திங்கள், 22 பிப்ரவரி, 2021

விடுதலைப்புலிகளை தியாகிகளாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

பிரிட்டன் அரசியல்வாதி நேஸ்பி பிரபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளதுடன் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் விதத்தில் காணப்படுகின்றது என 
குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடு;ப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை என நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.’
ஜனவரி 2009 முதல் மே 2009 முதல்வரை 5000 முதல 7000வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பதற்கான சுயாதீன மாக நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்கள் உள்ளன என்பது உட்பட பல முக்கிய விடயங்களை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் முன்வைக்கும் கட்டு;க்கதை போல 40,000க்கும்அதிகமானவர்கள் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்த மிகமோசமான யுத்த குற்றத்தினை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் சிறுவர்கள் என யுனிசெவ் என தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை படையணியில் இணைப்பது பயிற்சிவழங்குவது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் பிரிட்டனில் வாழும் அடெய்ல்பாலசிங்கம்என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் ஏன் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு ஐநாவை கேட்கவில்வை என கேள்வி எழுப்பவேண்டும் என நேஸ்பி பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.