சனி, 23 ஜனவரி, 2021

அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலைகள் பெப்ரவரி முதல்

 நாட்டில் நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெப்ரவரி முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலையை பராமரிக்க 
ஒப்புக் கொண்டுள்ளனர் என்று வர்த்தக அமைச்சு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் வர்த்தக அமைச்சில் நேற்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் செயல்முறைக்கு பதிலாக, CWE மற்றும் கூட்டுறவு விற்பனை
 நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை 
வாங்குவதற்கான திட்டங்கள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் இக்கலந்துரையாடலின்
 போது விளக்கினார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.