யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் , பயங்கரவாதத் தடைச்சட்டம்
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படுவதாகக்
கூறப்படும் சிங்களமயமாக்கல் திட்டமான
கீழ் மல்வத்து ஓயா திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக