வியாழன், 4 பிப்ரவரி, 2021

இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்தவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து சிறிலங்காபடையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐநா இடைநிறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என ஆராயப்பட்டதா என்பதை உறுதிசெய்யக்கூடிய நிலையில் நியுயோர்க் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என அவர் 
தெரிவித்துள்ளார்.
படையினரை அமைதிப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய சட்டரீதியான கடமை ஐக்கியநாடுகளின் அமைதிபணிகளுக்கான திணைக்களத்திற்குள்ளது எனவும் ஜஸ்மின் சூக்கான தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் மனித உரிமை மற்றும் இலங்கையில் நீதி ஆகியவை குறித்த கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் அடிப்படையில் யுத்தக்குற்றங்களில்
 ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினால் அதற்காக விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிருவம் என்பதை ஐக்கியநாடுகள் அமைதிப்படை சிறிலங்காவக்கு வெளிப்படுத்த வேண்டிய தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.