ஞாயிறு, 8 டிசம்பர், 2024

இலங்கையர் கனடாவில் கைது செய்யப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையரான அஜந்தன் சுப்ரமணியம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது. 
குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 7 டிசம்பர், 2024

நாட்டில் மாசி சம்பலில் கலக்கப்பட்ட அதிகளவான அமிலம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

நாட்டில் மாசி சம்பலில் 230 மில்லிகிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் 
உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம்
 செலுத்துமாறு  06-12-2024..வெள்ளிக்கிழமைஅன்று உத்தரவிட்டு அவர்களுக்கு கடுமையாக எச்சிரிக்கை விடுவித்தார்.
 அக்கரைப்பற்று கடற்கரை வீதியிலுள்ள கடை ஒன்றை
 முற்றுகையிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அங்கு பிளாஸ்ரிக் கப் ஒன்றில் விற்பனைக்காக அடைத்து வைத்திருந்த 
மாசி சம்பலை கைப்பற்றி
 அதனை அரச உணவு பகுப்பாய்வு திணைக்களக்திற்கு 
அனுப்பியதையடுத்து அதில் அளவுக்கு அதிகமாக
 மனித பாவனைக்கு கேடுவிளைவிக்க கூடியளவு 230 மில்லிக்கிராம் பென்சோமிக் அமிலப் பதார்தம் கலந்துள்ளதாக பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்தது. 
 இதனையடுத்து குறித்த மாசி சம்பலை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் இதனை உற்பத்தி செய்து வழங்கிய கல்முனையைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக 1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுக் கட்டளைச் சட்டத்தின்பிரிவு 13(1) இன் கீழ் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு
 தாக்கல் செய்தனர்.
  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இந்த வழக்கு இன்று (06) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது
 இந்த இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை
 தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு எதிர்காலத்தில் இனிமேல் இது போன்ற குற்றங்கைளை மீளவும் செய்தால், உற்பத்தி 
உரிமம் இரத்துச் செய்யப்படும் என குற்றவாளிகளை நீதவான் கடுமையாக 
எச்சரித்து விடுவித்தார்.குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வெள்ளி, 6 டிசம்பர், 2024

சர்வதேச அமைப்புக்கள் இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
 ஜொஹனஸ்பர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP), அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிடம் ‘உலகளாவிய அதிகார வரையறை’ என்ற கோட்பாட்டின் கீழ் 60க்கும் மேற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவணங்களை சமர்பித்துள்ளது.
 மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளுக்கு 
அப்பாற்பட்டு, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிசார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆவணப்படுத்தி ஐக்கிய நடுபகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
 புலனாய்வு அதிகாரிகள், தமிழ் துணை இராணுவக் குழுக்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட அரச அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
 ”பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல், சித்திரவதை, பலவிதமான பாலியல் வன்செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் உள்நாட்டுப் போர்க் காலம் மற்றும் அதற்கு 
பிந்தைய காலங்களில் இழைக்கபப்ட்டன”. ITJPஇன் இந்த அறிக்கையில் இலங்கையின் ஆட்சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட வகையில் கணிசமான ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி ஆவணப்படுத்தியுள்ளது. 
“மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை குறைத்து மதிப்பிட்டு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு
 பொறுப்புக்கூறல் இடம்பெறுவதற்கு பின்னடைவை 
ஏற்படுத்தும் வகையில், தேவையற்ற வகையில் அளவுக்கு அதிகமான சட்ட வழிமுறைகளில் தலையீடுகளை உள்ளடக்கியிருந்துள்ளது” அவர்களின் சமீபத்திய சமர்ப்பிப்பில், இலங்கையின் ஆட்சி மற்றும் பொது நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியாக உட்பொதிக்கப்பட்ட கணிசமான ஊழல்கள் குறித்தும் கவனம் 
செலுத்தியுள்ளது.
 தமது ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர்கள் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தவர்கள், அவை 
போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட பாரிய சர்வதேச
 குற்றங்களாக கருதப்படலாம் என ITJP கூறுகிறது. அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல்கள் மற்றும் அரசின் பொது நிதி சூறையாடப்பட்டது ஆகியவை நாடு முழுவதிற்கும் மாபெரும் நிதியிழப்புகளை ஏற்படுத்தியது என்றும், அது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது எனவும் ITJP தெரிவித்துள்ளது.
 இலங்கையின் பாதுகாப்பு படையினர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சில பொதுமக்கள் ஆகியோர் மட்டுமின்றி, இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) பல முன்னாள் அதிகார்கள் மீதும் பாரிய மனித 
உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ITJP அவர்கள் மீது சர்வதேச பயணத்தடையும் விதிக்கப்பட வேண்டும் என 
வலியுறுத்தியுள்ளது.
 கடந்த 1980களில், இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்த பட்டியலில் பெயரிடப்படுள்ள இந்திய அமைதி காக்கும் படையின் அதிகாரிகள் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பரந்துபட்டளவில் அட்டூழியங்களை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 இந்திய அமைதி காக்கும் படைகள் கடந்த 1987-89ஆம் ஆண்டுவரை இலங்கையில் நிலை கொண்டிருந்தது. அந்த படைகளை இலங்கைக்கு அனுப்பியதே, இந்திய விடுதலையடைந்த பிறகு ஏற்பட்ட மிகப்பெரும் வெளியுறவு கொள்கை தோல்வியாக இன்றளவும் உள்ளது. 
அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி வலிந்து இந்த முன்னெடுப்பைச் செய்தார். இதற்கு தமிழ் மக்கள் முற்றும் எதிராக இருந்தாலும், இந்திய-இலங்கை
 உடன்பாடு என்ற பெயரிலான அமைதி உடன்படிக்கையை இந்தியா வலிந்து முன்னெடுத்து. அதில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக கைச்சாத்திட வைக்கப்பட்டனர்.
 'இன்றுவரை எந்தவொரு குற்றவியல் பொறுப்புக்கூறல்களும் 
ஏற்படுத்தப்படாத நிலையில், கடந்தகால மற்றும் தற்போது
 நடைபெறும்
 குற்றச்செயல்களை தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி, சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து, உண்மையைக் கண்டறிவதற்கு இயலுமான அனைத்து
 வழிமுறைகளையும் பயன்படுத்திக்கொள்வது மிக முக்கியமானதாகும். சிறிலங்காவில் போரின் முடிவின்போது போர்க்குற்றங்கள் புரிந்தார்கள் என்று 
குற்றச்சாட்டப்பட்டுள்ள இலங்கையர்கள்மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இந்த 
ஆண்டின் மனித உரிமைகள் தினத்தன்று (டிசம்பர் 10) தடைகளை மேற்கொள்ளும் என நாம் நம்புகின்றோம்" என்று ITJPஇன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் முன்னாள் த
ளபதியும், தற்போது கூட்டுப்படைகளின் பிரதானியுமாக இருக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது கடந்த 2021இல் ITJP தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரும் ஆவணம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது. அதே போன்று கடந்த 2022ஆம் ஆண்டு மற்றொரு தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீதும் பிரித்தானிய அரசுக்கு குற்றச்சாட்டு ஆவணங்களை அளித்திருந்தது. 
பிரித்தானிய அரசுக்கு அப்பாற்பட்டு அந்த ஆவணங்கள் கனடா, அவுஸ்திரேலிய அரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் மீது தடைகளை விதிக்குமாறு அந்த ஆவணத்தில் 
கோரப்பட்டிருந்தது.
 இதே போன்று கடந்த 2020இல் ஷவேந்திர சில்வா பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக அமெரிக்க அரசு தனது தமது சட்டமூலம் 7031c இன் கீழ் அவருக்கு தடை விதித்தது. அதேவேளை
 வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும்கூட, ஜகத் ஜயசூரியாவிற்கும் அமெரிக்க
 நுழைவனுமதி மறுக்கப்பட்டாகவும் நம்பப்படுகின்றது. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்காக அனைத்துலக நீதிஅதிகார 
வரயறையை ITJP பயன்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் மிக மோசமான இராணுவ முகாம் என்று அறியப்பட்ட ’ஜோசப் முகாமில்’ ஜயசூரிய கொண்டிருந்த வகிபாகம் தொடர்பில் இச்சட்டத்தினைப் பயன்படுத்தி பிறேசிலிலும் சிலி நாட்டிலும் அவருக்கு எதிராக 2017ஆம் ஆண்டு வழக்குகள ITJP தாக்கல் செய்தது. 
இதனைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவிலும் குற்றவியல் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் அவுஸ்ரேலிய மத்திய பொலிஸ் அதனை விசாரணை செய்யவில்லை. 2019ஆம் ஆண்டு
 சித்திரவதையால் பாதிக்கப்பட்டடோர் பாதுகாப்புச் சட்ட வழக்கொன்றும் குற்றவியல் வழக்கொன்றும் முன்னாள் ஜனாதிபதியும், போர்க் காலத்தில் அதிவல்லமை பொருந்திய பாதுகாப்புச் செயலராகவும் இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டது. அதே 
போன்று 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் குற்றச்சாட்டு ஒன்று அளிக்கப்பட்டது.
 மேலும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு எதிராக அனைத்துலக சட்ட அதிகார வரையறையின்கீழ் ஒரு நாட்டில் வழக்குத் தொடரப்பட்டு, அது இப்போது விசாரணையில் உள்ளது.
 இவை தவிர, சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து
 செயற்படும் தமிழ் துணை
 இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற வழக்குகளுடன் தொடர்புபட்ட இருவர் தொடர்பாக பிரித்தானிய மெற்ரோபொலிட்டன் பொலிஸாரிடம் பரிந்துரைக்கப்பட்டதுடன். 
இருவரையும் கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களிடமிருந்து மேலதிக தகவல்களையும் அண்மையில் கோரியுள்ளனர் குறிப்பிடத்தக்கது  என்பதாகும்.. இதில் ஒரு வழக்கு பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பானது என அறியப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும்.





 

வியாழன், 5 டிசம்பர், 2024

நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதில் அரசியல் செல்வாக்கு இருக்காது ஜனாதிபதி திட்டவட்டம்

அரசியல் சார்பு அடிப்படையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதில் அரசியல் செல்வாக்கு இருக்காது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

 இலங்கை முதலீட்டுச் சபையின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 அடுத்த வருடம் நாட்டில் 5 புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி முதலீட்டுச் சபை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

 நாட்டுக்கு நன்மை பயக்கும் சுத்தமான முதலீடுகளை கொண்டு வருவதற்கு இலங்கை முதலீட்டு சபைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

 நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான பாரிய பொறுப்பு முதலீட்டுச் சபைக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

 எனவே முதலீட்டுச் சபை தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும், முதலீட்டுச் சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, அடுத்த வருடம் நாட்டில் 5 புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 இதன்போது, ​​ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.என்பது  குறிப்பிடத்தக்கது.





 

புதன், 4 டிசம்பர், 2024

இலங்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் ஆபத்தில் நோயாளர்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் 
நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவிக்கின்றன.
 அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அவசரகால கொள்வனவுகளில் 40 சதவீதமானவை இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகளை உள்ளடக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
 பல மருத்துவமனை பணிப்பாளர்கள் மருந்து ஆய்வுக் கூட்டங்களில் சுகாதார தலைமை அதிகாரிகளுக்கு இந்த புள்ளிவிபரங்களை 
சுட்டிக்காட்டியுள்ளனர்.
 மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான மறுபதிவு மற்றும் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, தலைமை
 நிர்வாக அதிகாரி தன்னிச்சையாக விலைகளை 
ஒழுங்குபடுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 மருந்து உற்பத்தியை ஒரு தொழிலாகக் கொண்ட நாடுகளில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த தனி சுயாதீன நிறுவனமும், மருந்துகளின் தரத்தை ஒழுங்குபடுத்த பல தனி நிறுவனங்களும் உள்ளன.
 இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானவிடம் நாம் கேட்டபோது, ​​அவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
 இன்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மாபியாக்களின் தலைமையகமாக மாறியுள்ளதாகவும், அதன் நிர்வாகிகள் சொத்தை அபகரித்த கும்பலாக நடந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
 பெல்லானா மேலும் கூறுகையில், மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் பணம் வசூலித்தாலும், பணத்திற்கு ஏற்ற வகையில் சேவைகளை
 வழங்குவதில்லை என்றார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 3 டிசம்பர், 2024

சபையில் சிறிதரன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு

சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் விட்டது 
கவலைக்குரியது 
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
 இன்று நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் " நாங்களும் ஒரு ஆயுத 
விடுதலைப் போராட்டத்தின் ஊடாக எங்களுடைய உரிமைகள் தொடர்பான ஜனநாய ரீதியான போராட்டங்கள் ஆயுத முனை கொண்டு மழுங்கடிக்கப்பட்ட போது எங்களுடைய இளைஞர்கள் துப்பாக்கி தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
 ஜனாதிபதி ஆற்றிய உரையின் சாராம்சத்திலே தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு முயற்சி என்ற விடயம் பேசப்படாமல் போனது துரதிஷ்டவசமான விடயமாக பார்க்கின்றோம். இந்த நாட்டின் கடன் சுமைக்கான
 காரணம் சொந்த சகோதரர்கள் மீது நீங்கள் நடத்திய யுத்ததும் யுத்தம் காரணமாக வாங்கிய கடன்களும் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு
 கொண்டு சென்றுள்ளது.
 ஆனால் அதை மறக்கக்கூடிய வகையில் அல்லது அதை இல்லை என்று சொல்லுவது போல ஜனாதிபதியின் உரை அமைந்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. யுத்தத்தால் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்ட இனமான நாங்கள் இன்றும் விடுவிக்கப்படாத 
காணிகள், அகதி 
முகாம்கள் என தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு?
 ஆனால் அது ஒருவரை ஒருவர் அடக்குவதாக இருக்க கூடாது. உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும ஒரே 
சகோதரர்களாய் எப்படி வாழ முடியும். இது யோசிக்க
 வேண்டிய விடயம்.
 இந்த நாட்டிலே அடக்குபவர்களோ அடக்கப்படுபவர்களோ இல்லை என்ற செய்தி வர வேண்டும். இங்கு அடக்குபவர்களும் இருக்கக் கூடாது அடிமைப்படுத்தப்படுபவர்களும் இருக்கக் கூடாது”என தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது .




 

திங்கள், 2 டிசம்பர், 2024

இலங்கை பாராளுமன்றம் டிசம்பர் மூன்றாம் திகதி முதல் டிசம்பர் ஆறாம் திகதி வரை கூடவுள்ளது

இலங்கை பாராளுமன்றம் டிசம்பர் மூன்றாம் திகதி  முதல் டிசம்பர் ஆறாம் திகதி வரை கூடவுள்ளது.
இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறும்.குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை

நாட்டில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற 
உறுப்பினர் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரிடம் வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை. இன்று  ஆரம்பித்துள்ளனர்.
 வல்வெட்டித்துறையில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அவரது 70வது பிறந்த நாள் நிகழ்வு வெகு சிறப்பான முறையில் பொதுமக்களினால் கொண்டாடப்பட்டிருந்தது.
 இந்நிலையில் குறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் வல்வெட்டித்துறை
 பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 இதுதொடர்பில் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர்கள் பலர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது 

சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்

 நாட்டில்  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே
 இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
 இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை 
முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.




வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் உள்ளுராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில்உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
இதன்படி தேர்தல் ஆணைக்கு 27-11-2024.அன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. 
பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும்
 பூட்டி.27-11-2024.  இன்று புதன்கிழமை மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு
 வழங்கியுள்ளதாக
 புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இன்று மாலை அஞ்சலி செலுத்துவதற்கு 
தயாராகி இருக்கின்றன. மேலும் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில்.27-11-2024. புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி 
முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.







 

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடும் அரசாங்கம்

நாட்டில் கல்வி வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 
 இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர்,  கல்வியில் விரிவான சீர்திருத்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட 
வேண்டும் என்றார். 
 தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  முறையான கலந்துரையாடலின் பின்னர், 
ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  


 


 

திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடையில்லை அனுர அரசாங்கத்தின் முடிவிற்கு பெரும் வரவேற்பு

 

இலங்கையில் மாவீரர் தின வார நினைவுகூரல் நிகழ்வுகள் தற்பொழுது ஆரம்பமாகி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
 இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்த மாவீரர் தின நிகழ்வுகள் பற்றிய 
ஐய்யப்பாடுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அரசாங்கம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. அதாவது நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து அதற்கு இணங்க மாவீரர் தினத்தை கடைப்பிடிக்குமாறு பொது 
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால 
தெரிவித்துள்ளார்.
 போரின் போது உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது எனவும் நினைவுகூருவதற்கான உரிமை 
மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறும் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இலங்கையில் மாவீரர் தின நினைவேந்தல்களிற்கு கடந்த கால அரசாங்கங்களினால்  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் துயிலும் இல்லங்களுக்கு
 எதிராகவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களை பொலிஸார் நாடுவது வழமையாக நடந்து வரும் செயற்பாடாக இருந்தது. 
 அவ்வாறு இருந்தும் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு சிலரால் இந்த நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இது முற்றிலுமாக மாறி அரசாங்கம் தற்பொழுது 
வெட்டவெளிச்சமாக தடையில்லை என அறிவித்துள்ளமை அனுர அரசாங்கம் மீது தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை
 ஊட்டியிருக்கின்றது.
 அரசாங்கம் பொலிசாருக்கும் மாவீரர் தினம் தொடர்பில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதாவது மாவீரர் தின நிகழ்வுகளில் பொது மக்கள் பங்கேற்கும் பொழுது 
அவர்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அதே போல் பாதுகாப்பு படையினருக்கும் இந்த அறிவுறுத்தலை அரசாங்கம் விடுத்துள்ளது. அதே போல் 26 மற்றும் 27ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு முடிவு 
எடுக்கப்பட்டிருந்த 
நிலையில் மாவீரர் தினம் காரணமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக குறித்த 
அமர்வுகளை ஒத்திவைத்துள்ளமையும் என்பதாகும் .
 இவற்றை எல்லாம் நோக்கும் பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஒரு வித நம்பிக்கையை ஊட்டும் செயற்பாடாக அமைந்துள்ளது. 
 இந்த நிலையில் இலங்கையில் என் பி பி அரசாங்கத்தினால் மாற்றம் நிகழும் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய விடயமாக
 அமைந்துள்ளது.
 எதுஎவ்வாறாக இருந்தாலும் மாவீரர் தின நிகழ்வுகள் இலங்கையில் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கு தடை நீக்கத்தை செய்த என் பி பி அரசாங்கத்திற்கு இந்த இணையமும் நன்றிகளை தெரிவிக்கின்றன 
என்பது குறிப்பிடத்தக்கது 



ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் மாவீரர்கள் தினத்துக்கு தடை இல்லை தேசிய மக்கள் சக்தி அறிக்கை

தமிழ் மக்கள் உயிர்நீத்தவர்களுக்கான வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது.
அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும் என்று புதிய அரசின் கடற் றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்நீத்தவர்கள் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்கவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 தமிழ் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது.




சனி, 23 நவம்பர், 2024

யாழ் சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில்.23.11.2024. இன்று உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.
 கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது. 
எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி 
அஞ்சலிக்கப்பட்டது. 
இதன்போது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவீரர் பெற்றோரை கெளரவிக்கும் வகையில் உலருணவுப்பொதியும், மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
என்பது குறிப்பிடத்தக்கது
.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக. 21-11-2024.அன்று  
ஆரம்பமானது.
 மாவீரர் தினத்தின் இறுதி நாளான 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நேற்று மகாவீரர் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
 கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் நடைபெற்ற மவீரர் தின வைபவம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த 
மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, லெப்டினன் சங்கர் என்ற விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி, போரில் உயிரிழந்த முதலாவது விடுதலைப் புலி உறுப்பினராக மரணமடைந்ததையடுத்து, அவரது
 நினைவாக 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முல்லைத்தீவு நிட்டகைக்குளம் காட்டில் முதலாவது மகாவீரர் தின விழா கொண்டாடப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 21 நவம்பர், 2024

மீண்டும் எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபையில் 
தெரிவித்துள்ளார்.
 தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில்
 இடமில்லை.
 எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். “ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை 
கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என 
உறுதியளிக்கிறேன்” அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “வினைத்திறன் மிக்க அரச சேவை, மக்களின் நலனுக்காகச் செயற்படும் பொதுச் சேவை, இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக அரச ஊழியர்களிடமிருந்தே எமக்கு பலமான ஆணை 
வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். 
அதில் கவனம் செலுத்தியுள்ளோம்” இனம், மதம், மொழியின் அடிப்படையில் யாரும் தனிமைப்படுத்தப்படக்கூடாது ஒவ்வொரு 
பிரஜையும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி 
தெரிவித்தார். “அரசியல் மாற்றங்கள் இருக்கலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. 
எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை 
நாங்கள் உருவாக்குவோம் என்பதை உறுதியளிக்கிறோம்.”
 கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்கு
 தீர்வு “சட்டம் அமுல்படுத்தப்படுவதை 
மக்கள் உணர 
வேண்டும். சட்டத்தின் மீது மக்கள் வைத்திருந்த
 நம்பிக்கையை உடைத்தெறிவதே சமீப காலமாக நாட்டில் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கு மீது பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இதற்குப் பிறகு யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. 
அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.” கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட 
வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “நான் உங்களுக்கு 
உத்தரவாதம் தருகிறேன். 
சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை” சர்வதேச நாணய நிதியத்துடனான
 ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
 சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்லும் பயணத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார். “பொருளாதாரம் மிகவும் நுணுக்கமாக வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் எல்லா பக்கங்களிலும் இருந்து சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு
 நாம் வந்துள்ளோம். 
இந்த பொருளாதாரம் தவறு செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே ஒவ்வொரு நுட்பமான இடத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” புதிய பொருளாதார மூலோபாயத்தில் பிரவேசிக்கப்பட வேண்டும் என்றும் அது மூன்று பகுதிகளைக் கொண்டது என்றும் ஜனாதிபதி
 தெரிவித்தார்.
 “முதலாவதாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் அவசியம். அப்படியானால் அந்த பொருளாதாரத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே அந்த பொருளாதாரத்தின் அடுத்த பண்பு.மக்கள் ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு செயல்முறையிலும் மக்கள் தங்கள் திறனைப் பொறுத்து
 பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக 
இருக்க வேண்டும். 
மூன்றாவது குணாதிசயம் என்னவென்றால், நாம் எவ்வளவுதான் தேசியச் செல்வத்தை உருவாக்கினாலும், அந்தச் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தால், அது அரசை நிலைப்படுத்தாது.பொருளாதார 
பலன்கள் நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க
 வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.” எரிசக்தி சந்தை எரிசக்தி சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என
 ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இது மிகவும் உணர்ச்சிகரமான 
இடம் என்றும், நிதிச் சந்தையும் அத்தகைய முக்கியமான இடம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 இதன்படி, அரச பங்காக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிதறிய சந்தைக்குப் பதிலாக சந்தை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
 அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி 10 ஆவது 
பாராளுமன்ற அமர்வின் போது தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் 3,000 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 20 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு

நாட்டில் கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப்பாடசாலை மண்டபத்தில்.20-11-2024. இன்று  பிற்பகல் 
நடைபெற்றது. 
 பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.
 பெரிய பரந்தன் வட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

செவ்வாய், 19 நவம்பர், 2024

நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

 

நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்.19-11-2024. இன்று  நடைபெறவுள்ளது. 
 அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 
 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. 
 இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர். 
 எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 18 நவம்பர், 2024

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் தயார்நிலையில்

 பத்தாவது  பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் சாளரம் ஏற்படுத்தப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர 
தெரிவித்துள்ளார். 
 இந்த சாளரம் இன்றும் (19.11) நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் திறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அங்கு அனைத்து எம்.பி.க்களுக்கும் பயனுள்ள தகவல் ஆவணங்கள் வழங்கப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் மேற்கொள்ளப்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 17 நவம்பர், 2024

நாட்டின் தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் அனுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறிதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலுல் இல்லங்களிலிருந்து வெளியேறி மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த 
வேண்டும் என யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற 
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் 
தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு 
வாக்களித்துள்ளார்கள். 
இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும், எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்தவர்களை புதைத்த
 இடகக்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை 
காண்பிக்க வேண்டும்.
உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்க்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 16 நவம்பர், 2024

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி

 

நாட்டின்  பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி 7அவர்கள் 
நவம்பர் 21, 2024 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். 
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை 
வெளியிட்டது. 
அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார். 
 இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.  என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.