செவ்வாய், 30 நவம்பர், 2021

உணவுப்பஞ்சத்தை நோக்கி இலங்கை நகருகின்றதாம்

சிறிலங்கா அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) 
தெரிவித்துள்ளார்.
இரசாயன உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமற்ற தீர்மானத்தின் விளைவாக விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பயிர்ச்செய்கை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து 
வெளியிட்ட அவர்,
“இரசாயன உர இறக்குமதிக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு, அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நாடகத்தின் விளைவாக நாடு வெகுவிரைவில் உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையிலிருக்கின்றது.

இதன் பிரதிபலனை 2022 ஏப்ரல் மாதம் வரவிருக்கும் தமிழ், சிங்களப் புதுவருடப்பிறப்பின் போது நன்கு உணர்ந்து
கொள்ளமுடியும்” என்றார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 28 நவம்பர், 2021

இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

தற்போதைய சூழ்நிலையில், தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம் என அவர் 
எச்சரிக்க விடுத்துள்ளார்.
எனினும் தற்போதைக்கு அவ்வாறான ஓர் தேவை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் பரவுகை நிலைமை மோசமடையாதிருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கோவிட் மரணங்களில் தளம்பல் நிலை காணப்படுகின்றது எனவும், அண்மைய நாட்களாக இந்த மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஓமிகோர்ன் திரிபினால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எதிர்வு கூறல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.தென் ஆபிரிக்காவுடன் நேரடியான விமான போக்குவரத்து சேவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 27 நவம்பர், 2021

நாட்டில் வர்த்தகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பில் அச்சுறுத்தல்

நாட்டில்  மாவீரர் தினமான.27-11-2021. இன்று உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை முதல் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை திறக்குமாறு இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் வர்த்தக நிலைய பெயர் பலகையில் காணப்படும் வர்த்தக நிலைய உரிமையாளர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து 
வருகின்றனர்.
இந்த நிலையில் இராணுவத்தினரின், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக சில வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நகரத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ஒவ்வொரு சந்திகள் கடைகள், கடற்கரை பகுதிகளில் ஆயுதம் ஏந்திய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 26 நவம்பர், 2021

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு

தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) நாடாளுமன்றத்தில் 
தெரிவித்தார்.
அதன்படி தற்போது அவர்கள் மாதச் சம்பளமாக பெறும் ரூ.20,000, ரூ.41,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர்
 தெரிவித்தார்
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 24 நவம்பர், 2021

நாட்டில் மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில்.22-11-2021.அன்றைய தினம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 382 பயணிகள் பஸ்கள் மற்றும் 89 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம் 573 வர்த்தக நிலைய நடத்துனர்களும் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது...
மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை ஆராய்வதற்காக, நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அங்கு விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 435 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது 987 பயணிகள் பஸ்கள், 223 குளிரூட்டப்பட்ட பஸ்கள், 1,336 சில்லறை விற்பனை நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதேவேளை கொரோனா தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் – பொது சேவை சாரதிகள் மற்றும் ஊழியர்கள் – வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்பட பொது மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 22 நவம்பர், 2021

திருகோணமலையில் இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு.
அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன.
அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானதாகவே
 பார்க்கப்படுகின்றன.
இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் உதாரணமாகக் 
குறிப்பிடலாம்.
முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய செய்தி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் (J.S.Arulraj) என்பவரால் வைத்திய கலாநிதி த.ஜீவராஜிக்கு (T. Jeevaraj) தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் அது பற்றிய தகவல் எமக்கும் பரிமாறப்பட்டது.
அவர்கள் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்ட நாம் அக்கல்வெட்டை ஆய்வு செய்வதற்கு தொல்லியற் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான பா.கபிலன், வி. மணிமாறன் மற்றும் முன்னாள் தொல்லியல் விரிவுரையாளர் கிரிதரன் ஆகியோருடன் 30.01 2021 அன்று திருகோணமலை சென்றிருந்தோம்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் வைத்திய கலாநிதி த.ஜீவராஜூடன் வைத்திய கலாநிதி அ.ஸதீஸ்குமார், கிராம உத்தியோகத்தர் நா.சந்திரசேகரம் மற்றும் கோமரன்கடவல பிரதேச செயலக உத்தியோகத்தர் நா.ஜெகராஜ் ஆகியோரும் கல்வெட்டைப் படியெடுக்கும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றியமை எமக்கு மனமகிழ்வைத் தந்ததுடன், அச்சமற்ற சூழ்நிலையில் இக்கல்வெட்டைப் படியெடுக்கவும் வாய்ப்பாக இருந்தது.
இக்கல்வெட்டு திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது.
முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டிட அத்திவாரங்களும் காணப்படுகின்றன.
அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகின்றது.
இம்மலையின் மேல்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் 
செதுக்கப்பட்டுள்ளன.
சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம் சக்தி வழிபாட்டு மரபுக்குரிய சக்கரமாக இருக்கலாம் எனப் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிடுகின்றார்.
இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு வரிகளும், ஏனைய வற்றில் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும், தெளிவற்றும் காணப்படுகின்றன.
டப்பக்க எழுத்துப் பொறிப்புக்கள் தெளிவாகக் காணப்பட்டதால் கல்வெட்டைப் படியெடுத்தவர்கள் ஆர்வமிகுதியால் பல சொற்களைப் படித்தனர்.

ஆயினும் கல்வெட்டின் ஒரு பாகம் தெளிவற்றுக் காணப்பட்டதால் அது கூறும் வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதனால் தென்னாசியாவின் முதன்மைக் கல்வெட்டு அறிஞரும், எனது கலாநிதிப்பட்ட ஆய்வு மேற்பார்வையாளருமான பேராசிரியர் வை.சுப்பராயலுவுக்கும், தமிழக தொல்லியற் துறையின் முன்னாள் மூத்த கல்வெட்டறிஞரான கலாநிதி சு.இராஜகோபாலுக்கும் இக்கல்வெட்டுப் படிகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன்.
அவர்கள் இருவரும் ஒருவார காலமாக கடும் முயற்சி செய்து கல்வெட்டின் பெரும்பகுதியை வாசித்து அதன் வாசகத்தை தற்போது எமக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் வாசகம் பின்வருமாறு:

01)… … க்ஷகே ஸ்ரீவிம்ஜங்கோஸநௌ ம்ருகேவிம்சதி ப.

02)…. …..சக்தி ப்ரதிஷ்டாம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ …

03) ஜத்திகள் ஸ ஜஸ்ரீகுலோஸத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழஜம

04) ண்டலமான மும்முடிஸசோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-

5) ஜயவாகு தேவற்கு வீராபிஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-

06) ஜநேமி பூசை காலஸங்களில் ஆதிக்ஷேத்ரமாய் ஸ்வயம்புவுமாந திருக்கோ-

07) ஜயிலைஸயுடைய நாயநாரை தெண்டன் பண்ணி இன்னாய-

08) நாற்கு சஜக்திஸ ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா

09) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு ஜப்

10) ராப்தமாய்ஸ வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்ஜதுஸ நாட்டில் ல-

11) ச்சிகாஜதிஸபுரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-

12) மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய

13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட

14) இந்நாஜச்சியார்க்கு திருபப்ஸபடிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-

15) க்கும்சாந்த்ராதித்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் ப-

16) ண்ணிக் குடுத்தேன்இ …. லுள்ளாரழிவு படாமல்

17) …ண்ண..ட்ட……ப் பெறுக்கிவுண்டார்கள் ஜஆஸய்

18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்

19) மாக . . டையார் பி… கெங்கைக் கரையிலாயிரங்

20) குரால் பசுவைக் கொன்றாஜர்பாவங்ஸ கொண்டார்கள் ஆயிரம் ப்ரா-

21) ஹ்மணரைக் கொன்றார் பாவஜங் கொண்ஸடார்கள் மேலொரு …

22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின்ஜசொல்படிஸ … …

23) த்தியஞ் செய்வார் செய்வித்தார்  

கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டுப் பற்றிய தமிழக அறிஞர்களின் வாசிப்பிலிருந்து இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரியவந்துள்ளன.
அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம் வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப்போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.
மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும், தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
இக்கல்வெட்டுப் படியெடுத்த காலப்பகுதியிலேயே இக்கல்வெட்டின் புகைப்படங்களை எனது ஆசிரியர்களான பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் பொ.இரகுபதி ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களைப் பெற்றிருந்தேன்.
பேராசிரியர் இரகுபதியால் கல்வெட்டின் சில பாகங்கள் வாசிக்கப்பட்டு அதற்குரிய பொருள் விளக்கத்தையும் அவர் அவ்வப்போது எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அறிஞர்களால் பெருமளவு வாசித்து முடிக்கப்பட்ட கல்வெட்டு வாசகத்திற்கு மேற்கூறிய அனைவருமே வழங்கிய கருத்துக்கள், விளக்கங்கள் என்பன இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதிய செய்திகளைச் சொல்வதாக உள்ளன.
தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த போது அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
இதனால் தமிழ் நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர்கள் இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர்.
இது முதலாம் பராந்தகசோழன் காலத்தில் ஆரம்பித்துப் பின்னர் இராஜராஜசோழன் காலத்தில் கி.பி. 993 இல் இலங்கைளின் வடபகுதி வெற்றி கொள்ளப்பட்டது.
கி.பி. 1012 இல் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டு புதிய தலைநகரம் ஜனநாதபுரம் என்ற பெயருடன் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறிகின்றோம்.
சோழரின் 77 ஆண்டுகால நேரடி ஆட்சியில் அவர்களது நிர்வாக முறையே பின்பற்றப்பட்டது.
இதன்படி இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன.
திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் 
இருந்துள்ளன.
அத்துடன் சோழரின் அரசியல், இராணுவ, நிர்வாக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திருகோணமலை இருந்ததை அவர்களின் ஆட்சிக்கால ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 இல் வீழ்ச்சியடைந்தாலும் சோழரின் ஆதிக்கம், நிர்வாக முறை, பண்பாடு என்பன தமிழர் பிராந்தியங்களில் தொடர்ந்திருக்கலாம் எனக்
 கருதமுடிகின்றது.
இதை உறுதிப்படுத்தும் புதிய சான்றாகவே கோமரன்கடவலக் கல்வெட்டுக் காணப்படுகின்றது.
பொலன்னறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டு ஏறத்தாழ 125 ஆண்டுகளின் பின்னரும் தமிழர் பிராந்தியங்களில் மும்முடிச் சோழ மண்டலம் என்ற நிர்வாகப் பெயரும், தமிழ் நிர்வாக முறையும் இருந்தன என்ற புதிய செய்தியை இக்கல்வெட்டுத் தருகின்றது.
கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில், சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத்தளபதிகளுள் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்கசோழக் காலிங்கராயன் இருந்துள்ளான் என்ற புதிய செய்தியும்
 தெரியவருகின்றது.
மேலும் இவனே கங்கராஜகாலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு) பட்டாபிஷேகம் செய்தான் என்ற அதிமுக்கிய புதிய வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டிலேயே முதல் முறையாகச் சொல்லப்பட்டுள்ளது.
பேராசிரியர்.சுப்பராயலு இக்கல்வெட்டில்
 (வரிகள் (3-5) வரும் ‘ஸ்ரீகுலோத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழமண்டலமான மும்முடி சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம்’ என்ற சொற்தொடரை புதிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் இந்திரபாலா இத்தொடரில் உள்ள கங்கராஜ காலிங்கவிஜயவாகு என்பவன் 1215 இல் பொலன்னறுவை அரசை வெற்றி கொண்டு ஆட்சி செய்த கலிங்கமாகன் (மாகன் மாகோன்) என அடையாளப்படுத்துகின்றார்.
அவன் விஜயபாகு என்ற பெயராலும் அழைக்கப்பட்டான் 
என்பதற்கு 14ஆம் நூற்றாண்டில் எழுந்த நிகாயசங்கிரஹய என்ற சிங்கள இலக்கியத்தில் வரும் குறிப்பை முக்கிய ஆதாரமாகக்
 காட்டியுள்ளார்.
இவற்றிலிருந்து, இலங்கையை வெற்றிகொண்டு பொலன்னறுவையில் ஆட்சிபுரிந்த கலிங்கமாகன், குலோத்துங்கசோழ காலிங்கராயனால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவன் என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
இக்கல்வெட்டில் கூறப்படும் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்த சோழப்படைத் தளபதியாக அல்லது சோழ அரசப் பிரநிதியாக 
இருந்திருக்கவேண்டும்.
ஏனெனில் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் (கி.பி 1178-1218) அவன் இலங்கை மீது படையெடுத்து சில வெற்றிகளைப் பெற்றதாக அவனது பத்தாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.
இங்கே கலிங்கமாகன் பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி.1215 இல் வெற்றி கொண்டான் எனக் கூறப்படுகிறது.
இதனால் குலோத்துங்க சோழ காலிங்கராயனால் கலிங்கமாகனுக்கு நடத்தப்பட்ட பட்டாபிஷேகம் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் நடந்ததெனக் கூறமுடியும்.
பொலன்னறுவை இராசதானியில் நிஸங்கமல்லன் ஆட்சியைத் தொடர்ந்து பல குழப்பங்களும், அயல்நாட்டுப் படையெடுப்புக்களும் ஏற்பட்டதை பாளி சிங்கள இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் சோழ, கேரள, தமிழ்ப்படை வீரர்களின் உதவியுடன் இலங்கை மீது படையெடுத்து வந்த கலிங்கமாகன் 1215 இல் பொலன்னறுவை இராசதானியைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தான் என்ற வரலாறு காணப்படுகின்றது.
இவனது ஆட்சியில் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள தலைநகரும் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த போது கலிங்கமாகன் தலைமையில் வடக்கே இன்னொரு அரசு தோன்றியதாக சூளவம்சம், ராஜவெலிய முதலான வரலாற்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஆயினும் இக்கலிங்கமாகன் யார்? எந்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்தவன் என்பதையிட்டு இதுவரை அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்களே இருந்துள்ளன.
சில அறிஞர்கள் இவனை மலேசியா நாட்டிலுள்ள கலிங்கத்திலிருந்து படையெடுத்தவன் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டில் கலிங்கமாகன் கங்கை வம்சத்துடனும், கலிங்க நாட்டுடனும் தொடர்புடையவன் என்ற புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சோழர்கள் தம் திருமண உறவுகளால் கீழைச்சாளுக்கியரது (வேங்கி அரசு) கங்கை வம்சத்துடனும், படையெடுப்புகள் மூலம் கலிங்க நாட்டுடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதைக் கலிங்கத்துப்பரணியும், சோழக் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்தில் அரசமைத்த ஆரியச்சக்கரவர்த்திகளும் கங்கை வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என அவ்வரசு தொடர்பாக எழுந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
இவ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண அரசின் தோற்றத்தை கலிங்கமாகனுடன் தொடர்புபடுத்தி பேராசிரியர் இந்திரபாலாவினால் எழுதப்பட்ட அரிய கட்டுரை ஒன்று தற்போது எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலங்கை ஊடகங்களில் விரைவில் பிரசுரமாக இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டின் 8-10 வரிகளில் வரும் ‘திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பண்ணுவித்து’ என்ற சொற்தொடர் இப்பிரதேசத்தில் சக்திக்கென தனிக்கோவில்(காமக்கோட்டம்) அமைக்கப்பட்ட புதிய செய்தியைக் கூறுவதாக உள்ளது.
பேராசிரியர் பத்மநாதன் இது போன்ற செய்தி இலங்கையில் கிடைத்த பிற தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை காணப்படவில்லை எனக் 
குறிப்பிடுகின்றார்.
தமிழகத்தில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் இருந்து சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் சக்திக்கு தனிக்கோயில் அமைக்கும் மரபு 
இருந்தமை தெரிகின்றது .
அம்மரபு சமகாலத்தில் இலங்கையிலும் பின்பற்றப்பட்டமைக்கு 
இக்கல்வெட்டு சான்றாகும்.
கோமரன்கடவல சிவன் கோயில் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் காலத்திற்கு முன்பே பன்நெடுங்காலமாக இருந்திருக்கின்றது என்பதும் கல்வெட்டில் வரும் ஆதிக்ஷேத்ரம் என்ற சொற்தொடரால் 
தெரிகின்றது.
காலிங்கராயன் ஈழத்தை வெற்றி கொண்டதற்கும் கலிங்கமாகனுக்குப் பட்டம் சூட்டியதற்கும் பிறகு இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு, சக்திக்காக தனிக்கோயில் எடுப்பித்து, தனக்கு சொந்தமாகக் கிடைத்த நிர்வாகப் பிரிவில் இருந்து சில நிலங்களை நிவந்தமாக கொடுத்தமையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
இந்த நிலங்களுக்கும் கோயில் நிர்வாகத்திறகும் உரித்துடையவர்களாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் காலிங்கராயன் சொற்படி இக்கல்வெட்டை பொறித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில் குலோத்துங்கசோழக் காலிங்கராயனின் இந்த ஏற்பாடுகளுக்குப் பங்கம் செய்பவர்கள் கங்கைக் கரையில் ஆயிரம் குரால் (கபிலை) பசுக்களை கொன்ற பாவத்திற்கும், ஆயிரம் பிராமணர்களைக் கொன்ற பாவத்திற்கும் உட்பட்டு நாயாகவும், காகமாகவும் பிறப்பார்கள் எனக் குறிப்பிட்டு அவற்றின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்கு கீழே கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டால் அறியப்படும் முக்கிய வரலாற்றுச் செய்திகளோடு, அவற்றில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள், சொற்கள் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்துக்களும், விளக்கங்ளும் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.
முதலில் ”ஸ்வயம்புவுமாந திருக்கோ (ணமலை) யுடைய நாயநாரை’ என படிக்கப்பட்டதை பேராசிரியர் இரகுபதி ‘ஸ்வயம்புவுமாந திருக்கோயிலுடைய நாயநாரை’ எனப் படித்திருப்பதை பேராசிரியர் சுப்பராயலு பொருத்தமானதென எடுத்துக்கொண்டுள்ளார்.
இச்சிவாலயத்தில் காணப்படும் சிவலிங்கத்தின் அமைப்பு ஸ்வயம்பு என்ற சொல்லுக்குப் பொருத்தமாக இருப்பதினால் இக்கல்வெட்டு இந்தக்கோயிலையே குறிப்பிடுகின்றது என்பது பேராசிரியர் இரகுபதியின் விளக்கமாகும்.
மேலும் அவர் கல்வெட்டில் வரும் இடப்பெயரை ‘லச்சிகாமபுரம்’ என வாசித்து அது இப்பிரதேசத்திற்கு உட்பட்ட ஒரு இடத்தின் பெயர் எனக் குறிப்பிடுகின்றார்.

இதில் வரும் வேச்சார் நிலம் என்பது குளத்தோடு ஒட்டிய பயிர் நிலம் என்ற பொருளில் சிங்களக் கல்வெட்டுக்களில் வரும் வேசர(வாவி சார்ந்த) என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பதும் அவரது 
கருத்தாகும்.
பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டில் வரும் ‘மாநாமத்துநாடு’ என்ற பெயர் இங்குள்ள பரந்த பிரதேசத்தை குறித்த இடமாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.
இக்கூற்றை பொருத்தமாக கருதும் பேராசிரியர் பத்மநாதன் இதற்குப் பெரியகுளம் கல்வெட்டில் வரும் இதையொத்த பெயரை ஆதாரமாகக் காட்டுகின்றார்.
இக்கல்வெட்டில் ‘பற்று’ என்ற நிர்வாகப் பிரிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இப்பெயர் சோழர் ஆட்சியில் வளநாடு என்ற நிர்வாகப் பிரிவிற்குச் சமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பேராசிரியர் பத்மநாதன் 
கருதுகின்றார்.
பற்று என்ற தமிழ்ச் சொல் சிங்களத்தில் ‘பத்து’ என 
அழைக்கப்படுகின்றது.
இச்சொற்கள் தற்காலத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் நிர்வாக அலகுச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இக்கல்வெட்டைப் படியெடுத்த போது கடும் மழையாக இருந்ததாலும், பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் இங்குள்ள காட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டதாலும் குறுகிய நேரத்திற்குள் இக்கல்வெட்டை படியெடுக்க வேண்டியிருந்தது.
ஆயினும் மீண்டும் இக்கல்வெட்டைப் படியெடுக்க வேண்டியிருப்பதால் மேலும் பல புதிய தகவல்கள் வெளிவரக்கூடும்.
இவ்விடத்தில் இக்கல்வெட்டைப் படிப்பதற்கும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவரவும் உதவிய என் ஆசிரியர்களுக்கும், எனது தொல்லியல் பட்டதாரி மாணவர்களுக்கும், ஆய்விடத்தை அடையாளப்படுத்திக் காட்டியதுடன் எம்முடன் இணைந்து பணியாற்றிய திருகோணமலை நண்பர்களுக்கும் என் நன்றிகள் என 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் இன்று முதல் அனைவருக்கும் “பூஸ்டர்” தடுப்பூசி

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை17-11-2021. இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 3 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 16 நவம்பர், 2021

டேனி பென்ஸ்டர் அமெரிக்க பத்திரிகையாளர் விடுதலை

டேனி பென்ஸ்டா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் 
பதிவு செய்யப்பட்டன.
டேனி பென்ஸ்டா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் 
பதிவு செய்யப்பட்டன.
அவா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு 
செய்யப்பட்டன.
இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி பென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 12-ந்தேதி மியான்மர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் மியான்மரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், பத்திரிகையாளர் டேனி பென்ஸ்டரை விடுவிப்பது குறித்து ராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை 
நடத்தி வந்தார்.
இதில் டேனி பென்ஸ்டரை விடுதலை செய்ய மியான்மர் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி பென்ஸ்டர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் மியான்மர் அரசு அனுமதி 
வழங்கியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 14 நவம்பர், 2021

சிறுப்பிட்டி மைந்தன் கனடாவில் விருது பெற்ற திரு கௌரீஸ் சுப்ரமணியம்

யாழ் சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் கனடாவில் நடைபெற்ற உதயன் பத்திரிகை வெள்ளி விழாவில் தமிழ்நாடு நண்பன் விருதை14-11-2021. இன்றுபெற்றார்.
இவர் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் கோயிலடியைச்சேர்ந்த சாரதா இராமலிங்கத்தின் மகன் ஆவார்.
இரு கண்களையும் இழந்த இவர் தனது பாடல் திறமையால் கிடைக்கும் வருமானத்தில் ஈழத்தில் உள்ள மாற்றுததிரனாளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 12 நவம்பர், 2021

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியின் திடுக்கிடும் தகவல்

பதினைந்து  வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் 11-11-2021.அன்று  வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை காவல்துறை காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் 
தெரிவித்தனர்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>







வியாழன், 11 நவம்பர், 2021

இலங்கை மக்களுக்கு வெளியான ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு

லங்கா சதொச விற்பனை நிறுவனத்திடமிருந்து 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை தற்போதைய சந்தை விலையை விட 1000 ரூபாய் குறைவாக வாங்க முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அறிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1998இற்கு அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த 15 பொருட்களையும் நிவாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என இதன்போது அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிவாரணப் பொதி தொடர்பான அறிவிப்பானது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 8 நவம்பர், 2021

நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டவானிலை எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்ட மற்றும் உக்குவெல
 ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, கலவான மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலகப்பிரிவுக்கும், குருநாகலை மாவட்டத்தின் நாராம்மல பிரதேச செயலகப்பிரிவுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 7 நவம்பர், 2021

கிட்டங்கிஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு

சம்மாந்துறை – கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் சடலத்தை பொலிஸார் 
 06 -11-2021.அன்று மீட்டுள்ளனர்
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் 41 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு சந்தேக நபருடன் விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் வீசப்பட்ட சிசுவை மீட்டெடுத்தனர்.
னது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையின் தாயாரான 19 வயதான யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு 
உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 5 நவம்பர், 2021

நாட்டில் வெலிசர பகுதியில் 16 வயது இளைஞரால் ஏற்பட்ட பாரிய விபத்து

நாட்டில் வெலிசர பகுதியில்.05-11-2021. இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்திய மகிழுந்து, சந்தேக நபரான 16 வயது இளைஞரின் தந்தையினுடையது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும் குறித்த இளைஞர் ஏன் தனது தந்தையின் மகிழுந்தை எடுத்துச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மகிழுந்தின் உரிமையாளர் வெலிசர – மஹபாகே 
பகுதியில் தங்காபரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஒருவர் எனவும், அவர் இன்று காலை தனது மகிழுந்தை கழுவி சுத்தம் செய்து விட்டு, பணி நிமித்தமாகக் கொழும்பு செல்ல தயாரானதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி வர்த்தகர் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தபோதே, குறித்த இளைஞர், தனது மூத்த சகோதரியுடன் வீட்டிலிருந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் எந்த தேவையும் இன்றியே வீட்டிலிருந்து மகிழுந்தை எடுத்துச்சென்றதாக இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு திசையாக பயணித்த குறித்த மகிழுந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன், குறித்த மகிழுந்து வீதியின் நடுவில் உள்ள தடுப்பை கடந்து மறுபுறம் திரும்பி மற்றொரு காரின் மீது விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலயில் , மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மகிழுந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 16 வயதான இளைஞரை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துதுடன், அவரது தந்தையையும் கைதுசெய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 4 நவம்பர், 2021

நாட்டில் விரைவில் காணிகள் கையளிக்கப்படுமாம்

 

நாட்டில்குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படுமென, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (03) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இங்குள்ள பாடசாலைகளுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் செல்வதனை கண்டதாகவும் தெற்கு பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்லும் போது சில அறிவுறுத்தல்கள் பதாதைகள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது எனவும் 
கூறினார்.
ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லை. அது மிகவும் சந்தோசமான விடையமாக உள்ளது எனவம், அவர் 
கூறினார்.
தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர் எனவும் கூறினார்.
இங்கிலாந்து, சுவீடன், நோர்வே உள்ளிட்ட நாடுகள், இங்கு புதைக்கப்பட்ட வெடிபொருள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன எனத் தெரிவித்த அவர், 'மிக குறைந்த அளிலான கண்ணிவெடி அகற்றும் 
பணிகளே இங்கு காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்படும் எனவும் கூறினார்.
'அதன் ஊடாக வடக்கு - கிழக்கில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கான பணம் அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியும். குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படும்' எனவும், 
அவர் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 3 நவம்பர், 2021

பதுளை வீதியில் 6.7 கோடி ரூபாவுடன் மடக்கி பிடிக்கப்பட்ட வாகன சாரதி

ஒரு தனியார் வங்கியின் ஏரிஎம் இயந்திரங்களுக்கு பணத்தை எடுத்துச் சென்ற வாகன சாரதி, பணத்துடன் தப்பியோடிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். ரூ.6,74,19,700 பணத்துடன் தப்பிச் சென்ற வாகனம், நுவரெலியா, பதுளை வீதியில் ரந்தபொல சந்திக்கு அருகில் விசேடஅதிரடிப்படையினரால் மடக்கப்பட்டு, சாரதி 
கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ வீரர். கொழும்பில் இருந்து ஹட்டன் வரையுள்ள தனியார் வங்கியொன்றின் கிளைகளில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றது. பணத்தை ஏற்றி வந்த வாகனம், ஹட்டனிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக 
நிறுத்தப்பட்டது.
வங்கியின் இயந்திரத்தில் பணத்தை இட, வங்கி ஊழியர்கள் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்ற போது, வாகனத்திலிருந்த பணத்துடன் சாரதி 
தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது நுவரெலியா பதுளை வீதியில் அம்பேவெல ரெண்டபொல சந்தியில் வைத்து அந்த வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் மடக்கிப் பிடித்து, சாரதியை கைது செய்தனர். பணமும் சந்தேக நபரும் கெப்பெட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.