சனி, 13 பிப்ரவரி, 2021

முதல் தடவையாக கால் மேசை பந்தாட்டம்(TeqBall)வடமாகாணத்தில்

சிறீலங்கா விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை 9 மணிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsal play ground) 
நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தனை, இலங்கை ரெக்பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது.
இந்நிகழ்வுக்கு இலங்கை ரெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் வட.மாகாண விளையாட்டு கழகங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரெக்பந்தாட்ட உபகரணங்களை கையளித்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெக்பந்தாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இரண்டு ரெக்பந்தாட்ட மேசை வழங்கி வைக்கப்பட்டன என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.