புதன், 6 ஜனவரி, 2021

அமரர் தம்பு. துரைராஜா 18ம் ஆண்டு நினைவஞ்சலி 06.01.2021

மலர்வு .06.06.1926. உதிர்வு .23.01.2016
திதி -06-01-2021
யாழ் நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் .வாழ்ந்த இடம் நவற்கிரி.)அகியோரின் நீங்காத நினைவில் 
 நீங்காத நினைவுடன் பதின் எட்டாம்  ஆண்டு நினைவஞ்சலி.(திதி ) 06.01.2021..இன்று
பதிஎட்டு  ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
அனைவராலும் ஐயா தாத்தா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
பதின் எட்டு  ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
காலத்தை வென்ற தலைமகனாக
தம்பு- மாணிக்கத்தின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் பிள்ளைகள் , பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.