திங்கள், 10 ஆகஸ்ட், 2020

அம்பாறை யில் கால்வாய் ஒன்றிலிருந்து மிதந்து வந்த மனித தலை

 

அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த நிலையில் முதலை இழுத்துச் சென்று காணாமல் போயிருந்தவரின் தலை மாத்திரம் நேற்று மாலை கிராம மக்களின் 
உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த பேரதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து மேலும் குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் 
தெரிவிக்கும் போது ;
கடந்த சனிக்கிழமை வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக அந்த நபர் வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு நீர்க்கால்வாய் அருகில் சென்றுள்ளார்.பின்னர் தனது உடுதுணிகளை
 நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். இவ்வேளை குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளன.இவ்வாறு இழுத்துச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 
காணாமல் சென்றவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த தலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் மீட்கப்பட்ட தலை கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.விசாரணை அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 65 வயது 
மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என்பவரே இவ்வாறு ச
டலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், அவரது சகோதரி சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன், சம்மாந்துறை மஜிஸ்ரேட் நீதிவானின் உத்தரவிற்காக உயிரிழந்த நபரின் உடல் பாகம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.