சனி, 6 பிப்ரவரி, 2021

நாட்டில் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகள்

நாட்டில் சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
சில வங்கிகள் எடுக்கும் தவறான முடிவுகளை தடுக்க எதிர்காலத்தில் சட்டங்கள் சிலவற்றை முன்மொழிய எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர மேலும் தெரிவித்தார்.
´எவருக்கும் மற்றொருவரின் கணக்கில் இருந்து அவர்களுக்கு அறிவிக்காமல் ஒரு சதத்தினை கூட எடுக்க முடியாது. எனக்கு தெரியும் சில இடங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான விடயங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும்.´ என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.