சனி, 1 ஆகஸ்ட், 2026

யாழ் சுதுமலை அம்மன் கோவில் வழக்கு மேல் நீதிமன்றத்தல் தள்ளுபடி

யாழ் . சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்து
 கட்டளையிட்டுள்ளது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி கோவில் திருப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, இடைக்காலக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர்களால் மனுத் தாக்கல் 
செய்யப்பட்டிருந்தது
. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசாரணை நேரத்தின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி   கட்டிட அனுமதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் 
நீதிமன்றத்திற்கு மட்டுமே உரியது. மேல் நீதிமன்றத்தின் எல்லை: அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களாகவே இருந்தாலும், அவற்றை இடித்துத் தள்ளுமாறு உத்தரவிடும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை  என சுட்டிக்காட்டினாா்.
 பிரதேச சபையினால் இதுவரை இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரர்களின் இந்த விண்ணப்பம் முன்முதிர்வானது (Premature).எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியின் வாதங்களை 
முழுமையாக 
ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அஸ்வெசும நலன்புரி தொகை மோசடி : நுவரெலியா நோர்வூட் பகுதியில் இரு பெண் உத்தியோகஸ்தர்கள் கைது

                                      
 

நாட்டில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சுமார் 30 லட்சம் இலட்சம் அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் இரண்டு அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளனர். 
 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 அவர்கள் 2025 ஆம் ஆண்டு முதல் சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் 
சாட்டப்பட்டுள்ளது. 
 இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது. 
 கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டதைத்
 தொடர்ந்து, இந்த வெட்டுப்புள்ளிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.