செவ்வாய், 22 டிசம்பர், 2020

வடக்கில் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியீடு செய்து 
வைக்கப்பட்டுள்ளன
குறித்த வெளியீட்டு விழா நேற்று (20) மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நெருங்கண்டல் கிராம மக்களின் ‘புனித அந்தோனியார் நாடகம்’ மன்னார் இத்திக்கண்டல் சீனிப்புலவர் 
எழுதிய ‘புனித செபஸ்தியார் வாசகப்பா’, 
நானாட்டான் பெஞ்சமின் செல்வம் எழுதிய ‘மன்னார் மாதோட்டத் தமிழ்ப்புலவர் சரித்திரம்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீடு செய்து வைக்கப்பட்டன.
 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.