யாழ் தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஊடாக செல்லும் பலாலி வீதி கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு , நேர கட்டுப்பாட்டுடன் வீதி
திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு செல்லும்
காவடிகள் , பாத யாத்திரைகளுக்காக குறித்த வீதியூடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் நடந்து செல்லவும் , வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()




0 கருத்துகள்:
கருத்துரையிடுக