புதன், 8 மே, 2024

நாட்டில் முல்லைதீவில் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி போராட்டம்

நாட்டில் மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால்.08-05-2024. இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு 
முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
 குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி 
திட்டத்தை எமது
 மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே,
 மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து 
என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு 
போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
 இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கதது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.