ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 செப்டம்பர், 2026

இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மிணி கார கொழுக்கட்டை

இன்று விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடும்

 வகையில், கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள். அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொழுக்கட்டை மாவு / பச்சரிசி மாவு – 1 கப்

உப்பு– ½ டீஸ்பூன்

நெய் – 1–2 டீஸ்பூன்

சுடுநீர் – தேவையான அளவு அரைக்க

பச்சை மிளகாய் – 3

தேங்காய் – ½ கப்

கறிவேப்பிலை – 1 கொத்து

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 1–2

பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – ¼ டீஸ்பூன்

வேக வைத்த கொழுக்கட்டை – தேவையான அளவு

அரைத்த தேங்காய் விழுது – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு மற்றும் நெய் சேர்த்து, சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.

இதற்கிடையில், மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த கொழுக்கட்டையைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாக கிளறுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்மிணி கொழுக்கட்டை தயார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

நாம் பதின் நான்கு நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

முட்டை  மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத் 
தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற
 கொழுப்பு கிடைக்கிறது 
முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.
இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
 பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை
 தொடர்ந்து பார்க்கலாம்.
மூளைக்கு நல்லது: முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
கொலஸ்ட்ரால்: முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.
கண்களுக்கு நல்லது: மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
முடி, சருமம், நகங்களுக்கு: முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு 
உதவுகின்றன.
முக்கிய ஊட்டச்சத்துக்கள்: முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல 
சத்துக்கள் உள்ளன.
பசியைக் கட்டுப்படுத்தும்: காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.
முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

அமெரிக்காவின் அங்கீகரிக்கப் படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தற்போது அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ‘ரெடாட்ருடைடு’ (Retatrutide) என்ற புதிய எடைக் குறைப்பு ஊசி மருந்து, இதுவரை உலகின் எந்தவொரு நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தாலும் மனிதப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை.
தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தின் போலியான வடிவங்கள் ‘Reta’ என்ற பெயரில் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த அங்கீகரிக்கப்படாத ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கண்காணிப்பு இன்றி இத்தகைய ஊசிகளைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஊசிகளைப் பயன்படுத்திய சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரித்தானிய சுகாதாரத்துறை உரிமம் இன்றி விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ‘ரெடாட்ருடைடு’ ஊசிகளைக் கைப்பற்றியதுடன், சட்டவிரோத உற்பத்தி மையங்களையும் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ரெடாட்ருடைடு மருந்து முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்து, அமெரிக்காவின் FDA மற்றும் பிரித்தானியாவின் MHRA ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்று சந்தைக்கு வருவதற்கு 2027 முதல் 2028ஆம் ஆண்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத எடைக் குறைப்பு ஊசிகளை இணையம் அல்லது கள்ளச்சந்தை ஊடாக வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 4 செப்டம்பர், 2026

வாட்ஸ்அப் இந்தியாவில் கட்டணச் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது

அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் வியாழக்கிழமை இந்தியாவில் ஒரு கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் வீட்டு உபயோக மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை இந்த மெசேஜிங் செயலிக்குள்ளேயே செலுத்த அனுமதிக்கிறது.
இந்தச் சேவை, முன்னர் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் என்று அழைக்கப்பட்ட பாரத் கனெக்ட் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களை 30 பிரிவுகளில் உள்ள 22,722 கட்டணதாரர்களுடன் இணைக்கிறது. இவற்றில் மின்சாரம், 
எரிவாயு, தண்ணீர், ஃபாஸ்டேக், காப்பீடு, கிரெடிட் கார்டு நிலுவைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்கள் ஆகியவை அடங்கும். கட்டணங்களை யுபிஐ மூலமாகவோ அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ
 செலுத்தலாம்.
முகப்புத் திரையின் மேலே உள்ள ரூபாய் ஐகான் வழியாக இதை அணுகலாம். அங்கு பயனர்கள் ஒரு பிரிவையும் கட்டணதாரரையும் தேர்ந்தெடுத்து, தங்கள் கணக்கு விவரங்களை உள்ளிடுவார்கள். பணம் 
செலுத்துவதற்கு முன், நிலுவையில் உள்ள தொகை உறுதிப்படுத்தலுக்காகக் காட்டப்படும். முன்னர் பணம் செலுத்தப்பட்ட கட்டணதாரர்கள், கட்டண முகப்புத் திரையில் பட்டியலிடப்பட்டுள்ளனர். மேலும், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனப் பல கணக்குகளை ஒரே கட்டணதாரரின் 
கீழ் வைத்திருக்க முடியும்.
மெட்டா (இந்தியா) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், இந்தியத் தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், வணிக நிறுவனங்களுடன் பேசவும், குடிமக்கள் 
சேவைகளைப் பெறவும், மெட்ரோ டிக்கெட்டுகள் முதல் காப்பீடு வரை அனைத்தையும் செயலியை விட்டு வெளியேறாமலேயே வாங்கவும் வாட்ஸ்அப் ஏற்கனவே மிக எளிமையான வழியாக
 உள்ளது” என்றார்.
மேலும் அவர், “வாட்ஸ்அப்பில் ஒரு கட்டணத்தைச் செலுத்துவதை, ஒரு செய்தியை அனுப்புவது போல சிரமமற்றதாக மாற்றவும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வசதியைக் கொண்டு சேர்க்கவும் நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.
இந்த அறிமுகம் படிப்படியாக நடைபெறும் என்றும், அடுத்த சில வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களைச் சென்றடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
85 கோடிக்கும் அதிகமான பயனர்களுடன், இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. வாட்ஸ்அப் பே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ. 5,412.58 கோடி மதிப்புள்ள 74.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் 
ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் ரூ. 12,957 கோடி மதிப்புள்ள 167 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், யுபிஐ செயலிகளில் இது பதினொன்றாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 3 செப்டம்பர், 2026

இதய நோய் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் அபாயம்

இதய நோய்  இன்றைய வேகமான நகர்ப்புற வாழ்க்கைமுறை, இளம் தலைமுறையின் உடல்நலத்தில் கணிசமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குள் உள்ள வேலைக்குச் செல்வோர்களிடையே இதயநோய் அதிகரித்து வருவது கவலைக்குள்ளாக்கியுள்ளது. முன்பு 
வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என கருதப்பட்ட இதய பிரச்னைகள், இப்போது இளம் வயதினரிடமும் அமைதியாக வளர்ந்து. 
        வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றும் பலர், திடீர் 
இதயக்கோளாறுகள் அல்லது இதயநிறுத்தம் (sudden cardiac arrest) போன்ற கடுமையான நிலைகளுக்கு ஆளாகும்போதுதான் அவர்களுக்குள் இதயநோய் இருந்ததற்கான அபாயங்கள் வெளிப்படுகின்றன.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நகர்ப்புற வாழ்க்கையின் அழுத்தங்களாகும். நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து
 வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, குறைந்த தூக்கம் மற்றும் 
அதிகமான மனஅழுத்தம் ஆகியவை இதயநோய்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக ஐடி மற்றும் கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் 
இளைஞர்கள் அதிக நேரத்தை கணினி முன் செலவிடுவதால், உடல் இயக்கம் குறைகிறது. இதன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, 
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் 
உருவாகின்றன.
சமீபத்திய சுகாதார தரவுகள் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் ஏற்படும் இதய நோய் தாக்குதல்களில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவை 40 வயதிற்குக் குறைந்தவர்களிடமே நிகழ்கின்றன. மேலும், 50 வயதிற்குக் குறைந்தவர்களில் 15 முதல் 20 சதவீதம் வரை திடீர் இதயநிறுத்தங்கள் பதிவாகின்றன
 என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இளம் தலைமுறையின் உடல்நிலையில் ஒரு பெரிய எச்சரிக்கை மணி எனக் கருதப்படுகிறது. இளம் வயதில் இதயநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் புகைப்பிடித்தல், மதுபானம் அதிகமாக அருந்துதல், மனஅழுத்தம், மரபியல் காரணிகள் மற்றும் உடல்நல பராமரிப்பில் அலட்சியம் ஆகியவை அடங்கும்.
இந்த அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியமாகிறது. இதற்காக மருத்துவத் துறையில் பல மேம்பட்ட பரிசோதனைகள் தற்போது அறிமுகமாகியுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று CT Coronary Angiography (CTCA) ஆகும். இது அறுவைசிகிச்சை 
தேவையில்லாத
 ஒரு நவீன இமேஜிங் பரிசோதனை. இதன் மூலம் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, பிளாக் சேர்க்கை மற்றும் கரோனரி 
ஆர்டரி நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். பாரம்பரிய கத்தீட்டர் ஏஞ்சியோகிராஃபியுடன் ஒப்பிடும்போது, இந்த CTCA பரிசோதனை வேகமானது, குறைந்த அபாயமுடையது மற்றும் நோயாளிகளுக்கு 
எளிதானது.
மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களில் இந்த பரிசோதனையின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. 
கால்சியம் ஸ்கோரிங் CT ஸ்கேன்களில் 85 சதவீதம் உயர்வு, மேம்பட்ட
 இதய இமேஜிங் 
பரிசோதனைகளில் 36 சதவீதம் வளர்ச்சி மற்றும் 2025 ஆம் ஆண்டில் CT Coronary Angiography பரிசோதனைகளில் 30.6 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை இந்த மாற்றத்தை தெளிவாக காட்டுகின்றன. இது மக்கள்
 முன்கூட்டியே 
தங்களது உடல்நிலையை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான சான்றாகும். இது, மக்களிடையே தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுவருவதை 
காண்பிக்கிறது.
அதுபோன்று,45 வயதிற்குக் குறைந்தவர்களை ஆய்வு செய்த ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வு மேலும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்துகிறது. அந்த ஆய்வின் படி, 27.7 சதவீதம் பேருக்கு
 அறிகுறிகள் தெரியாத அத்தெரோஸ்க்ளிரோசிஸ் (atherosclerosis) இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் 8.2 சதவீதம் பேருக்கு கரோனரி ஆர்டரி நோய் இருப்பதும் தெரியவந்தது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 
கால்சியம் ஸ்கோர் பூஜ்யமாக இருந்த சிலரிடமும் கூட அதிக அபாயம் கொண்ட பிளாக்கள் கண்டறியப்பட்டன. இது வெளிப்படையாக ஆரோக்கியமாக இருந்தாலும், உடலின் உள்ளே அமைதியாக நோய் வளர்ந்து கொண்டிருக்கலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்த சூழலில், இளம் வயதில் வேலைக்குச் செல்வோர் தங்களது உடல்நலத்தை மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்வது, சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது, போதுமான அளவு தூக்கம் உறுதி செய்வது மற்றும் மனஅழுத்தத்தை 
குறைக்கும் வழிமுறைகளை கடைபிடிப்பது ஆகியவை இதயநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் மற்றும் மனநலத்தை
 மேம்படுத்த உதவுகின்றன.
அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பரிசோதனைகளை காலம்தோறும் மேற்கொள்வதும் மிக முக்கியமானது. குறிப்பாக குடும்பத்தில் இதயநோய் வரலாறு உள்ளவர்கள், சர்க்கரைநோய் அல்லது 
உயர் ரத்த அழுத்தம் 
கொண்டவர்கள் மற்றும் அதிகமான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் தவறாமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். தேவையான இடங்களில் CTCA போன்ற நவீன பரிசோதனைகள் மூலம் இதய ஆரோக்கியத்தை முன்கூட்டியே மதிப்பீடு செய்வது, பெரிய பிரச்னைகளைத் 
தவிர்க்க உதவும்.
முடிவாக, இதயநோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல; அது இளம் தலைமுறையையும் தாக்கக்கூடிய அமைதியான அபாயமாக மாறியுள்ளது. அதனால், “எனக்கு எதுவும் ஆகாது” என்ற எண்ணத்தை விட்டு, விழிப்புணர்வுடன் வாழ்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான
 வாழ்க்கை முறை
, முறையான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் இதயநோய்களை முன்கூட்டியே தடுப்பது சாத்தியம். நம் உடல்நலமே நம் எதிர்காலம் என்பதால், அதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 1 செப்டம்பர், 2026

லண்டனில்.உள்ள பொலிஸ் பாய்க்கு பிடியாணை தொடர்கிறது

நாட்டில் மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்ஸ{க்குத்’ தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி  
கட்டளையிட்டுள்ளது.
ஏற்கனவே  கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த
 வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.
ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு
 எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று 
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர். 
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 29 ஆகஸ்ட், 2026

நாட்டில் தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த சிறு காட்டு யானை

நாட்டில் .கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம் யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின்
 உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து நின்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

நீங்கள் முருங்கைக்கீரை வாரத்திற்கு குறைந்தது 3–4 முறை சாப்பிடுங்கள்!

 

நாம் பல விலையுயர்ந்த சப்ப்ளிமென்ட்களைத் தேடி அலைகிறோம். ஆனால் நம் வீட்டு அருகிலேயே கிடைக்கும் முருங்கைக்கீரை ஒரு சத்துமிக்க இயற்கை உணவு! முருங்கைக்கீரையில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் C உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்:
 ✔️ நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க உதவும்
 ✔️ இரும்புச்சத்து கிடைக்க உதவும்
 ✔️ எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்
 ✔️ கண் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்
 ✔️ செரிமானத்திற்கு உதவக்கூடும்
 ✔️ உடலின் இயல்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதுகாப்பை ஆதரிக்கிறது

 🥬 வாரத்திற்கு 3–4 முறை முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 27 ஆகஸ்ட், 2026

நாட்டில் முன்நூறு கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சோலார் மின்கலன்களை நிறுத்துமாறு கோரிக்கை

நாட்டில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலன்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டமைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை சூரிய மின்கலன்களை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 26 ஆகஸ்ட், 2026

திபெத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் கிராமங்களை அழித்தது

.இன்று நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதோடு, பாலங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்த நிலையில், எல்லையின் மறுபுறத்தில் உள்ள திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் "பெரும் உயிரிழப்புகள்" ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
கடுமையாக உயிரிழப்புகள் அல்லது சொத்து இழப்புகள் ஏற்படலாம். ஆனால், தற்போதைக்கு என்னால் உறுதியாகக் கூற முடியாது என நேபாள பிராந்திய அதிகாரி நரேந்திர பரியார் ராய்ட்டர்ஸிடம் 
தெரிவித்தார்.
நேபாளம், மலைப்பாங்கான ரசுவா பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, ஆனால் வெள்ள நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க
 முடியவில்லை.
மீட்புப் பணிகளுக்கு ராணுவமும் காவல்துறையும் உதவி வருவதாக நேபாள பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

நமது பாரம்பரிய உணவு மிகவும் சத்தான மற்றும் சுவையான உளுத்தம் களி

நாம் உளுந்தங்களி . இதை மிக இலகுவாகவும் கட்டியில்லாமலும் செய்யும் எளிய முறை இதோ:
​தேவையான பொருட்கள்:
​கருப்பு உளுந்து (தொலி உளுந்து) – 1 கப்
​பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்
​வெல்லம் அல்லது கருப்பட்டி – 1.5 கப் (இனிப்பிற்கு ஏற்ப)
​நல்லெண்ணெய் – 1/2 கப்
​ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
​சுக்குத் தூள் – 1/4 டீஸ்பூன்
​தண்ணீர் – 3 முதல் 4 கப்
​செய்முறை:​மாவு தயாரித்தல்
​கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் வாணலியில் போட்டு மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.
​ஆறவைத்த பின், மிக்ஸியில் போட்டு நைசான மாவாக அரைத்துக்கொள்ளவும். (கடைகளில் கிடைக்கும் உளுந்தங்களி மாவையும் பயன்படுத்தலாம்).
​பாகை கரைத்தல்:
​ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை சூடாக்கி வடிகட்டி தனியாக வைக்கவும் (பாகு பதம் தேவையில்லை).
​மாவு கரைத்தல்
​ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு, 2.5 கப் தண்ணீர் ஊற்றி கட்டி ஏதும் இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
​களி கிண்டுதல்:
​கரைத்து வைத்த மாவை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து கெட்டியாகத் தொடங்கும்.
​மாவு வெந்து பளபளப்பாக வரும்போது, வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும்.
​இதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்க்கவும்.
​நல்லெண்ணெய் சேர்த்தல்:
​களி கெட்டியாக வரும்போது, எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றித் தொடர்ந்து கிளறவும்.
​களி பாத்திரத்தில் ஒட்டாமல், ஊற்றிய எண்ணெய் தனியாக பிரிந்து திரண்டு வரும் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
​குறிப்பு: கையில் சிறிதளவு தண்ணீரைத் தொட்டுவிட்டு களியைத் தொட்டுப் பார்த்தால், களி கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்!
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





சனி, 22 ஆகஸ்ட், 2026

உங்கள் சருமம் இயற்கை முறையில் பொலிவு பெற முட்டை மாஸ்க்

எங்கள் சருமத்தை அழகாகவும் வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவோம். பொலிவான சருமம் பெற வாரத்திற்கு இருமுறையாவது முட்டை மாஸ்க் போடுவது நல்லது. 
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரை வரும் வரை அடித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய்ந்து போகும் வரை காத்திருந்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தை
 இறுக்கஇயற்கையான முறையில் நம் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும்மாக்கவும் உதவும். 
முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ பருக்களால் ஏற்படும் வடுக்களும், கரும்புள்ளிகளும் 
மறைந்துவிடும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து நெற்றி, மூக்கின் இரு பக்கங்களிலும், தாடைப் பகுதியிலும், உதட்டின் மேல் பகுதியிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விட நம் முக அழகை கெடுக்கும் தேவையற்ற முடிகள்
 உதிர்ந்து விடும். 
இதனை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

நிவாரணம் அளிக்கலாம் காய்ச்சலுக்கு துளசி–கிராம்பு கஷாயம்:

உங்களுக்கு துளசி மற்றும் கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் வெதுவெதுப்பான கஷாயம், காய்ச்சல் நேரத்தில் தொண்டை அசௌகரியம் மற்றும் உடல் சோர்வுக்கு ஓரளவு தற்காலிக நிவாரணம் 
அளிக்கலாம். 
இருப்பினும், இது வைரஸ் காய்ச்சலைக் குணப்படுத்தும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல. காய்ச்சல் இருக்கும் போது 
போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவ 
உணவுகளை
 எடுத்துக்கொண்டு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ, பல நாட்கள் தொடர்ந்து
 நீடித்தாலோ அல்லது மூச்சுத்திணறல், கடுமையான பலவீனம் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 17 ஆகஸ்ட், 2026

சித்த மருத்துவரின் விளக்கம் மஞ்சளை மிஞ்சும் மருந்து உண்டா

என்று நம் முன்னோர் கூறியது வெறும் பழமொழி அல்ல. மஞ்சளை மிஞ்சும் மருந்துண்டா  நமது உணவு, அன்றாடப் பராமரிப்பு மற்றும் 
பாரம்பரிய மருத்துவ முறைகளில் மஞ்சள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மஞ்சளின் முக்கியக் கூட்டுப்பொருளான குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பண்புகளைக் கொண்டதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சித்த மருத்துவப் பார்வையில் மஞ்சள் சித்த மருத்துவத்தில் மஞ்சள் “மஞ்சள்” / “ஹரித்ரா” போன்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு, பல்வேறு உடல் நலப் பயன்பாடுகளுக்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக மஞ்சள்
 • சிறு வீக்கம் மற்றும் அழற்சி
 • தொண்டை கரகரப்பு, தொண்டை அசௌகரியம்
 • சளி, இருமல் • சரும அரிப்பு மற்றும் தடிப்பு
 • சிறு காயங்கள் மற்றும் தோல் அழற்சி
 • செரிமானக் கோளாறுகள்
 • வாய்ப்புண் போன்ற சிறிய தொந்தரவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மஞ்சள் பால் சளி, இருமல் அல்லது தொண்டை கரகரப்பு போன்ற நேரங்களில், சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அருந்துவது நம் வீடுகளில் தலைமுறைகளாகப் பின்பற்றப்படும்
 பாரம்பரிய வழக்கம்.
இது தொண்டைக்கு இதமான உணர்வைத் தரலாம்; ஆனால் தொற்றுகள் அல்லது நீடித்த அறிகுறிகளுக்கு இது மாற்று சிகிச்சை அல்ல. வேப்பிலை + மஞ்சள் குளியல் வேப்பிலைக் கொழுந்து
 மற்றும் மஞ்சள் சேர்த்த தண்ணீரில் குளிப்பதும் பாரம்பரிய சருமப் பராமரிப்பு முறைகளில் ஒன்று.
மஞ்சள் மற்றும் வேப்பிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள் + உப்பு வெந்நீர் கொப்பளித்தல் தொண்டை கரகரப்பு, லேசான தொண்டை அசௌகரியம் அல்லது வாயில் ஏற்படும் சிறிய அழற்சி போன்ற நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வாய் கொப்பளிப்பது நம் பாரம்பரியத்தில் காணப்படும் ஒரு எளிய
 வீட்டுப் பழக்கம்.
குறிப்பாக உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கொப்பளிப்பது தொண்டை அசௌகரியத்தைத் தற்காலிகமாகக் குறைக்க உதவலாம். மஞ்சளில் உள்ள குர்குமினுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் 
கூறுகின்றன. 
இருப்பினும், மஞ்சள் கொப்பளிப்பது தொண்டைத் தொற்று அல்லது வேறு நோயை குணப்படுத்தும் என்பதற்கு போதுமான மருத்துவ ஆதாரம் இல்லை. கொப்பளிக்கும் நீரை விழுங்காமல் 
துப்பிவிட வேண்டும்.
குழந்தைகள் சரியாக கொப்பளித்து துப்ப முடியும் வயதில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். பெண்களின் மஞ்சள் குளியல் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது நமது பாரம்பரிய அழகு மற்றும் சருமப் பராமரிப்பு முறைகளில் ஒன்று.
மஞ்சள் சருமத்தின் தோற்றத்தையும் சுத்தமான உணர்வையும் மேம்படுத்த உதவலாம்.
ஆனால் மஞ்சள் தேய்ப்பதால் தேவையற்ற உடல் முடி நிரந்தரமாக அகலும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. உணவில் மஞ்சள் தினசரி சமையலில் அளவோடு மஞ்சள் சேர்த்துக் கொள்வது
 எளிய நல்ல பழக்கம்.
ஆனால் ஒரு விஷயம் மிகவும் முக்கியம்: மஞ்சள் ஒரு அற்புதமான பாரம்பரிய உணவுப் பொருள்; எல்லா நோய்களுக்கும் ஒரே
 மருந்து அல்ல.
புற்றுநோய், ஆஸ்துமா, நாள்பட்ட புண்கள், படர்தாமரை, கடுமையான தோல் நோய்கள் போன்றவற்றிற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை நிறுத்திவிட்டு மஞ்சளை மட்டும் 
பயன்படுத்தக் கூடாது.
மேலும், அதிக அளவில் மஞ்சள் அல்லது குர்குமின் supplements எடுத்துக்கொள்வதும் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. பாரம்பரியமும் அறிவியலும் இணைந்தால்… மஞ்சள் — நம் சமையலறையின்
 பொக்கிஷம்.
சித்த மருத்துவத்தின் பாரம்பரிய மூலிகை. நவீன ஆய்வுகளின் கவனத்தையும் பெற்ற இயற்கைப் பொருள்.
அளவோடு உணவில் சேர்ப்போம்… பாரம்பரியத்தை அறிவோடு பயன்படுத்துவோம்… நோய் வந்தால் சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவோம்! “மஞ்சளை மிஞ்சும் மருந்துண்டா  நமது மருத்துவர் கூருகின்றார் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 24 ஜூலை, 2026

உங்கள் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கும் காளான் பட்டாணி மசாலா

பொதுவாக  அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில்  தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக காணப்படுகின்றது. சுவை 
மட்டுமல்லாமல், காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2), நியாசின் (Vitamin B3), பாந்தோத்தேனிக் அமிலம் (Vitamin B5), பயோட்டின் (Vitamin B7) போன்ற முக்கியமான பி-வகை வைட்டமின்கள் இதில்
 காணப்படுகின்றன.
இந்த வைட்டமின்கள் உடலில் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாடு மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திலும் முக்கிய 
பங்கு வகிக்கின்றன.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட காளானுடன், புரதச்சத்து நிறைந்த பட்டாணியையும் சேர்த்து சுவையும் சத்தும் நிறைந்த அற்புதமான காளான் பட்டாணி மசாலா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.அதனை சாதம், ரொட்டி, சப்பாத்தி, நாண் என இந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவை பக்காவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி
200 கிராம் காளான்
2 ஸ்பூன் நெய்
½ ஸ்பூன் சீரகம்
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
1 பச்சை மிளகாய் (கீறியது)
1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
½ கப் அரைத்த தக்காளி
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் கரம் மசாலா
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளியை அரைத்து விழுதாக
 தயார் செய்து கொள்ள வேண்டும்.
காளான்களையும் சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். மசாலாவில் சேர்க்கும் போது அவற்றை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை
 நன்றாக வதக்கவும்.
அடுத்து இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
இப்போது கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கி நல்ல மணம்
 வரும் வரை வதக்கவும்.
அதன்பின் வேகவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய காளானை சேர்த்து, மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும். மூடி வைத்து, காளான் மென்மையாகும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.
இடையிடையே கிளறி விடவும். காளான் வேகும்போது அதிலிருந்து தண்ணீர் வெளியேறும் என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
காளான் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, அதிக தீயில் ஒரு நிமிடம் கிளறி வதக்கவும். கிரேவி தேவையான அளவு கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் சுவையான காளான் பட்டாணி மசாலா தயார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 16 ஜூலை, 2026

நாட்டில் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம்

இலங்கையில் .வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு
 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் 
16-07-2026-அன்று பிற்பகல் நடைபெற்றது. 
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து தனித்தனியாக 
ஆராயப்பட்டது.
நாட்டிற்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றான வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) குறித்து இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் தற்போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாகத் தீர்த்து, வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இதனை முழுமையாக உள்ளடக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக சேவைகளை மிகவும் திறம்பட மற்றும் விரைவாக மேற்கொள்வதற்காக, டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பது குறித்தும்
 விவாதிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை, முன்மொழியப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு (District Secretary's Fund Pool) மாற்றுவதற்கு 
திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்தந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை மிகுந்த செயல்திறனுடன் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் சுற்றுலா அமைச்சின் கீழுள்ள அரச சொத்துக்கள் மற்றும் காணிகள் குறித்து முறையான அறிக்கை எதனையும் தயாரித்திருக்கவில்லை என்பது இக்கூட்டத்தில் 
வெளிச்சத்திற்கு வந்தது. 
இது குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, அமைச்சின் கீழ் உள்ள அனைத்துச் சொத்துக்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு 
அறிவுறுத்தினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் அசுர வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, வரும் 2030ஆம் ஆண்டளவில் இத்துறைக்கு சுமார் 08 இலட்சம் மனித வளங்கள் (பணியாளர்கள்) தேவைப்படுவார்கள் என இக்கலந்துரையாடலில் மதிப்பிடப்பட்டது.
தற்போதுள்ள ஹோட்டல் பாடசாலைகளினால் (Hotel Schools) நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துதல். இளைஞர், யுவதிகள் மத்தியில் இத்துறை சார்ந்த பயிற்சிகளைப் 
பிரபலப்படுத்துதல்.
நவீன சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப பயிற்சி நெறிகளைத் தரம் உயர்த்துதல். போன்ற முக்கிய வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டத்தின் காணி உரிமைப் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரச காணி உரிமைச் சிக்கல்கள், மகாவலி திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வேலைவாய்ப்பின்மை, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பில் சுற்றுலா முதலீடுகளை 
ஊக்குவிப்பது
 மற்றும் நியூசிலாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 14 ஜூலை, 2026

உங்கள் முகத்தில் ஐஸ் கட்டி தேய்ப்பது நல்லதா இதன் பக்கவிளைவுகள் என்ன

சமூக ஊடகங்கள் மற்றும் அழகு பராமரிப்பு தளங்களில் சமீபகாலமாக "ஐஸ் பேசியல்" (Ice Facial) அல்லது முகத்தில் ஐஸ் கட்டியைத் தேய்க்கும் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. பலரும் தங்களது 
தினசரி சரும பராமரிப்பில் இதை ஒரு முக்கியப் பகுதியாக மாற்றி வருகிறார்கள்.
ஆனால், இந்த ஐஸ் பேசியல் உண்மையில் சருமத்திற்கு எந்த அளவுக்கு நன்மை தரும்? இதில் உள்ள பக்கவிளைவுகள் என்ன? 
என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உடனடி நன்மைகள்: தற்காலிக புத்துணர்ச்சி
காலையில் எழும்போது முகம் வீக்கமாக இருப்பது அல்லது சோர்வாகக் காணப்படுவது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு ஐஸ் கட்டி ஒரு எளிய தீர்வாக அமைகிறது. 
வீக்கம் குறையும்: 
முகத்தில், குறிப்பாக கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தை (Puffy Eyes) ஐஸ் கட்டி தேய்ப்பதன் மூலம் உடனடியாகக் குறைக்க முடியும். 
இறுக்கமான சருமம்: 
ஐஸ் கட்டியின் குளிர்ச்சி சருமத்தின் இரத்த நாளங்களைச் சுருக்கி, முகம் தற்காலிகமாக இறுக்கமாகவும் இளமையாகவும் தோன்றுவதற்கு உதவுகிறது.
புத்துணர்ச்சி:
சோர்வடைந்த முகத்திற்கு இது ஒரு சிறந்த, உடனடி புத்துணர்ச்சியை (Instant Glow) தருகிறது. 
உண்மையா, வெறும் கட்டுக்கதையா?
ஐஸ் பேசியல் பற்றி பரவலாகப் பேசப்படும் சில கருத்துக்களில் உள்ள உண்மைகள் இதோதுளைகள் சுருங்குமா?
ஐஸ் கட்டி தேய்ப்பதால் முகத்தில் உள்ள சருமத் துளைகள் (Pores) நிரந்தரமாகச் சுருங்கிவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், இது ஒரு தற்காலிக விளைவு மட்டுமே.
குளிர்ச்சியால் தற்காலிகமாகச் சுருங்கும் துளைகள், சிறிது நேரத்தில் முகம் சாதாரண வெப்பநிலைக்குத் திரும்பியதும் பழைய நிலைக்கு வந்துவிடும். 
சருமம் வெண்மையாகுமா?
முகத்தில் ஐஸ் தேய்ப்பதால் சருமத்தின் நிறம் வெண்மையாக மாறாது. ஆனால், இரத்த ஓட்டம் தற்காலிகமாக அதிகரிப்பதால் முகம் சற்று பிரகாசமாகத் தோன்றும், அவ்வளவுதான். 
நீண்ட நேரம் பயன்படுத்தினால் ஆபத்தா? 
ஐஸ் கட்டியை நேரடியாகவும், நீண்ட நேரமும் சருமத்தில் பயன்படுத்துவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கை:
ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் நீண்ட நேரம் வைத்தால், அது "ஐஸ் பர்ன்" (Ice Burn) எனப்படும் பனிப்புண்ணை ஏற்படுத்தலாம்.
இது சருமத்தில் கடுமையான எரிச்சல், சிவப்புத் தழும்புகள் அல்லது சருமக் செல்கள் சேதமடைவதற்கு வழிவகுக்கும்.பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? 
முகத்திற்கு ஐஸ் பேசியல் செய்ய விரும்பினால், கீழே உள்ள எளிய மற்றும் பாதுகாப்பான வழிமுறையைப் பின்பற்றலாம்: 
நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம்: ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் தேய்ப்பதைத் தவிர்த்து, ஒரு மெல்லிய, சுத்தமான பருத்தித் துணியில் (Cotton Cloth) சுற்றிப் பயன்படுத்தவும். 
நேர அளவு முக்கியம்: முகத்தில் 1 முதல் 2 நிமிடங்களுக்கு மேல் ஐஸ் கட்டியைத் தேய்க்கக் கூடாது. 
மென்மையான மசாஜ்: வட்ட இயக்கத்தில் (Circular Motion) மிகவும் மெதுவாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html  


சுவிட்சர்லாந்திற்கு இலங்கையில் இருந்து கருவேப்பிலை ஏற்றுமதி செய்ய ஏன் கட்டுப்பாடுகள்

ஏன் கருவேப்பிலையை (Curry leaves) இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வருவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதற்கான முக்கிய காரணம் தாவர நோய்கள் மற்றும் பூச்சிகள் பரவுவதைத் தடுப்பது ஆகும்.
கருவேப்பிலையில்:
பூச்சிகள், அவற்றின் முட்டைகள் அல்லது லார்வாக்கள் இருக்கக்கூடும்.
பூஞ்சை, பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற தாவர நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும்.
இவை சுவிட்சர்லாந்தின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதனால், இலங்கை போன்ற EU அல்லாத நாடுகளில் இருந்து புதிய கருவேப்பிலை கொண்டு வர பொதுவாக தாவர சுகாதாரச் சான்றிதழ் (Phytosanitary Certificate) தேவைப்படும். அது இல்லையெனில், சுங்க அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து அழிக்கலாம்.
ஆனால்:
உலர்த்தப்பட்ட (dried) கருவேப்பிலை சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படலாம். இருப்பினும், அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது, எவ்வாறு பொதியிடப்பட்டது என்பதையும் பொருத்து விதிமுறைகள் மாறக்கூடும்.
வணிக நோக்கத்திற்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் விதிகள் வேறுபடலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஜூலை, 2026

பிரித்தானியாவில் இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு வழங்கப்பட்ட உயரிய விருது

பிரித்தானியாவில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா, மூன்றாம் சார்லஸ் மன்னரால் வின்ட்சர் கோட்டையில் நடைபெற்ற முதலீட்டு விழாவில் மாவீரர்
 பட்டம் பெற்றுள்ளார்.
பேராசிரியர் கனகராஜா 2026 கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் பெயரிடப்பட்டதன் பின்னர் உயர்கல்விக்கான அவரது சிறந்த பங்களிப்பை குறிப்பாக உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த கௌரவத்தைப் பெற்றார்.
விழாவின் போது, ​​பேராசிரியர் கனகராஜாவின் தோள்களை சம்பிரதாய வாளால் தொட்டு மன்னர் சார்லஸ் முறைப்படி மாவீரர் பட்டத்தை
 வழங்கினார்.
இந்நிலையில், "சார்லஸ் மன்னரிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன் மற்றும் நன்றியுடன் இருக்கிறேன்" என்று கனகராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கல்வியின் மாற்றும் சக்தி மற்றும் அது வழங்கும் வாய்ப்புகள் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. அதனால்தான் மற்றவர்களுக்கான தடைகளை நீக்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன், அதனால் அவர்களும் அவர்களின் உண்மையான திறனை நிறைவேற்ற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் கனகராஜா லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் முதல் இன சிறுபான்மை துணைவேந்தரானார். 
மேலும் உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்தவும், பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும், பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். 
அவர் சர்வதேச கூட்டாண்மைகளை வென்றார் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பல தேசிய உயர் கல்வி தலைமைப் பாத்திரங்களில் பணியாற்றினார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.