சனி, 29 ஆகஸ்ட், 2020

எங்களைப் பற்றி 10 நிமிடம் முன்னாடி யோசிங்க கண்ணீரில் பழங்குடி மக்கள்

 

கனமழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆனைமலைக் குன்று பழங்குடி மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அங்கு பெய்த கனமழை, காட்டாற்று ,
வெள்ளம் போன்றவை அந்த மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டன. நாகரூத்து என்ற பழங்குடி கிராமத்தில் மலசர் இனப் பழங்குடி மக்கள் அதிகம் வசித்துவருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் பாறைகள் உருண்டு வந்து, அங்குள்ள 22 வீடுகளை அடித்துச் சென்றன. இதில், குஞ்சப்பன் என்பவரின் இரண்டு வயது மகள் சுந்தரி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சில நாள்களுக்குப் பிறகே சுந்தரியின்
 உடல் கிடைத்தது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.