செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

மட்டக்களப்பில் சிலை கடத்திய பொலிஸ் அதிகாரி கைது


மட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்ததுடன் முருகன்சிலையையும் பொலிஸார் 
கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று (03) இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன்னிலான முருகன் சிலையை கடத்தி வந்து விற்க முயன்றபோது இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.