திங்கள், 2 செப்டம்பர், 2024

நாட்டில் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள வாக்காளர் அட்டைகள்

நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் 02-09-2024. இன்றுஅஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. 
 அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி வரை
 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்போது, சுமார் 8,000 பேரைக் கடமைகளில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. 
 குறித்த தினங்களில் வாக்களிக்கத் தவறுபவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.