சனி, 22 ஆகஸ்ட், 2026

உங்கள் சருமம் இயற்கை முறையில் பொலிவு பெற முட்டை மாஸ்க்

எங்கள் சருமத்தை அழகாகவும் வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவோம். பொலிவான சருமம் பெற வாரத்திற்கு இருமுறையாவது முட்டை மாஸ்க் போடுவது நல்லது. 
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரை வரும் வரை அடித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய்ந்து போகும் வரை காத்திருந்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தை
 இறுக்கஇயற்கையான முறையில் நம் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும்மாக்கவும் உதவும். 
முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ பருக்களால் ஏற்படும் வடுக்களும், கரும்புள்ளிகளும் 
மறைந்துவிடும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து நெற்றி, மூக்கின் இரு பக்கங்களிலும், தாடைப் பகுதியிலும், உதட்டின் மேல் பகுதியிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விட நம் முக அழகை கெடுக்கும் தேவையற்ற முடிகள்
 உதிர்ந்து விடும். 
இதனை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.