வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும்நிலை

அரசாங்கம் தனக்கு மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கிக்கொள்கின்றது என தெரிவித்துள்ள  மாற்றுக் கொள்கைகள்  நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்குகின்றது என
 குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனக்கு மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கிக்ககொள்கின்றது சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்குகின்றது என தெரிவித்துள்ள அவர்மோதல்களை மோதல்களை உருவாக்குகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐம்பது வருடங்களில் வடபகுதி மக்கள் கிழக்கு மக்கள் முஸ்லீம்கள் மலையதமிழர்கள் ஒன்றிணைந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியிலேயே என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ள பாக்கியசோதி சரவணமுத்து நல்லிணக்கம் குறித்து தாங்கள் என்ன செய்கின்றனர் என்பது குறித்து அரசாங்கம் ஆழமாக சிந்திக்கவேண்டும் எனவும் கு
றிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் குறித்த குற்றச்சாட்டுகள் கேள்விகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சார்ஜன்ட் சுனில்ரத்நாயக்க போன்ற ஒருவரிற்கு பொதுமன்னிப்பை வழங்கிவிட்டு நாங்கள் உள்நாட்டு பொறிமுறைகளை முன்னெடுக்கின்றோம் என தெரிவிக்கவும் முடியாது என அவர் 
தெரிவித்துள்ளார

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.