திங்கள், 19 அக்டோபர், 2020

மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.19-10-20

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல்.19-10-20. இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், 19-10-20.இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனைத்தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார். பின்னர் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன், ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி
 செலுத்தினார்கள்.
போர் சூழலில் யாழில் இருந்து துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்றவற்றில்
 பணியாற்றி இருந்தார்.
அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.