வெள்ளி, 19 ஜூன், 2026

நாட்டின் மண்ணின் பெருமையாய் மக்கள் நெஞ்சில் வாழும் சேவகன்: கிளிநொச்சி முத்து மணிவிழா காணும் வரலாற்றுத் திருநாள்

கிளிநொச்சி முத்து மணிவிழா காணும்
ஆளுமைகளை அணிகலன்களாகக் கொண்ட ஆணழகனே,
கூட்டுறவும் வாழ்வியலும் உங்கள் வாழ்வின் வசந்தங்களே.
கல்வியியலை வாழ்வியலுடனும்,
வாழ்வியலை கல்வியியலுடனும் இணைத்து
பல தலைமுறைகளின் பாதையை ஒளிரச் செய்த பெருமகனே!
சூழல்நேயத்தை மனிதநேயமாகக் கொண்டு உழைத்த உத்தமனே, 
ஆணிவேர்வரை ஆராய்ந்து எழுதும் ஆற்றல் உமக்கே உரியது. 
உங்கள் குரலில் விளக்கவுரை கேட்க, 
சிவனும் மகனும் எழுந்தருளி நிற்பார்களோ! 
பக்தர்களாய் நாம் பரவசம் அடைவோம். 
உங்களுக்கு ஓய்வா? 
திட்டங்களே திணறுகின்றனையா! 
செயல்களே சிந்திக்கின்றனையா! 
உங்கள் சிந்தனையின் சக்கரம் ஓய்ந்தால், 
பல கனவுகளின் பயணமும் நின்றுவிடுமே! 
“Sustainability” இனி sustain ஆகிடுமோ? 
DITWA எமக்குப் பேரிடர் அல்ல; 
ஆனால் உங்கள் ஓய்வே
எம் மண்ணுக்குப் பேரிடராகும்! 
அன்பை விதைத்து, பண்பை அறுவடை செய்த 
அருமை மனிதரே! 
ஓய்வு என்பது உங்கள் பணிக்கு முடிவல்ல, 
புதிய பணிகளின் தொடக்கமே.
தங்கள் ஓய்வுக்காலம் சிறக்கவும்,
நீண்ட ஆயுளும், நிறைந்த உடல்–உள ஆரோக்கியமும் பெற்று, 
இன்னும் பல ஆண்டுகள் சமூகத்திற்கு ஒளிவிளக்காய் திகழவும் 
எமது இந்த இணையத்தின்  நல் வாழ்த்துகள் .உரித்தாகுக  .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.