுகின்றன.
சமீபத்திய ஆய்வின்படி, இப்பகுதியில் சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய அந்நிய உயிரினம் பதிவாகி
வருகிறது.
தற்போது மத்திய தரைக்கடலில் 1,000-க்கும் மேற்பட்ட அந்நிய உயிரினங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிங்கமீன், முயல்மீன் மற்றும் சில பஃபர் மீன் இனங்கள் உள்ளூர் கடல்வாழ் உயிரினங்களுடன் போட்டியிடுவதுடன், உணவுச் சங்கிலி மற்றும் மீன்பிடித் தொழிலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி
வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சைப்ரஸில் சிங்கமீன்களின் எண்ணிக்கையைக் குறைக்க சிறப்புப் பொறிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இவ்வகை மீன்களை பாதுகாப்பான முறையில் உணவாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பது இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய தரைக்கடல் கடல் சூழலைப் பாதுகாக்க நீண்டகால கண்காணிப்பும் உரிய நடவடிக்கைகளும் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
முதல் நாடாக மரண தண்டனையை ஒழித்த அரபு நாடு லெபனான்
முதல் நாடாக மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்தை லெபனான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது, இதன் மூலம் மத்திய கிழக்கில் அவ்வாறு செய்யும் முதல் நாடாக
இது திகழ்கிறது.
பல திருத்தங்களைச் செய்த பின்னர், சட்டமியற்றுபவர்கள் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டதாக லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.
ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்றக் குழுவைத் தவிர, 128 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மையானோர் மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் இருந்த நீதித்துறை அமைச்சர் அடெல் நசார், இது நாட்டிற்கு ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை"
என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய முறை, மரண தண்டனைக்கு பதிலாக கடுமையான உழைப்புடன் கூடிய ஆயுள் தண்டனையை
அமல்படுத்துகிறது.
ஜனவரி 2004 முதல் லெபனான் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், நீதிமன்றங்கள் தொடர்ந்து பல மரண தண்டனைகளை வழங்கி
வருகின்றன.
லெபனான் நீதி அமைச்சகத்தின் சிறைச்சாலைகள் இயக்குநரகத்தின்படி, 2025ம் ஆண்டின் இறுதியில் 85 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026
கனடாவில் ஒரு சீட் பெல்ட்டால் முடங்கிய விமானம்: சிறுவனின் பிடிவாதத்தால் ரத்தான சேவை
.சிறுவன் ஒருவன் கனடாவில் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து வானூர்திப் பயணம் ஒன்று ரத்து
செய்யப்பட்ட சம்பவம், வானூர்திகளில் சிறுவர்கள் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த 'போர்ட்டர் எயார்லைன்ஸ்' (Porter Airlines) வானூர்தியிலேயே இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
வானூர்தி புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும்
அடம்பிடித்துள்ளான்.
சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் வானூர்தி ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் வானூர்தியை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.
இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், வானூர்தியை அன்றைய தினம் இயக்க
முடியாமல் போனது.
இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் சிறுவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் வானூர்தி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
சிறுவன் ஒருவனின் நடத்தையால் முழு வானூர்தி பயணமும் ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது என்றும், அந்த குடும்பத்தை மட்டும் உடனடியாக வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும் பலர்
கூறி வருகின்றனர்.
முன்னதாக 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சவுத் வெஸ்ட் எயார்லைன்ஸ் (Southwest Airlines) மற்றும் ஜெட்ப்ளூ (JetBlue) ஆகிய வானூர்தி
நிறுவனங்களிலும், ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வானூர்திகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
நாட்டில் வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான உடை குறித்து சுற்றறிக்கை வெளியீடு
.இலங்கை சுகாதார அமைச்சு, வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான உடை விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி: முஸ்லிம் பெண் வைத்தியர்கள், செவிலியர்கள் (Nurses) மற்றும் ஏனைய மருத்துவப் பணியாளர்கள் தங்களது சமய நம்பிக்கைக்கு ஏற்ப தலை மற்றும் கழுத்துப் பகுதியை மறைக்கும் ஹிஜாப் (Hijab / Headscarf) அணிந்து கடமையாற்ற அனுமதி உண்டு.
எனினும், மருத்துவப் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் (Surgery) மற்றும் தொற்றுக் கட்டுப்பாடு (Infection Control) போன்ற மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய, உடைகள் மற்றும் தலைப்பாசிகள் அமைந்திருக்க வேண்டும்.
நிகாப் (Niqab / Face Veil): பாதுகாப்பு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தும் காரணங்களுக்காக, கடமை நேரத்தில் முகத்தை முழுமையாக மூடும் உடைகளுக்கு (நிகாப்) கட்டுப்பாடுகள் அல்லது தடைகள்
விதிக்கப்படலாம்.
நோயாளிகளுடனான தொடர்பாடல் மற்றும் வைத்தியசாலைப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, கடமையின் போது முகத்தைக் காண்பிப்பது அவசியமாகப் பார்க்கப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
நாட்டில் கடவுச்சீட்டு விநியோகம் திடீர் கணினிக் கோளாறால் பணிகள் முடக்கம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 11-08-2026-இன்று முற்பகல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இடையூறு
ஏற்பட்டுள்ளது.
இதனால் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜவிடம் வினவியபோது, கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவாகச் சரிசெய்து, கடவுச்சீட்டு விநியோக
நடவடிக்கைகளை
வழமைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
திங்கள், 10 ஆகஸ்ட், 2026
ஓய்வூதியத்தை சுவிஸ் நாட்டில் முன்கூட்டியே அறுவது வயதில் எடுக்க முடியுமா ஆம்
நீங்கள் சுவிஸ் நாட்டில் பென்சன் ஊதியத்தை முன்கூட்டியே 60 வயதில்
எடுக்க முடியுமா
ஆம். ஆனால் சுவிட்சர்லாந்தில் AHV (1st pillar) மற்றும் Pensionskasse/BVG (2nd pillar) இரண்டிற்கும் விதிகள் வேறு.
AHV: பொதுவாக reference வயசுக்கு முன்பாக ஓய்வூதியத்தைப் பெற ஆரம்பிக்க முடியும்; முன்கூட்டியே எடுத்தால் மாதாந்திர ஓய்வூதியம் நிரந்தரமாகக் குறையும்.
Pensionskasse (2nd pillar): பல ஊதிய நிதியில் இருந்து 60 வயதில் ஆரம்ப ஓய்வு(early retirement) செய்து ஓய்வூதியம் அல்லது விதிகளுக்கு உட்பட்டு capitalஆக பெற முடியும். ஆனால் உங்கள் Pensionskasse விதிமுறைகளே
முக்கியம்.
வீடு வாங்குவதற்காக: 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை. சுவிட்சர்லாந்தில் சொந்தமாக வசிக்கவுள்ள வீட்டை வாங்குவதற்கு 2nd pillar பணத்தை முன்கூட்டியே எடுத்தல் (WEF/Vorbezug) சாத்தியமாக
இருக்கலாம்.
நீங்கள் விரும்பினால், “60 வயதில் CHF 200,000 Pensionskasse இருந்தால் எவ்வளவு எடுக்கலாம், வரி எவ்வளவு, மாத pension எவ்வளவு குறையும்?” என்று ஒரு எளிய உதாரணத்துடன் கணக்கிட்டுக் காட்டலாம்.
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை சுரேஷ் பிரேமச்சந்திரன்
யாழ் செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில் ,
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.100 நாட்களைத் தாண்டி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால் இதுவரை இல்லை.
முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு ,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது. அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்
இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து
முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக் குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
யாழ் செய்திகள்
சீனா இலங்கைக்கு நூறு அதிநவீன மின்சார சொகுசு பேருந்துகளை வழங்க உள்ளது
நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கம் இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார சொகுசு பேருந்துகளை (Electric Luxury Buses) நன்கொடையாக வழங்கவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong), மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது இந்தத் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
பாரம்பரிய எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள் வழங்கப்படவுள்ளதுடன், ஒரு பேருந்தின் மதிப்பு சுமார் 225,000 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பேருந்துகள் பிரதானமாக கொழும்பு – கண்டி மற்றும் கொழும்பு – காலி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னேற்ற வசதிகளுக்கும் கோரிக்கை மின்சார பேருந்துகளை தடையின்றி இயக்குவதற்குத் தேவையான Charging Infrastructure உள்ளிட்ட மின்னேற்ற வசதிகளையும் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சின் ஊடாக சீன அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
அத்துடன், பேருந்துகளை இயக்குதல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பராமரித்தல் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஊழியர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு அண்மைய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீன நிபுணர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்துக்கும் மேலதிக உதவி 100 மின்சார பேருந்துகள் தொடர்பான திட்டத்திற்கு மேலதிகமாக, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சீனாவின் Foton International Corporation நிறுவனத்திடமிருந்து 104 புதிய Metro பேருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கும் சீனாவின் உதவி பொதுப் போக்குவரத்துத் துறைக்கு மட்டுமன்றி இலங்கையின் கல்வித்துறைக்கும் சீனா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை பாடசாலை மாணவர்களுக்காக 15 மில்லியன் மீட்டர் வெள்ளை நிற சீருடைத் துணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் 500 பாடசாலைகளில் 900 Smart Classrooms அமைக்கும்
திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய திட்டங்கள் இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் போக்குவரத்து முறையை நோக்கி நகர்வதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026
நூற்றிஇருபத்திஒரு ஆண்டுகளுக்குப் பின் அரிய விசித்திர முழு சூரிய கிரகணம்
இந்த ஆண்டு ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக நாசாவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1905ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஸ்பெயினில் தென்படவுள்ள இந்த அரிய முழு சூரிய கிரகணத்தை, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்த்துக்கல்லின் சில பகுதிகளிலும் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் இந்த வானியல் நிகழ்வு, வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தென்பட்டிருந்தமை
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
இந்த ஆண்டு பிரான்சில் காட்டுத்தீ தொடர்பாக நாநூற்றி இருபது பேர் கைது
நடந்த இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிரான்சில் காட்டுத்தீ அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதகுலம் புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட முறையின் விளைவாக காலநிலை மாறிவருவதே
இதற்கான ஒரு முக்கியக் காரணமாகும், வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால், பிரான்சில் ஏற்படும் 10 காட்டுத்தீக்களில் 9 மனிதர்களால் தொடங்கப்படுகின்றன என்று பதிவுகள் காட்டுவதால், பாரிஸில் உள்ள அரசாங்கம் பழியைச் சுமத்த முயற்சிக்கிறது.
இந்த கோடையில் 300,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை எரித்துச் சாம்பலாக்கியுள்ள இந்தத் தீவிபத்துகளுக்கு
காரணமானவர்கள் யார்?
வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ தீயை மூட்டியதாகக் கூறப்படும் 420 பேரைக் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது; அவர்களில் 166 பேர் சிறார்கள்.
ஒரு வழக்கில், கடந்த மாதம் தென்கிழக்கு வார் பகுதியில் ஐந்து நாட்களில் 10 தீயை வேண்டுமென்றே மூட்டியதாக 23 வயது இளைஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் €150,000 (£128,000) அபராதத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.
வோஜஸ் பிராந்தியத்தில் உள்ள ராவோன்-லெட்டாப் காட்டில் சமீபத்தில் மூன்று தீவிபத்துகளை ஏற்படுத்தியதற்காக
மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஒருவரைப் போல, வேறு பலரும் விசாரிக்கப்பட்டு உடனடியாகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்
. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
உலக ச்செய்திகள்
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி
இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 339.78 ரூபா
ஜப்பானிய யென் 2.17 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 457.05 ரூபா
யூரோ 392.57 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 241.27 ரூபா
சுவிஸ் பிராங் 420.97 ரூபா
கனடிய டாலர் 243.04 ரூபா
கத்தார் ரியால் 93.87 ரூபா
குவைத் தினார் 1100.83 ரூபா
சவுதி ரியால் 91.77 ரூபா
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
Tags :
இலங்கைச்செய்திகள்
Blogger இயக்குவது.



















































