புதன், 6 ஜனவரி, 2021

யாழ் கல்லுண்டாயில் சுழல் காற்ரினால் ஒன்பது வீடுகள் சேதம்!!

யாழ்ப்பாணம் – கல்லுண்டாயில்.06-01-21. இன்று வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ்
 தெரிவித்தார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே/136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவிலேயே சுழல் காற்று வீசியுள்ளது. இதன்போது ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி 
வைக்கப்பட்டது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.