ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

யாழில் தமிழ் மொழிக்கு விழா எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2021ம் ஆண்டுக்கான உலக தாய்மொழித்தினம் ,21.02.2021,இன்றைய தினம். நாவலர் பொது மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் 
கலந்துகொண்டிருந்தனர்.
 சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற
 உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
 மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தாய்மொழி தின நிகழ்வுகளின் கலை நிகழ்வுகளாக வாத்திய பிருந்தா, கவியரங்கம், தமிழ்மொழியின் தொன்மை எனும் தொனிப்பொருளில் இசை நிகழ்வு, கவிதை, நடனம், குழு பாடல், நாடகம் என்பன 
இடம்பெற்றுள்ளன.
நிகழ்வின் விருந்தினர்களுக்கும் நிகழ்வின் பார்வையாளர்களுக்கும் வடை, மோதகம், கஞ்சி போன்ற தமிழர் பாரம்பரிய உணவுகள் கமுகுத் தடலினால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் பாரம்பரிய முறையில் 
வழங்கப்பட்டன.
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் திகழ்கின்ற தமிழ் மொழியினுடைய தொன்மையையும் பெருமையினையும் உலகறிய பறைசாற்றும் வண்ணம் இந்நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மொழிகளுக்கெல்லாம் மூத்த 
மொழி ஆகிய தாய்த் தமிழ் மொழிக்கு விழா காண்பதில் பெருமிதம் கொள்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.