சனி, 17 அக்டோபர், 2020

சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணிவெற்றி பெற்றுள்ளது

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 34வது போட்டி.17-10-20. இன்று நிறைவுக்கு வந்தது. சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்களினால் அதிரடி வெற்றியை
 பெற்றுள்ளது.
போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ஓட்டங்களைப் 
பெற்றுக் கொண்டது.
சென்னை அணிசார்பாக பப்டு ப்ளஸிஸ் 58, அம்பாத்தி ராயுடு 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். டெல்லியின் பந்துவீச்சில் அதிகபட்சம் அன்ரிச் நொர்ஜே 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 180 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 19.5வது ஓவரில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று 
வெற்றியடைந்தது.
டெல்லி அணிசார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய சிகார்த் தவான் 58 பந்துகளில் 101, ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சென்னையின் பந்துவீச்சில் தீபக் ஷாஹர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.