புதன், 11 செப்டம்பர், 2024

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க வேண்டும்

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார்.
 அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக
 மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும்
 அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த 
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்
 தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்காக இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கியிருப்பதாகக் கூறுகிறீர்கள். அவ்வாறெனில் தமிழ்பேசும் மலையகத் தமிழர்களும், கிழக்கு மாகாண
 முஸ்லிம் மக்களும் தமிழர்கள் இல்லையா? அவர்களை 
ஏன் உங்களது தமிழ் பொதுவேட்பாளருக்கு
 வாக்களிக்குமாறு 
கோரவில்லை? என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு 
அளித்திருக்கும் பதிலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன், இதுபற்றி மேலும் 
கூறியிருப்பதாவது:
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக 
மக்கள் அவர் சார்பாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை 
அவர் மிகுந்த
 மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். தமிழர்கள் என்ற ரீதியில் மலையகத்தமிழர் ஒவ்வொருவரும் தமது மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை அவருக்கு அளிப்பதை அவர் கட்டாயமாக மனமுவந்து 
ஏற்றுக்கொள்வார்.
ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு, மலையக சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் வேறாகும். எனினும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்று சேரலாம். அதில் தவறில்லை. 
அது மட்டுமல்ல, 1977ஆம் ஆண்டளவில் மலையகத்திலே முடுக்கி விடப்பட்ட கலவரங்கள் காரணமாக அங்கிருந்து 
இடம்பெயர்ந்துவந்த 
பல மலையகத் தமிழர்கள் வன்னி மாவட்டத்தில் குடியேறியுள்ளார்கள். இப்போது அவர்கள் எமது மக்களாவர். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய உரிமைகள் அவர்களையும் சாரும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க
 முன்வர வேண்டும்.
வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம். இவ்வாறான ஒரு

 தமிழ் மொழி சார்ந்த ஈடுபாடு மலையகத்திலும், கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. நாம் யாவரும் தமிழ்த் தாயின் மக்களே என்ற உணர்வை இந்த ஈடுபாடும் நிலைப்பாடும் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் 30க்கும் மேற்பட்ட மலையக புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் போன்றோர் அரியநேத்திரனுடன் இணையவழியில் தொடர்புகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். தாம் யாவரும் ஒன்றுபட்ட தமிழினமாக தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாகவும், மலையகத்தில் அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். அத்துடன் பொதுவேட்பாளரை மலையகத்திற்கு மக்கள் சந்திப்புக்காக அழைத்துள்ளனர். பொதுவேட்பாளரும் அவர்களது கூட்டத்தில் பங்கேற்க இணங்கியுள்ளார்.

நான் தொடக்கத்தில் இவ்வாறு கோராததற்குக் காரணம் கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலர் வட, கிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கின்றார்கள். மற்றும் மலையகத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் நாம் எமது பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் எமது அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்துவதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

பெரும்பான்மை வேட்பாளர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் இப்பொழுது எமது மலையக சகோதர சகோதரிகளும், கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர 
சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. 
பொதுவேட்பாளர் கட்டாயமாக வட, கிழக்கு பிரமுகர்களை மலையக பிரச்சாரப்பணிகளுக்காக அனுப்பிவைப்பார் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.