வெள்ளி, 10 செப்டம்பர், 2021

உடுப்பிட்டிபகுதியில் காதல் ஜோடியால் இரண்டு பட்ட ஊர்

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.
உடுப்பிட்டியில்  08-09-2021.அன்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 
காதல் ஜோடியொன்று அண்மையில் எதிர்ப்பை 
மீறி திருமணம் செய்ததை தொடர்ந்து, சமூகங்களிற்கிடையில் மோதல் போக்கு ஏற்பட்டது.
உடுப்பிட்டியில் 08-09-2021.அன்று  இரவு உச்சமடைந்து
 இரண்டு சமூகத்தினரும் முட்டி மோதிக்கொள்ளும் நிலைமையேற்பட்ட போது, வல்வெட்டித்துறை பொலிசார் நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.
எனினும்,நிலைமையை கட்டுக்கடங்காமல் போகவே
 இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. 09-09-2021.அன்று காலையில் இரண்டு சமூக பிரமுகர்களையும் 
பொலிசார் அழைத்து பேசி, நிலைமையை 
சுமுகமாக்கியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.