வெள்ளி, 30 அக்டோபர், 2020

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வெளியேறும் மக்களை தேடுதல் பொலிஸார்

பொலிஸ் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில், இலங்கையின் மேல் மாகாணத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களை கண்டறிவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
 பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் மாகாணத்திற்குள் இருக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும்; பெரும்பாலானோர்
 மேல்மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்துக்கு வெளியே பயணித்தவர்கள் தங்கிருக்கலாம் என்று நம்பப்படும் விருந்தகங்கள் மற்றும் பிற தங்குமிடங்கள்
 ஆகியவை தொடர்பில் காவல்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்தநிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை
 மீறி மேல்மாகாணத்துக்கு வெளியே பயணித்த மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் 
எச்சரித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை,உத்தரவு நீக்கப்பட்டவுடன் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கு மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களை அடையாளம் காண ஏற்பாடுகள் நடந்து வருவதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.