புதன், 5 அக்டோபர், 2022

நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.

<

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் .05-10-2022.இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், எரிசக்தி அமைச்சர் கஞ்சன
விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டமும் 
முன்னெடுக்கப்படவுள்ளது.
சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.