வியாழன், 7 ஜனவரி, 2021

ஏறாவூரில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக 06-01-21அன்று  கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் காலை ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற 
ஆர்ப்பாட்டம் ஒன்றை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த தனியார் ஊடகமொன்றில் கடமைபுரியும் ஊடகவியலாளர் குகராசு சுபோஜனை 
சம்பவ இடத்திற்கு
 வந்த சிலர் அச்சுறுத்தி வீடியோ எடுக்க விடாது தடுத்தனர் என்றும், ஊடகவியலாளரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.