புதன், 10 பிப்ரவரி, 2021

நாட்டில் எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை

எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான #P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர இவ்வாறான எமது மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை.09-02-2021.
அன்றையதினம் நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது  இதனைத் தெரிவித்தார்
நவகிரி என்ற செயற்திட்டத்தில் அவசர வான்கதவு என்பதொன்று காணப்படுகிறது. 2010ம் ஆண்டிலிருந்து அவசர வான்கதவு என்பது மட்டக்களப்பு மக்களாகிய எமக்கு கிடையாது இவ்வாறான  
நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது குளத்தை அண்மித்த பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்படும் சந்தர்பங்கள் அடிக்கடி நிகழ்கின்றன .2010ம் ஆண்டிலிருந்து பல கோரிக்கை விடுக்கப்பட்டும் 
இதுவரையில் உரிய நடவடிக்கை 
எடுக்கப்படவில்லை. 
ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகின்றது. மக்கள் ஒவ்வெரு வருடமும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஆறுகள்  முறையாக புனரமைக்கப்படாமை வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாகும். அத்துடன் மட்டக்களப்பு முகத்துவாரத்தை 
அண்மித்த ஆறுகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் ஆழம் குறைந்தமையானது இதற்கான பிரதான காரணம் 
ஆகும் குறைந்தளவு மழை பெய்தாலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
 இவ்வருடமும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் எம்மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியானது
 ஒவ்வெரு வருடமும் ஒதுக்கப்பட வேண்டும் நவகிரியும், குளபுணரமைப்பும் உங்களது் திட்டத்தில் காணப்படுகிறதா?.என அமைச்சரிடம் 
வினாவினேன். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.