எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று(16) காலை கைது செய்ததுடன் , அவர்கள் மீன் பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், அண்டனி ஹேமா நிஷாந்தன் , ஆகியோரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை
தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.
கைதானவர்கள் தூதுக்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டு கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக
கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக