வெள்ளி, 31 மே, 2024

இரண்டு வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது

ஜெர்மனியை சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற அந்த சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது.
சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக ஸ்டூடியோவை ஒதுக்கி
 கொடுத்துள்ளனர்.
அந்த சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்தான்.
தொடர்ந்து சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார். 
அதில், சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டார். அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 30 மே, 2024

நாட்டில் போதனா வைத்தியசாலையில் எட்டு உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை விழா

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 13 வருடங்கள் மருத்துவமாதுக்களாக கடமை புரிந்த 8 உத்தியோகத்தர்கள் இன்று இடமாற்றலாகி யாழ் பிராந்திய சுகாதார சேவை
 பணிப்பாளர் பணிமனையின் கீழ் இயங்கும் நிலையங்களில் கடமைக்காக விடுவிக்கப்பட்டனர்.
இதுவரை காலம் மகப்பேற்று விடுதிகளில் சிறப்பாக கடமையாற்றி சுகப்பிரசவங்களுக்கு மிக உறுதுணையாக 
இருந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு இன்று பிரிவுபசார விழா யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 29 மே, 2024

நாட்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சரா அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது 
செய்யப்பட்டுள்ளார். 
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் 
சாட்டப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





செவ்வாய், 28 மே, 2024

மோட்டார் சைக்கிளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தவரால் பரபரப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்தவர் ஒருவர் கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று 27-05-2024.அன்று 
இடம்பெற்றுள்ளது.
 தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை 
பிரிவில் 27-05-2024.அன்று  இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார். 
இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே
 வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலகம மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.
 இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் 
காயமடைந்தவரும் சிகிச்சைக்காக 
வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் வைத்தியசாலை
 ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 அண்மைக்காலமாக வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் வைத்தியசாலை சேவையை தொடர்ந்து முன்கொண்டு செல்வது சவாலுக்குரியது 
என வைத்தியசாலை ஊழியர்கள் எச்சரித்துள்ளதுடன் இது தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வைத்தியசாலை
 நிர்வாகம் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 27 மே, 2024

நாட்டில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி பத்திரங்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய தீர்வை தருவார்

நாட்டில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
 நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு 26-05-2024.அன்று வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு 
உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு
 தெரிவித்தார்.
 காணி பத்திரங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி தங்களுக்கான உறுதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளது. 
அதேவேளை, காணி பத்திரம் கைமாற்றப்பட்டுள்ளமை,
 சீதனமாக வழங்கியுள்ளமை, வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால், பலருக்கு உரித்து திட்டத்தின் கீழ் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக 
ஆளுநர் தெரிவித்தார்.
 எனினும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி பத்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடி ஜனாதிபதி உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார். எனவே, ஜனாதிபதியின் கனவு திட்டமான உரித்து வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இதன்போது ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






ஞாயிறு, 26 மே, 2024

வவுனியா பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு
 நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின் இன்று (26.05) வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார்.  
வவுனியா பொது வைத்தியசாலை, மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு சென்ற ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.  
இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய
 பகுதிகள், பிரதான வீதிகள் என்பவற்றில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிசார் என மூன்று அடுக்கு 
பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கலகம் அடக்கும் பொலிசார், நீர் விசிறும் வாகனம் என்பனவும் தயார் நிலையில் விடப்பட்டிருந்தன.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 25 மே, 2024

நாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் திறந்து வைப்பு

நாட்டில்.கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு 25-05-2024. இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
 கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பலரும் வரவேற்றனர்.
தொடர்ந்து வைத்தியசாலை கட்டடத்தினை திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார். நெதர்லாந்து அரசின் இலகுக் கடன் நிதி உதவியில் பெண்களிற்கான சிகிச்சை கூடமாக 
அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி கொப்பங், நாடாளுமன்ற உறுப்பினர்களான MA சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், 
வடமாகாண ஆளுனர் P H M சார்ள்ஸ்,
 முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






வெள்ளி, 24 மே, 2024

ஜனாதிபதியால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடம் திறப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
.24-05-2024.இன்றுதிறந்து வைத்தார்.
 வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.24-05-2024.இன்று காலை யாழ்ப்பாணத்தை 
வந்தடைந்தார்.
 உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் 
வரவேற்றனர்.
 இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைத்துள்ளதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 23 மே, 2024

மன்னார் காற்றாலை மின் உற்பத்திக்கு பொருத்தமானதல்ல! சுமந்திரன்

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும். ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் 
காணப்படுகின்றது. 
இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னார் பொது
 அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னாரில்
 இடம் பெற்றது.
 மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வு தொடர்பான சட்ட ரீதியாக நடவடிக்கைகளை முன் னெடுக்கின்றமை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒன்றிணைத்து கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்
 ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதோடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழு,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,
 மன்னாரில் இன்றைய தினம் வியாழக்கிழமை(23) பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து விசேட சந்திப்பை மேற்கொண்டோம். மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட அமைப்புக்களை இவ்வாறு சந்தித்து 
மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து 
கலந்துரையாடினோம்.
 மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர் கொள்ளுகிறார்கள்.காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயல் திட்டம்.அதில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு திட்டத்தின் அடிப்படையில் 
காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மற்றைய இரு திட்டங்களும் உடனடியாக செயல் படுத்துவதற்கு நடவடிக்கை 
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து காற்றாலை அமைக்கின்றதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாக அனுபவிக்கின்றார்கள். குறிப்பாக மீன்பிடி சமூகம் இதன் விளைவாக வழமையாக 
அவர்கள் பிடிக்கும் மீன்களின் தொகைகளில் மாற்றம் காணப்பட்டு குறை கின்றமை மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைவதும் உள்ளடங்களாக பல்வேறு காரணிகளால் பிடிக்கப்படுகிற மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி 
அடைந்துள்ளது
குறிப்பாக கரைவலை மீன்பிடி சம்பந்தமான முறையில் பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதை வைத்தும்,வேறு பல விஷயங்களை வைத்தும் காற்றாலையினை மன்னார் தீவுடன் சேர்ந்து அமைப்பது மன்னார் தீவுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புலனாகின்றது. காற்றாலை மின்சாரம் அமைக்கலாம்.ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்திலே காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது இங்கு வாழும் அனைவரதும் நிலைப்பாடு.இவை சரியான முறையில் ஆராய்ந்து
 இச் செயல்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதனால் பல வித பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிய வருகிறது.
 எனவே இத்திட்டங்களை நிறுத்துவதற்கும்,ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் சில மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவ் 
விடையங்களை உடனடியாக கவனத்தில் எடுப்போம்.இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நீதிமன்றத்தை நாடியுள்ளது.
 இதனடிப்படையில் மன்னாரில் இருந்து மக்கள் சார்பாகவும் இவ்வாறான ஒரு செயல் திட்டத்தை அவர்களுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்வரும் வாரம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். மன்னாரில் உள்ள பல ஏக்கர் தனியார் காணிகளும் அபகரிக்கப்பட்டு அதனைச் சுற்றி வேலி அடைத்து பல செயல் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகிறது- என அவர் மேலும் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 22 மே, 2024

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 21 மே, 2024

முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு

கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜாக்கோப் ஸூமா. 
இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், நீதித்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஜாக்கோப் ஸூமாவிற்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவில் வரும் 29-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட 82 வயதான ஜாக்கோப் ஸூமா மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். 
ஆனால் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு சட்டப்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தென்ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஜாக்கோப் ஸூமா மேல்முறையீடு செய்தார். 
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே குற்றவியல் வழக்கில் ஜாக்கோப் ஸூமா சிறை தண்டனை பெற்றுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிட்டது.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 20 மே, 2024

நாட்டில் நானாட்டான் நகர பகுதிக்குள் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என போராட்டம்

நாட்டில் நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மது பானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து.20-05-2024. இன்றைய தினம்மத தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை
 முன்னெடுத்திருந்தனர்.  
நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள்,மகளிர் அமைப்புகள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை
 எழுப்பியவாறு ஊர்வலமாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க 
பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் காணப்படும் அதே நேரம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 
கள்ளுத்தவறணை காணப்படுவதாகவும் மென் மதுபான சாலையை உடனடியாக நிறுத்தும் படியும் அதே 
நேரம் நானாட்டான் 
ஒலி மடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை யை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  
மது பாவனையை ஊக்கப்படுத்துபவர் களே மக்களையும் மாணவர்களையும் வாழவைக்க உதவிடுங்கள், எமக்கு கிடைத்த சாபம் மதுக்கடை அதை இன்றே ஒழிப்போம், உழைப்பை பறிக்க வந்த சாத்தான் இந்த 
மதுபானமும் மதுக்கடையும்,குடி சிலரின் இன்பம் பலரின் துன்பம்,மது விற்று கிடைக்கும் காசு உனக்கே நீ தேடும் சாபம்,போன்ற 
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள்,இந்து ஆலய குருக்கள்,முருங்கன் விகாராதிபதி,முன்னால் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள்,மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
குறித்த போராட்டத்தின் இறுதியில் பாடசாலைக்கு அருகில் இயங்கி வரும் மென் மது பானசாலைக்கான அனுமதியை உடனடியாக 
நிறுத்த கோரியும் ஒலி மடு பகுதியில் இயங்கிவரும் கள்ளுத்தவறணையை இடம் மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கான
 மகஜர் நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு கனகம்பிகையிடம் கையளிக்கப்பட்டது .என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 19 மே, 2024

நாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி வெளியீடு

நாட்டில்பாராளுமன்றம் அடுத்த மாதம்  14 அல்லது 15ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்பட்டு, உருவாகும் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார். 
அவ்வாறு இல்லையென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறொரு கட்சியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க இடமுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவற்கான இணக்கப்பாடு ஜனாதிபதியுடன் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 18 மே, 2024

நாட்டில் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நாட்டில் தரமற்ற மருந்து கொள்வனவுஇறக்குமதி தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு 
செய்யப்பட்டுள்ளது. 
தொழில்முறை மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளது.  
2022-2023 ஆம் ஆண்டுக்கான மருந்து தேவை, 
கொள்முதல், வழங்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை குறித்த சிறப்பு தணிக்கை அறிக்கையை தேசிய தணிக்கை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டது. 
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் குறித்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய நிர்வாகக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
 எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கைகள் பரிந்துரை 
செய்திருந்தன.  
அதன்படி, உரிய பரிந்துரைகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்.18-05-2024. இன்று முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நிபுணரான டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். 
போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையின் தரவு அமைப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 17 மே, 2024

இலங்கையில் போதைப்பொருளுடன் கைதானஒன்பது பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை

போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2020 ஜனவரி 1 ஆம் திகதி அன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபர்கள் 614 கிலோ 36 கிராம் ஐஸ் மற்றும் 581 கிலோ 34 கிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் 
கைது செய்யப்பட்டனர்.
அந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த பொதிகளில் 900 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்துள்ளதாக 
தெரியவந்துள்ளது.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்ட போது, ​​குறித்த 
பாகிஸ்தானிய பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும் தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 16 மே, 2024

நாட்டில் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

நாட்டில் க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டினை பலரும் பாராட்டி
 வருகின்றனர்.
 கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை
 சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






புதன், 15 மே, 2024

கனரக ஹென்டர் வாகனம் அம்பாறையில் கடலுக்குள் விழுந்துள்ளது

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.  
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே.15-05-2024. இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் கண்காணிப்பில் பாரிய கற்கள்
 போடப்பட்டு வருகின்றன.  
இதன் தொடர்ச்சியாக கல் அணைகள் அமைத்து கற்களைப் போட்டு நிரப்பும் முதற்கட்ட நடவடிக்கைக்காக பாரிய கற்களை கொட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹென்டர் கனரக டிப்பர் வாகனம் வழமை போன்று கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில் குடை சாய்ந்து கவிழ்ந்தது.  
எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் பொதுமக்கள் ஏனைய கனரக ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளமை  என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 14 மே, 2024

ஆஸ்திரேலியாவில் பதின்நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. 
அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன 
வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு 
விளைவிக்கிறது. 
மேலும் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் மிகுதியான நேரத்தை வீணடிக்கின்றனர். எனவே ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட 
குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் 
ஒப்புதல் அவசியம். 
இதற்கான நடைமுறையை ஆராய ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச் தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 13 மே, 2024

நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்த தடை நால்வருக்கு விளக்கமறியல்

நாட்டில்போரில் கொல்லப்பட்டு 15 வருடங்களாகியும் நீதி கிடைக்காத தமது அன்புக்குரியவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை
 நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  
நேற்றிரவு (மே 12.05) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, செல்வ வினோத் சுஜானி மற்றும் நவரத்னராசா ஹரிஹரகுமார் ஆகிய நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு.13-05-2024. இன்று  மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது. 
கைது செய்யப்பட்ட பெண்களை பொலிஸ் சீருடையில் இருந்த ஆண்கள்  கொடூரமாக தரையில் இழுத்துச் செல்வதையும் உள்ளூர்வாசிகள் காணொளி பதிவு செய்துள்ளனர்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் நினைவாக திருகோணமலை, சம்பூர் சேனையூர் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்றைய தினம் காலை அப்பிரதேச மக்கள் கஞ்சி காய்ச்சுவதற்கு தயாராகினர்.  
அப்போது, வெள்ள முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல், மக்கள் ஒன்றுகூடல் மற்றும் உணவு பானங்கள் வழங்குவதற்கு 
தடைவிதித்து நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவை 
அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடுக்க முற்பட்ட போது, போரில் உயிரிழந்த தமது உறவினர்களை
 நினைவு கூருவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துவதாகக் கூறி அதனை 
மறுத்துள்ளனர்.
குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை 106 (1) பிரிவின் பிரகாரம் வழக்கு இலக்கம் A 12 211/24 வழக்கின் முறைப்பாட்டாளரான சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு
 மூதூர் நீதிமன்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுவதாக, மே 12 நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
அரசின் தடையால், நோய்க்கு மருந்தில்லாமல் பட்டினி கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றைய காலத்தில் உணவளித்ததை நினைவு கூர்ந்து, கனரக ஆயுதங்களால், பட்டினியால் 
$அல்லது நோயினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்படும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் நீதிமன்ற உத்தரவில் பின்வருமாறு 
விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  
"சம்பூர் பொலிஸ் பிரிவில் சட்ட ரீதியாக பிரயோசனமடைய கூடிய பொது இடங்களான பாடசாலை கோயில் போன்ற பொது 
இடங்களில் வெள்ளை முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை ஞாபகார்த்தமூட்டும் எண்ணத்துடன் அதற்காக செயல்படுத்தல் சட்டவிரோதமானது. 
 மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வகையில் மக்களை ஒன்று கூட்டுதல், வாகன ஊர்வலம் மற்றும் மக்களுக்கு தொற்று 
நோய்கள் ஏற்படும் என்பதால் இந்த கட்டளை 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில், மாவீரர் சங்கத் தலைவர், கந்தையா காண்டீபன், மாவீரர் சாங்க உப தலைவர், சாந்தலிங்கம் கோபிராசா, மாவீரர் சங்க
 பொருளாளர் நவரத்னராசா ஹரிஹரகுமார், மாவீரர் சங்க செயலாளர் செல்வ வினோத் சுஜானி, மாவீரர் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.