திங்கள், 31 ஆகஸ்ட், 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்;13 .பொலிஸ் அதிகாரிகளின் மறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பொலிஸ் அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் இன்று (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய குறித்த அதிகாரிகளை செப்டம்பர் மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த 13 பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.