ஆலைய நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலைய நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2026

நல்லூரில் இன்று புத்தாண்டை முன்னிட்டு விசேட வழிபாடுகள்

இன்று வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புத்தாண்டை வரவேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
 இதேவேளை மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் 
முன்னெடுக்கப்பட்டன.
 ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்களின் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
 இதன்போது நாட்டு மக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புதுவருட ஆசிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




திங்கள், 22 ஆகஸ்ட், 2022

கணேசபுர ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாங்கனிகள்.

வவுனியாவில் நேற்றையதினம் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , 
ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளார்.
21-08-2022.அன்றயதினம்  இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த மாம்பழங்களையும், மாலையையும் குறித்த மாணவன் பெற்று கொண்டமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த ஏலத்தொகை குறித்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 1 செப்டம்பர், 2021

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இடம்பெறாதாம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய, வருடாந்த மஹோற்சவம் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், கொவிட் அச்சம் காரணமாக செப்டம்பர் 06-09-2021 ஆம் திகதிக்கு
 ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதும் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம் மாதம் 06-09-2021. ஆம் திகதி மஹோற்சவத்தை நடாத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் 
அறிவித்துள்ளனர்.
மேலும் ஆலயத்தின் இவ் வருட மஹோற்சவம் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், இடம்பெறாது எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஞாயிறு, 17 ஜனவரி, 2021

வாகரை குஞ்சன்கல்குளத்தில் ஆதிவாசிகளின் பொங்கல் கொண்டாட்டம்

 
ஆதிவாசிகள் தங்களது பொங்கல் தினத்தினை முன்னிட்டு தைப்பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசை செய்வது வழக்கம்
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசிகள் தைப் பொங்கல் நாள் இரவு வேளையில், அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்து பொங்கல் பூசையினை செய்து வழிபட்டனர். 
குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் உள்ள வாராகி அம்மன் ஆலயம் மற்றும் நாககன்னி அம்மன் ஆலயம் என்பவற்றில் ஆதிவாசிகள் தங்களது வேடுவ தெய்வத்தினை வைத்து வழிபட்டு 
வரும் நிலையில், பூசைகள் யாவும் இங்கு நடைபெற்றது. இதில், ஆதிவாசிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து, துணிகளை
 காணிக்கையாக வேடுவ தெய்வத்திடம் வழங்கி ஆசி பெற்று பூசைகளில் கலந்து கொண்டதை காணக்கூடிய
 இருந்தது.இதன்போது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசைகள் இடம்பெறும் போது தெய்வங்கள் ஆண்டவனிடம் சென்று எங்களுக்கு 
ஆசி வேண்டி வருவதுடன், நாங்கள் பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து வழிபடுவோம்.  அப்போது அந்த பெட்டியில் உள்ள பூவை மணக்கும் போது பூசகரின் உடலில் தெய்வம் வரும் என்று 
மட்டக்களப்பு மாவட்ட ஆதிவாசிகளின் தலைவர் ந.வேலாயுதம் தெரிவித்தார்.அத்தோடு பூசகரின் உடலில் தெய்வம் வந்து எங்கள் ஆதிவாசிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்படும்.  
பொங்கல் தின நாள் இரவு எங்களுடைய தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்.நாங்கள் பொங்கலுக்கு பதிலாக காட்டு பொன்னாவரைப் பூ வைத்து எங்களது வேடுவ தெய்வத்திற்கு வைத்து வழிபட்டு வருவதாகவும், மட்டக்களப்பு மாவட்ட ஆதிவாசிகளின் தலைவர் ந.வேலாயுதம் மேலும் தெரிவித்தார்.(நிழல்படங்கள் இணைப்பு )

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








/> 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

இலட்சக்கணக்கானோர் மடுஅன்னையின் ஆவணித் திருவிழாவில்பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் ஆண்டகை போன்றோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர்.
இம்முறை திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
திருநாள் திருப்பலி நிறைவில் மடுமாதா திச்செரூப பவனியும் இறுதி ஆசீர்வாதமும் இடம் பெற்றது. 
மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திருவிழா கடந்த 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி. தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்றதுடன் நேற்று நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இன்று மும் மொழிகளிலும் திருப்பலி
 பூஜைகள் நடை பெற்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










செவ்வாய், 14 ஜூன், 2016

ஆலைய நிகழ்வுக்காணொளிகள் நிழல் படங்கள் இணைப்பு


ஆலைய நிகழ்வுக்காணொளிகள் நிழல் படங்கள் இணைப்பு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழாக்காணொளி
. இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க ப்பிள்ளை யார் புகள் காணொளி ஆவரங்கல் சிவன் கோவில்  தீர்த்தஉற்சவம்   .2014.
ஆவரங்கல் சிவன் கோவில்  இரவு திருவிழா  2014. ஆவரங்கல் சிவன் கோவில்  பூங்காவனம் .2013.
   ,
2.ஆவரங்கல் சிவன் கோவில்  பூங்காவனம் .2013
சிவன் கோவில் ல கொமஐவே (La Courneuve), பிரான்ஸ் திருவிழாக் காணொளி   
ஆவரங்கள் சிவன் கோவில்  பூங்காவனம் .






 நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்

இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>
Blogger இயக்குவது.