புதன், 17 மே, 2023

நாட்டில் பாடசாலை மாணவனின் ஒற்றை காலணியை பறித்துச் சென்ற திருடன்

துவிச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு 
வயது மாணவனின் காலணியை வலுக்கட்டாயமாக பறித்துச் 
சென்றுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.அங்குருவத்தோட்ட பொலிஸ் எல்லைக்குட்பட்ட
 தொம்பகொட பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் நேற்று காலை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்து 
சென்று கொண்டிருந்த போது, இனந்தெரியாத 
நபர் ஒருவர். 
அந்த மாணவனை பின்தொடர்ந்து சைக்கிளில் சென்று மாணவனை பிடித்து 
இழுத்து ​​பலவந்தமாக காலணியை பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது .இதன் பின், மாணவன் அருகில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்து தன் தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி நடந்ததை 
தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கே வந்த தந்தை 
சம்பவம் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். அங்குருவத்தோட்ட பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.