வியாழன், 3 டிசம்பர், 2020

யாழ். குடாநாட்டில் புரெவியால் 28 ஆயிரம் பேர் வரை பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயலின் தாக்கத்தினால் 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
ன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க
 அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து
 பிரதேச செயலாளர்களும் சூம் தொழில்நுட்பம் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் அரச அதிபர் மகேசன்
 தெரிவித்துள்ளார்..

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>><








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.