யாழ் . சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்து
கட்டளையிட்டுள்ளது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி கோவில் திருப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, இடைக்காலக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர்களால் மனுத் தாக்கல்
செய்யப்பட்டிருந்தது
. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசாரணை நேரத்தின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கட்டிட அனுமதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான்
நீதிமன்றத்திற்கு மட்டுமே உரியது. மேல் நீதிமன்றத்தின் எல்லை: அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களாகவே இருந்தாலும், அவற்றை இடித்துத் தள்ளுமாறு உத்தரவிடும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என சுட்டிக்காட்டினாா்.
பிரதேச சபையினால் இதுவரை இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரர்களின் இந்த விண்ணப்பம் முன்முதிர்வானது (Premature).எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியின் வாதங்களை
முழுமையாக
ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






