திங்கள், 31 அக்டோபர், 2022

நாட்டில் இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் வெளியாகவுள்ள அறிக்கை

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணும் விடயத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனது விசாரணைகளை இறுதி செய்யவுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை 
ஆரம்பித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிறந்த திகதி, பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் 
தெரிவித்தார்.
இது தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றம் ஏற்கனவே குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்தநிலையில் இன்று திங்கட்கிழமை இலங்கை திரும்பியுள்ளார்.
இந்தநிலையில் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆவணத்தில் கையொப்பமிட்ட பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என பேச்சாளர் 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நீதிபதி இளஞ்செழியன் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக தெரிவு

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
கடந்த 26 ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
நீதித்துறையில் கடந்த 25 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியன் பணியாற்றி வருகின்ற நிலையில் மேல் நீதிமன்ற நிதிபதியாக வடக்கு - கிழக்கின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
திருகோணமலையில் ஏழரை வருடங்கள், கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள், யாழ்ப்பாணத்தில் மூன்றரை ஆண்டுகள், வவுனியா ஓராண்டு, மட்டக்களப்பு சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றில் ஓராண்டு என மொத்த 12 ஆண்டுகள் மேல் நீதிமன்றில் கடமையாற்றுகிறார் என்பது 
குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 29 அக்டோபர், 2022

யாழ்பணத்திற்கு பிரான்ஸில் இருந்து .வந்த இளைஞனின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!!!

யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இவர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த இளைஞன் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் அச்சுவேலி பொலிஸாரால், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு 
கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வலைவீசி வந்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 28 அக்டோபர், 2022

உலகின் மிகப் பெரிய கப்பலான சீன கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட 10-அடுக்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய Ro-Ro passenger vessel கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என நம்புவதாக இலங்கைக்கான சீன தூதரகம்
 தெரிவித்துள்ளது.
10 மாடிகள், 13 அடுக்குகள் மற்றும் 70,000 டன் எடை கொண்ட இந்த சொகுசுக் கப்பலில் 2,500 பேர் பயணிக்க முடியும்.
“இந்த 10 மாடிகள், 13 தளங்கள் மற்றும் 70,000 தொன்கள் கொண்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு பயணிகள் கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என்று நம்புகிறேன்” என்று இலங்கைக்கான 
சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 27 அக்டோபர், 2022

நாட்டிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் பிரச்சினைக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பல சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க
 குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்றத்தில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று உள்ளது. அதில் 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் குறித்த தாய்மார் வெளிநாடு செல்லலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது இது குழந்தைகளுக்கு 
எதிரான பாரிய குற்றமாகும்.
இந்நிலையில் 5 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்களை மட்டும் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்கள் என்று கூற வெட்கப்படுகிறோம். குடும்ப உறுப்பினர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். சில நேரங்களில் தந்தையாலும் இவ்வாறான சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தாய்மார்களை பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 26 அக்டோபர், 2022

நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை
 ஏற்படுத்தியிருந்தது.
மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் பின்னர் இருத்தரப்புக்கு இடையில் க
டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள சவுத் பீச் வாண்டர்பில்ட்டில் நடைபெற்ற “மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க்” போட்டியின் இந்த மோதல் 
இடம்பெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளரின் முன்னாள் காதலனுக்கும் சமகால காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் 
மோதலாக மாறியுள்ளது.
இதன் காரணமாக நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் வரவேற்பு பகுதி பலத்த சேதமடைந்தது. நியூயோர்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவு மற்றும் குயின்ஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் எந்தவொரு நிகழ்வினையும் இலங்கையர்கள் நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் என கும்பலாக இடம்பெற்ற மோதல் காரணமாக 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மண்டபத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அங்கிருந்து அகற்றியுள்ள நிலையில், சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 25 அக்டோபர், 2022

லண்டனில் மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய சமூக ஆர்வலர்கள்

இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான  மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை
 நோக்கி ஒரு 
பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், 
திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அவர்கள் இருவரும் தாங்கள் 
வைத்திருந்த சாக்லேட்
கேக்கை மன்னர் மெழுகு சிலையின் மீது பூசினார்கள். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைதாகியுள்ளனர்.
அதாவது, எண்ணெய், எரிவாயுவிற்கான புது உரிமங்கள் அனைத்தையும் ரத்தாக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. கைதானவர்கள் பருவகால செயல்பாட்டாளர்கள் என்றும் தங்களின் கோரிக்கைக்கு தகுந்த
 நடவடிக்கை
 மேற்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் நடக்கும் என்று அவர்கள் எச்சரித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 24 அக்டோபர், 2022

நாட்டில் கால் பதிக்கும் இந்தியா மற்றும் இஸ்ரேல்

இந்தியாவும் இஸ்ரேலும் இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் விவசாய மையங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு இந்த நடவடிக்கையை
 ஆரம்பித்துள்ளது.
இதன்படி, அறிவு மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியை 
வழங்கவுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு நிதியுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழங்கள், உருளைக்கிழங்கு, நெல் அல்லாத தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பயிர்களை வளர்ப்பதற்காக ஹொரணை, சீதா-எலிய, மஹில்லுப்பல்லம, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் கன்னோருவ ஆகிய ஐந்து இடங்களை விவசாய அமைச்சு அடையாளம் 
கண்டுள்ளது.
இதனை தவிர, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கும் திட்டமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேவை சார்ந்த இலக்குகள், பங்குதாரர்கள், பொறுப்புகள் மற்றும் மையங்களை நிறுவுவதற்கான காலக்கெடு 
ஆகியவற்றைக் கண்டறிவதற்காக, புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துடன் நேரடி உரையாடலை ஆரம்பிக்குமாறு, இலங்கையின் விவசாய அமைச்சு, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முன்னோடி திட்டம் தொடர்பாக இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் பரஸ்பரம் தொடர்பு கொண்டுள்ளனர்.
( இலங்கை இந்தியா மற்றும் இஸ்ரேல் செய்திகள்) 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






ஞாயிறு, 23 அக்டோபர், 2022

இந்த வருட தீபாவளி கொண்டாட்டம்: வெறிச்சோடி காணப்படும் யாழ் நகரம்

நாட்டில் (24-10-2022) நாளைய தினம்  தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள்  மக்கள் கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே 
காணப்படுகின்றது.
புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு களைகட்டவில்லை.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 22 அக்டோபர், 2022

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறையில் இரவுவேளை இடம்பெற்ற கோர சம்பவம்

யாழ் மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது.யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் 
தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்து 21-10-2022) அன்றய தினம் இரவு குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்த போது இடம்பெற்றுள்ளது.குறித்த வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று 
சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்
சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீயணைத்த போதும் வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று 
தெரிவிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 21 அக்டோபர், 2022

நாட்டில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பெரும்பான்மையால் நிறைவேற்றம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில்
 நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இரண்டாம் வாசிப்பின் போது 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் 
அளிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.
இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்றாம் வாசிப்பின்பின் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இது தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 20 அக்டோபர், 2022

சுவிஸ்லாந்தில்லிருந்து அத்தானை நம்பி யாழ் வந்த குடும்பப் பெண் நடுத்தெருவில்

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனக்கு சீதனமாக தந்த காணியை விற்று அந்தப் பணத்தை இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் வைப்பிலிடுவதற்காக சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ் வலிகாமத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் 
முயன்றுள்ளார்.
அதற்காக தனது அக்கா மற்றும் அக்காவின் கணவருக்கு காணி விற்பதற்கான அற்றோனிக்பவரை சுவிஸ்லாந்திலிருந்து அனுப்பியதாகத்
 தெரியவருகின்றது.
கடந்த மாதம் அக்காவும் அத்தானும் காணியும் விற்று காசும் பெற்றுவிட்டார்கள் என்பதை அறிந்த சுவிஸ் குடும்பப் பெண் தனது அக்காவை தொடர்பு கொண்டுள்ளார்
இதன்போது காணி விற்ற பணம் அத்தானின் வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் சுவிஸ்லாந்திலிருந்து இலங்கை வந்து வங்கிக் கணக்கு ஆரம்பித்த பின்னரே உனது கணக்கில் வைப்பிலிடமுடியும். நீ வந்தால் மாத்திரமே கணக்கு ஆரம்பிக்கலாம் எனவும் அக்கா கூறியுள்ளார்.
இதனையடுத்து சுவிஸ் பெண்ணும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகளும் கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள்.
இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் வந்த போது அக்காவின் கணவர் வேலைவாய்ப்புக்காக மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக அக்கா தெரிவிக்க தங்கை கடும் அதிர்ச்சியுற்றார்.
இதனையடுத்து தனது பணத்தை தனது வங்கிக் கணக்கில் போடுமாறு அறிவுறுத்திய போது அது அத்தானின் கணக்கில்
 மட்டுமே உள்ளது.
அவர் அடுத்த வருடம் வந்துவிடுவார் அதன் பின்னர் அந்தப் பணத்தை உனது வங்கியில் வைப்பிலிடலாம் என அக்கா கூறியதால் தங்கை கடும் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார்,
இந்நிலையில் இலங்கையிலேயே நின்று பணத்தை பெற்ற பின் சுவிஸ் வருமாறு கூறி கணவர் தனது பிள்ளைகளுடன் சுவிஸ் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை அக்காவின் கணவர் மலேசியா செல்லவில்லை எனவும் அவர் முல்லைத்தீவு விசுவமடுவில் அவரது தங்கையின் காணியில் தங்கியுள்ளதாகவும் அக்காவுடன் தங்கியுள்ள தாயார் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கை பொலிசாரின் உதவியை நாடியுள்ளதாகத் கூறப்படுகின்றது.
வங்கியின் வட்டிக்கு ஆசைப்பட்டு அத்தான் சில மாதகாலம் தனது கணக்கில் குறித்த தொகையை வைப்பிலிட்டதாகவும் அதற்கிடையில் தங்கை வந்ததால் அந்த வட்டிப் பணம் கிடைக்காது என எண்ணி காலம்வரும் வரை அத்தான் தலைமறைவாக இருக்கலாம் எனவும் அத்தானின் உறவுகள் கூறியதாக பாதிக்கப்பட்ட தங்கை பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை புலம் பெயர் தேசத்தில் கொட்டும் பனியிலும் நித்திரையின்றியும் எம்மவர்கள் கஸ்ரப்பட்டு வேலை செய்து உழைத்து
கொண்டிக்க , ஊரிலிருந்து இப்படியான சில்லறைத்தனங்கள் செய்து ஏமாற்றிவரும் உறவினர்கள், உடன்பிறப்புக்கள் நம்பி ஏமாறும் உறவுகளின் கண்ணீர் தொடர்கதையாகவே உள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 19 அக்டோபர், 2022

உடன் முந்துங்கள் யாழ் இளைஞன் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில்லா பிரச்சினைகளை விட அதிகமாக காணப்படுகின்றது.21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலையற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் 
தெரிவிக்கின்றன.
யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் தேசிய மட்டத்தில் 4.5 வீதமாக காணப்பட்டது.எனினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 18 அக்டோபர், 2022

யாழ் உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி

தீபாவளி தினத்தை முன்னிட்டு உரும்பிராயின் 13 சனசமூக நிலையங்கள் எதிரவரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நேரடியாக களமிறங்குகின்றன.
வடக்கில் யாரும் கண்டிராத பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் வினோத விளையாட்டுகள் என்பன மிகவும் கோலகலமாக நடை
பெறவுள்ளது.
முதல் வெற்றி பெறும் அனைத்து வீரர்களுக்கும் முதல் பரிசுத் தொகை 5000 ரூபாய் மற்றும் 2ஆம் 3ஆம் பரிசில்களாக பெறுமதி வாய்ந்த பொருட்களும் வழங்கப்படும் .
இந்த விளையாட்டு நிகழ்வுகளை எந்த ஒரு நாட்டில் இருந்தும் துல்லியமாக ஒலி ஒளி நாயத்துடன் நேரடியாக 
பார்வையிடலாம்.
20ஆம் திகதிக்கு முன்னர் தவறவிடப்பட்ட உரும்பிராய் சனசமூக நிலையங்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

0776013616
0779282953
0774297551

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 17 அக்டோபர், 2022

யாழ் இணுவில் பத்திரகாளி ஆலய வைரவர் காவலுக்கு மாமிச மடை உற்சவம்16.10.22

யாழ். இணுவில் பத்திரகாளி ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவர் காவலுக்கு மாமிச மடை உற்சவம் 16-10-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று  பத்திரகாளி வீற்றிருக்கும் சிறு ஆலயம் சிவகாமி அம்மன் மேற்கு வீதியில் மிக விமர்சையாக இடம்பெற்றன.
இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு மரவெள்ளி விளைச்சல்
மற்றும் கோயிற் திருவிழா, சூரன் போர், மானம்பூ என்பன இடம்பெறுகின்ற திருநாளினை நினைகூறுகின்ற முகமாக இவ் உற்சவம் 
காணப்படுகின்றது.
நம் மண்ணின் மூதாதையராகளால் பரம்பரை பரம்பரையாக வழங்கி வரும் நிகழ்வுகளில் ஒன்றாக மாமிச மடை 
காணப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 16 அக்டோபர், 2022

மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையர் 5 பேரை சிறைப்பிடித்த இந்திய கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று(16) காலை கைது செய்ததுடன் , அவர்கள் மீன் பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், அண்டனி ஹேமா நிஷாந்தன் , ஆகியோரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை 
தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.
கைதானவர்கள் தூதுக்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டு கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக
 கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 15 அக்டோபர், 2022

இலங்கையில் வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

நாட்டில் குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக 
தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு 
கோரப்பட்டுள்ளது.
70 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு வாகனமொன்று 25 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாணந்துறை பொலிஸார் மாறுவேடத்தில் சென்று செய்த விசாரணைகளில் இந்த மோசடி குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த வாகனம் விற்பனை செய்யப்படவிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரியளவில் வாகனங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவர் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆடம்பர வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், இவ்வாறான மோசடிகளில் சிக்கி விடக்கூடாது எனவும் பொலிஸார் 
பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 
வெளியிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 13 அக்டோபர், 2022

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து தங்க நகை அணிந்து வருவோருக்கு முக்கிய செய்தி.

இலங்கைக்கு தங்க நகைகளுடன் வெளிநாடுகளில் இருந்து  வருவோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.மீறினால் சட்ட நடவடிக்கைஇந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடத்தல் நோக்கத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகிறது. இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.எவ்வாறாயினும், இதனால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 12 அக்டோபர், 2022

நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவித்தல்

சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழிலுக்காக செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலா விசாவில் அங்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கும் மோசடியாளர்கள் தொடர்பாக தகவல்களை அறிந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அந்த பணியகம்
 அறிவித்துள்ளது.
மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி பல நபர்கள்,தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்போரிடம் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் சுற்றுலா விசாவில் தொழிலுக்காக மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற முடியாது
சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு சென்ற பின்னர், அங்கு எந்த வகையிலும் சுற்றுலா விசாவில் சென்றவர்களுக்கு அதனை தொழில் விசாவாக மாற்ற முடியாது.இப்படியான மோசடிகள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலை
வாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் 0112864241 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 0112864118 தொலைநகல் இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும்.அத்துடன் mgr_invest@slbfe.lk என்ற மின்னஞ்சலுக்கும் தகவல்களை அனுப்பி வைக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.