வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு

புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி..!! மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புபல்கலைக்கழகங்களுக்கு 
இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.இதற்காக
 பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 579 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள்.இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மருத்து பீட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.