திங்கள், 10 ஆகஸ்ட், 2020

யாழ் நீர்வேலியில் வீட்டிற்குள் நுழைந்து இளம் யுவதியை கடத்திய கும்பல்.

யாழ்.நீர்வேலியில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு 20 வயதான இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம்.09-08-20. நேற்று
 இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் 
தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்வேலி வடக்குப் பகுதியில் உள்ள 
வீடு ஒன்றுக்கு வெள்ளை வாகனத்தில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து
 வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக 
பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்துள்ளனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.