திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் தேர்தல் வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது என வாகன சாரதிகளுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள், பல்வேறு தேர்தல் வேட்பாளர்களின் படங்கள் மற்றும் 
சின்னங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களைக் காட்டுவது குறித்து 
ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக
 தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மோட்டார் வாகனங்களில் உள்ள அனைத்து அடையாளங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
 இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.குறிப்பிடத்தக்கது   என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.